அழகிரி வெளியேற்றம்?



மதுரை மாநகராட்சியில்2009 ம் ஆண்டு தெற்கு மண்டல அலுவலக கட்டிடம் மேலமாரட் வீதியில் புதிதாக கட்டி திறக்கப்பட்டது. அப்போது அதில் ஒரு அலுவலகம் மாநகராட்சி அனுமதியின்படி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டது,அதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நாடாளுமன்ற தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டு அந்த அலுவலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது. 

இந்நிலையில், மதுரை மாநகராட்சி மன்ற கூட்டம், மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில்  நடந்தது. இதற்காக அனைத்து கவுன்சிலர்களுக்கும் 3 நாட்களுக்கு முன் வழங்கப்பட்ட கூட்ட அஜண்டாவில் இடம் பெறாத ஒரு தீர்மானம், அவசர தீர்மானமாக அச்சிட்டு ஒரு மணி நேரத்துக்கு முன் வழங்கப்பட்டது. அதில், மு.க.அழகிரியின் எம்.பி அலுவலகத்தை காலி செய்யும் தீர்மானம் இடம் பெற்று இருந்தது. இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அமளி ஏற்பட்டது.இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எல்ராஜ், “மத்திய அமைச்சரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறீர்கள், 2009 முதல் இயங்கி வரும் அவரது எம்.பி. அலுவலகத்தை அகற்ற அவசரமாக தீர்மானம் கொண்டு வருகிறீர்கள். இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்”என்று கூறி தி.மு.க,வினர் வெளியேறினர். இதன் பிறகு எம்.பி அலுவலகத்தை காலி செய்யும் அவசர தீர்மானத்தை மேயர் நிறைவேற்றினார்.
                             
இது போன்ற காழ்ப்புணர்ச்சி வேலைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தேவையா?
உங்களை தேர்ந்தெடுத்தவர்கள் நலனுக்கு தேவையான தீர்மானங்கள் ஒன்றை கூட இதுவரை நிறைவேற்றாதவர்கள்.இதற்கு இவ்வளவு அவசரம்காட்டுவது ஏனோ?
அழகிரி நீதிமன்றம் சென்று தடை வாங்கி விட்டால் என்ன செய்ய முடியும் உங்களால்?
_____________________________________________________
வைகை
நதியை பாதுகாப்போம்!
                                                                                                 -எம். முத்துராமு
தமிழ் வளர்த்த மதுரையின் பழம் பெருமையுடன் இணைந் தது வைகை நதி. சிலப்பதிகாரம், திரு விளையாடல் புராணம் என பல தமிழ் இலக்கியங்களிலும் சிறப்பு பெற்றது வைகைநதி. தூயநீர் வைகை என்ற சிறப்பும் உண்டு. மதுரை நகரின் மையப் பகுதியில் வைகை செல்வதால் - வட மதுரை, தென்மதுரை என அழைக்கின்றனர்.


மேற்கு தொடர்ச்சிமலைப் பகு தியில் உள்ள வாலிப்பாறை, வெள்ளி மலை துவங்கி மூல வைகை, முல் லையாறு, சுருளி யாறு மற்றும் வருச நாட்டுப் பகு தியில் வரும் பல காட்டாறுகள் சேர்ந்து வைகை நதியாக பெருக் கெடுத்து ஒன்றுபட்ட மதுரை மாவட்டம், ஒன்றுபட்ட இராம நாதபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகரங்களையும், கிரா மங் களையும் கடந்துவந்து சுமார் 260 கி.மீ. பயணம் செய்து இராமநாதபுரம் பெரிய கண் மாயில் சங்கமிக்கும் நதி வைகையாகும். மாநிலத்தில் உள்ள நதிகளில் கடலில் கலக் காமல் கண்மாயில் சங்கமிக்கும் நதி வைகைதான்.

ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டம் பரந்துவிரிந்த விவ சாய நிலப்பரப்பை கொண்ட மாவட்டமாகும். இங்கு விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் நீண்ட கடற்கரைப் பகுதியைக் கொண்டு இருப்பதால் குடி தண்ணீர் தேவைக்கும் பயன்பட பென்னிகுக் அவர்களால் பெரி யாறு அணை உருவாக்கப்பட்டு, அதன் தண்ணீர் வைகை நீரு டன் இணைக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பின்பு வைகை-பெரியாறு தண்ணீ ரைத் தேக்கி விவசாயத்தைப் பெருக்க வேண்டும் என்ற நோக் கோடு 1958ல் மத்திய-மாநில அரசுகளால் வைகை அணை கட்டப்பட்டது.

வைகை அணை தண் ணீரை பயன்படுத்தி ஒரு பகுதி யில் மூன்றுபோக சாகுபடியும், இருபோக சாகுபடியும் அணை நிரம்பிய காலத்தில் மட்டும் ஒரு போக சாகுபடியும் நடைபெறும் பகுதி என உணவு உற்பத்தி நடைபெறுகிறது.


மணல் உருவாக பல நூறு ஆண்டுகள் தேவைப்படுவதாக மண்ணியல் ஆராய்ச்சியாளர் கள் கூறுகின்றனர். ஆனால், இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மணல் செல்வத்தை வாரி வழங்கியுள்ளது. வைகை நதி துவக்கம் முதல் நிறைவு வரை ஏராளமான குடிநீர் ஆதா ரம் உருவாக்கப்பட்டு குடிதண் ணீர் வழங்கி வருகிறது.

தூங்காநகரம் என்று அழைக் கப்படும் மதுரை மாநகரில் சாக் கடை கழிவுகளும் நச்சுத் தன்மை கொண்ட ரசாயன மருத் துவக் கழிவுகளும் தூங்காமல் ஓடிவந்து வைகையில் சங்கம மாகின்றன. ரகசியமாக இயங் கும் சாயப்பட்டறை கழிவுகள் - சலவை நிலைய கழிவுகள், எண் ணெய் கழிவுகள், நகராட்சியின் குப்பை கழிவுகள் என மதுரை மாநகரின் கழிவுகளின் புகலிட மாக வைகை நதி மாறியுள்ளது.

மதுரை நகரில் தினந்தோறும் 98 லட்சம் லிட்டர் சாக்கடை நீரும் 5 லட்சம் லிட்டர் மருத் துவக் கழிவு நீரும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் குளிக்கும் நீரா கவும், மாநகரத்தின் குப்பை களும், மருத்துவக் கழிவுகளு மாக 1 டன் குப்பை வைகையில் கலக்கிறது. இது மட்டுமல்லா மல், நகரில் பயன்படுத்தப்படும் பாலீத்தீன் பைகளின் புகலிட மும் வைகையாகத்தான் மாறி யுள்ளது.
                   

மதுரை நகரின் சாக்கடை நீரும் நச்சுத்தன்மை கொண்ட ரசாயன கழிவு நீரும், குப்பை கழிவுகளும் மதுரை நகர் எல் லையைத் தாண்டி விரகனூர் அணையில் தஞ்சம் புகுந்துள் ளது. இது தடுக்கப்படாவிட்டால் பார்த்திபனூர் மதகு அணை மட் டுமல்ல, இராமநாதபுரம் பெரிய கண்மாயிலும் தஞ்சம் புகுந் தாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. மதுரையை அடுத்து உள்ள திருப்புவனம், மானா மதுரை - பரமக்குடி நகரங்களின் கழிவுநீரும், குப்பை கழிவுகளும் வைகையில் சங் கமிக்கின்றன. இந்த ஆபத்தான கழிவுகளோடு கலந்து பாசனத்திற்கு செல்வ தால் விளைநிலம் மாசுபடுகிறது.

வைகை நதியில் நச்சுத் தன் மையுள்ள சாக்கடை நீரும், மருத்துவக் கழிவுகளும், குப்பை களும் கலந்து தேங்கி ஆற்றின் வழிநெடுக செல்வதால் ஏராள மான குடிதண்ணீர் ஆதாரம் மாசுபடுகிறது. விதிமுறையை மீறி மணல் அள்ளியதால் ஏற் பட்ட பள்ளங்களில் தேங்கி யுள்ள நீரைப் பயன்படுத்திய தால் கால்நடைகள் மரணம், மலட்டுத்தன்மை என பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. விளை நிலம் பாதிக்கப்படும் ஆபத்தும் உள்ளது.


ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கும் - ஒன்றுபட்ட மதுரை மாவட்ட விவசாயிகளுக்கும் பாதுகாப்பு கிடைத்திட சாக்கடை கழிவு களையும், மருத்துவக் கழிவு களையும் குப்பைகளையும் வைகையில் கலக்காமல் தடுத் திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடை நீரை தடுத்து மறு சுழற்சி செய்து மாற்று பணிகளுக்குப் பயன் படுத்த வேண்டும். சுதந்திரத் திற்கு முன்பே மதுரையில் சாக் கடை நீரைத் தேக்கி மறுசுழற்சி செய்ய தொட்டி கட்டி பாது காக்கப்பட்ட விபரம் உள்ளது.

இந்த முன் மாதிரிகளை தற் போது பொறுப்பேற்றுள்ள தமிழக ஆட்சியாளர்களும், மதுரை மாநகராட்சியில் பொறுப்பேற் றுள்ள மக்கள் பிரதி நிதிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர் :

இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,


______________________________________________________________________________

 புற்று நோயை பொறுத்தவரை அறுவை சிகிச்சை, கதிர் வீச்சு, கீமோதெரபி என மூன்று வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. இதில், கதிர்வீச்சு சிகிச்சை மிகவும் பயன் அளிக்கக்கூடியது.இந்த கதிர்வீச்சு சிகிச்சைகள் தினமும், 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஆறு வாரங்கள் வரை அளிக்கப்படும். ஆனால், தற்போது வந்திருக்கும், "ரேபிட் ஆர்க்' சிகிச்சையின் மூலம், முன்பை விட பல மடங்கு துல்லியமாகவும், வேகமாகவும் சிகிச்சை அளிக்க முடியும்.இந்த சிகிச்சை,"லினாக்' இயந்திரம் மூலம் தரப்படுகிறது. புற்று நோயாளிக்கு, சி.டி., எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்த பின், நோயின் தன்மை, நிலை ஆகியவற்றை கண்டறிந்து, நோயாளிக்கு, "ரேப்பிட் ஆர்க்' சிகிச்சையைத் தொடங்குவோம்.நோயாளியை,"லினாக்' இயந்திரத்தின் கீழே படுக்க வைப்போம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவிகள் மூலம் உடல் அசையாமல், பிடித்துக் கொள்ளப்படும். அந்த இயந்திரத்தில் உள்ள ஸ்கேன் கருவி, நோயாளியைப் படம் பிடிக்கும். அந்தப் படத்தைக் கொண்டு, புற்று நோயால் பாதிக்கப்பட்ட திசுக்கள் மட்டும் கண்டறியப்பட்டு, கதிர் வீச்சு மூலம் அழிக்கப்படும்.

முந்தைய சிகிச்சையில் ஒரே பக்கத்தில் இருந்து, கதிர் வீச்சு செலுத்தப்படும். அதனால், புற்று நோய் பாதிப்புள்ள திசுவுடன் சேர்ந்து நல்ல திசுவும் ஓரளவு பாதிக்கப்படும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த, "ரேப்பிட் ஆர்க்' சிகிச்சை மூன்றே நிமிடங்களில் சிகிச்சை முடிந்துவிடும். இது தவிர, "ஸ்கேட்டரிங்' எனும் கதிர்வீச்சு சிதறலும், மிகக் குறைவான அளவிலேயே இருக்கும். இது போன்ற காரணங்களால், நல்ல திசுக்கள் சிறிதளவும் பாதிப்பிற்கு உள்ளாவது இல்லை.நோயின் தன்மையைப் பொறுத்து, சிகிச்சைக்கான காலம் குறையவும் வாய்ப்புண்டு. மிகக் குறுகிய நேரத்தில், துல்லிய மாக சிகிச்சை அளிக்கும் இந்த சிகிச்சையால், நோயாளிக்குப் பக்க விளைவுகள் இல்லை!

                               

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?