இடுகைகள்

ஜனவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எட்டு ஆண்டுகள்.....,

படம்
"உங்கள் மனம் கவர்ந்த "சுரன் "என்றெல்லாம் சொல்லமாட்டேன். நீங்கள் இதுவரை தொடர்ந்து படித்து வந்த எனலாம். அதுவும் தொடர்ந்துபடிப்பவர்கள் எண்ணிக்கை எப்படியும் 100க்கு குறைவிருக்காது என்பது உறுதி. காரணம்.30 நாட்களுக்கு மேலேயே இடுகைகள் ஒன்று கூட எனது சுய பணிகள் காரணமாக இடாவிட்டாலும்,நானே நாட்கணக்கில் வலைப்பக்கம் வராமல் இருந்தாலும் , மீண்டும் இடுகை இட வருகையில் தினமும் 150 க்கு குறைவில்லாமல் ,மொத்த நாட்களில் சராசரி 200 பேர்கள் தினமும் "சுரன் "பக்கம் சொடுக்கி வந்து (ஏமாந்து?)போனதை காணமுடிந்தது. அதற்கெல்லாம் நன்றிகள்.! தைத்தமிழர் திருநாள்,தமிழ்ப்புத்தாண்டில் தனது முதல் இடுகையுடன் பயணிப்பதை ஆரம்பித்த உங்கள் "சுரன்" தற்போது தனது பயணத்தின் எட்டை கடந்துள்ளது.ஒன்பதாவது வது ஆண்டை எட்டியுள்ளது . வருகைதந்தோர் எண்ணிக்கை 12,80,000. இது உங்களால் மட்டுமே இயன்றது. அதற்கு எனது நன்றிகள் என்று  மட்டுமே எழுத்தால் கூற முடிகிறது.மனதால் ...? என்றும் அன்புடன், -சீ .அ.சுகுமாரன்.

நெஞ்சில் குத்தியது

படம்
ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக் குழு கூட்டம் சென்னை யில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்றுவரும் போரட்டம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.  அதுகுறித்து மு.அன்பரசு கூறியதாவது: "அரசின் அடக்குமுறையை மீறி போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஜாக்டோ ஜியோ சார்பில் புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் எங்கள் போராட்டத் திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சித் தலைவர், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், மின்சாரவாரியம், போக்குவரத்து, சிஐடியு, தொமுச, எச்.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளி மாணவர்களின் தேர்வு நெருங்குவதால் எங்களின் கடமையை நிறைவேற்றும் வகையிலும்; மாண வர்கள், பெற்றோர்கள் நலனை கருத்தில் கொண்டும்,மற்றும்அனைத்துக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்றும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம். போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் பின் வாங்காமல், உடனடியாக தமிழக முதல்வர் அழைத்துப் பேசி சுமூகத் தீர்வை காண வேண்டும் என்பதே எங்களி

இரண்டுமடங்கு அதிகரிப்பு,

படம்
இந்தியர்களின் குடும்பக் கடன் ஒரே ஆண்டில் இரண்டுமடங்கு அதிகரித்துள்ளது .    இந்தியமக்கள் தங்கள் குடும்பத்தின் அவசரத் தேவைகளுக்காக வாங்கிய குடும்பக் கடன், 2016-17ஆம் ஆண்டில் ரூ. 3 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக இருந்தது.  2017-18ஆம்ஆண்டில் ரூ. 6 லட்சத்து 74 ஆயிரம் கோடியாக உயர்ந் துள்ளது.  ஒரே ஆண்டில் மட்டும் சுமார் 1.8 மடங்கு கடன் அதிகரித்துள்ளது.  கடந்த 5 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டால், 13 சதவிகிதம் கடன் அதிகரித்துள்ளது.                                                                                                      ‘ தி எகனாமிக் டைம்ஸ் ’  ------------------------------------------------------------------------------------------------------------------------------------- இதுவும் ஒரு நச்சுத் திட்டம்தான். மோடி அரசின் மிகவும் நஞ்சு சார்ந்த திட்டங்களில் ஒன்றாக பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம் அமைந்திருக்கிறது. இதன் நோக்கம், விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் அளிப்பது என்று சொல்லப்படுகிறது. அதாவது, பருவநிலை மாற்றங்கள் கா

சும்மாவா போராட்டம் ?

படம்
ஊடகப் பொய்கள்? ஜாக்டோ அமைப்பின் கீழ் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளும் இதர இயக்கங்களும் பலன் தராத நிலையில்தான் போராட்டத்தில் தள்ளப்பட்டுள்ளனர். தேர்தலை கணக்கிட்டு குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் வழங்க முடிகிற அரசுக்கு ,அரசு ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த ஓய்வூதிய பங்களிப்பு 60000 கோடிகள் திருப்பிக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.அப்பணம் எங்கே இருக்கிறது என்று கூட சொல்ல முடியாதா? சத்துணவு மையங்கள்,ஆரம்பப்பள்ளிகளை 3000 கணக்கில் முட்டுவது ஏன்? உழைக்கும் மக்கள் வேறு வழியின்றி போராடும் பொழுது அதனை சிறுமைப்படுத்துவதும் சமூகத்தின் இதர பகுதியினருக்கு போராடுபவர்கள் மிகப்பெரிய எதிரிகள் போல சித்தரிப்பதும் சில விஷமிகளுக்கு வாடிக்கை. இப்பொழுதும் அது நடக்கிறது. குறிப்பாக சமூக ஊடகங்களை சிலர் வலுவாக இதற்கு தவறாக பயன்படுத்துகின்றனர். அரசாங்க பணியின் முக்கி அம்சம் ஓய்வூதியமே! அரசாங்க பணியின் மிக முக்கிய அம்சம் அதன் பழைய ஓய்வூதிய திட்டம்தான்! அரைக்காசு உத்தியோகம்னாலும் அரசாங்க உத்தியோகம்தான

வந்தார், சென்றார்

படம்
தமிழகத்தில் பாஜகவினரால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றநிகழ்ச்சிகள் பெரும் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. ஆனால் பல்வேறு பிரச்சனைகளில் தமிழகத்திற்கு தொடர் துரோகம் இழைத்து வரும் மத்திய பாஜக அரசை எதிர்த்து சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்ட முழக்கமான ‘மோடியே திரும்பிப்போ’ என்பது உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தநிலைக்கு கரணம் கூட பாஜகத்தான். முதலில் அரசு விழாவுக்கு வருவதால் வெறும் கறுப்புக்கொடி மட்டும் என்றிருந்த தமிழகத்தை பாஜக தகவல் தொழில் நுட்ப அணி சீண்டியது. ஒருநாள் முன்னதாகவே #Madurai Thanks Modi என்ற தலைப்பு முதலில்.பின் #Tamilnadu welcome Modi என்ற தலைப்பையும் வலைத்தளங்களில் பரப்பின மோடி வருவதற்கு முதல்நாள் மாலைதான் எதிர்ப்பு #Go Back Modi இடுகையிடப்பட்டு மோடி மதுரையில் கால் வைக்கையில் அது உலக அளவில் முன்னிலையாகி விட்டது. அதற்கு முழுக்கரணமும் பாஜகத்தான். #மதுரை நன்றியும்   இருந்தது. அதுவும் அதன் இடுகையிடப்பட்ட இடம் தமிழ்நாட்டில் அல்ல.மகாராஷ்டிராவில்.இத்தகவலை டுவிட்டர் ட்ரென்டிங் அறிவிப்பு காட்டிக்கொட