இடுகைகள்

ஏப்ரல், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதிய கண்டம்?

படம்
சமீபத்தில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கென்யா பகுதியில் மிகப்பெரிய நிலப்பிளவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலப்பிளவு சற்று ஆழமாகவும் உள்ளது.  வடக்கே ஏடன் வளைகுடா தொடங்கி தெற்கே ஜிம்பாப்வே வரை சுமார் 3000 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்தப் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிளவினால், கென்யாவில் உள்ள நைரோபி – நரோக் நெடுஞ்சாலை முழுவதும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக இந்த பிளவுகள் ஏற்படுகையில் அந்தப் பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்படுகின்றது.  கென்யாவில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கம், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவு போன்ற காரணங்கள்தான் நிலப்பிளவிற்கு காரணம் என ஆய்வு நடத்திய வல்லுநர்கள் கூறியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு அதிகரித்துக்கொண்டே போனால், ஆப்பிரிக்க கண்டம் அமெரிக்காவைப் போல இரண்டாகப் பிரிய வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்தப் பிளவின் காரணமாக எத்தியோப்பியா, ருவாண்டா, தான்ஸானியா, ஜாம்பியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் தனிக் கண்டமாக பிரிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட இன்னும் பல மி

ரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்

படம்
சமூக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் ஊடுருவி, தவறான போலியான செய்திகளைப் பரப்புவதன் மூலமாக தங்களை அரசிற்கு ஆதரவாக நிறுவிக் கொண்டுள்ளவர்களுக்கு எதிராக, அவர்கள் வெளியிடுகின்ற செய்திகளில் இருக்கும் போலித் தன்மையைத் தோலுரித்துக் காட்டி உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கும் இணையதளம் ஆல்ட் நியூஸ் ( https://www.altnews.in/ ). பத்திரிகைகளில் வெளிவராத அல்லது அவற்றால் முக்கியத்துவம் தரப்படாத சாதி சார்ந்த வன்முறைகள், மதரீதியான பாகுபாடுகள், தொழிலாளர் போராட்டங்கள், விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பான செய்திகளையும் ஆல்ட் நியூஸ் இணையதளம் வெளியிட்டு வருகிறது. வாட்ஸாப் போன்ற சமூக ஊடகங்கள் போலியான செய்திகளப் பரப்புவதற்கான ஊற்றுக் கண்ணாகச் செயல்பட்டு வரும் இக்காலகட்டத்தில் ஆல்ட் நியூஸின் சேவை மிகவும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது. போட்டோஷாப் அரசின் பல்வேறு பொய்களைத் தோலுரித்துக் காட்டியிருக்கும் இந்த இணையதளத்தின் மீது அர்னாப் கோஸ்வாமி போன்றவர்களின் கோபம் என்பது எதிர்பாராத ஒன்றல்ல. அண்மையில் ஆல்ட் நியூஸ் இணையதளத்திற்கு எதிராக அர்னாப் தன்னுடைய வேறொரு நிகழ்ச்சியை வளைத்து நடத்தியது கு

ஸ்கீம் விளையாட்டில் காவிரி?

படம்
காவிரியாற்று நீர்ப் பங்கீடு தொடர்பாகப் பிப்,16 அன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இதை இறுதித்தீர்ப்பு எனக் கடந்த கால வரலாற்று அடிப்படையில் நம்மால் சொல்ல இயலவில்லை. காவிரி மேலாண்மை வாரியமும் (Cauvery Management Board) காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும் எனக் கடந்த ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில்(குடிமை முறையீட்டு வ.எண் 2456 / 2007) முறையிட்டிருந்தது. [புதுவை, கேரள(கு.மு.வ.எண்2454 / 2007 ), கருநாடக (கு.மு.வ.எண் 2453 / 2007 ) மாநிலங்களும் முறையிட்டிருந்தன.] இப்போதைய தீர்ப்பில் இத்தகைய பெயர்கள் இடம் பெறவில்லை; திட்டம் (scheme) என்றுதான் குறிக்கப் பெற்றுள்ளது என்பது எப்பொழுதும் முரண்டு பிடிக்கும் கருநாடக அரசின் வாதம். இவ்வாதம் ஒரு வகையில் சரி என்பதுபோல் தோன்றும். ஆனால், எந்தப் பெயரில் காவிரி நீர்ப் பங்கீட்டிற்கான அமைப்பு இருந்தாலும் கருநாடகா ஏற்காது என்பதை உணர்ந்த உச்சநீதிமன்றம், எப்பெயராக இருந்தாலும் அந்த அமைப்பிற்குக் காவிரியாறு முற்றிலும் உரிமையானது; அதற்கே பங்கீ

பியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி

படம்
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இயக்குநராக இருந்த அவரது  ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் என்னும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்கிகள் ரூ. 650 கோடி அளவிற்கு கடன்கொடுத்திருப்பதும், அந்த கடன்தொகையை ‘ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம்’ இப்போது வரை திருப்பிச் செலுத்தாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. வங்கிகள் கோடிக் கணக்கில் கடன் அளித்ததற்கும், அக்கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பதற்கும் ஷிர்தி நிறுவனத்திற்கு, பியூஷ் கோயலுடன் இருக்கும் நெருக்கமே காரணம்என்பதுடன், ஷிர்தி நிறுவனத்திடமிருந்து, கோயலின் மனைவி 1 கோடியே 59 லட்சம் பண ஆதாயம்அடைந்திருப்பதும் அம்பலமாகி இருக்கிறது. புதுதில்லியிலிருந்து வெளியாகும் ‘தி ஒயர்’ இணைய இதழ்,இந்த தகவல்களை வெளியிட்டுள் ளது.மும்பையைச் சேர்ந்த ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் என்னும் தகடுகள் தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்குநராக இன்றைய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் 2010 ஜூலை வரை இருந்து வந்தார்.  அந்த சமயத்தில் அந்நிறுவனம் பொதுத்துறை வங்கிகள் பலவற்றிடமிருந்து 650 கோடி ரூபாய்அளவிற்குக் கடன்கள் பெற்றுள் ளது. ஆனால் அவற்றை அது திருப்பிச் செலுத்தவில்லை.