இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மோ(ச)டி மன்னன்

படம்
ஒ வ்வொரு வாரமும் ஒவ்வொரு புதுப்படம் வெளியாவதைப்போன்று, ஓவ்வொரு வாரமும் ஒரு மோசடி வெளியாகிறது.  அந்த வரிசையில் இந்த வார வெளியீடு தேவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் (Dewan Housing Finance Limited)  நிறுவனம் செய்த மோசடி. 17 வங்கிகள் (Consortium) இணைந்து தந்த ரூ.34,615 கோடி கடனை மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) மற்றும் அதன் இயக்குநர்கள் கபில் வாதவான், தீரஜ் வாதவான் உள்ளிட்ட பலர் மீது சி.பி.ஐ கடந்த புதன்கிழமை (ஜுன் 17) வழக்கு பதிவு செய்துள்ளது.  இதுவரை சி.பி.ஐ பதிவு செய்த வங்கி மோசடி வழக்குகளில் மிகப்பெரிய வழக்கு இதுவாகும். 2020 மார்ச் மாதம் யெஸ் வங்கியின் தலைமை செயல்அதிகாரி ரானா கபூர் வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.  அவரும், DHFL நிறுவனத்தின் உரிமையாளர்களான கபில் வாதவானும் தீரஜ் வாத்வானும் இணைந்து செய்த மோசடியை சி.பி.ஐ மற்றும் அமலாக்க இயக்குனரகமும் விசாரித்தன.  அதன் பின்னர் ஏப்ரல் 2020-இல், கபில் வாதவானும் தீரஜ் வாத்வானும் கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து 2022 மே மாதம் டெல்லி நீதிமன்றம் தந்த பிணையில் வெளிவந்தனர். அதற்கு இடைப்பட்ட  இரண

பயனேதும் இல்லை!

படம்
  தி ரௌபதி முர்முவால் குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு அவர்களை வேட்பாளராக அறிவித்திருக்கிறது பா.ஜ.க. கூட்டணி. உடனே, சமூகநீதி உணர்வு அவர்களது வட்டாரத்தில் பொங்கி வழிகிறது. ‘பார்த்தீர்களா! பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை நாங்கள் வேட்பாளராக அறிவித்துவிட்டோம்.  நாங்கள்தான் உண்மையான சமூகநீதியைக் காப்பாற்றுபவர்கள்” என்று அவர்கள் சொல்வதைப் பார்த்தால் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இசுலாமியர் ஒருவரை குடியரசுத் தலைவர் ஆக்கியதன் மூலமாக பா.ஜ.க. ஆட்சியில் இசுலாமியர்கள் அனைவரும் முன்னேறிவிட்டதைப் போலவும் - பட்டியலின சமூகத்தைச் சார்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் ஆக்கியதன் மூலமாக பா.ஜ.க. ஆட்சியில் பட்டியலின சமூகத்தவர் அனைவரும் முன்னேறிவிட்டதைப் போலவுமான ‘உண்மை நிலவரம்' தான் - இப்போது பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருப்பதன் மூலமும் அடையும் பயனாகும். காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஒன்றியத்தின் முன்னாள் அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா அவர்கள். அவர் அளித்த பேட்டியில் இதனை மிகச் சரியாகச் சொல

காவி பாசிசம்

படம்
கு ஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அளித்ததாகக் கூறி சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட்டை பழிவாங்கும் நோக்கில் குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தீஸ்தா, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 24.06.2022 அன்று தள்ளுபடியான நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மோடி – அமித்ஷா கும்பலின் இந்த பாசிச நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது. 2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்கப் பரிவாரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரத்தால் இஸ்லாமியர்கள் 2000 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர்.  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ஜாப்ரியும் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை குறித்து விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு அப்போதைய முதல்வரும் குஜராத் கலவரத்தை தலைமையேற்று நடத்திய மோடி உள்பட 64 பேரை விடுவித்தது.  இதனை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஜாப்ரி மனைவி, ஜாகிய

"ஒரே நாடு ஆபத்து"

படம்
 இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல்துறையினர் அனைவரும் ஒரே மாதிரியான சீருடை அணிய வேண்டும் என்ற நோக்கத்தில் "ஒரு நாடு ஒரே காவல் சீருடை' திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக பரிசீலனை செய்து வருகிறது . இது தொடர்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரிலுள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம் மாதிரி சீருடைகளை வடிவமைத்துக் கொடுத்துள்ளது என்றும் அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன.  இத்திட்டத்தின் பின்னணியில் அரசியல் இழையோடியுள்ளது என்றும், மாநிலங்களின் கட்டுப்பாட்டில் தற்பொழுது செயல்பட்டுவரும் சட்டம்-ஒழுங்கு காவல்துறையை, மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றம் செய்து, மத்திய - மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் காவல்துறையைக் கொண்டு வருவதற்கான முயற்சிதான் இந்த "ஒரு நாடு, ஒரே காவல் சீருடை திட்டம்' என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.  இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரிகள் எந்த மாநிலத்தில் பணிபுரிந்தாலும், அவர்கள் அணிய வேண்டிய சீருடை தொடர்பான விதிகளை மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, 1954-ஆம் ஆண்டில் மத்திய அரசு உருவாக்கியுள்ளது.  மாநிலங்கள