இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முடியப் போகும் வெறியாட்டம்.

படம்
 கொரோனாவைப் பற்றி மேலும் பேச வேண்டியதாகி விட்டது. 2வது அலை,3வது அலை என பலமுறை கொரோனா வரும்போது நாமும் பல முறை  பேசியாகத்தான் வேண்டிய கட்டாயம். இந்தியாவில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரையிலான கணக்குப்படி சுமார் 63.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. 14.6 கோடி பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. "இந்தியாவில் தடுப்பூசி போட்டவர்கள் யாருக்கும் இதயத் தசை வீக்கம் வந்ததாக இதுவரை கண்டறியப்படவில்லை. அது தொடர்பான கண்காணிப்பும் ஆய்வும் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்." "மையோகார்டிட்டிஸ் என்பது இதயத் தசைகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறிப்பிடுகிறோம். இதற்குப் பலவகையான காரணங்கள் இருக்கலாம். பொதுவான காரணம் தொற்றுதான். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்றுகள் காரணமாக இதயத்தில் வீக்கம் ஏற்படலாம். உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பானது தசைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்போது இது உருவாகலாம்" ஃபைசர், மாடனா ஆகிய இரு நிறுவனங்களின் தடுப்பூசிகளால் மிக அரிதான மையோகார்டிட்டிஸ் என்ற பக்கவிளைவு ஏற்படுவதாக ஐரோப்பிய மருந்துகள் முகமை கூறுகிறது. இவை இளம் வயது ஆண்கள் மத்தியில் அதிகமாக இருப்பத

மூளையைப்பற்றிய சில உண்மைகள்

படம்
  நமது உடல் உறுப்புகளில் மிகவும் மர்மமான உறுப்பு மூளைதான். மூளையை பற்றி நாம் ஆய்வு செய்யும்போதுகூட நாம் மூளையைத்தான் பயன்படுத்துகிறோம் என்பது சுவாரஸ்யமான விஷயம்தான். இதயத்துக்கு அடுத்தபடியாக நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு இது. நமது நினைவுகள், ஆளுமை, அறிவாற்றல் நடவடிக்கை என எல்லாவற்றையும் முறைப்படுத்துகிறது மூளை.   1.   நமது  மூளையின் மொத்த எடையில் 60 சதவீதம் கொழுப்பால் ஆனது.   2.   மூளைக்கு வலி தெரியாது. ஏனென்றால் வலியை உணரும் வலி வாங்கிகள் இல்லை. நமது மண்டை ஓட்டுக்குள் மூளை நகரும்போதும், உந்தும்போதும் வலியை உணராது. 3.   நாம் விழித்திருக்கும்போதே நமது மூளையில்அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். வலி வாங்கிகள் இல்லாததால் இது சாத்தியமாகிறது. மயக்கநிலையில் மூளை அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், நமது மூளையின் செயல்பாடுகளை உணர்வுடன் இருக்கும்போதுதான் டாக்டர்களால் அறியமுடியும்.   4.   25 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்டது மூளை. அதாவது ஒரு மின்விளக்கை எரியவைக்கும் அளவுக்கான மின்சாரத்தை நமது மூளையே தரமுடியும்.    5.   எந்த ஒரு விஷயத்தையும

வந்துட்டாரய்யா,வந்துட்டார்...வடிவேலு.....!

படம்
  எங்கேயிருந்து கிளம்பியது? கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்படவில்லை என, அமெரிக்காவின் 18 உளவு அமைப்புகளை மேற்பார்வை செய்யும் அலுவலகம் தீர்மானமாக தன் முடிவை குறிப்பிட்டிருக்கிறது. நிபுணர்களோ, கொரோனா வைரஸின் தோற்றத்துக்கான ஆதாரங்களை சேமிப்பதற்கான காலம் கரைந்து கொண்டிருக்கிறது என எச்சரிக்கிறார்கள். சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சரோ அந்த அறிக்கை அறிவியலுக்கு எதிரானது என அதை நிராகரித்துள்ளார். தேசிய உளவு அமைப்பு இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வரும் அறிக்கை, அமெரிக்க உளவு முகமைகள் கொரோனா நோய் தொற்றின் தோற்றுவாய் விவகாரத்தில் பிரிந்து கிடப்பதாகக் கூறுகிறது. "அனைத்து உளவு அமைப்புகளும் இரு சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்கிறார்கள். அதில் ஒன்று இயற்கையாக பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு ஏற்பட்டது, மற்றொன்று ஆய்வகத்துடன் தொடர்புடைய சம்பவங்கள்." பல பெயர் குறிப்பிடாத உளவு அமைப்புகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட விலங்கிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அல்லது அதற்கு முன்னோடி வைரஸிடம் இருந்து தொற்று ஏற்பட்டது என கருதுகின்றன. ஆனால் அவர்களுக்கும் இந்த முடிவில் அதிக நம்பி

பென்னி குயிக்கும்,கலைஞரும்.

படம்
  மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்த இடம் , எனவே அந்த கட்டிடத்தை இடிக்கவோ, மாற்றவோ கூடாது என்று அஇஅதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. பெரியார்-வைகை பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், "கலைஞர் நினைவு நூலகம் அமைய உள்ள இடத்தில் பென்னிகுயிக் வாழ்ந்த இல்லம் உள்ளதால் அதனை அகற்றிவிட்டு நூலகத்தைக் கட்டக் கூடாது' எனக் குறிப்பிட்டிருந்தனர். மேலும், "விவசாயிகளின் துயரைத் துடைத்த பென்னிகுயிக் வாழ்ந்த இல்லத்தை அகற்றிவிட்டு நூலகம் கட்டும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்," எனத் தெரிவித்திருந்தனர். தமிழக சட்டமன்றத்திலும் இதே கருத்தை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.செல்லூர் ராஜூ அவர்கள் பேசினார். அப்பொழுது தலையிட்டுப் பேசிய தமிழக முதல்வர் “ அந்த கட்டிடத்தில் பென்னிகுயிக் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரங்களை காட்டுங்கள். நாங்கள் அதனை பரிசீலிக்கிறோம். அதை விடுத்து ஆதாரமில்லாமல் தவறான பிரச்சாரத்

தங்கப் போராட்டம்.

படம்
  இந்தியாவில் தங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் களையும் வகையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி முதல் புதிய விதிகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.  அதன்படி, தங்க நகைகள் ஒவ்வொன்றுக்கும் ஆறு இலக்கம் கொண்ட HUID (hallmark unique identity code) எனப்படும் `ஹால்மார்க் அடையாள எண் அவசியம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் 16-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளிலும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்றும், இந்த விதிமுறைகளின்படி, தங்க நகை விற்பனையாளர்கள் இனி 14, 18 மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும் என்றும் பி.ஐ.எஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. புதிய விதிமுறைகளின் அடிப்படையில் 14, 18, 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும் எனவும் பி.ஐ.எஸ் தெரிவித்திருந்தது. முதல்கட்டமாக 256 மாவட்டங்களில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.  `இதனால் தங்களது வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும் ஹால்மார்க் அடையாள எண்ணைக் கொண்டுவர வேண்டும் என்பதைத்தான் எதிர்க்கிறோம். புதிய தர முத்திரை வழங்கும் வசதி உடைய, நாட்டின் 256 மாவட்டங்களிலும

இந்தியா விற்பனைக்கு

படம்
  இந்திய அரசுக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் சொந்தமான சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் பணமாக்கப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. National Monetisation Pipeline என்ற (தேசிய பணமாக்கல் குழாய்)திட்டத்தை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமையன்று டெல்லியில் வெளியிட்டார். அதன்படி அடுத்த 4 ஆண்டுகளில் மத்திய அரசுக்குச் சொந்தமாகவும் பொதுத் துறை நிறுவனங்கள் வசமும் உள்ள 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளன. இதில் சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளடங்கிய போக்குவரத்துக் கட்டமைப்புகள், மின் உற்பத்தி நிலையங்கள், மின் வழித்தடங்கள், குழாய் வழித்தடங்கள், நிலங்கள், கட்டடங்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். தனியாரிடம் அளிக்கப்படவுள்ள சொத்துகளில் 66 சதவீதம் சாலைகள், ரயில்வே, மின்சாரத் துறையைச் சேர்ந்ததாக இருக்கும். மீதமுள்ள 34 சதவீதம், விமான நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள், துறைமுகங்கள் போன்றவையாக இருக்கும். சாலைகளை குத்தகைக்கு விடுவதன் மூலம்

தேசப்பற்றும்- அறிவியாளர்களும்

படம்
 ரயில் பெட்டி எஞ்சின்களை உருவாக்கும் நமது நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ஐ.சி.எஃப் நிறுவனம் தயாரித்த டிரெய்ன் – 18 (T-18) என்ற அதிநவீன – மணிக்கு 160 கிலோ மீட்டர் முதல் 180 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய அதிவேக ரயில் உற்பத்தியானது முடக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பையும், அழகையும், செயல்பாடுகளையும் குறித்து நியூஸ்-18, புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் விவரிப்பதில் இருந்தே பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் உழைப்பின் வண்ணமும், சீரிய சிந்தனையையும் உணர முடியும். அவ்வளவு நேர்த்தியான அதிவேக – அதிநவீன ரயில் எஞ்சின் ஐ.சி.எஃப் நிறுவனத்தின் சொந்த முயற்சியில் முனைப்போடு, அந்நிய நாட்டு தொழிற்நுட்பம் இல்லாமல், சொந்த நாட்டு தொழிற்நுட்பத்துடன் மேக்-இன்-இந்தியா என்ற திட்டத்தின் கீழ் 80% அளவில் உள்நாட்டு உதிரி பாகங்களுடன் வெறும் 90 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இந்த ரயிலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் இந்த தொகையைவிட பல மடங்கு விலை அதிகரிக்கும். T-18 என்ற அதிவேக ரயிலை குறைந்த செலவில் அதிநவீன ரயிலாக உருவாக்கும் திட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஐ.சி.எஃப் நிறுவன தலைவர், இயந்திரவியல் பொறியாளர் ச