தங்கப் போராட்டம்.

 

இந்தியாவில் தங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் களையும் வகையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி முதல் புதிய விதிகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.

 அதன்படி, தங்க நகைகள் ஒவ்வொன்றுக்கும் ஆறு இலக்கம் கொண்ட HUID (hallmark unique identity code) எனப்படும் `ஹால்மார்க் அடையாள எண் அவசியம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் 16-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளிலும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்றும், இந்த விதிமுறைகளின்படி, தங்க நகை விற்பனையாளர்கள் இனி 14, 18 மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும் என்றும் பி.ஐ.எஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.




புதிய விதிமுறைகளின் அடிப்படையில் 14, 18, 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும் எனவும் பி.ஐ.எஸ் தெரிவித்திருந்தது.
முதல்கட்டமாக 256 மாவட்டங்களில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

`இதனால் தங்களது வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும் ஹால்மார்க் அடையாள எண்ணைக் கொண்டுவர வேண்டும் என்பதைத்தான் எதிர்க்கிறோம். புதிய தர முத்திரை வழங்கும் வசதி உடைய, நாட்டின் 256 மாவட்டங்களிலும், இனி ஹால்மார்க் அடையாள எண்ணை தங்க நகைகளில் பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது தர முத்திரை வழங்கும் மையங்களில் அதற்கான போதிய வசதியும், சாதனங்களும் இல்லை. இதனால், ஹால்மார்க் மையங்களில் கோடிக்கணக்கான நகைகள் முடங்கியுள்ளன. சுமார்12 நாட்கள் தேவைப்படும்.


இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேவையான நகைகள் தேக்கமடைந்து, விற்பனைக்கு வராமல் உள்ளன.



' என தங்க நகை வணிகர்கள் குமுறுகின்றனர்.
இந்திய தர நிர்ணய அமைப்பு` இந்தத் திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் 50 நாள்களில் ஒரு கோடி தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பதிவு செய்த நகைக் கடைக்காரர்களின் எண்ணிக்கையும் 91 ஆயிரமாக உயர்ந்துள்ளது' என்கிது.
அகில இந்திய அளவில் நகைக்கடை உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். 

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 35,000 கடைகள் பங்கேற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 சுமார் இரண்டரை மணி நேரம் மட்டும் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.நகையின் தயாரிப்பாளர் மொத்த விற்பனைக்கு கொடுக்கும்போது என்ன விலைக்கு விற்கிறேன் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதை நுகர்வோருக்கு விற்கும்போதும் என்ன விலை எனக் குறிப்பிட்டு இந்திய தர நிர்ணய (BIS) அமைப்பின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கடைக்காரர் அந்த நகையை நுகர்வோரிடம் விற்கும்போது பி.ஐ.எஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போது ஒரு நகை


 உற்பத்தியாகி சென்று சேரும் வரையில் அனைத்து விவரங்களும் தெரிந்துவிடும். எங்களின் வியாபாரத்துக்கு முதுகெலும்பாக இருப்பது நுகர்வோர்கள்தான். அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும்.

தங்கத்தை வாங்குவோர் குறித்த தரவுகள் எல்லாம் பி.ஐ.எஸ் தளத்தில் இருந்து திருட்டுபோனால் யார் வேண்டுமானாலும் நுகர்வோரை வளைத்துவிடலாம். இதன்மூலம் நுகர்வோர்களும் எங்களைவிட்டு மாறிவிடுவார்கள். ஒரு நெக்லஸுக்கு என்ன விலை என்பது தெரிந்துபோனால் சேதாரத்தை கணக்கில் வைத்து கூடுதல் விலை வைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். தங்க நகையை உற்பத்தி செய்து ஹால்மார்க் முத்திரைக்காக அனுப்பும்போது எங்களைப் போல பத்து பேர் அங்கே காத்து இருப்பார்கள். நாங்கள் பொருளைக் கொடுத்தாலும் முத்திரை பதிப்பதற்கு 5 முதல் 7 நாள்களை எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கேற்ற பாதுகாப்பு வசதிகள் பி.ஐ.எஸ்ஸில் இருப்பதில்லை. எதாவது திருடு போனால்கூட காப்பீடு வசதிகள் செய்து தரப்படவில்லை" என்கிறார்கள் நகை வியாபாரிகள்.

15 வருடங்களுக்கு முன்பு வரைமுறையில்லாமல் செயல்பட்ட நகைக்கடைகளை ஒரு வரம்புக்குள் கொண்டு வந்துவிட்டனர். 



ஜி.எஸ்.டி வந்த பிறகு அனைத்தும் சரியாகிவிட்டது. நகைக்கடைகள் மூலம் 1 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வருவாய் வந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை ஒப்பிடும்போது இந்த ஜூலை மாதம் 20 சதவிகிதம் இது அதிகரித்துள்ளது. அனைவருக்கும் நேரம் கொடுத்து முறையாக புதிய விதிகளைக் கொண்டு வந்தால் நல்லது.

இதில் வேதனை என்னவென்றால், அடையாள எண் பதிக்காத நகைகளை பறிமுதல் செய்வது, கடைக்கு சீல் வைப்பது அல்லது எந்த நகைக்கு அடையாள இலக்கம் கொடுக்கவில்லையோ அந்த நகைக்கு ஈடாக 5 மடங்கு அபராதம் விதிக்கலாம் என்பன போன்ற பல அதிகாரங்களை பி.ஐ.எஸ்ஸிடம் கொடுத்துள்ளனர். வருமான வரித்துறையால்கூட நகைகயை பறிமுதல் செய்ய முடியாது. அதைவிட கூடுதல் அதிகாரத்தை தர நிர்ணய அமைப்புக்குக் கொடுத்துள்ளனர். எந்த நுகர்வோரும் 22 கேரட் சீல் மற்றும் ஹால்மார்க் முத்திரை ஆகியவற்றைத்தான் கேட்பார்கள். அடையாள எண் போடுங்கள் என யாரும் கேட்டதில்லை" என்கின்றனர்.

`` . மும்பை, டெல்லி ஆகிய பகுதிகளில் பெரும் நகை வியாபாரிகள் உள்ளனர். அவர்கள் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்" என்கிறனர்.


``தங்க நகை வணிகர்களின் எதிர்ப்பு சரியானதுதானா?" 

 பி.ஐ.எஸ்ஸின் புதிய விதிகளின்படி ரூபாய் 40 லட்சம் வரையில் தங்க நகை வியாபாரம் செய்பவர்களுக்கு விலக்கு கொடுத்துள்ளனர். அதனை ரூபாய் ஒரு கோடியாகவோ, ரூபாய் 2 கோடியாகவோ உயர்த்திக் கேட்பதில் தவறு இல்லை. 

விருதுநகர் போன்ற ஊர்களில்கூட சிறு வியாபாரிகள் வருடத்துக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்கின்றனர். இந்தத் தொகையை நீட்டிப்பது தொடர்பான கோரிக்கையை அவர்கள் வைவைக்கலாம்.இந்தியாவில் உள்ள மொத்த நிலங்களுக்கும் பட்டா உள்பட அனைத்து விவரங்களும் அரசு ஆவணங்களில் தெளிவாக உள்ளன. அப்படியிருக்கும்போது, இந்தியாவுக்கு ஆயிரம் டன் தங்கம் வருகிறது என்றால் அதில் 900 டன் தங்கத்தைப் பணக்காரர்கள்தான் வாங்குகின்றனர். 

இங்கு தங்கம் என்பது ஏழைகளுக்கு ஆடம்பரமான ஒன்றுதான். இதனை மறைப்பதற்காக இந்த விவகாரத்தில் ஏழை, எளியவர்கள் பக்கம் இவர்கள் கைகளை காண்பிக்கின்றனர். 

இவ்வாறு பேசுகிறவர்கள் எல்லாம் பெரும் செல்வந்தர்கள்தான். இதன்மூலம் அரசாங்கத்துக்கு என்ன அஜெண்டா உள்ளது எனத் தெரியவில்லை.

தவிர, பி.ஐ.எஸ்ஸின் புதிய விதிகளால் சிறு தொழில் செய்கிறவர்கள் அதிகம் பாதிக்கப் போவதில்லை. ஒரு கோடி வைத்திருந்தால் என்ன செய்வது எனத் தெரியாத நிலை வரும்போது பணத்தை வெள்ளையாக வாங்கத் தொடங்குவார்கள். 

கறுப்புப் பணம் செல்லும் இடங்களில் ரியல் எஸ்டேட் மிக முக்கியமான இடமாக உள்ளது. அந்தத் தொழிலுக்கும் அடையாள எண்ணைக் கொண்டு வரும் வேலைகளையும் செய்வார்கள்.

அதேபோல், தங்கத்தையும் கொண்டு வர நினைக்கிறார்கள். 

இந்தியாவுக்குள் ஆயிரம் டன் தங்கம் வந்தால் வடமாநிலங்களுக்கு 200 டன், தென் மாநிலங்களுக்கு 200 டன் எனச் செல்வதாகப் பார்த்தால் அது எங்கெல்லாம் பயணிக்கிறது என்பதை கடைசி வரையில் கண்காணிக்க உள்ளனர். அடையாள எண் மூலம் அனைத்து பரிவர்த்தனைகளிலும் கண்காணிக்கிறார்கள். எங்கேயும் தப்பிக்க முடியாத சூழலை உருவாக்குகிறார்கள். இதை கட்டாயம் செய்ய வேண்டும்.

பி.ஐ.எஸ்ஸின் புதிய விதிகளை சிறு, குறு வியாபாரிகளுக்கு பாதிப்பில்லாமல் செயல்படுத்த வேண்டும். தங்க நகையை லாபம் இல்லாமல் விற்க முடியாது. லாபத்தைக் கேள்வி கேட்பதால் கூலி, சேதாரம் போட்டு விற்கிறார்கள். சிறிது காலத்துக்காவது 40 லட்சம் ரூபாய் என்ற உச்ச வரம்பில் இருந்து சிறு வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்".



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?