இடுகைகள்

நவம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘ரிலையன்ஸ் வழியில் குறுக்கிடாதே’

படம்
  தனியார் நிறுவனங்கள் அனைத்து 4ஜி சேவைக்குச் சென்றுவிட்டது மட்டும் இல்லாமல் 5ஜி சேவை வழங்குவது குறித்துத் திட்டமிட்டு வரும் நிலையில் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இது வரை 4 ஜி சேவைக்கான உரிமத்துக்கான பணத்தைப்பெற்றக்கொண்ட பின்னரும்   அரசு வழங்கவில்லை என்பதும் அதற்கு மோடியின் அலுவலகம்தான் கரணம் என்பதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.   ஆனால் வழக்கம் போல் மோடி வாயை முட்டிக்கொண்டுள்ளார் . தனியார் நிறுவங்கள் தொலைதொடர்பில் தூள் பரத்திக்கொண்டிருக்கையில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் மந்தமாக இயங்குவதாக மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.அது ன்மைதான் . ஆனால் அதற்கு காரணம் மோடியின் பாஜக அரசுதான் என்ற உண்மை தற்போது வெளியாகி அதிரவைத்துள்ளது.பி எஸ் என் எல் நிறுவனம் செயல்படவிடாமல் முடக்கி வைப்பதில் மோடியின் அரசு 100% பங்கை வகிக்கிறது. அம்பானியின் ஜியோவுக்கு மாடலாக நின்றவர்தான் மோடி. பிரதமர் படத்தை தனியார் நிறூவனம் தனது விளம்பரத்திற்கு பயன் படுத்துவது அரசியல் இறையான்மைப்படி தவறு என்றாலும் அதை அம்பானியோ ,மோடியோ கண்டுகொள்ளவில்லை.அவர்தான் மக்களுக்கான பிரதமர

அகர்வால்களின் ஆய்(வு) அறிக்கை

படம்
  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தமிழக அரசு 48 ஏ பிரிவின்கீழ் ஸ்டெர்லைட் ஆலை யை மூடியது. இப்போது வேதாந்தா குழுமத்துக்கு நீதிபதி அகர்வால் தலைமையிலான கமிட்டி ஊது குழலாக செயல்படுவது போல் தோன்றுகிறது. உண்மையில் ஆய்வுக்குழுவின் வேலை என்பது ஸ்டெர்லைட் ஆலை குறித்து மக்கள்கருத்துக்களை அறிந்து அறிக்கை யாக தாக்கல் செய்வது மட்டுமே. ஆனால் அகர்வாள்களால் அமைக்கப்பட்ட பசுமை தீர்ப்பாயக்குழு அறிக்கை மக்களுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும்,அது தங்கியுள்ள பசுமை க்கும் எதிரானது. இதுவரை இந்தியா முழுக்க சுற்றுசுசுழல்,இயற்கை வழங்களைப்பதுக்காக்க அமைக்கப்பட்ட   பசுமை தீர்ப்பாயம் அறிக்கை,தீர்ப்பு என்பது நாசகார ஆலைகளுக்கு,முதலாளிகளுக்கும் மட்டுமே ஆதரவாகவுள்ளது. எதற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை விட்டு விலகி இயற்கை வளத்தை அழிக்கும்,சுற்று சுழலுக்கு கேட்டுவிளைவித்து காற்றையும்,நிலத்தடி நீரை விஷமாகும் ஆலைகளுக்கு அதன் முதலாளிகளுக்கு ஆதரவாகவே அமைந்து வருகிறது. ஒரு தீர்ப்பு கூட  வாழ்வதற்காகப்போராடும் மக்களுக்கு ஆதரவாக பசுமைத் தீர்ப்பாயம் அளித்ததாக வரலாறே இல்லை. பின் எதற்கு இந்த பசுமைத் தீர்ப்பாயம் ? போரா

கூகுளால் அபாயம்?.

படம்
 சுதாரிக்கும் உலக நாடுகள் கேள்வி கேட்கவோ அல்லது தவறுகளை சுட்டிக் காட்டவோ இணையான அதிகாரம் பெற்றவர் எவரும்இல்லையென்றால் தன் மனம் போன போக்கில் செயல் களைச் செய்யத் தொடங்குவதுதான்  எதேச்சதிகாரம். தான்மட்டுமே பெரியவன் என்ற நிலையில் தனக்கு கீழே இருப்பவர்களை அடிமைகளாகக் கருதி அவர்கள் மீதுதன் விருப்பங்களைச் செலுத்தும் இம்மனநிலை எல்லாத்துறைகளிலும், எல்லா இடங்களிலும் இருந்தே வருகிறது. அதற்கு எதிரான போராட்டங்கள் காலத்திற்கேற்பவும், சூழ்நிலைக்கேற்பவும் நிகழ்ந்ததை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. இன்றைய நிலையில் அமெரிக்கா மற்ற நாடுகளுடன்எதேச்சதிகார மனோபாவத்துடன் செயல்படுவது போலவே, அந்நாட்டு நிறுவனங்களும் செயல்படுகின் றன. இது இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே இருந்துவரும் நிலை.  வர்த்தகமே அரசியலைத் தீர்மானிக்கும் அமெரிக்க சூழலில் நிகழும் மாற்றம், உலகம் முழுவதுக்குமான மாற்றம் போன்ற மாயத் தோற்றத்தை நம்மனங்களில் விதைக்க இந்த நிறுவனங்களே காரணம். யாகூ மெயிலில் 100 எம்பி அளவு இடத்தை பயன்படுத்தி வந்த நம்மிடம் கூகுள் அதிரடியாக களம் இறங்கி1 ஜிபி அளவு மின்னஞ்சல் என்ற வலையை விரித்த

வைகோவின் "நாதஸ்வரமும்.நாற்காலியும் ....".

படம்
தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இருக்கிறதா, இல்லையா என்பதை, அக்கட்சி தலைமை தெரிவிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை, ஸ்டாலின் தரப்பு கண்டுகொள்ளாததால், ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ வரும் தேர்தல் காலத்தை எண்ணி விரக்தி அடைந்துள்ளார்.  சமீபத்தில், தனியார், 'டிவி' சேனலுக்கு பேட்டி அளித்த, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், 'ம.தி.மு.க.,வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தி.மு.க., கூட்டணியில் இல்லை; காங்கிரஸ், முஸ்லிம் லீக் மட்டுமே உள்ளன. நட்பு கட்சிகள் வேறு; கூட்டணி கட்சிகள் வேறு' என்றார். ஸ்டாலினை முதல்வராக்க விரும்பிய வைகோவை, கூட்டணியில் இருந்து, தி.மு.க., கழற்றி விட்டதால், கடும் ஏமாற்றம் அடைந்துள்ளார். துரைமுருகனின் பேட்டி, வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவனை அதிருப்தி அடையச் செய்தது.'தி.மு.க., கூட்டணியில், நீடிக்கவே விரும்புகிறோம்' என, திருமாவளவன், நேற்று முன்தினம் அறிவித்தார்.  வைகோவும், 'தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இருக்கிறதா, இல்லையா என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் தான் தெளிவு படுத்த வேண்டும்' என்றார

ரூ.2400 கோடி லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள்

படம்
  யார்,,,,,, யார்........?   பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் அதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட ரூ.2400 கோடி லஞ்சம் தொடர்பான தகவல் அம்பலமாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த கிறிஸ்டி பிரைட் கிராம் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை, சேலம், கோவை, நாமக்கல் உள்ளிட்ட நகரங்களில் கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.  மேலும் திருச்செங்கோட்டில் செயல்பட்டு வரும் கிறிஸ்டி நிறுவன தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின் போது கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிடிக்கள், பென் டிரைவ்கள், ஹார்ட் டிஸ்க்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.  இந்த ஹார்ட் டிஸ்க்குகள், பென் டிரைவ்களை ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.  கிறிஸ்டி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முறைகேடாக கொடுத்த பண