இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு ஆளில்லா கிராமம்..

படம்
  இருந்த ஒரேயொரு வரும் காலமானதால்.. காலமான ஊர் தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபுரம்  ஊரில் வசித்து வந்த ஒரேயொரு முதியவர் கந்தசாமி (75) உயிரிழந்ததால் ஆளில்லா கிராமமானது செக்காரக்குடி அருகே உள்ள மீனாட்சிபுரம். இங்கே 75 வயது கந்தசாமி இத்தனை காலம் தனியாக வசித்து வந்தார். தண்ணீர் பஞ்சம் காரணமாக இந்த கிராமத்தை மக்கள் பலரும் காலி செய்த நிலையில் கடந்த 10 வருடங்களாக இவர் இந்த கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். தமிழ்நாட்டிற்கு உள்ளே வருது.. மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் வே! சென்னை- தூத்துக்குடி இடையே.. மெகா ப்ராஜெக்ட் கந்தசாமியின் கதை மனதை நொறுக்க கூடிய ஒன்றாகும். அவரது முழு வாழ்க்கையும் இந்த மீனாட்சிபுர கிராமத்தின் தூசி நிறைந்த, தனிமையான வறண்ட வயல்களுடன் பிணைக்கப்பட்டது ஆகும். அவர் இங்குதான் பிறந்தார். இங்குதான் படித்தார். இதே ஊரை சேர்ந்த பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார். இப்போது யாரும் இல்லா இதே மண்ணில் மரணமும் அடைந்துவிட்டார். 20 வருடங்களுக்கு முன்பு இவர் மனைவி வீரலட்சுமி இறந்த அதே அறையில் இவர் கடைசி நாட்களைக் கழித்து வந்த நிலையில், அதே அறையில் இன்று அவர் வயோதிகம் காரணமாக மரணம் அடைந்தார்.  2011 மக

அக்­னி­பத்’ ஆபத்து

படம்
  மோட்டார் வாகன சட்ட திருத்தம் அமல் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர் உரிமம்: 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனப் பதிவு ரத்து . அரசுப் பணிக்கான தேர்வில் தமிழில் 40% மதிப்பெண் பெற வேண்டும் என்ற அரசாணை சரிதான்: -உயர் நீதிமன்றம் . கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு. கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் அதிகரிப்பு: -ரிசர்வ் வங்கி. மிசோரமில் கனமழை, பாறை சரிவு: பலி எண்ணிக்கை 28ஆக உயர்வு. நிரந்தர ஓய்வு ? நாமக்கல் ,கருமண் செட்டிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (60).  இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், ரம்யா என்ற மகளும், சூரியகுமார் என்ற மகனும் உள்ளனர்.  தனபால் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.  இவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததால் தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஊட்டி ஹில்பங்க் பகுதியில் உள்ள டீக்கடையில் தனபால் டீ குடித்துள்ளார். அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள

தனக்கு தானே...

படம்
"ஷாகாவில் படித்தவருக்கு கோட்சேவைத் தான் தெரியும். காந்தியைத் தெரியாது. மார்ட்டின் லூத்தர் கிங், மண்டேலா, ஐன்ஸ்டீன் உட்பட பலர் மகாத்மாவைத் தங்கள் ஆதர்ச நாயகன் என்று கூறியுள்ளனர். வன்முறையும் பொய்யும் மட்டுமே தெரிந்தவருக்கு அகிம்சையும், உண்மையும் தெரியாது "-ராகுல் காந்தி. மீண்டும் மோடி? வேண்டாம் போ ஓடி! 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை சாதனை. பல்வேறு மாநிலங்களில் திருடி விற்கப்பட்ட 11 குழந்தைகள் மீட்பு; தெலங்கானா போலீசார் விசாரணையில் பரபரப்பு: கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் டாக்டர் உட்பட 3 பேர் கைது. வீட்டை பூட்டி மருமகள் சாவியை எடுத்துச்சென்றார் இறுதி சடங்கு செய்ய வழியின்றி நடுரோட்டில் கணவர் சடலத்துடன் காத்திருந்த மூதாட்டி. இவர் வந்து தான் வளர்த்தாராம் ? தமிழ்­நாட்­டில் உயர் கல்­வியே இல்லை என்­ப­தைப் போல­வும், தான் வந்­து­ தான் பல்­க­லைக் கழ­கங்­க­ளையே வளர்த்­த­தைப் போல­வும் பேசி இருக்­கிறார் ஆளு­நர் ஆர்.என்.ரவி. தான் ஏதோ வெட்டி முறிப்­ப­தைப் போல எதா­வது ஒரு கூட்­டத்­தைக் கூட்டி வைத்து எதை­யா­வது உளறி வைப்­பது ஆளு­ந­ரின் அன்­றாட வ

கடவுள்களின் அரசன்?

படம்
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் ஜூன் 2ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல். கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ரூ.3,100 கோடியில் 1 லட்சம் வீடுகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. ஒன்றிய உணவுத்துறையில் பொறுப்பு தருவதாக சேலம் டாக்டரிடம் பா.ஜ.க ரூ.2.48 கோடி மோசடி.சேலம் நீதிமன்றத்தில் ஒருவர் சரண்.2 பேருக்கு வலை. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் திருவிழாவில் மோதல்.விவசாயியை அடித்துக் கொன்றவர் தனது காதலி பெண் இன்ஸ்பெக்டருடன் பெங்களூரில் கைது.பெண் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி துரை உத்தரவு. சென்னையில் குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் பகுதிகளில் நள்ளிரவில் ஒரே நாளில் 4 பேர் வெட்டிக்கொலை. ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் நாளை மறுநாள் விசாரணைக்கு வர உத்தரவு. கத்திரிவெயில்முடிந்ததுவடமாவட்டங்களில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும். கடவுள்களின(?)அரசன். சாதியையும், சனாதனத்தையும், மதத்தையும் மட்டுமே வைத்து அரசியல் செய்து வந்த பா.ஜ.க.வினர், தற்போது ஒருபடி மேல் சென்று கடவுளை வைத்து அரசியல் செய்ய துணிந்திருக்கின்றனர். கடவுளின் ஆச

அளவில்லா அளப்பு!

படம்
  ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீடிக்க மனு.கெஜ்ரிவாலுக்குபுற்றுநோய்அறிகுறி.அமைச்சர் அடிசி பரபரப்பு தகவல். மோடி மீண்டும் முதல்வராவார்’ நிதிஷ்குமார் சொல்வது சரிதான்: தேஜஸ்வியாதவ் .  35 ஆண்டில் இல்லாத வாக்குப்பதிவு: காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல், தேர்தல் ஆணையம். ஆந்திரா கர்னூல் விவசாய நிலத்தில் வைரங்கள். வைரத்தை தேடும் பொதுமக்கள்: ரகசியமாக வாங்கிச் செல்லும் வைர வியாபாரிகள். கேரளாவில் பிரபல ரவுடியின் வீட்டில் மது விருந்து. சோதனைக்கு வந்த போலீசாரைப் பார்த்து கழிப்பறைக்குள் ஒளிந்த டிஎஸ்பி . தாம்பரம் அருகே ஒரே இரவில் 3 பேர் வெட்டிக் கொலை. டெல்லி – வாரணாசி விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல். அளவில்லா அளப்பு ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும், மாநில அந்தஸ்து விரைவில் வழங்கப்படும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.  இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக உள்ள ஒரே மாநிலம் என்ற காரணத்திற்காகவே அந்த மாநிலத்தை துண்டு துண்டாக உடைத்த தோடு, சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவையும் ரத்து செய்தது மோடி அரசு.  அந்த மாந

திருவள்ளுவருக்கே அவமானம்

படம்
  அவமானம் வைகாசி மாதம் அனுஷம் நடசத்திரத்தன்று திருவள்ளுவருக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது.  “நான் இங்கு ஆளுநராக இருப்பதை விட திருவள்ளுவரின் மாணவனாக, சீடனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பது இருபதாம் நூற்றாண்டில் திருவள்ளுவருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அவமானம் ஆகும். இதை இழைத்தவர் மாட்சிமை தங்கிய ஆளுநர் என்பதால் மரியாதையாக ‘திரு’ அவமானம் என்று சொல்லிக் கொள்ளலாம்! பள்ளியில் படிக்கும் போது அறிந்தாராம், தென்கோடி மாநிலத்தில் திருவள்ளுவர் என்ற மகான் வாழ்ந்ததாக அறிந்தாராம்,  திருக்குறள்தான் அவருக்கு உத்வேகத்தை அளித்ததாம், தமிழ்நாடு வந்ததும் அவர் வாங்கிய முதல் புத்தகம் திருக்குறள் தானாம், திருக்குறள்தான் உண்மையான தர்ம சாஸ்திரமாம். - இப்படி வரிசையாகச் சொல்லி இருக்கிறார் ஆர்.என் .ரவி. காவிக் கறை படர்ந்த திருவள்ளுவர் படத்துக்கு மலர் தூவி இருக்கிறார் ஆர்.என்.ரவி. அவர் திருக்குறளை ஒரு வரி கூட படிக்கவில்லை என்பதற்கு இதுவொன்றே சாட்சியம்.  காவி இன்று எதன் அடையாளமாக இருக்கிறது?  பிளவுவாதத்தின் அடையாளமாக இருக்கிறது. அந்தக் காவியை ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திரு