குற்றவாளி தேர்தல் ஆணையமே?

மதுரையில் தந்தையை வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவன்.

சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்.

ஏர்இந்தியாவிமானநிறுவனஊழியர்கள்போராட்டத்தால் 8 விமானங்கள் ரத்து. 25 ஊழியர்கள் பணிநீக்கம்.

கள்ளக்குறிச்சி அருகே திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தில் கைது.

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ வசதியுடன் மின்னணு டிக்கெட் இயந்திரம் அறிமுகம்: கிரெடிட், டெபிட் கார்டு முலம் பணம் செலுத்தலாம்.

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

மோடியாரென்றேதெரியாது.அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் 40% அமெரிக்கர்கள் கருத்து.(விஸ்வகுருவையே தெரியாதா?)என்ன கொடுமை ஜி!

அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ1000. தமிழக அரசு அறிவிப்பு.




வெறுப்புப் பேச்சும் ,

வேண்டா வெறுப்பும்

தேர்­தல் நேரத்­தில் அனைத்து அதி­கா­ரங்­க­ளும் தேர்­தல் ஆணை­யத்­துக்­குத்­தான் உண்டு. இதைக் கேட்க நன்­றாக இருக்­கி­றது. ஆனால் செய­லில்?

தேர்­தல் ஆணை­யம் கை கட்டி வாய் பொத்­திக் கிடக்­கி­றது. ‘விஸ்­வ­குரு’ தொடர்­பு­டை­யது என்­றால் மவு­ன­கு­ரு­வாக ஆகி­வி­டு­கி­றது தேர்­தல் ஆணை­யம்!

முதல் கட்ட தேர்­தல் பரப்­பு­ரை­யின் போது மட்­டும் அடக்கி வாசித்த

மோடி, இரண்­டாம் கட்ட தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் இருந்து தனது பழைய பாணி­யைக் கையில் எடுத்­தார். ‘உங்­கள் சொத்தை எடுத்து இசு­லா­மி­ய­ருக்கு கொடுத்து விடு­வார்­கள்’, ‘இசு­லா­மி­யர் வெளி­நாட்­ட­வர்’, ‘அதிக பிள்­ளை­கள் பெற்­றுக் கொள்­ப­வர்­கள்’, ‘உங்­கள் நகையை எடுத்து அவர்­க­ளுக்கு கொடுத்து விடு­வார்­கள்’, ‘உங்­கள் தாலியை எடுத்­துக் கொடுத்து விடு­வார்­கள்’, ‘உங்­க­ளி­டம் இரண்டு எருமை மாடு­கள் இருந்­தால் அதில் ஒன்­றைப் பறித்து விடு­வார்­கள்’, ‘பட்­டி­ய­லின, பழங்­குடி, பிற்­படுத்­தப்­பட்ட இட­ஒ­துக்­கீட்டை இசு­லா­மி­ய­ருக்கு கொடுத்து விடு­வார்­கள்’, ‘காங்­கி­ரஸ் வென்­றால் பாகிஸ்­தான் மகிழ்ச்சி அடை­யும்’, என்­பது போன்ற பீதி­யை­யும் பூச்­சாண்டி வாக்கு மூலங்­க­ளை­யும் தினந்­தோ­றும் உதிர்த்து வரு­கி­றார்  மோடி.

இந்த நாட்­டின் சொத்தை எடுத்து தனது நண்­பர்­க­ளுக்கு கொடுத்­து­விட்டது அவர்­தான். கோடிக்­க­ணக்­கான மக்­க­ளின் பணத்தை வாராக்­கடன் என்ற பெய­ரால் ஒரு சில நிறு­வ­னங்­க­ளுக்கு தள்­ளு­படி செய்­தது அவர்­தான். பொதுத்­துறை நிறு­வ­னங்­களை லாப­மில்லை என்று சொல்லி விற்­றது அவர் தான். இவர்­தான் ஒவ்­வொரு இந்­தி­யர் காதி­லும் ‘தாலிப்பூ’ சூடு­கி­றார்.

இது­போன்ற வெறுப்­புப் பேச்­சு­கள் எப்­போ­தும் கூடாது. தேர்­தல்

நேரத்­தில் கூடவே கூடாது!

சிறு­பான்மை சமூ­கத்­தின் மீதான வெறுப்­புப் பேச்­சு­கள் பா.ஜ.க. ஆளும் மாநி­லங்­க­ளில்­தான் எப்­போ­தும் அதி­கம். மற்ற மாநி­லங்­க­ளுக்­கும் இந்த மாநி­லங்­க­ளுக்­கு­மான வேறு­பாட்டை ‘இந்­தியா ஹேட் லேப்’ அறிக்கை சொன்­னது. ‘பா.ஜ.க. ஆளும் மாநி­லங்­க­ளில் பேசப்­ப­டு­பவை வன்­மு­றை­யைத் தூண்­டு­ப­வை­யாக அதி­கம் இருக்­கும்’ என்­கி­றது அந்த அறிக்கை. ‘நமது கட்சி ஆளும் கட்­சி­யாக இருக்­கி­றது’ என்ற தைரி­யத்­தில் இவை பேசப்­ப­டும்.

நாடு முழு­வ­தும் உள்ள வெறுப்பு பேச்சு வழக்­கு­களை விசா­ரிக்க குழு அமைக்க வேண்­டும் என்று ஒன்­றிய அர­சுக்கு கடந்த ஆண்டு உச்­ச­நீ­தி­மன்­றம் கட்­ட­ளை­யிட்­டது. ஆனால் அமைக்­கப்­ப­ட­வில்லை. அமைக்க மாட்­டார்­கள். ‘வெறுப்­புப் பேச்­சு­கள் தொடர்­பாக யாரும் புகார் தர­வில்லை என்­றா­லும் வழக்­குப் பதிவு செய்ய வேண்­டும்’ என்று உச்­ச­நீ­தி­மன்­றம் ஆணை­யிட்­டது. அது­வும் நடக்­க­வில்லை. மற்ற நேரங்­க­ளில் பா.ஜ.க. அர­சு­கள் இத­னைச் செய்­யாது. ஆனால் தேர்­தல் நேரத்­தி­லா­வது இதனை தேர்­தல் ஆணை­யம் கட்­டுப்­ப­டுத்த வேண்­டாமா?

ராஜஸ்­தா­னில் பிர­த­மர் மோடி பேசி­ய­தற்கு விளக்­கம் கேட்டு, பா.ஜ.க. தலை­வ­ருக்கு ஒரு நோட்­டீஸ் ஒன்றை அனுப்­பி­விட்டு தனது கடமை முடிந்து விட்­ட­தாக தேர்­தல் ஆணை­யம் நினைக்­க­லாமா? வாய் மூடிக் கிடக்­க­லாமா? வெறுப்பு பேச்சை தடுக்­கும் நோக்­கத்­து­டன் அந்த நோட்­டீஸை அனுப்­பி­ய­தாகத் தெரி­ய­வில்லை. வேண்டா வெறுப்­பாக அனுப்­பி­ய­தா­கத் தெரி­கி­றது. தேர்­தல் ஆணை­யம் தன்­னைக் கட்­டுப்­ப­டுத்­தாது என்­ப­தால்­தான் அதன்­பி­றகு அதி­க­மாக வெறுப்­புப் பேச்­சு­களை உமி­ழத் தொடங்கி உள்­ளார்.

தேர்­தல் நடக்க இருக்­கும் அறி­விப்பை வெளி­யிட்ட பிற­கு­தான் டெல்லி முத­ல­மைச்­சர் அர­விந்த் கெஜ்­ரி­வாலை கைது செய்­தார்­கள். இந்­தக் கைது நட­வ­டிக்கை சட்­ட­மீ­றல் என்­ப­தால் அத­னைக் கண்­டித்து தேர்­தல் ஆணை­யத்­தி­டம் ‘இந்­தியா’ கூட்­ட­ணித் தலை­வர்­கள் புகார் தெரி­வித்­தார்­கள். இதை தேர்­தல் ஆணை­யம் கேள்­வியே கேட்­க­வில்லை. தேர்­தல் நேரத்­தில் முக்­கிய எதிர்க்­கட்­சி­யின் தலை­வர்- ---– ஒரு மாநி­லத்­தின் முத­ல­மைச்­ச­ரைக் கைது செய்து முடக்­கு­வது என்­பது அப்­பட்­ட­மான விதி­மீ­றல் அல்­லவா? இதனை தேர்­தல் ஆணை­யம் தடுத்­தி­ருக்க வேண்­டாமா?

தேர்­தல் நேரத்­தில் அனைத்­துமே தேர்­தல் ஆணை­யத்­தின் கட்­டுப்­பாட்­டில் இருக்­கும் என்­றால்.. அம­லாக்­கத்­து­றை­யும், சி.பி.ஐ.யும், புல­னாய்வு அமைப்­பு­க­ளும் தேர்­தல் ஆணை­யத்­தின் கட்­டுப்­பாட்­டில் தானே இருக்க வேண்­டும்? இருந்­தி­ருக்க வேண்­டும்? அதை மட்­டும் உள்­துறை பா.ஜ.க. அர­சின் கட்­டுப்­பாட்­டில் விட்டு விடு­வீர்­களா?

தேர்­தல் ஆணை­யர்­களே, பா.ஜ.க. அர­சின் கீழ் பணி­யாற்­றிய

அதி­கா­ரி­க­ளாக போட்­டு­விட்­டால் அது­தானே நடக்­கும்! அது­தான்

நடந்­தி­ருக்­கி­றது.

பிர­த­மர், எதிர்க்­கட்­சித் தலை­வர், உச்­ச­நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி ஆகிய மூவ­ரைக் கொண்ட குழு தேர்­தல் ஆணை­யர்­களை தேர்ந்­தெடுக்க வேண்­டும் என்று உச்­ச­நீ­தி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது. உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­திக்­குப் பதி­லாக ஒரு அமைச்­சர் என்று மாற்­றிக் கொண்­டது பா.ஜ.க.வின் நீதித்­துறை மரி­யாதை. அதா­வது மூவ­ரில் இரண்டு பா.ஜ.க. ஆட்­சி­யா­ளர்­கள் தேர்வு செய்­யும் ஆணை­யர்­கள் எப்­படி இருப்­பார்­கள்? இப்­ப­டித்­தான் இருப்­பார்­கள்.

தேர்­தல் பத்­தி­ரங்­கள் தொடர்­பான வழக்கு உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் நடந்­தது. ‘தேர்­தல் பத்­தி­ரங்­கள் செல்­லாது’ என்ற தீர்ப்பை உச்­ச­நீ­தி­மன்­றம் வழங்­கி­யது. அந்த வழக்கு விசா­ர­ணை­யின் போது தேர்­தல் ஆணை­யத்­தின் வழக்­க­றி­ஞர் என்ன வாதிட்­டார் என்­றால், ‘தேர்­தல் பத்­தி­ரங்­கள் திட்­டத்தை தேர்­தல் ஆணை­யம் ஆத­ரிக்­கி­றது’ என்று வாதிட்­டார். இத்­த­கைய அமைப்­பி­டம் என்ன எதிர்­பார்க்க முடி­யும்?

வெறுப்பு பேச்­சு­க­ளுக்கு யாரைக் குற்­ற­வா­ளி­யாக ஆக்­கு­வது? 

அப்­படி பேசு­ப­வர்­களை அல்ல, 

இந்­தி­யத் தேர்­தல் ஆணை­யத்தை தான் குற்­ற­வாளி ஆக்க வேண்­டும்” என்பிறர் முன்­னாள் தேர்­தல் ஆணை­யர் குரேஷி..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?