அரசியலமைப்புச் சட்டம்

 இந்தி தான் நளினமான மொழி. தமிழெல்லாம் வேஸ்ட் என கிண்டல் செய்யும் சங்கி இளையராஜா.

தமிழ்நாட்ல இருந்தும் கலவரக்காரர்கள் மணிப்பூர்'லஊடுருவியிருக்காங்கவிஜயதரணி.(சங்கியானதற்காக உளறலா?)

உலக தரம் வாய்ந்த உத்திரபிரதேச பள்ளிகூடம். இவங்க தான் திராவிடத்தை குறை சொல்கிறாங்க.

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 397 அரசுப் பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி .


மீண்டும் 6 ஆண்டு பதவிக்காலம் மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் நாளை பதவியேற்பு.


தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கல் தொடங்கியது.


"மின்னணு வாக்கு பதிவு கருவி திருட்டு இயந்திரம்" வாக்காளர்களுக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை.
தியாகி வாட்டாக்குடி இரணியன் நினைவு தினம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மரியாதை.







ஏ.ஐ- ஏ.ஜி.ஐ வேறுபாடு என்ன? 

ஏ.ஜி.ஐ என்பது ஒரு மனிதனால் செய்யக்கூடிய எந்தவொரு அறிவுசார் பணியையும் செய்யக்கூடிய ஒரு இயந்திரம் அல்லது மென்பொருள் ஆகும். 

இதனால் பகுத்தறிவு, பொது அறிவு, சிந்தித்தல், பேக்கிரவுண்ட் knowledge, transfer learning மற்றும் செயல்திறன் மற்றும் அதன் விளைவு குறித்து வேறுபடுத்தி பார்க்கும் திறன் ஆகியவை கொண்டுள்ளதாக கூறுகிறது. 

எளிமையான வார்த்தைகளில், AGI மனித அறிவாற்றல் திறன்களைப் பின்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது அறிமுகமில்லாத பணிகளைச் செய்ய அனுமதிக்கிறது, புதிய அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளவும், புதிய வழிகளில் அதன் அறிவைப் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.

மனிதர்கள் தங்கள் அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்கிறார்கள் - பள்ளியில், வீட்டில் அல்லது வேறு இடங்களில்; மக்களுடன் பேசுவதன் மூலம் அல்லது விஷயங்களைக் கவனிப்பதன் மூலம்; புத்தகங்களைப் படிப்பதன் மூலம், தொலைக்காட்சியைப் பார்ப்பதன் மூலம், கட்டுரைகளைப் படிப்பதன் மூலம், மனித மூளையானது எந்த ஒரு சிக்கலையும் தீர்க்க அல்லது புதிய ஒன்றைக் கொண்டு வர முடிவெடுக்க (பெரும்பாலும் ஆழ் மனதில்) சேகரிக்கப்பட்ட தகவலைப் பயன்படுத்துகிறது.

AGI மூலம், ஆராய்ச்சியாளர்கள் இதையெல்லாம் செய்யக்கூடிய ஒரு மென்பொருள் அல்லது கணினியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் -

 ஒரு மனித கணினி செய்யும் அனைத்தையும். நீங்கள் சொல்வதை எல்லாம் புரிந்து கொள்ளவும், நீங்கள் செய்யும் வழியில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், தீர்வுகளைக் கண்டறிவதற்கான சிக்கல்களைப் பற்றி சிந்திக்கவும் கூடிய சூப்பர் புத்திசாலித்தனமான ரோபோ நண்பரைப் பற்றி சிந்தியுங்கள். 

ஏ.ஐ- ஏ.ஜி.ஐ வேறுபாடு 

ஏ.ஐ- ஏ.ஜி.ஐ-ல் உள்ள பொதுவான வேறுபாடு narrow AI ஆகும். இது அவற்றின் நோக்கம் மற்றும் திறன்களில் வேறுபடுகிறது. 

 படத்தை அறிதல், மொழியாக்கம் அல்லது சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடுவது போன்ற குறிப்பிட்ட பணிகளைச் செய்ய குறுகிய AI வடிவமைக்கப்பட்டுள்ளது—அதில் அது மனிதர்களை விஞ்சிவிடும், ஆனால் அது அதன் செட் அளவுருக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

மறுபுறம், AGI ஒரு பரந்த, மிகவும் பொதுவான நுண்ணறிவு வடிவத்தை கற்பனை செய்கிறது, எந்தவொரு குறிப்பிட்ட பணியிலும் (மனிதர்களைப் போல) மட்டுப்படுத்தப்படவில்லை.

 AGI இன் யோசனை முதன்முதலில் 20 ஆம் நூற்றாண்டில் ஆலன் டூரிங் எழுதிய ஒரு கட்டுரையில் தோன்றியது, இது கோட்பாட்டு கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தந்தை என்று பரவலாகக் கருதப்படுகிறது.

கோட்பாட்டில், AGI எண்ணற்ற நேர்மறையான தாக்கங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, சுகாதாரப் பராமரிப்பில், மனிதர்களின் திறன்களுக்கு அப்பாற்பட்ட பரந்த தரவுத்தொகுப்புகளை ஒருங்கிணைத்து பகுப்பாய்வு செய்வதன் மூலம் நோயறிதல், சிகிச்சை திட்டமிடல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவம் ஆகியவற்றை மறுவரையறை செய்யலாம்.

நிதி மற்றும் வணிகத்தில், AGI ஆனது பல்வேறு செயல்முறைகளை தானியக்கமாக்குகிறது மற்றும் ஒட்டுமொத்த முடிவெடுப்பதை மேம்படுத்துகிறது,

 நிகழ்நேர பகுப்பாய்வு மற்றும் சந்தை கணிப்புகளை துல்லியத்துடன் வழங்குகிறது. 

----------------------------------------


அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காதவர்கள்!

பா.ஜ.க. மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தால் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தையே மாற்றி விடு­வார்­கள் என்று ‘இந்­தியா’ கூட்­ட­ணித் தலை­வர்­கள் சொல்­வ­தற்கு இது­வரை பதில் சொல்­லாத பிர­த­மர் மோடி, இப்­போ­து­தான் வாய் திறந்து பதில் சொல்லி இருக்­கி­றார். 

‘அம்­பேத்­க­ரால் உரு­வாக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்தை யாரா­லும் மாற்ற முடி­யாது. அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்தை மாற்ற நினைக்­க­வில்லை’ என்­றும் பிர­த­மர் மோடி இப்­போது சொல்லி இருக்­கி­றார்.



“400 இடங்­க­ளில் வெற்றி பெற வேண்­டும் என்று பிர­த­மர் மோடி ஏன் சொல்­கி­றார் என்­றால், அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தை நாம் மாற்றி அமைக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான்” என்று பா.ஜ.க. எம்.பி.யும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான அனந்த குமார் சொன்­னார்.

 ‘இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் முழுமை பெறாத ஆவ­ணம்’ என்று தமிழ்­நாட்டு ஆளு­நர் ரவி­யும் அவ்­வப்­போது சொல்­லிக் கொண்டு இருக்­கி­றார்.

அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்தை இவர்­கள் மதிக்­கா­த­வர்­கள் மட்­டு­மல்ல, மாற்ற நினைப்­ப­வர்­கள் என்­பதை இவர்­க­ளது பழைய கால வர­லா­று­களே சொல்­லும்.

ஆர்.எஸ்.எஸ். தலை­வர்­க­ளில் மிக மூத்­த­வ­ரான குருஜி என அழைக்­கப்­ப­டும் கோல்­வார்க்­கர், ‘ஆர்­க­னை­சர்’ இத­ழில் (30.11.1949) என்ன எழு­தி­னார் என்­றால்...

“நமது அர­சி­யல் அமைப்­பில் பழம் பார­தத்­தில் இருந்த தனித்­து­வ­மான சட்ட ஒழுங்­கு­கள் பற்றி ஏதும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. மனு­வின் நீதிச் சட்­டங்­கள் காலத்­தால் ஸ்பார்ட்­டா­வின் லைக்­கர்ஸ், பெர்­ஷி­யா­வின் சோலோன் என்­ப­வர்­க­ளுக்­கெல்­லாம் முந்­தி­யது. 

இன்­னும் மனுஸ்­மி­ரு­தி­யில் கூறப்­பட்­டுள்­ளவை மீது உல­கமே புகழ் மாலை சூட்­டு­கி­றது. அவை வெகு இயல்­பா­கக் கீழ்ப்­ப­டி­யும் தன்­மை­யை­யும், ஒத்து வாழ்­வ­தை­யும் உயர்த்­திப் பிடிக்­கின்­றன.

 ஆனால் நம் அர­சி­ய­ல­மைப்பை எழு­திய மேதா­வி­க­ளுக்கு இந்த சிறப்பு பெரி­தா­கத் தெரி­ய­வில்லை” என்று சொன்­னார் கோல்­வார்க்­கர்.

அதா­வது மனுஸ்­மி­ரு­தியை இந்­திய நாட்­டின் சட்­ட­மாக ஆக்க வேண்­டும் என்று சொன்­ன­வர்­கள் இவர்­கள்.

 மனு­வில் ஒடுக்­கப்­பட்ட மக்­கள் குறித்­தும், பெண்­கள் குறித்­தும் உள்ள பகு­தி­களை இங்கு விவ­ரிக்­கத் தேவை­யில்லை.

இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை 1993 ஆம் ஆண்டு சன­வரி 1 ஆம் நாள் சங் பரி­வார அமைப்­பு­கள் வெளி­யிட்­டன.

 “நாட்­டின் கலாச்­சா­ர­ம், குண­ந­லன்­கள், சூழ்­நி­லை­கள் ஆகிய எல்­லா­வற்­றுக்­கும் விரோ­த­மான முறை­யில் தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் உள்­ளது. 

அது அன்­னி­யக் கண்­ணோட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் அமைந்­துள்­ளது” என்று அந்த அறிக்கை சொன்­னது. “இந்த அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் விளை­வித்­துள்ள தீங்­கு­டன் ஒப்­பி­டும் போது 200 ஆண்டு பிரிட்­டிஷ் ஆட்சி நாட்­டுக்கு ஏற்­ப­டுத்­திய சேதா­ரங்­கள் மிக­வும் குறை­வா­னதே” என்று அந்த அறிக்கை சொன்­னது.

 பட்­டி­ய­லின, பழங்­கு­டி­யின, பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் இட­ஒ­துக்­கீட்டை இந்த அறிக்கை எதிர்க்­கி­றது. சிறு­பான்­மை­யி­னர் நலனைப் புறக்­க­ணிக்­கி­றது.இத்­த­கைய சட்­டத்­தை­தான் அவர்­கள் புதிய அர­சி­ய­ல­மைப்புச் சட்­டம் என்­கி­றார்­கள்.

இதைத் தொடர்ந்து அன்­றைய ஆர்.எஸ்.எஸ். தலை­வ­ராக இருந்த ராஜேந்­திர சிங், “இந்­தியா பன்­மு­கத் தன்மை கொண்­டது என்று அர­சி­யல் சட்­டம் சொல்­கி­றது. 

நமது கலாச்­சா­ரம் பன்­மு­கத்­தன்மை கொண்­டது அல்ல. இந்த நாட்­டின் உயர் பண்­பு­க­ளுக்­கும் அறி­வுத் திற­னுக்­கும் ஏற்ற ஒரு அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் எதிர்­கா­லத்­தில் உரு­வாக்­கப்­பட வேண்­டும்” என்று சொன்­னார். இதையே அன்­றைய பா.ஜ.க. தலை­வ­ரான முர­ளி­ ம­னோ­கர் ஜோஷி­யும் சொன்­னார். 

‘அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்தை புதி­தாகப் பரி­சீ­லிக்க வேண்­டும்’ என்று ஆந்­திர மாநி­லம் அனந்­த­பூர் பொதுக்­கூட்­டத்­தில் வலி­யு­றுத்­தி­னார் ஜோஷி.

“மனு தர்ம சாஸ்­தி­ரத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட புதிய அர­சி­ய­ல­மைப்புச் சட்­டம் வகுக்­கப்­பட வேண்­டும்” என்று ஆர்.எஸ்.எஸ். தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான சுதர்­சன் தெளி­வா­கவே சொன்­னார்.

2017 ஆம் ஆண்டு ஹைத­ரா­பாத்­தில் நடந்த இந்­திய வழக்­க­றி­ஞர்­கள் கூட்­டத்­தில் பேசிய இன்­றைய ஆர்.எஸ்.எஸ். தலை­வர் மோகன் பக­வத், “நமது அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம், அயல்­நாட்­டுத் தர­வு­களை வைத்து எழு­தப்­பட்­டது என்­பதை நாம் முத­லில் புரிந்து கொள்ள வேண்­டும். 

நமது அர­சி­ய­ல­மைப்பு, நமது நாட்­டின் விழு­மி­யங்­க­ளைக் கொண்டே அமைய வேண்­டும்” என்று சொல்லி இருந்­தார்.

இந்­தி­யா­வின் அர­சி­யல் நிர்­ணய சபை­யா­னது மூவர்­ணக் கொடியை இந்­தி­யா­வின் தேசி­யக் கொடி­யாக அறி­வித்த போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதனை ஏற்­க­வில்லை.

 இந்­தி­யா­வில் சுதந்­தி­ரப் போராட்­டம் நடை­பெற்ற போது வேடிக்கை பார்த்­த­வர்­கள் இவர்­கள். இந்­துக்­க­ளும் இசு­லா­மி­யர்­களும் இணைந்து பிரிட்­டி­ஷா­ருக்கு எதி­ரா­கப் போரா­டு­வதை - இது போன்ற கூட்டு தேசிய நட­வ­டிக்­கை­களை எதிர்த்­த­வர்­கள் இவர்­கள்.‘வேர் வரை செல்­லும் வேறு­பா­டு­கள் கொண்ட இனங்­க­ளும் கலாச்­சா­ரங்­க­ளும் முழு­மை­யாக ஒன்­றி­ணைக்­கப்­ப­டு­வது முற்­றி­லும் இய­லாத ஒன்று என்­பதை ஜெர்­மனி நமக்­குக் காட்­டி­யுள்­ளது” என்று கோல்­வார்க்­கர் சொன்­னது இத­னைத் தான்.

ஜன­நா­ய­கம் என்­ப­தையே மேலை நாட்­டுக் கருத்­தாக்­கம் என்று நினைக்­கக் கூடி­ய­வர்­கள் இவர்­கள். மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மக்­க­ளாட்சி, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது சிந்­த­னை­யில் உரு­வாக்­கப்­ப­டும் சட்­டங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு மரி­யாதை தரா­மல் ‘ஏக­சா­லக் அனு­வர்­தித்வா’ என்று சொல்­லப்­ப­டும் ஒற்­றைத் தலை­வ­ரின் அதி­கா­ரத்­துக்கு கேள்­விக்கு இட­மின்றி அடி­ப­ணி­யும் கொள்­கையை அர­சி­யல் – - ஆட்­சியியல் கோட்­பா­டாக மாற்­று­வ­து­தான் இவர்­க­ளது நடை­மு­றை­யா­கும்.

 இன்­றைக்கு பா.ஜ.க. அப்­ப­டித்­தான் இருக்­கி­றது. மோடிக்கு அடி­ப­ணிந்து கிடக்­கி­றது ஜன­நா­ய­க­மற்று. இதே­போல இந்­திய நிர்­வா­கத்­தை­யும் மாற்ற நினைக்­கி­றார்­கள். மூன்­றா­வது முறை ஆட்­சிக்கு வந்­தால் இத­னைத்­தான் செய்­வார்­கள்.

மொழிவழி மாநி­லங்­க­ளைக் கலைத்து விடு­வார்­கள். மத்­தி­யில் ஒரே ஒரு ஆட்சி இருக்­கும். இந்­தி­யாவை பல்­வேறு ‘சன­பா­தங்­க’­ளா­கப் பிரித்­து­வி­டு­வார்­கள். 

சமஸ்­கி­ரு­தம் ஆட்சி மொழி­யாக அறி­விக்­கப்­பட்டு விடும். அனைத்து தேசிய இனங்­க­ளின் மொழி­யும், பண்­பா­டும் அழிக்­கப்­பட்டு விடும்.இத்­த­கைய அழிவை உரு­வாக்­கத் துடிக்­கி­றது பா.ஜ.க.. ஆனால் அது நடக்­காது.

அண்­ணல் அம்­பேத்­க­ரால் உரு­வாக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் வலி­மை­யா­னது, அதனை யாரா­லும் மாற்ற முடி­யாது என்­பதை இந்­திய நாட்டு மக்­கள் இந்தத் தேர்­த­லில் மெய்ப்­பிப்­பார்­கள். 

சட்­டத்தை மாற்ற நினைப்­ப­வர்­களை மாற்­று­வார்­கள் மக்­கள்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?