சம­தர்­மக் கட்சி

 சுயமரியாதை இயக்கம் உருவாக்கப்பட்ட போது அதன் கிளை­யா­கத் தென்­னிந்­திய சம­தர்­மக் கட்சி என ஒன்று தொடங்­கப்­பட இருப்­பதை பிரிட்­டிஷ் அரசு விரும்­ப­வில்லை. 

அரசு அதற்­கு­ரிய ஆணை­யைப் பிறப்­பிக்க இருக்­கி­றது என்­கிற செய்­தி­கள் பர­வின. சுய­ம­ரி­யாதை இயக்­க­மும் தடை செய்­யப்­பட்­டு­வி­டும் என்­பது உறு­திப்­பட தெரி­ய­வந்­தது. 

அரசு ஆணை வெளி­யி­டப் படு­வ­தற்கு முன்­பாக அர­சின் நிலை­யைப் பெரி­யா­ரி­டம் சர் ஏ.டி. பன்­னீர்­செல்­வம் எடுத்­து­ரைத்­தார். அதனை ஏற்று சுய­ம­ரி­யாதை இயக்­கக் கொள்­கையை மட்­டும் பரப்­புரை செய்­வது என்­றும் தென்­னிந்­திய சம­தர்­மக் கட்­சித் தொடங்­கு­வ­தைக் கைவி­டு­வது என்­றும் முடிவு எடுக்­கப்­பட்­டது. 

இது குறித்து பெரி­யார் 1934 இல் ஓர் அறிக்கை வெளி­யிட்­டார்.

 இதே கால­கட்­டத்­தில் திருப்­பூ­ரில் நடை­பெற்ற செங்­குந்­தர் வாலிப மாநாட்­டில் பெரி­யாரை முதன் முத­லாக அறி­ஞர் அண்ணா சந்­தித்­தார்.

1935 ஆம் ஆண்டு சுய­ம­ரி­யாதை இயக்­கம் தமிழ் எழுத்­து­க­ளில் சில மாற்­றங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. 

1931 ஆம் ஆண்டு மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­பின் போது ஒரு­வர் தம்மை மதத்­தின் பெய­ரால் இன்ன மதம் என்று கூறு­வதை விரும்­பா­மல் சுய­ம­ரி­யாதை இயக்­கம் ‘பகுத்­த­றி­வா­ளர்’ என்று கூறு­மாறு பரப்­பு­ரைச் செய்­தது. 

இதே சம­யம் இந்து மகா சபை இந்­துக்­களை ஜெயி­னர், பௌத்­தர், சீக்­கி­யர், ஆரிய சமா­ஜி­கள், பிரம்ம சமா­ஜி­கள் என்று குறிப்­பி­டு­வதாகக்கூறி ஆட்­சே­பணை செய்­தது. 

1931 ஆண்டு மக்­கள் கணக்­கெ­டுப்­பின் போது சாதி விவ­ரங்­களை மக்­க­ளி­ட­மி­ருந்து கோரப்­ப­ட­வில்லை.

நீதிக்­கட்­சி­யும் சுய­ம­ரி­யாதை இயக்­க­மும் ஆற்­றிய பணி­க­ளின் விளை­வா­கத் திரா­விட தேசி­யம் உரு­வாகி வளர்ந்து வள­ர­லா­யிற்று, அதே சம­யம் சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தின் வழி­காட்­டு­த­லால் நீதிக்­கட்சி மிக பலம் வாய்ந்த பார்ப்­ப­னர் அல்­லா­தார் இயக்­க­மாக முற்­றி­லும் மாறி­விட்டு இருந்­தது. 

சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தின் உச்­சக்­கட்­டத்­தின் போது ஆர்.கே.சண்­மு­கம், ‘சுய­ம­ரி­யாதை இயக்­கம் கட­வுளை மறுக்­கிற, பார்ப்­ப­னர்­களை எதிர்க்­கிற இயக்­க­மல்ல, ஆனால் அது வினாவை எழுப்பி அறை­கூ­வ­லைச் சந்­திக்­கிற இயக்­கம்.

 சுய­ம­ரி­யா­தைக்­கா­ரர்­கள் இந்து சமூ­கத்­தின் மய்­யப் புள்­ளி­யா­க­வும் முக்­கி­ய­மா­க­வும் இருக்­கிற சாதி அமைப்­பையே எதிர்க்­கின்­ற­னர். இந்து மதம் எல்­லார்க்­கும் அன்பு காட்­டு­கிற ஆத­ரவு அளிக்­கிற மத­மா­கவே இருக்க வேண்­டும்’ (மெட்­ராஸ் மெயில் / 13.05.1930) என்று பேசி­னார். ஆனால் இதை­யும் தாண்­டித்­தான் தென்­னிந்­திய சம­தர்­மக் கட்சி அமைக்க சுய­ம­ரி­யாதை இயக்­கம் வளர்ந்­தது.

இருப்­பி­னும் சுய­ம­ரி­யாதை இயக்­கம் ஓர் அர­சி­யல் கட்­சி­யாக உரு­வம் பெற்று கைவிட வேண்­டிய சூழ்­நிலை உரு­வா­யிற்று என்­பதை மேலே பார்த்­தோம்.

 நீதிக்­கட்சி சைமன் கமி­ஷ­னின் பரிந்­து­ரை­க­ளின்­படி புதிய அர­சி­யல் சீர்த்­தி­ருத்­தச் சட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தும் தேர்­த­லுக்­கா­கக் காத்து இருந்­தது. நீதிக்­கட்­சி­யின் ஆட்சி 1937 ஜூலை வரை நீடித்­தது. 

தேர்­தல் நடை­பெ­றா­மல் இருந்­த­தால் அமைச்­ச­ர­வை­கள் நீடித்­துக் கொண்டே இருந்­தன.

1937 பிப்­ர­வ­ரி­யில் தேர்­தல் நடந்­தது. காங்­கி­ரஸ் வெற்றி பெற்­றது. மிக காலங் கழித்து பத­வியை ஏற்­றுக் கொண்­டது. இரா­ஜாஜி சென்னை மாகாண பிர­தம மந்­தி­ரி­யா­னார். (அப்­போ­தைய சட்­டம் அப்­ப­டிக் கூறு­கி­றது)

 1925 முதல் 1937 வரை சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தின் பணி­யைப் பற்றி சாராம்­ச­மா­கப் பார்க்­கி­ற­போது கீழ்க்­கா­ணும் விதத்­தில் எடுத்­து­ரைக்­க­லாம்.

(1) முதல் நான்கு ஆண்­டு­க­ளில் மூட­நம்­பிக்­கை­க­ளை ­யும் சநா­தன பழக்க வழக்­கங்­க­ளை­யும் எதிர்க்­கும் இயக்­க­மாக இருந்­தது.

(2) செங்­கற்­பட்டு சுய­ம­ரி­யாதை மாநாட்­டிற்­குப் பிறகு (1929) இரண்­டாம் கட்­டம் தொடங்­கு­கி­றது. அது முதல் சாதி­யத்­தை­யும் மதத்­தை­யும் சுய­ம­ரி­யாதை இயக்­கம் மிகக் கடு­மை­யாக எதிர்த்­தது.

(3) சுய­ம­ரி­யாதை இயக்­கம் 1932 லிருந்து பொரு­ளா­தார திட்­டங்­கள், சோச­லி­சக் கொள்­கை­கள், கம்­யூ­னிச ஆத­ரவு நட­வ­டிக்­கை­க­ளில் மிகத் தீவி­ர­மா­கப் பணி­யாற்­று­கி­றது.

 கம்­யூ­னிச பரப்­பு­ரைக்கு அரசு தடை விதிக்­கவே, சுய­ம­ரி­யாதை பரப்­புரை மட்­டுமே மேற்­கொள்­ளப்­பட்­டது.

(4) பெரி­யா­ரின் அர­சி­யல் திட்­டத்­தின்­படி 1935 ஆம் ஆண்டு முதல் சுய­ம­ரி­யாதை இயக்­கம் முழு­மை­யாக நீதிக்­கட்­சியை ஆத­ரித்­தது. 

நீதிக்­கட்­சிக்­காக 1937–ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­த­லுக்­கா­கச் சுய­ம­ரி­யாதை இயக்­கம் பரப்­பு­ரை­க­ளைச் செய்­தது. நீதிக்­கட்­சித் தலை­வர்­க­ளின் ஒற்­று­மை­யின்­மை­யால் மாபெ­ரும் தோல்­வி­யைச் சந்­தித்­தது.

பிர­த­மர் இரா­ஜாஜி இந்­தி­யைப் பள்­ளி­க­ளில் கட்­டா­யப் பாட­மாக அறி­மு­கம் செய்­தார். சுய­ம­ரி­யாதை இயக்­கம் அடுத்த கட்­டத்­திற்கு நகர்ந்­தது.

 இந்­திப் போராட்­டம் கார­ண­மா­கப் பெரி­யார் பெல்­லாரி சிறை­யில் அடைக்­கப்­பட்­டார். சிறை­யில் இருக்­கி­ற­போதே பெரி­யார் நீதிக்­கட்­சித் தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார். 

அத­னால் நீதிக்­கட்­சி­யை­யும், சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தை­யும் இணைந்து நடத்­தும் பணி­யி­னைப் பெரி­யார் ஏற்­றார். 1940–ஆம் ஆண்­டின் தொடக்­கத்­தி­லேயே இந்தி, பள்­ளி­க­ளில் கட்­டா­யப் பாட­மாக்­கி­யதை கவர்­னர் இரத்து செய்­தார்.

இந்­திப் போராட்­டத்­தில் நட­ரா­சன், -தால­முத்து ஆகிய இரு­வரை இயக்­கம் பலி கொடுக்க வேண்­டி­ய­தா­யிற்று. 

இந்தி எதிர்ப்­புப் போராட்­டம் திரா­வி­டத் தமிழ்த் தேசிய உணர்ச்­சியை சென்னை மாகாண மக்­க­ளுக்கு ஊட்­டி­யது. தனி நாடு கோரிக்­கைக்கு வழி வகுத்­தது.

சுய­ம­ரி­யாதை இயக்­கம் அதன் பரப்­பு­ரைப் பணியை இழக்க வேண்­டி­ய­தா­யிற்று. நீதிக்­கட்­சி­யின் அர­சி­யல் போக்­கை­யும் சேர்த்து கவ­னித்து முன்­னெ­டுத்­துச் செல்ல வேண்­டிய பொறுப்பு பெரி­யா­ருக்கு வாய்த்­தது. 

சரி­யா­கச் சொல்­வ­தா­னால் அவ­ருக்கு விருப்­ப­மான ‘சுய­ம­ரி­யா­தை’ப் பணியை அவ­ரால் செய்ய முடி­ய­வில்லை. இதை அவர் வருத்­தத்­து­டன் பதிவு செய்து இருக்­கி­றார். 1939 ஆம் ஆண்டு செப்,2 ஆம் தேதி இரண்­டாம் உல­கப் போர் தொடங்­கி­யது.

 போரின் நெருக்­க­டி­கள் அதி­க­ரிக்­கத் தொடங்­கிய போது வல்­ல­ரசு நாடு­கள் காலனி நாடு­க­ளுக்கு சுதந்­தி­ரத்தை வழங்­கு­வது என்­பது தீர்­மா­ன­மா­யிற்று. இத­னால் இந்­தி­யா­வெங்­கும் கட்­சி­கள் தம்­தம் கோரிக்­கை­க­ளுக்­காக விழிப்­ப­டைந்­தன.

சுய­ம­ரி­யாதை இயக்­க­மும் நீதிக்­கட்­சி­யும் சேர்ந்து இயங்­கத் தொடங்­கி­ய­தற்கு முன்­பா­கவே ‘தமிழ்­நாடு

தமி­ழ­ருக்கே’ கோரிக்கை முழக்­க­மாக முன் வைக்­கப்­பட்­டது. 

அது பின்­னர் ‘திரா­விட நாடு திரா­வி­ட­ருக்கே’ என்று மாற்­றங்­கண்­டது. 1940, முதல் திரா­வி­ட­நாடு கோரிக்­கையை இரு இயக்­கங்­க­ளும் இணைந்து முன்­வைத்­தன. 1942 மார்ச்­சில் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் குழு­வி­னர் இந்­தியா வந்­த­போது பெரி­யார் குழு­வி­னர், கிரிப்­சைச் சந்­தித்து திரா­விட நாடு கோரிக்­கையை வலி­யு­றுத்­தி­னர்.

 உல­கப்­போர் மிக மும்­மு­ர­மாக நடந்து கொண்­டி­ருந்த இந்­தக் காலக்­கட்­டத்­தில் 1941-–1943 அக்­டோர் வரை குடி­அ­ரசு நிறுத்­தப்­பட்­டு­விட்­டது. விடு­தலை நாளேடு ‘யுத்த பிரச்­சா­ரத்­திற்­காக’ அர­சுக்கு வழங்­கப்­பட்டு விட்­டது. 

அறி­ஞர் அண்­ணா­வின் ‘திரா­விட நாடு’ மட்­டுமே சுய­ம­ரி­யாதை இயக்­கத்­திற்­கும் நீதிக்­கட்­சிக்­கும் வழி­காட்­டு­தல்­களை வழங்­கிக் கொண்டு இருந்­தது. சில ஆத­ரவு இயக்க ஏடு­கள் துணை நின்­றன. நீதிக்­கட்­சி­யின் சில மாவட்­டங்­க­ளில் மாநா­டு­கள் நடை­பெற்­றன.

 சுய­ம­ரி­யாதை இயக்­கம், நீதிக்­கட்சி ஆகி­யவை இணைந்த நிலை­யில் ‘திரா­வி­டர் கழ­கம்’ எனும் பெயர் மாற்­றம் பெற இருப்­பதை அம்­மா­நா­டு­க­ளின் தீர்­மா­னங்­கள் சுட்­டிக்­காட்­

டின. 

உல­கப் போர் செய்­தி­களை அறி­ஞர் அண்ணா தமது கட்­டு­ரை­க­ளின் வழி மிக அரு­மை­யா­கப் படம் பிடித்­துக் காட்­டி­னார்.

பெரி­யார் காங்­கி­ர­சி­லி­ருந்த போதே இரா­மா­ய­ணத்­தைப் பற்றி விமர்­ச­னம் செய்து பேசி­ய­வர். 

பின்­னர் சுய­ம­ரி­யா­தைக்­கா­ர­ராக மநுஸ்­மி­ரு­தியை எரித்­த­வர். இதன் தொடர்ச்­சி­யாக 1943ஆம் ஆண்டு பெரி­ய­பு­ரா­ணம், கம்ப இரா­மா­ய­ணம் போன்ற நூல்­களை எரிக்க வேண்­டும் எனப்­பேசி இயக்­கம் நடத்­தி­னார். 

இது அறி­ஞர்­க­ளி­டையே அதிர்ச்­சி­யை­யும் சர்ச்­சை­யை­யும் தோற்­று­வித்­தது. 

இதே ஆண்டு மார்ச்­சில் கம்ப இரா­மா­ய­ணம் குறித்து முதல் சொற்­போர் அறி­ஞர் அண்­ணா­வுக்­கும் இரா.பி. சேதுப்­பிள்­ளைக்­கும் நடை­பெற்­றது. இது சென்­னை­யில் நடந்­தது.

 இரண்­டா­வ­தாக, சேலத்­தில் அறி­ஞர் அண்­ணா­வுக்­கும் நாவ­லர் சோம­சுந்­தர பார­திக்­கும் சொற்­போர் நிகழ்ந்­தது. இந்­நி­கழ்­வு­கள் மிகப் பர­ப­ரப்­பா­கப் பேசப்­பட்­டன.

நீதிக்­கட்­சியை ஆங்­கி­லேய அரசு ஒரு முக்­கி­யக் கட்­சி­யாக இக் கட்­டத்­தில் கரு­த­வில்லை என்­ப­தை­யும் தனி நாட்­டுக் கோரிக்­கையை ஏற்­றுக் கொள்­ளக் கூடிய வகை­யில் பிரிட்­டி­ஷார் நட­வ­டிக்­கை­கள் இல்லை என்­ப­தை­யும் பெரி­யார் சுட்­டிக் காட்டி 1943 அக்­டோ­பர் மாதம் குடி அர­சில் எழு­தி­னார். 

நவம்­ப­ரில் அறி­ஞர் அண்­ணா­வின் முதல் நாட­க­மான சந்­தி­ரோ­த­யம் அரங்­கே­றி­யது. நாட­கத்­தைப் பாராட்டி குடி­அ­ர­சில் பெரி­யார் தலை­யங்­கத்­தில் அண்­ணா­வைப் பாராட்டி எழு­தி­யி­ருந்­தார்.

 டிசம்­பர் இதழ்­க­ளில் கம்ப இரா­மா­யண பாத்­தி­ரங்­கள் பற்றி தொடர்ந்து எழு­தி­னார். அவை ஜன­வ­ரி­யில் முடி­வுற்­றது. இவை­போல பின்­னர் இரா­மா­யண பாத்­தி­ரங்­கள் எனும் நூல்­க­ளாக விற்­பனை ஆயின. இன்­ன­மும் விற்­ப­னை­யில் கிடைக்­கின்­றன.

1944 ஆண்­டில் ‘திரா­வி­டர் கழ­கம்’ எனப் பெயர் மாற்­றம் சேலம் மாநாட்­டில் நிகழ்ந்­தது. மாநாட்­டில் நடந்த நிகழ்­வு­களை அறி­ஞர் அண்­ணா­வின் ‘திரா­விட நாடு’ பதிவு செய்து இருக்­கி­றது.

 குடி­அ­ர­சி­லும் இன்­னும் விரி­வாக திரா­வி­டர் கழ­கம் பெயர் மாற்ற நிகழ்­வு­க­ளைப் படித்து அறி­ய­லாம். 

சுய­ம­ரி­யாதை இயக்­க­மும் நீதிக்­கட்­சி­யும் திரா­வி­டர் கழ­க­மா­கி­விட்­டது. அதில் சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தின் கொள்­கை­க­ளும் பிரிட்­டிஷ் அர­சின் நேரடி பார்­வை­யின் கீழான திரா­விட நாடு கோரிக்­கை­யும் முக்­கி­யக் கொள்­கை­க­ளாக விளங்­கின. 

பெரி­யார் தலை­வ­ரா­க­வும் அறி­ஞர் அண்ணா பொதுச்­செ­ய­லாள ராக­வும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­னர். 

இதன் பிறகு சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தின் இரண்­டாம் கட்ட நிகழ்­வு­க­ளைச் சுருக்­க­மா­கப் பார்ப்­போம்.

1944 நவம்­பர் 1ஆம் தேதி கிருஷ்­ணன் நாடக சபை­யா­ரின் இழந்த காதல் நாட­கத்­தில் கலந்து கொண்டு என்.எஸ். கிருஷ்­ண­னைப் பற்றி பெரி­யார் பாராட்­டிப் பேசி­னார்.

 நவம்­ப­ரில் சி.என்.இலட்­சு­மி­காந்­தம் என்­ப­வன் சென்னை வேப்­பே­ரி­யில் கொலை செய்­யப் பட்­டான். 

இவன் ‘இந்­து­நே­சன்’ எனும் மஞ்­சள் ஏட்­டின் ஆசி­ரி­ய­ராக இருந்­தான். 

அர­சி­யல் தலை­வர்­கள், வணி­கர்­கள், சினிமா நட்­சத்­தி­ரங்­கள் பற்­றிய அவ­தூ­று­க­ளைச் செய்­தி­யாக வெளி­யிட்டு வந்­தான்.

இவன் கொலைக்கு கார­ண­மா­ன­வர்­க­ளா­கக் கரு­தப்­பட்டு நடி­கர்­கள் என்.எஸ்.கிருஷ்­ண­னும் எம்.கே.தியா­க­ராச பாக­வ­த­ரும் கரு­தப்­பட்­ட­னர்.

 அத­னால் சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர். மிகுந்த பர­ப­ரப்­பான கொலை வழக்­காக அது பேசப்­பட்­டது. பிறகு வழக்கு நடந்து ‘பிரிவி கவுன்­சில்’ வரை சென்று பின்­னர் உயர்­நீதி மன்­றத்­தால் 1947இல் நிர­ப­ரா­தி­கள் என்று அவர்­கள் விடு­தலை ஆனார்­கள். 

இவர்­க­ளின் விடு­த­லைக்­குப் பெரி­யா­ரும், அறி­ஞர் அண்­ணா­வும் பெரி­தும் பாடு­பட்­டார்­கள்.

 இரண்டு பேரும் தமி­ழர்­கள் குற்­றம் செய்­யா­த­வர்­கள். கிருஷ்­ணன் திரைப்­ப­டங்­க­ளில் இயக்­கப் பரப்­பு­ரையை முதன் முத­லில் செய்­த­வர். ஆகிய இக்­கா­ர­ணங்­க­ளுக்­காக அவர்­க­ளின் விடு­த­லைக்­காக இயக்­க­மும் தலை­வர்­க­ளும் பாடு­பட வேண்­டி­ய­தா­யிற்று.

திரா­வி­டர் கழ­கம் சுய­ம­ரி­யா­தைக் கொள்­கை­களை அப்­ப­டியே வரித்­துக் கொண்­டது. 

அதன் அடிப்­ப­டை­யில் வகுப்­பு­வாரி பிரி­தி­நி­தித்­து­வத்­தைத் தொடர்ந்து காத்து வந்­தது. தனி­நாட்­டுக் கொள்கை முழக்­க­மா­கிப் பின் 1940 முதல் அது முக்­கி­யக் கொள்கை ஆயிற்று. பரப்­பு­ரை­யில் மேடைப் பேச்­சு­க­ளோடு பாடல்­க­ளைப் புனைந்து பாடு­வோர் தோன்­றி­னர். மேடை நாட­கங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. புது­மைப்­பித்­தன் போன்ற எழுத்­தா­ளர்­கள் 1930 களி­லேயே தனது சிறு­க­தை­க­ளில் சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தைப் பற்றி எழு­தி­னார். திரைப்­ப­டங்­க­ளில் நம் கருத்­து­கள் எடுத்­துக் கூறப்­பட்­டன.

 புரட்­சிக்­க­வி­ஞர் பார­தி­ தா­சன் திரைப்­ப­டத்­து­றை­யில் முதன் முத­லில் ஈடு­பாடு கொண்­ட­வ­ராக இருந்­தார். திரா­வி­டர் கழ­கத்­தி­னர் 1946 முதல் திரைப்­ப­டத்­து­றை­யி­லும் நுழை­ய­லா­யி­னர்.

திரா­வி­டர் கழ­க­மா­ன­வு­டன் அமைப்­புப் பணி­க­ளில் மிக­வும் கவ­னம் கொள்ள வேண்­டி­ய­தா­யிற்று. உறுப்­பி­னர் சேர்ப்­பு­கள் நிகழ்ந்த வண்­ணம் இருந்­தன. உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை விவ­ரம் பற்­றிய செய்­தி­கள் இயக்க ஏடு­க­ளில் இடம் பெற்­றன. 

ஊர்­தோ­றும் அமைப்­பு­கள் உரு­வாகி பல­மாக்­கப்­பட்டு வந்­தது. 1945 ஆம் ஆண்டு திரா­வி­டர் கழக முதல் மாநில மாநாட்­டில் விதி­மு­றை­கள் கழ­கச் சட்­டத்­திட்­டங்­கள் படிக்­கப்­பட்­டன. 1945ஆம் ஆண்டு உல­கப் போர் முடி­வுக்கு வந்­தது. இந்­திய விடு­தலை பாகிஸ்­தான் விடு­தலை பற்­றிய பேச்­சு­களே நிகழ்ந்து வந்­தன. 

திரா­விட இயக்­கத்தை பிரிட்­டி­ஷார் கண்டு கொள்­ளவே இல்லை. இது குறித்து பெரி­யார் நிரம்ப எழுதி இருக்­கி­றார். திரா­வி­டர் கழ­கம் உரு­வான ஓர் ஆண்­டிற்­குள் பெரி­யா­ருக்­கும் அறி­ஞர் அண்­ணா­வுக்­கும் கீழ்க்­கா­ணும் பிரச்­சி­னை­க­ளில் முரண்­பா­டு­கள் தோன்­ற­லா­யின.

(1) அறி­ஞர் அண்ணா, 1945லேயே அர­சி­யல் நோக்­கத்­துக்­கான முறை­யிலே கட்சி அமைப்பு இருக்க வேண்­டும் என்­பதை அறி­யாத கிளர்ச்­சிக்­கா­ரர்” என்று பெரி­யா­ரைப் பற்றி எழு­தி­னார்.

(2) 1946இல் புரட்­சிக்­க­வி­ஞர் பார­தி­தா­சன் அவர்­க­ளுக்கு நிதி வழங்­கிய விழா­வில் பெரி­யார் கலந்து கொள்­ள­வில்லை.

(3) கருஞ்­சட்டை அணி­வ­திலே பெரி­யா­ருக்­கும் அண்­ணா­வுக்­கும் கருத்து மாறு­பாடு.

(4) அறி­ஞர் அண்ணா கருஞ்­சட்டை மாநாட்­டில் கலந்து கொள்­ள­வில்லை.

(5) 1947 சுதந்­தி­ர­நாள் பற்­றிய மதிப்­பீட்­டில் பெரி­யா­ருக்­கும் அண்­ணா­வுக்­கும் ஒத்த கருத்து இல்லை.

-க.திருநாவுக்கரசு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

2025ல் தங்கம் விலை

முடிவுக்கு வருகிறதா?