"மின் உற்பத்தி தடங்கல்" உண்மையில் யார் காரணம்?
தமிழகமெங்கும் மின்தடை தலையை விரித்துப்போட்டு ஆடுகிறது. ஊர் முழுக்க 12 மணி நேரம் இந்த ஆட்டம் நடந்தாலும் சென்னையில் மட்டும் 2 மணி நேரம்.ஆனால் ஏற்காட்டில் மின்வெட்டு என்றால் என்னவென்று கேட்கும் நிலையில் ஏற்காடு தொகுதியே ஒளிர்கிறது.அதுவும் வரும் 4ம் தேதி வரைதான். தமிழக மின் வெட்டுக்கு திமுக-காங் கூட்டணிதான் காரணம் என்று ஜெயலலிதா கண்டு பிடித்துள்ளார். அதற்கே அவருக்கு மூன்றாண்டுகள் ஆகியுள்ளது.பொறுப்புடன் குற்றம் சாட்டத்தான் இந்த கால அவகாசம். ஸ்டாலின் மேயாராக இருந்ததுதான் இன்றைய டெங்கு கொசுக்கடிக்கு காரணம் என்ற சைதை துரை சாமியாரின் அதிரடி குற்றசாட்டுக்கு அம்மாவின் குற்றசாட்டு கொஞ்சம் குறைவான மதிப்பெண்தான். சரி. திமுக ஆட்சி அலங்கோலத்தை சீராக்கத்தானே மக்கள் உங்களை கோட்டையில் அமர்த்தியுள்ளார்கள்? மூன்றாண்டுகளாக திமுக ஆட்சியையும்,கலைஞரையும் குற்றம் சாட்டுவதிலும்.அவர்கள் மீது நிலபகரிப்பு வழக்கு போட்டதையும்,அவதூறு வழக்கை போட்டதையும் தவிர வேறு சாதனையை இந்த ஜெயா அரசு செய்துள்ளதாகத் தெரியவில்லையே. திட்டுவதை தவிர தமிழக முன்னேற்றத் திட்டங்களை இதுவரை ஒன்...