இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உங்கள் ஆதார் தகவல்கள் யார் கையிலோ?

படம்
மோடி அரசு முனைந்து செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் இந்திய மக்களுக்கு அவதியைத்தருவதாகவும்,அழிவைத்தருவதுமாகத்தான் அமைகிறது. ஆதார் எண்ணை மோடி அரசு வந்தபின்னர் கட்டணக்கழிப்பறை செல்வதற்கு கூட இணைக்க வேண்டிய நிலை. ஆதார் அட்டை பாதுகாப்பில்லை.தனிமனிதரின் தகவல்களைத் திருடுகிறது என்றால் அப்படி எல்லாம் இல்லை.மிகப்பாதுகாப்புடன் உள்ளது. 10 அடி அகல சுவர் உள்ள அறையில் பாதுகாக்கப்படுகிறது என்று ஆதார் அமைப்பு கூறுகிறது.ஆதார் ரகசியம் பாதுகாக்கப்படும் கணினி தகவல் சேமிப்பு அமைப்பில்(சர்வர்)இருந்து கணினி மூலமாகவே திருடப்படுகையில் சுவரும்,இயந்திரத் துப்பாக்கியும் என்ன  பாதுகாப்பைத்தரும். ஜனவரி மாதம்தான் 500 ரூபாய் செலவில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட தகவல்களைப் பெற்றுவிட்டதாக தெரிவித்திருந்தது ஒரு நாளிதழ். அதை மறுத்த தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அந்த செய்தியை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர் மீதும் நாளிதழ் மீதும் காவல்துறையில் புகார் அளித்தது.  இதோ ஏர்டெல் நிறுவன வங்கி தனது ஏர்டெல் அலைபேசி சிம் அட்டை வாங்க ஆதார் என்னைத்தந்தவர்கள் விபரங்களைத்திருடி செய்த திருவிளையாடலைப்  பாருங்கள்.நம் ஆதார

பாஜகவுக்கு எதிராக அமித்ஷா ?

படம்
கர்நாடகத் தேர்தல் பாஜகவினரை கிறுக்குப் பிடிக்க வைத்துள்ளது.  பிள்ளையார் பிடிக்ககுரங்கான கதையாக, பாஜக ஒன்றைச் செய்யநினைத்தால், சம்பந்தம் இல்லாத பிரச்சனை ஒன்று வந்து, எடியூரப்பா உள்ளிட்ட பாஜகதலைவர்களை அலைக்கழித்துக் கொண்டி ருக்கிறது.  முதல்வர் கனவில் இருக்கும் எடியூரப்பாவுக்கு, சொந்தக் கட்சியும், அதன் தலைவர் களுமே எதிரிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவா மாநிலத்தில் பாஜக குறுக்கு வழி யில் ஆட்சியைப் பிடித்து, பாஜக-வைச் சேர்ந்த மனோகர் பாரிக்கர் முதல்வராக இருக்கிறார்.  கோவா மாநிலத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மகதாயி நதிநீர் தொடர்பாக நீண்ட காலப் பிரச்சனை இருக்கும் நிலையில், பாரிக்கர் மூலம் அப்பிரச்சனையை தீர்த்து விட்டால்; அதுகர்நாடகத் தேர்தலில் தனக்கு சாதகமாக இருக்கும் என்று எடியூரப்பா கணக்குப் போட்டார். குறிப்பாக, வட கர்நாடகா விவசாயிகளின் வாக்குகளை அள்ளி விடலாம் என்பது அவரது திட்டம். அந்த வகையில், நீண்டகால மகதாயி பிரச்சனையை 2017 டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் தீர்த்து வைப்பேன் என்று எடியூரப்பா அறி வித்தார். ஒரே ஓட்டமாக ஓடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வீட்டில், கோவா முதல்வர்

ஸ்டெர்லைட்டை மூடு

படம்
லண்டனில் வசிக்கும் அணில் அகர்வாலின் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனம் மும்பையை தலைமை அலுவலகமாக கொண்டு இந்தியாவிலும் இதர நாடுகளிலும் தொழிற்சாலைகள் சுரங்கங்கள் அமைத்து தாதுக்களை சுத்திகரித்து பிற தொழில்களுக்கு தேவையான உலோக மூலகங்கள், அமிலங்கள், பலமான கான்கீரிட் டிற்கு தேவையான செயற்கை மணல் ஆகியவைகளை மலிவு விலையில் உலக சந்தையில் விற்பதாக மார்தட்டுகிறது. ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் குறிப்பாக தூத்துக்குடியிலும். பூமியையும் காற்றையும் கெடுக்கும் பழைய தொழில் நுட்பங்களையும் பழைய கருவிகளையும் வைத்து தொழிலாளர்களை நோகடித்து சுரண்டுவதையும் .  எதிர்க்கும் மக்களை பஜ்ரங்தள் போன்ற குண்டர் படையை வைத்து மிரட்டுவது தீவைத்து கொல்வது போன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் அது சாதுர்யமாக மறைத்துவிடுகிறது.  அவற்றை காசு வாங்கிக்கொண்டு  ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. ஸ்டெர்லைட் மக்கள் தொடர்பு அலுவலர் கூட்டம் என்ற பெயரில்  செய்தியாளர்களை மாதாமாதம் அழைத்து கவனித்து விடுகிறார்.உணவு,உற்சாகாப்பானம்,கையில் பண உறை என்று குளிப்பாட்டி விடுகிறார்.மது வெளியில் கொடுக்கப்பட்டு விடுகிறது.மாது மட்

'காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா '

படம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக நடந்த பேரணியில் கலந்து கொண்ட மக்கள் முழக்கமிட்ட வாசகம் இது.  அவர்கள் ஏந்திய பதாகைகளிலும் இந்த  வாசகம்தான் அதிகளவில்   இடம் பிடித்திருந்தன.  தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையில் முதன்மையாக காப்பர் கேத்தோடு ( Copper Cathode) மற்றும் காப்பர் ராடுகள் (Copper rods) உற்பத்தி செய்யப்படுகின்றன.  நாம் வீடுகளில் பயன்படுத்தப்படும் வயர்களில் உள்ள   மின்சாரக் கம்பிகள் (Wires) காப்பரால்  ஆனவையே. ட்ரான்ஸ்பார்மரில் மின்சாரத்தைக் கடத்துவதற்காக காப்பர் ராடுகள்தயாரிக்கப்படுகின்றன.  காப்பர் ராடுகள், கேத்தோடுகள் தயாரிக்கும்போது வெளிப்படும் நச்சுக்காற்றால் நுரையீரல் சம்பந்தமான வியாதிகளும், காப்பர் கலந்த உணவையும் தண்ணீரையும் எடுத்துக்கொள்வதால் சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் பாதிப்புகளும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.  தமிழ்நாட்டிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.  உண்மையில், காப்பர், உடல்நலப்பாதிப்புகளை ஏற்படுத்துமா? அந்த மக்களின் அச்சம் உண்மை