சில சோதனைகள்...,
விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக இப்போது யாசர் அராபத் தின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது. இதேபோல் வேறு சில தலைவர்களின் உடல்கள் வேவ்வேறு காரணங்களுக்காக கல்லறைகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அதில் சிலவற்றை இங்கு காண்போம். சே குவேரா அர்ஜென்டினாவில் பிறந்த கியுப நாட்டுப் புரட்சியாளரான சேகுவேரா 1967ஆம் ஆண்டு போலிவியாவில் பிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் உடல் எங்கே புதைக்கப்பட்டது என்பது தொடர்பாக பல ஆண்டுகள் ரகசியம் காக்கப்பட்டது. சே சுடப்பட்டதில் தொடர்புடைய ஒரு பொலிவிய இராணுவ ஜெனரல் 1995ஆம் ஆண்டில் சேகுவேராவின் உடல் ஒரு விமான நிலையத்தின் ஒடு பாதை அருகே புதைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கப் பிறகு அவரின் உடல் எடுக்கப்பட்டு கியுபாவுக்கு கொடுக்கப்பட்டது. சேகுவேராவுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகத்தில் அவ்வுடல் தற்போது பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தோண்டி எடுக்கப்பட்டது சேவின் உடலா என்பது குறித்து இன்னமும் சந்தேகம் இருக்கிறது. ஆலிவர் கிராம்வெல் இங்கிலாந்தில் முடி...