இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒமிக்ரான்-5

படம்
  உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி, தற்போதுதான் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.  இந்நிலையில் மீண்டும் புதிதாக ஒமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளைப் பீதியடையச் செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் உருமாறிய பி.1.1.529 என்ற கொரோனா தொற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.இந்த வைரஸுக்கு ஒமிக்ரான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஓமைக்ரான் என பரவலாக அழைக்கப்பட்ட இவ்வகை கொரோனா திரிபு உச்சரிப்பு ஒமிக்ரான் தான் சரி.   இந்த ஒமிக்ரான் வைரஸ் 32 வகையில் உருமாறும் தன்மை கொண்டது என்பதையும், இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் அவர்களையும் தாக்கும் வீரியம் கொண்டது எனவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் தடைவிதித்துள்ளன.  மேலும் உலக நாடுகள் முழுவதும் சர்வதேச விமான நிலையங்களில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அவையாவன: “1. ஒமிக்ரான் வகை வைரஸ் ஏற்

கைதுகள் ஆரம்பம்.

படம்
  ‘குடும்ப அரசியலால் ஜனநாயகத்துக்கு ஆபத்து’ என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திருவாய் மலர்ந்துள்ளார். ஜனநாயகத்தைப் பற்றி அவர் பேசுவதுதான் நகைப்புக்குரியது. அதுவும் எங்கே பேசி இருக்கிறார் தெரியுமா? அரசமைப்புச் சட்டத்தை நினைவுகூரும் நாள் விழாவில் பேசும் போது சொல்லி இருக்கிறார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் பேசும் போது இதனைச் சொல்லிஇருக்கிறார். ஆட்சியலைப் பற்றி, அரசின் அமைப்பைப் பற்றி, அரசு இயலைப்பற்றி, நிர்வாகவியலைப் பற்றி, நாடாளுமன்ற இயலைப் பற்றிப் பேச வேண்டிய இடத்தில் அரசியலைப் பற்றி, அதுவும் கட்சி அரசியலைப் பற்றி பேசிஅந்த நிகழ்ச்சியின் தன்மையையே மாற்றி இருக்கிறார். அதாவது அரசியலமைப்புச் சட்டத்தை நினைவு கூரும் நாளையே சொந்த அரசியலுக்கு பயன்படுத்தி இருக்கிறார். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவருக்கு ஜவஹர்லால் நேருவின் பிம்பம் மிரட்டுவதாக இருக்கிறது. காங்கிரசு கட்சியை இரண்டாவது முறையாகத் தோற்கடித்துவிட்டு, அரியணையில் உட்கார்ந்த பிறகும் காங்கிரசு கட்சி அவருக்கு மிரட்சியை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இதுதான் அவரது உரையில் தெரிகிறதே தவிர, ஜனநாயகத்தின் மீதான அக்கறை அல்ல! இன்னும்

ஓமைக்ரான்

படம்
  B.1.1.529 என்றழைக்கப்படும் 50 பிறழ்வுகளைக் கொண்ட இந்த புதிய கொரோனா திரிபுக்கு, உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை ஓமைக்ரான் (Omicron) ஒரு புதிய கிரேக்க பெயரை சூட்டி உள்ளது . மேலும் இத்திரிபை 'கவலைக்குரிய திரிபு' (Variant of Concern) என வகைப்படுத்தி உள்ளது உலக சுகாதார அமைப்பு.  ஆரம்ப கால ஆதாரங்கள் அடிப்படையில் இத்திரிபு வேகமாக பரவும் அபாயம் கொண்டதாக பரிந்துரைக்கிறது. இந்தத் திரிபில் உள்ள அனைத்து மரபணு பிறழ்வுகளும் ஆபத்தானவை இல்லை என்றாலும், சில பிறழ்வுகள் காரணமாக இதற்கு பரவும் தன்மை, தொற்றும் தன்மை, உடலில் அதிகமான பாதிப்பை உண்டாக்கும் தன்மை ஆகியவற்றின் இருப்பதால் இது கவலைக்குரிய திரிபு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திரிபின் இயல்பு காரணமாக ஏற்கனவே கொரோனா தொற்று உண்டானவர்களுக்கும் மீண்டும் நோய் தொற்றுவதற்கான அபாயம் உண்டாகியுள்ளது. நவம்பர்24அன்று முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்தத் திரிபு ஹாங்காங், பெல்ஜியம், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருப்பது இதுவரை உறுதியாகியுள்ளது. பட மூலாதாரம், "புதிய கொரோனா திரிபில் வழக்கத்துக்கு மாறாக பல்வேறு பிறழ்வுகள் உள

இந்தி( மக்கள்) பரப்பு

படம்
  இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர்.அதனால்தான் இந்தியாவை மூன்றாம் உலக நாடு என்கிறோம். உலக மயம் அறிமுகம் ஆன 91-ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் ஒரு முக்கியத்துவமும் கவனமும் கிடைத்துள்ளது. அதற்குக் காரணம் தனியார் தாரளாமயக் கொள்கை மூலம் இந்திய வளங்களை உலக நாடுகள் பங்கீடு செய்து கொள்வதுதான். ஆனால், இந்தியாவின் இதயமான வேளாண் தொழில் நசிந்து விலைவாசி உயர்வு, கல்வி வீழ்ச்சி. தனிநபர் வருவாய் இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, என பல்வேறு அடிப்படை பிரச்சனைகளுக்குள் பெரும்பான்மை இந்தியர்கள் சிக்கியிருக்கிறார்கள். இந்நிலையில்தான் இந்தியாவில் ஏழ்மையான மாநிலங்கள் குறித்தும் வளர்ச்சி குறித்தும் நிதி ஆயோக் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.வளர்ச்சிக்குறியீட்டின் அடிப்படையில் இந்தி பேசும் மாநிலங்கள் மிக மிக பின் தங்கியிருக்கிறது.இந்தி, இந்து, இந்துத்துவம் இவைகளை போற்றுகிற மாநிலங்களாகவும் பாஜக எளிதில் வெற்றி பெறும் மாநிலங்களாகவும் இவைகள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக  வறுமை உள்ள மாநிலங்களில் முதலிடம் பீகாருக்கு கிடைத்துள்ளது அங்கு 51.91 சதவிகித ஏழைகள் உள்ளார்கள். இர

உதய நாள்.

படம்
  பராசக்தியில் வசனம் எழுதி  தன் பேனா முனயில் திரை உலகத்தை புரட்டி போட்ட கருணாநிதியின் பேரன் என்ற அடை மொழியோடு திரையுலகில் கால் பதித்தவர் உதயநிதி ஸ்டாலின். விஜய் நடித்த ‘ குருவி’ திரைப்படம் இவரை தயாரிப்பாளராகவும்… ‘ விண்ணை தாண்டி வருவாயா’ இவரை விநியோகஸ்தராகவும் அடையாளம் காட்டியது. ஆர்யா.. சூர்யா என அவர்களின் திரைப்படங்களை தயாரித்த இவர் அவர்களின் வரிசையிலேயே ஒரு நடிகராகவும் அமர்ந்தார். . ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தில் ஹன்சிகாவின் நாயகனாக உதயமானார் உதயநிதி. 4 / 9 ஹன்சிகா இல்லைனா நயன்தாரா என இவர் அடுத்து நயன்தாராவின் நாயகனாக ‘’இது கதிர் வேலன் காதல்’ திரைப்படத்தில். கதிர்வேலனாக காதல் படித்த உதயநிதி அது முதல் முன்னணி இளம் நாயகர்களின் வரிசையிலும் அமர்திரைப்படம். தொடர்ந்து உதயநிதியின் நடிப்பு பரிமாணமும் சற்று பூசி இவர் நடித்த கெத்து,  நன்பேண்டா, மனிதன் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. குறிப்பாக மனிதனில் இயல்பான இளைஞராக…. வாதாடும் வழக்கறிஞராக வலம் வந்து நடிப்பிலும் ஒரு சன்(Sun)னாக ஜொலித்தார் உதயநிதி 6 / 9 இயக்குனர் எழில் இயக்கிய, சரவணன் இருக்க பயமேன் திரைப்படத்தில் காதல் நகைச்சுவை என ’எ

ஏசு கதை?

  ஏசு கிறிஸ்து ஒரு கற்பனை! அப்படி ஒருவர் இல்லை! இல்லவே இல்லை! - ஜோசப் இடமருகு நான் ஜோசப் இடமருகு பேசுகிறேன். இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவரும். உலக நாத்திக சங்கத்தின் துணைத் தலைவருமான ஜோசப் இடமருகுதான் பேசுகிறேன்.1934 செப்டம்பர் 7ஆம் தேதி கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் பிறந்தேன். இளமைக்காலத்தில் கிறித்துவைத் தெய்வமாக நம்பி. அம்மத நூல்கள் அனைத்தையும் தீவிரமாகப் படித்தேன். வயது வளர்ந்தது, எனது பகுத்தறிவு வலிமை பெற்றது. விமர்சன கண்ணோட்டத்தோடு மூடநம்பிக்கையை ஓரம்கட்டி வைத்துவிட்டு, பைபிளைப் படிக்கத் தொடங்கிய பிறகுதான் அதில் உள்ள குறைபாடுகள் தெரியவந்தன. 19ஆவது வயதில் எனது ஆராய்ச்சிப்படி கிறித்து ஒரு மனிதனாக வேண்டுமானால் இருக்கலாம் நிச்சயம் கடவுளாக  இருக்க வாய்ப்பில்லை என்று எழுதினேன்.இது கிறித்துவர்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியது.நான் அஞ்சவில்லை. என்னைக் கிறித்துவ மதத்திலிருந்து நீக்கினர். நான் மகிழ்ச்சியடைந்தேன். அதன்பிறகுதான் எனது ஆராய்ச்சி தீவிரமானது. ஏசுவினுடைய வாழ்க்கையில் நேரடித் தொடர்புடைய இடங்களை     நேரில் சென்று காணவேண்டும் என்ற ஆசை பிறந்தது. பாலஸ்தீனத்திற்குச்

வேளான்சட்டங்கள் முடிந்த கதை.

படம்
 மோடி  அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி  விவசாயிகளுக்கு எதிரான, கார்பரேட் களுக்கு ஆதரவான புதிய மூன்று வேளாண் சட்டங்களை அறிமுகம் செய்தது.  அதன்பிறகு அவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது.  இதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்தும், அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று பிரதமர் மோடி, அந்த மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என அறிவித்திருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.  https://youtu.be/u8-M3d86V5s   இந்த நேரத்தில் அந்த சட்டங்களை அறிமுகப்படுத்தியது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டம், அதனைத் தொடர்ந்து மோடியின் திரும்பப் பெறும் அறிவிப்பு வரை ஒரு மீள் பார்வையிடுவோம்.    ஜூன் 5. 2020:  மத்திய அரசு மூன்று புதிய வேளாண் மசோதாக்களை அறிமுகம்  செப்.14. 2020:  நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செப். 17. 2020:  மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. செப் 20. 2020:  மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறை

26 சட்ட வரைவுகள்

படம்
  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 26 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.  இதில் ஒன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் வகித்த முற்போக்குப் பாத்திரமும் பண்பாடும் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் போன்ற பகுதிகளில் இந்து ஜாட்டுகளுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் ஒரு பிணைப்பை உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.  எப்படி இருந்தாலும் உத்தரபிரதேசத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பாஜக அயோத்தி ராமர்கோவில் விவகாரத்திற்கு இணையான அளவில் பேசப்படக்கூடிய ஒரு சட்டத்தை அறிமுகம் செய்யலாம் என நினைக்கிறேன்.  இந்து வாக்கு திரட்டலுக்கு கூடுதல் அம்சங்கள் இன்று தேவைப்படும் சூழலில் இந்த 26 மசோதாக்களில் பல மாநிலங்களில் உரிமைகளை பறிப்பது, சிறுபான்மையோர் வாழ்வுரிமையை பறிப்பது தொடர்பாக இருக்கலாம். வருகிற 29-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கூடவிருக்கும் நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்து வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டும் போதாது விளைபொருளுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி செய்யும் விதம