ஒமிக்ரான்-5
உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி, தற்போதுதான் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில் மீண்டும் புதிதாக ஒமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளைப் பீதியடையச் செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் உருமாறிய பி.1.1.529 என்ற கொரோனா தொற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.இந்த வைரஸுக்கு ஒமிக்ரான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஓமைக்ரான் என பரவலாக அழைக்கப்பட்ட இவ்வகை கொரோனா திரிபு உச்சரிப்பு ஒமிக்ரான் தான் சரி. இந்த ஒமிக்ரான் வைரஸ் 32 வகையில் உருமாறும் தன்மை கொண்டது என்பதையும், இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் அவர்களையும் தாக்கும் வீரியம் கொண்டது எனவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் தடைவிதித்துள்ளன. மேலும் உலக நாடுகள் முழுவதும் சர்வதேச விமான நிலையங்களில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அவையாவன: “1....