நடிப்பு அரக்கன்!
நடிகர் நாகேஷ் பூர்வீகம் மைசூரு. கர்நாடக மாநிலம் அரிசிக்கரே என்ற ஊரில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியில் இருந்தவர் நாகேஷின் தந்தை. குடும்பம் தாராபுரத்தில் இருந்தது. நாகேஷை வளர்த்தது எல்லாம் அவருடைய அக்கா கெங்குபாய். நகைச்சுவை நடிப்பில் நாகேஷ் சிகரம் தொட்ட திரைப்படங்கள் பல. எம்.ஜி.ஆர்.,- சிவாஜியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவையின் பரிமாணங்களை நயமாகவும் நுட்பமாகவும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக, 'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தில் அவர் ஏற்ற வைத்தி வேடமும், 'திருவிளையாடல்' படத்தில் ஏழை தருமி பாத்திரமும் சாகா வரம் பெற்றவை. நகைச்சுவை நடிகர்கள் வேறு எவரிடமும் காணப்பெறாத - நாகேஷிடம் மட்டுமே காணக்கூடிய தனிச்சிறப்பு - நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் நாகேஷ் முக பாவனையில் காட்டி இருக்கும் எதிர்வினை ஆகும். சிவாஜிக்கு இணையாக, ஜாடிக்கு ஏற்ற மூடியாக நடிப்பில் சோபித்தார் நாகேஷ்.'சந்திரோதயம்' படத்தில் மனைவி மனோரமாவுடன் ஊடல் கொண்டு காசி யாத்திரைக்குப் புறப்படுவார் நாகேஷ். எம்.ஜி.ஆர். அவரைத் தடுத்தாட் கொண்டு சமாதானப்ப...