இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காஷ்மீர் வரலாறு.

படம்
  இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்புச் சட்டப்பிரிவு 370ன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளை இந்திய அரசு கடந்த ஆண்டு (2019) ஆகஸ்ட் 5ம் தேதி அகற்றியதோடு ஜம்மு & காஷ்மீர் - லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாகவும் அந்த மாநிலத்தைப் பிரித்தது. இதையடுத்து, அப்போது இந்தப் பிரச்சனை ஐ.நா.விலும் விவாதிக்கப்பட்டது. அதையொட்டி எழுதப்பட்ட காஷ்மீரின் சுருக்கமான வரலாற்று நிகழ்வுகளை காஷ்மீரின் நிலை மாற்றியமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி மேம்படுத்தி மறுபிரசுரம் செய்கிறோம். பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்தியத் துணைக் கண்டம் 1947-ல் இந்தியா - பாகிஸ்தான் என்ற இரு டொமினியன்களாகவும், 565 தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களாகவும் சுதந்திரம் பெற்றன. தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களுக்கு மூன்றுவிதமான தேர்வுகள் இருந்தன. ஒன்று அவை இந்தியாவோடு செல்வது என்று முடிவெடுக்கலாம். அல்லது பாகிஸ்தானோடு செல்வதாக முடிவெடுக்கலாம். அல்லது தனித்திருக்கவும் முடிவெடுக்கலாம். அத்தகைய தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களில் ஒன்றுதான் காஷ்மீர். 1846-ல் அமிர்தசரஸ் உடன்படிக்கை மூலம் பிரிட்டனிடம் இருந்து 75 லட்சம் ரூபாய்

பிரதமர் பதில் தரவேண்டும்.

படம்
  " PM- CARES நிதி கொரோனாவுக்கான போராட்டத்தை வலுப்படுத்தும் இலக்கைக் கொண்டது. கொரோனா வைரஸை வீழ்த்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், தரமான சிகிச்சை கிடைப்பதை விஸ்தரிக்கவும் இந்த நிதி பயன்படும்.  அனைத்துத் தரப்பு மக்களும் PM- CARES-க்கு நண்கொடை அளிக்க நான் வேண்டுகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிகழ்கால சவாலை எதிர்கொள்வோம். எதிர்காலத்தைப் பாதுகாப்போம்" இப்போது பிரச்சனை இதுவல்ல? PM- CARES நிதி அரசு நிதியல்ல என்று பிரதமரின் அலுவலகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதுதான் பிரச்சனை. பிஎம் கேர்ஸ் நிதியம் குறித்து வழக்கில் கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், பிஎம் கேர்ஸ் மத்திய அரசுக்கு சொந்தமானது அல்ல எனத் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்வி்களை எழுப்பி வருகின்றன.  அரசு ஊழியர்கள் PM- CARES நிதிக்கு தாராளமாக நிதியளிக்க ஊக்குவிக்கப்பட்டனர், அரசாங்க இணையதளம் வாயிலாக PM- CARES-க்கு விளம்பரம் மூலம் நிதி திரட்டப்படுகிறது. தவிர எல்லா அரசு இணையதளங்களிலும் PM- CARES பக்கத்திற்குச் செல்ல இணைப்பு இருக்கிறது. கட

ஆப்கி டிரம்ப் சர்க்கார்

படம்
வாஷிங்டனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பல பேருந்துகளில் வந்து வெள்ளை மாளிகைக்கு வெளியே மோதியை வரவேற்கக் கூடினர், , மோதியின் படம் மற்றும் ஆதரவில் எழுதப்பட்ட பெரிய பேனர்களைத் தாங்கி அவருக்கு ஆதரவாகக் கோஷங்களை எழுப்பினர். மோதிக்கு எதிராகவும் ஒரு குழு அங்கு கூடி இருந்தது. அவர்கள் மோதி எதிர்ப்பு முழக்கமிட்டனர். சிலர் மோதியே திரும்பிச்செல் என எழுதப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை ஏந்தியபடி குரல் எழுப்பினர். ஒரு சந்தர்ப்பத்தில், இந்த இருவேறு குழுக்களும் நேருக்கு நேர் வந்து ஒரு மோதல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.  அங்கு சரியான நேரத்தில் காவல் துறை வந்து பாதுகாப்புக்கு நின்றது. டிரம்ப் ஆட்சியில் இருந்த அளவுக்கான வரவேற்பு இனி சாத்தியமில்லை என்பதைப் பல தெளிவான குறியீடுகளால் பைடன் அரசு தெரிவிக்கத் தவறவில்லை. மோதி இருதரப்பு சந்திப்புக்காக வெள்ளை மாளிகைக்கு வந்தபோது, அதிபர் பைடன் வெளியே வந்து அவரை வரவேற்கவில்லை. மாறாக, மோடி ஓவல் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு பைடன் அவரைச் சந்தித்தார். இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தி சார்ந்த ந

பனங்காட்டு படை

படம்
  தமிழகத்தில் நடமாடும் நகைக்கடையாக வலம் வந்த ஹரி நாடார் தற்போது கர்நாடகாவில் புகழ்பெற்ற சிறைச்சாலையில் பெட்டிப் பாம்பாக அடங்கி கிடக்கிறார். சாதியை தலையில் தூக்கி சுமந்தவரை நிரந்தர கைதியாக மாற்ற அதே சாதியினரே மும்முரமாக இறங்கி இருப்பதாக சாட்சாத் ஹரி நாடாரே கூறி இருப்பது தான் ஹலைட்.   பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் தற்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஹரி நாடார் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டம், வானூர் தாலுகா மேல இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த நான், நாடார்களின் பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறேன். தற்போது கடந்த மே மாதம் 5ம் தேதி முதல் பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட் spl cc no. 822 of 2021 வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறேன். எனக்கும், எனது மனைவி ஷாலினிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நான் அவரை பிரிந்த

வளரும் பில்லியனர்கள்

படம்
  உலகின் செல்வந்த குடும்பங்கள் கடந்த வருடத்தில் 312 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்து மதிப்பு அதிகமாக பெற்றுள்ளன. கொரோனா தொற்றுநோய்க்கு இடையிலும், ஏராளமான பணப்புழக்கம், உயரும் பங்குச் சந்தைகள் மற்றும் வரி கொள்கைகள் ஆகியவை இந்த செல்வந்த குடும்பங்களின் வருவாய் உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளன. அதிலும், உலகின் 25 பணக்கார குடும்பங்கள் 1.7 டிரில்லியன் டாலர் மதிப்புடையவை. இது ஒரு வருடத்திற்கு முந்தையதை விட 22% அதிகமாகும். இதில் குறிப்பிடத்தக்கவையாக சில்லறை விற்பனையாளரான வால்மார்ட் இன்க் நிறுவனத்தில் கிட்டத்தட்ட பாதி பங்குகளை வைத்திருக்கும்  வால்டன்ஸ் ஆஃப் ஆர்கன்சாஸ் குடும்பம் (Waltons of Arkansas), தொடர்ந்து நான்காவது ஆண்டாக 238.2 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது.  பிப்ரவரி முதல் இந்த குடும்பம் 6 பில்லியன் டாலர் பங்குகளை விற்ற போதிலும், கடந்த 12 மாதங்களில் அவர்களின் சொத்து மமதிப்பு 23 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. இந்தப் பட்டியலில் புதிய பெயர்களும் இடம்பிடித்துள்ளன. மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் மற்றும் விமான நிறுவனமான பிரான்சின் டசால்ட்ஸ்-ம், நியூயார்க்கைச் சேர்ந

ஆப்கன் ஹெராயினும். அதானி துறைமுகமும்

படம்
குஜராத் மாநிலம் முந்த்ரா துறை முகத்தில் ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 2 ஆயிரத்து 988 கிலோ 21 கிராம் ஹெராயின் போதைப் பொருள் சிக்கியது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் இருந்து ஈரான் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து, ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலுள்ள ஒரு முகவரியின் பெயரில் - இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஹெராயினை, முந்த்ரா துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் (The Directorate of Revenue Intelligence -DRI) கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். மேலும், போதைப் பொருள் பார்சலில் குறிப்பிட்டிருந்த விஜயவாடா முகவரிக்குச் சென்று, அங்கு வசித்து வந்த வைஷாலி, சென்னையைச் சேர்ந்த அவரது கணவர் சுதாகர் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள், டெல்லியில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், குஜராத் மாநிலம் வழியாக தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையிலும், ஒன்றிய பா.ஜ.க அரசானது, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு (Narcotics Control Bureau - NCP) தலைவரை நியமிக்காமல் கடந்த

ஒரே நாளில் தீர்ப்பு!

படம்
  உலகளவில் இந்திய உச்ச நீதிமன்றம் வழக்கு ஏற்று விசாரணை ஒருநாள் மட்டுமே நடத்தி மறுநாளே தீர்ப்பும் வழங்கி சாதனை புரிந்துள்ளது எத்தனை பேர்களுக்குத் தெரியும்? நீட் தேர்வு வழக்குதான் அது. வழக்கு நீதிபதி அனில் ஆர். தாவே தலைமையிலான மூன்று பேர் அடங்கிய அமர்வின் முன்பாக 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அடுத்த நாளே, அதாவது ஏப்ரல் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தியாவில் மருத்துவக் கல்வியைக் கட்டுப்படுத்தும் இந்திய மருத்துவக் கவுன்சில் 2010 டிசம்பர் 21ஆம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதேபோல பல் மருத்துவக் கவுன்சிலும் 2012 மே 31ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஒன்றை நடத்தில் அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் மூலமாகவே மருத்துவச் சேர்க்கையை நடத்த வேண்டுமென அந்த அறிக்கைகள் கூறின. இந்த அறிக்கைகளை எதிர்த்து வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. இந்த இரு அறிவிப்புகளும் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளின் சேர்க்கை உரிமையைப் பறிப்பதாக குற்றம்சாட்டியது. அதேபோல, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள், மருத்த

நீட் அறிக்கை

படம்
நீட் தேர்வுக்கு எதிரா ன  வாதங்கள் 1. நீட் தேர்வு வந்த பிறகு மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்வது குறைந்திருக்கிறது. 2. மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்தை நீட் தேர்வு ஏற்படுத்துகிறது. 12 ஆண்டுகள் படித்த படிப்பை இந்தத் தேர்வு புறக்கணக்கிறது. மேலும், இந்தியாவில் பல்வேறு பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் உள்ள நிலையில்,பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்கள் பெரிதும் படிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 3. நீட் தேர்வு 'கோச்சிங்' மையங்களை ஊக்குவிக்கிறது. பயிற்சி இல்லாமல் யாரும் தேர்ச்சி பெற முடியாது. லட்சக்கணக்கில் பணம் செலுத்தி இரண்டு - மூன்று ஆண்டுகளாகவது படிக்க வேண்டும். 4. தனியார் பள்ளிக்கூடங்களில் 11ஆம் வகுப்பிலேயே நீட் கோச்சிங் வகுப்புகளைத் துவங்கி விடுகிறார்கள். வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரும் தொகையை இதற்காகச் செலவிடுகிறார்கள். நீட் அமலாவதற்கு முந்தைய சில ஆண்டுகளைப்போல் அல்லாமல், நீட் வந்தபின் அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல்

ஒவ்வொரு அடியும் அதிரடி

படம்
  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசியலில் ஒப்பற்ற தலைவராகவும், நாட்டிலேயே ஒரு முன்மாதிரி முதலமைச்சராகவும் திகழ்கிறார்” என்று கேரளத்தின் முன்னணித் தொலைக்காட்சி “மனோரமா நியூஸ்” புகழாரம் சூட்டியுள்ளது. ‘மலையாள மனோரமா’ கேரளத்தின் தலையாய நாளிதழ். ‘மனோரமா நியூஸ்’ கேரளத்தின் முதன்மையான செய்தித் தொலைக்காட்சிகளுள் ஒன்று. ‘மனோரமா நியூஸ்’ : ஸ்டாலின் அரசு' என்கிற பொருளில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதன் பிரதானப் பகுதிகள் வருமாறு : எம்.கே.ஸ்டாலினின் அரசு 100 நாட்களைக் கடந்துவிட்டது. பாராட்டுகள் குவிகின்றன. மொத்த இந்தியாவும் தமிழகத்தைக் கவனிக்கிறது. இதுவரை தமிழகம் கண்டிராத அரசியல் நாகரிகத்துடன் அவரது ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சியும், திட்டங்களும் மக்கள் தொடர்புத் தந்திரங்களா? என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? முதல் 100 நாட்களைத் தேனிலவு என்பார்கள். அது ஒரு ஆட்சியை மதிப்பீடு செய்யப் போதுமானதில்லை என்றாலும் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று நெருங்கிப் பார்க்கலாம். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான்... என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டபிறகு அவர் நேரே தான் ஓடியாடி வளர்ந்த

பெரியார்143

படம்
  ஈரோட்டில் செல்வக் குடும்பத்தில் பிறந்த ஈ.வெ.ராமசாமி-யை மதங்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும், பெண்ணடிமைத் தனத்துக்கும் எதிராகத் திருப்பியது எது? குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாரபட்சங்கள் இளம் வயதிலேயே அவரது கவனத்தைக் கவர்ந்தன. குழந்தைத் திருமணம் செய்து குழந்தையாக இருக்கும்போதே கணவனை இழந்து கைம்பெண்ணாகி வாழ்நாள் முழுவதும் கைம்பெண்ணாகவே வாழ நேர்ந்த பல்லாயிரம் பெண்களின் துயரம் அவரை  குழந்தைப் பிராயத்திலேயே கணவனை இழந்த தமது சகோதரி மகளுக்கு குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி அவர் மறுமணம் செய்வித்தார். நாகம்மையாரை மணந்துகொண்டு தமது தந்தையின் வணிகத்தை கவனித்து வந்த நேரம், குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி துறவு பூணும் நோக்கத்தோடு காசிக்குச் சென்றார். அங்கிருந்த அன்ன சத்திரங்கள் பிராமணர் அல்லாதோரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் அவர் பசியில் வாடி, சத்திரத்தில் இருந்து வீசி எறிந்த இலைகளில் இருந்து உணவை எடுத்து உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டது. இது அவரது மனதில் நீங்கா வடுவை உண்டாக்கியது. பிறகு அவர் தமது துறவு எண்ணத்தைக் கைவிட்டு ஊருக்குத்