பனங்காட்டு படை

 தமிழகத்தில் நடமாடும் நகைக்கடையாக வலம் வந்த ஹரி நாடார் தற்போது கர்நாடகாவில் புகழ்பெற்ற சிறைச்சாலையில் பெட்டிப் பாம்பாக அடங்கி கிடக்கிறார். சாதியை தலையில் தூக்கி சுமந்தவரை நிரந்தர கைதியாக மாற்ற அதே சாதியினரே மும்முரமாக இறங்கி இருப்பதாக சாட்சாத் ஹரி நாடாரே கூறி இருப்பது தான் ஹலைட்.

 




பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் தற்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஹரி நாடார் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டம், வானூர் தாலுகா மேல இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த நான், நாடார்களின் பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறேன்.

தற்போது கடந்த மே மாதம் 5ம் தேதி முதல் பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட் spl cc no. 822 of 2021 வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறேன்.

எனக்கும், எனது மனைவி ஷாலினிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நான் அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். இந்நிலையில் நான், ஷாலினியிடம் இருந்து முறையாக பிரிந்து வாழ வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்


.

அதன்படி சென்னை உயர்நீதிமன்றம் மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் HMOP.No.2124/2020 விவாகரத்து வழக்கு பதிவு செய்து விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. ஷாலினியும் முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.

நான் சிறைக்கு வந்த நாள் முதல் இன்று வரை பனங்காட்டு படை கட்சி தலைமையின் சார்பில், நான் சிறையில் இருந்து வெளிவர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த ஒரு உதவியும் செய்யவில்லை.

அதற்கு மாறாக நான் சிறையில் இருந்து வெளியே வராமல் தடுப்பதற்காக அனைத்து பல முயற்சிகளை கட்சியின் தலைமை மேற்கொண்டு வருகிறது என்பதனை எனது வழக்கறிஞர் மூலம் நான் அறிவேன்.

அதேவேளையில், நான் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் என்னை கைது செய்த நாள் முதல் இன்று வரை நான் எப்படியாவது சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என எனக்கு நன்கு அறிமுகமான மலேசியாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் மஞ்சு என்பவர் எனக்கான சட்ட உதவிகளை எனது அனுமதியுடன் முறையாக கவனித்து வருகிறார்.



இதற்கிடையே ஷாலினி தங்களிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளதாகவும், அதில் மஞ்சு என்பவர் என்னை மிரட்டி கட்டாயப்படுத்தி அவருடன் வைத்திருப்பதாகவும், என்னை மஞ்சுவிடம் இருந்து மீட்டுத் தரும்படியும் புகார் மனுவில் கூறி இருப்பதாக எனது வழக்கறிஞர் என்னை நேரில் சந்தித்து விளக்கி கூறினார்.

ஷாலினி அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் எந்த ஒரு உண்மையும் இல்லை. இந்த விளக்க கடிதத்தை நான் சிறையில் இருந்து தங்களுக்கு அனுப்புகிறேன். ஷாலினி தனக்கு தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாருமே கிடையாது. ஒரு அனாதை என்று கூறி என்னை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆவார்.

நானும், ஒரு அனாதை பெண்ணிற்கு வாழ்க்கை கொடுப்பது நமது குலத்திற்கு பெருமை என எண்ணி திருமணம் செய்து கொண்டேன். ஆனால் நாளடைவில் அவருக்கு உறவினர்கள் இருப்பதும் அவரது தாய், தந்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தான் இறந்ததும், தனது தந்தை இறப்பிற்கு கூட அவர் செல்லவில்லை என்பதும் எனக்கு தெரிய வந்தது.


எனது பணம், நகை மற்றும் சொத்திற்காக மட்டுமே அவர் என்னிடம் மனைவியாக நடிக்கிறார் என நாளடைவில் நான் தெரிந்து கொண்டேன். அவருடைய நடவடிக்கையில் ஏற்பட்ட பல மாற்றங்களால் அவரை பிரிந்து வாழ முடிவு செய்து, சென்னை உயர் நீதிமன்றம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு போட்டுள்ளேன்.

கடனில் தவிக்கவிட்ட அதிமுக; வெளுத்து வாங்கிய... முதல்வர்!

அந்த வழக்கில் விவாகரத்து எனக்கு கிடைத்து விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு என்னையும் மலேசியாவை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணையும் தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து எனது நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கி வருகிறார்.

தற்போது நான் சிறையில் இருந்து வெளியே வர எனக்கு சட்ட உதவிகள் செய்து வரும் மஞ்சு மீது பொய்யான அபாண்டமான புகார்களை கூறி ஷாலினி அளித்துள்ளார். புகாரில் அவர் கூறியிருப்பது அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது ஆகும்.

ான் சட்டத்தை மதித்து நடப்பவன். எனது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் முறையாக நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைக்க நான் காத்திருக்கிறேன்.

மேலும் என்னை மஞ்சுளா என்பவரோ அல்லது வேறு யாரோ மிரட்டியோ, கட்டாயப்படுத்திய அல்லது யாருடைய கட்டுப்பாட்டிலும் நான் இல்லை என்பதை தெளிவுபட எனது சுய சிந்தனையுடன் இந்த கடிதத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.

ஷாலினி என்பவரது மொபைல் எண்ணில் இருந்து அவர் யாரிடமெல்லாம் தொடர்பு இருக்கிறார்? என்னவெல்லாம் பேசியிருக்கிறார்? என்பதை ஆராய்ந்து பார்த்தால் அவர் அளித்துள்ள புகார் பொய்யானது என்பது தெரிய வரும்.

நான் சிறையில் இருந்து வெளி வரக்கூடாது, விவாகரத்து வழக்கில் எனக்கு நீதி கிடைத்து விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு பனங்காட்டு படை கட்சியின் தலைமையுடன் கூட்டாக சேர்ந்து எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த ஷாலினி இந்த புகாரை அளித்துள்ளார்.

நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. என்னை யாரும் மிரட்டியும் வைத்திருக்கவில்லை. ஆகவே, ஷாலினி அளித்துள்ள புகாரை இத்துடன் தங்கள் முடித்து வைக்க வேண்டும்.

மேலும் மஞ்சுவிடம் இந்த புகார் குறித்து விசாரணை நடத்த தேவையில்லை. ஏதாவது என்னிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமானால் நான் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு ஹரிநாடார் கடிதம் மூலம் கூறியுள்ளார்.

பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று கெத்தா சுத்திகிட்டு திரிந்த ஹரி நாடார் சிறைக்கு போகும் சில மாதங்களுக்கு முன்பாக தான் தமிழக போலீசாரை கடுமையாக மிரட்டி ஹரி நாடார் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

அதில், ‘நீங்கள் போட்டு இருக்குற காக்கி சட்டைக்காக பார்க்கிறேன்.... இல்லாட்டி அறுத்து வீசிடுவேன்’ என ஏகத்துக்கும் வீர வசனம் பேசி இருப்பார். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது.

குருமூர்த்திக்கே கொண்டாட்டமாக இருந்த காலமான அதிமுக ஆட்சியில் ஹரி நாடார் பேச்சை எல்லாம் யாரும் ஒருபொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் எப்போ சிக்குவாரோ என்று எதிர்பார்த்து காத்திருந்த தமிழக போலீசுக்கு ஹரி நாடார் மனைவியே புகார் என்ற பெயரில் உதவி செய்துள்ளார்.

மேலும் ஹரி நாடார் மலைபோல் நம்பிக்கொண்டு இருந்த பனங்காட்டு படை கட்சியும் பக்காவாக பிளான் போட்டு தருவது உறுதியாக தெரிகிறது. இது, ஹரி நாடாருக்கு ஏற்பட்டு உள்ள மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சினங்கொண்ட சிங்கம் செல்லிலேயே சிதைய போவது உறுதி என்பது மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?