இடுகைகள்

மார்ச், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருடனுக்கு நன்றி சொல்லும் காவலாளி.

படம்
பி ரதமர் மோதியின் ட்விட்டர் அக்கவுண்டிலிருந்து  # mainbhichowkidar (நானும் காவலன்) ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதாவது நாட்டை பயங்கரவாதத்திலிருந்து, ஏழ்மையிலிருந்து, அழுக்கிலிருந்து, ஊழலில் இருந்து காப்பாற்ற மேலே சொன்ன ஹாஷ்டாகுடன் நாம் டிவிட்டரில் பதிவுசெய்ய வேண்டுமாம். இந்த ஹாஷ்டாகுடன் பலரும் (பெரும்பாலும் ஐ.டி. விங் ஆட்கள்தான்) பிரதமரின் அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் அக்கவுண்டை tag செய்து காலை முதல் டிவிட்டரில் பதிவிட்டு வந்தனர். பிற்பகலுக்கு மேல் யாருக்கு அந்த யோசனை தோன்றியதெனத் தெரியவில்லை. யாரெல்லாம் அந்த ஹாஷ்டாகுடன், பிரதமரை Tag செய்கிறார்களோ அவர்களுக்கு தானியங்கி முறையில், “your participation makes the #mainbhiChowkidar movement stronger” என பதில் அனுப்ப முடிவுசெய்தனர். ஆனால், இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அவர்கள் கற்பனைகூட செய்திருக்கவில்லை. உடனடியாக நாட்டைவிட்டு ஓடிப்போன நீரவ் மோடியின் கற்பனை அக்கவுண்டிலிருந்து (கேலிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட அக்கவுண்ட்) மோடியின் அக்கவுண்டை tag செய்து #mainbhichowkidar என்ற ஹாஷ்டாகுடன் எதையோ எழுதிவைக்க, அதற்கும் மேலேபடி பிரதமரின் அக்க

மதுரை எய்ம்ஸ்&வைகை பாலம்

படம்
  மோடி கட்டிக்கொடுத்த   மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை.                                                                 வைகை  நவீன   பாலம். மேலே உள்ளப்படங்கள் கொஞ்சம் போட்டோஷாப் செய்யபப்ட்டாலும் கலைஞ்சர் கட்டிய தலைமைச்ச்செயலகம் என்று தெரிகிறது. அடுத்தபடம் வெளிநாட்டில் உள்ள ஆற்றுப்பாலம் என்று நீங்கள் யூகித்தால் அது தவறு. இரண்டுமே நம் மதுரையில்தான் உள்ளது. முதலாவது படம் மோடி அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு கம்பிரமாக காட்சியளிக்கிறது. இரண்டாவது கரை புரண்டோடும் வைகை ஆற்றை மக்கள் கடக்க மோடி கட்டிக்கொடுத்த பாலம். மதுரைக்காரர்களுக்கே தெரியாத இந்த செய்திகளும்,படங்களும்தான் பாஜகவினர் வடமாநிலங்களில் மோடியின் சாதனை எனப்பரப்பிக்கொண்டிருக்கும் திருவிளையாடல்கள். “பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுப்பா” என்பார்கள். இப்படி ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறது நரேந்திர மோடி படை. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து நான்கரை ஆண்டுகளாக முடிவெடுக்காமல் மோடி அரசு காலம் கடத்தி வந்தது. தமிழகத்திலும் பல நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்குமாறு போராட்டங்கள் நடைப

பாஜக வெளியிட்டத் தேர்தல் தேதி?

படம்
அடுத்த ஆப்பு தயார் !   மின் மீட்டர்களுக்கு இனி பிரிபெய்டு சிஸ்டம்   “ஜெயலலிதா இருந்திருந்தால் என்னமுடிவு எடுத்திருப்பாரோ அதைத்தான் நாங்கள் எடுத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டுமென்றால் மோடிதான் பிரதமராக வரவேண்டும்”.இப்படிப் பேசியது இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் அல்ல.  தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்தான். அதாவது தமிழகத்தின் துணை முதல்வரும் முதல்வரும்தான். சேரக்கூடாத இடத்தில் சேர்ந்தால் அது எப்படி எல்லாம்பேச வைக்கும் என்பதற்கு இதுவே சாட்சியாகும். மின் நுகர்வோருக்குக் கம்பம் நட்டு,ஒயர் இழுத்துமின் தேவையைப் பூர்த்தி செய்து வருவது மின்வாரிய களப்பணியாளர்கள். அந்த களப்பணிக்குச் செலவிடப்பட்ட தொகையைத் தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோரிடம் இருந்து வசூலிப்பதன் மூலம் ஈடு செய்கிறது. அதற்காக மின் கணக்கீடு பணி என்பது மிக மிக அவசியத் தேவையாகும். இந்தக் களப்பணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்பணியாற்றி வருக