மதுரை எய்ம்ஸ்&வைகை பாலம்


  மோடி கட்டிக்கொடுத்த  
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை.                                                                 வைகை  நவீன   பாலம்.

மேலே உள்ளப்படங்கள் கொஞ்சம் போட்டோஷாப் செய்யபப்ட்டாலும் கலைஞ்சர் கட்டிய தலைமைச்ச்செயலகம் என்று தெரிகிறது.
அடுத்தபடம் வெளிநாட்டில் உள்ள ஆற்றுப்பாலம் என்று நீங்கள் யூகித்தால் அது தவறு.
இரண்டுமே நம் மதுரையில்தான் உள்ளது.
முதலாவது படம் மோடி அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு கம்பிரமாக காட்சியளிக்கிறது.
இரண்டாவது கரை புரண்டோடும் வைகை ஆற்றை மக்கள் கடக்க மோடி கட்டிக்கொடுத்த பாலம்.
மதுரைக்காரர்களுக்கே தெரியாத இந்த செய்திகளும்,படங்களும்தான் பாஜகவினர் வடமாநிலங்களில் மோடியின் சாதனை எனப்பரப்பிக்கொண்டிருக்கும் திருவிளையாடல்கள்.
“பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுப்பா” என்பார்கள்.
இப்படி ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறது நரேந்திர மோடி படை.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து நான்கரை ஆண்டுகளாக முடிவெடுக்காமல் மோடி அரசு காலம் கடத்தி வந்தது. தமிழகத்திலும் பல நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்குமாறு போராட்டங்கள் நடைபெற்றன.
 அதன் பிறகும் அசையாத நடுவண் அரசு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை வருமா?
 வராதா?
 வரும் என்றால் எங்கு அமைக்கப் போகிறீர்கள் என்பதை சொல்லுமாறு உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது.அதன் பிறகு அசைந்த நடுவண் அமைச்சரவை, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்தது.
 கடந்த ஜனவரி மாதத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பொட்டல் வெளியாக காணப்படும் தோப்பூரில், மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்பது அயோத்தி ராமனுக்கும் தெரியாது.இந்நிலையில்தான், இங்கேயுள்ள இரண்டு படங்களை நரேந்திர மோடி பட்டாளம் உத்தரப்பிரதேசத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறது.

 அதில் ஒன்றில், கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது புதிய தலைமைச் செயலகமாக சென்னையில் கட்டிய மிகப்பெரும் கட்டடமும், இந்தி வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. 
மதுரையில் நரேந்திர மோடியால் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைதான் இது என்பதுதான் அந்த வாசகம்.
 காவிப் பட்டாளமே பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கப்பா...அடுத்த படம், தண்ணீர் நிரம்பி ஓடும் ஆறும், அதிநவீன முறையில் கட்டப்பட்ட பாலமும் இருக்கிறது.
அந்தப் பாலத்தின் வழியாக படகு ஒன்று சென்று கொண்டிருக்கிறது.
மதுரையில் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் வைகை ஆற்றின் குறுக்கே பிரதமர் நரேந்திர மோடி கட்டிய அதிநவீன பாலம்தான் இது என்று அதிலுள்ள வாசகம் கூறுகிறது.
மதுரையில், வைகை ஆற்றில் தண்ணீரின்றி மணல் வெளியில் அனல் தகித்துக் கொண்டிருக்கிறது. 
 அப்படியானால், அந்த ஆறும் பாலமும் எங்கே இருக்கிறது. 
ஹாலந்து நாட்டில் இந்த ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. 
அதில் கட்டப்பட்டுள்ள அதிநவீன பாலம்தான் இது.  
இதை வைகை ஆறு என்றும் அதில் கட்டப்பட்டுள்ள பாலம் என்றும் கூறுவதற்கு எப்படி இவர்களுக்கு மனசு வந்தது.
போட்டோ ஷாப் தொழில்நுட்பம் இருக்கும்வரை பொய்யை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என நரேந்திர மோடி பட்டாளம் நினைக்கிறது.
எல்லாக் காலத்திலும் மக்கள் ஏமாந்து கொண்டே இருப்பார்களா?
படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ என்று போவான் என்றார் பாரதி.
                                        பாஜக வைப்பொறுத்தவரை  அது உண்மையாகும் காலமும் வருகிறது..
                                                                                                                                     படம் உதவி.குமரன்(ஜனசக்தி)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மரணமில்லா மாமேதை
                                                                                                                                                                                                                               - நாகைமாலி


மானுட சமூகத்தை ஒளிநிறைந்த எதிர்காலத்திற்குஅழைத்துச் சென்றவர்; ஆய்வு விளக்கை ஏந்திக்கொண்டு அறிவுச் சுரங்கத்தின் நெடிய ஆழத்திற்குச் சென்றவர் மாமேதை மார்க்ஸ்.
 1818-ஆம் ஆண்டு, மே மாதம் 5-ல் பிறந்தார் மார்க்ஸ்.பள்ளி, கல்லூரிப் படிப்புகள் முடித்த மார்க்ஸ், வேலைபார்த்து ஊதியம் பெறும் ஆசையை விடுத்து, அறிவுத்தளத்தில் இயங்க ஆரம்பித்தார். பொருள் ஈட்ட நாட்டமில்லாமல், பணம் பற்றி எழுதத் தெரிந்த தன் மகனுக்குப் பணத்தைச்சம்பாதிக்கத் தெரியவில்லையே என வருத்தப்பட்டார் மார்க்சின் தாய்.
 மார்க்சின் தந்தையோ, தனது மகனை நிகழ் காலத்திற்கு இழுக்க முயன்றார். ஆனால், மகனோ எதிர்காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
 மார்க்ஸ் பள்ளியில் படிக்கும்போது, 12 வயதில், எழுதியகட்டுரைகளைக் கண்டு, பள்ளி ஆசிரியர்கள் வியந்துபோனார்கள். எதிர்காலத்தில் மார்க்ஸ், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பான் என ஆசிரியர்கள் மனதால் ஆசீர்வதித்தார்கள்.மார்க்ஸ் படிக்கும் காலத்திலேயே காதல் வயப்பட்டார்.
பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஜென்னியைக் காதலித்தார்.
ஜென்னி, மார்க்சை விட 4 வயது மூத்தவர். இருந்தால்என்ன?
 காதலுக்கு வயது தடையாக இருக்க முடியுமோ?
ஏழு ஆண்டுகள் உயிருக்கு உயிராய்க் காதலித்துப் பின்இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஜென்னி பேரழகி!
பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர். மார்க்சோ சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.

ஆனால்,உலக வரலாற்றில், இவர்களைப் போன்ற காதல் இணையரைக் காண முடியாது.உலகின் தத்துவங்களையெல்லாம் மார்க்ஸ் ஒரு வெறியோடு கற்றார்.
அறிவாளிகளோடு தர்க்கங்கள் செய்தார். அறிவுலக மேதையானார்.
 இவரின் நுட்ப அறிவைக் கண்டு பிரமித்துப் போனார்கள் மற்றவர்கள்.
எண்ணங்களின் பட்டறை என்றனர்.

மற்றவர்களுக்குத் தோன்றாத சிந்தனைகள் இவருக்குத் தோன்றின.
 இளையவயதில் எவ்வளவு பண்பட்ட மூளை என வியந்தார்கள்.
 மார்க்சின் 23 ஆம் வயதில் பெர்லின் பல்கலைக் கழகம்டாக்டர் பட்டம் வழங்கியது. ஆனால், அந்த டாக்டர் பட்டத்தை மார்க்ஸ் கடைசி வரைத் தன் பெயருக்கு முன் போட்டுக் கொண்டதே இல்லை.

இந்தக் காலக் கட்டங்களில் மார்க்ஸ், ஏராளமானஅறிவார்ந்த கட்டுரைகளை எழுதினார். பின்னர், ‘ரைன்லாநிலகெஜெட்’ பத்திரிகையின் ஆசிரியரானார்.
 பத்திரிகையில்மார்க்சின் கட்டுரைகள் ஆட்சியாளர்களுக்கு வெறுப்பைத்தேடிக் கொடுத்தன.
‘‘பத்திரிகைகள் பணம் சம்பாதிக்கவேண்டியதுதான்.
ஆனால், பணம் சம்பாதிக்க மட்டுமே பத்திரிகைகள் இருக்கக் கூடாது’ என்பார் மார்க்ஸ்.
சந்தாதாரர்கள் பத்திரிகையின் கொள்கைகளை நிர்ணயிக்கக் கூடாது.
பத்திரிகைகள்தான் கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டும் என்றார் மார்க்ஸ்.

அரசாங்கத்தின் தயவில் இருந்துகொண்டு, மக்களுக்காக உழைக்கிறோம் எனச்சொல்வதெல்லாம் வெறும் பாசாங்கு என்றார் மார்க்ஸ்.ஆட்சியாளர்களைத் தொடர்ந்து மார்க்ஸ் விமர்சித்ததால், ஆட்சியாளர்களால் மார்க்ஸ் பல்வேறு நாடுகளுக்கு விரட்டப்பட்டார்: நாடுகடத்தப் பட்டார்.
இதனால் மார்க்ஸ் துவண்டுபோய் விடவில்லை.
 எதையும் கண்டுகலங்காத மனம் படைத்த மார்க்ஸ், எந்த நாட்டிற்குச்சென்றாலும், அங்கும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுதினார்.
இதனால், பல இடர்பாடுகளைச் சந்தித்தார்.

இக்காலங்களில்தான் இவருக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்தனர்.
ஆனால் மார்க்சின் இறுதிக்காலம் வரை பயணித்த ஒரே நண்பர் ஏங்கல்ஸ் மட்டுமே.
மார்க்சின் மகிழ்ச்சியிலும், துயரத்திலும் துக்கத்திலும்,ஏற்றத் தாழ்விலும் இணைந்தே இருந்தார் ஏங்கல்ஸ். மார்க்ஸ் இல்லாமல் ஏங்கல்ஸ் இல்லை, ஏங்கல்ஸ் இல்லாமல் மார்க்ஸ் இல்லை.
உலக வரலாற்றில் நட்புக்கு எடுத்துக்காட்டானவர்கள் இந்த இருவரும்.

இவர்கள் இல்லைஎன்றால், பொதுவுடைமைக் கொள்கைகள் இல்லை.

இந்தச்சமதர்மக் கொள்கைகள் இல்லாவிட்டால், உழைப்பாளிகளுக்கு வாழ்க்கை இல்லை. சுரண்டலுக்கு முடிவே இல்லை.உலகத்தொண்டே வாழ்க்கை என்று ஏற்றுக் கொண்ட மார்க்ஸ், தன் குடும்பத்தைத் துறந்துவிடவில்லை.
வறுமையின் உச்சிக்குச் சென்றாலும் தனது சுகத் துக்கங்களிலும் தன் குடும்பத்தைக் கூடவே அழைத்துச் சென்றார். மார்க்சின் மனைவி ஜென்னி இவரோடு ஈடுகொடுத்து வாழ்ந்தார்.

1881,டிசம்பர் 2 அன்று ஜென்னி மறைந்தார்.
ஜென்னி மரணம் குறித்து ஏங்கல்ஸ் சொன்னார், ‘மார்க்ஸ்இறந்து போய்விட்டார்’ என்று.
ஜென்னி இல்லாமல் மார்க்ஸ் உயிர் வாழமுடியாது.
வாழ்வதற்கு அவருக்குத் தெரியாது. உலகில் இப்படி அன்பால் பிணைக்கப்பட்ட வேறு ஒரு தம்பதியை வரலாறுநமக்குக் காட்டவில்லை.

1883-ஆம் ஆண்டு, மார்ச்-14 அன்றுகாரல் மார்க்ஸ் காலமானார்.
 மார்க்ஸின் மறைவை ஏங்கல்சால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஏங்கல்ஸ்சொன்னார் ‘மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்’என்று.
மனிதனின் பரிணாம வளர்ச்சியை டார்வின் கண்டுபிடித்தார்.

மனிதகுலச் சரித்திரத்தில் எப்படியெல்லாம் மாற்றம் ஏற்படுகிறது என்பதை மார்க்ஸ் ஆய்ந்தறிந்தார்.
மார்க்ஸ் 65 ஆண்டுகள்தான் வாழ்ந்தார்.

 காரல்மார்க்ஸ்என்னும் புகழ் நாமமும் ‘மார்க்சியம்’ என்னும் அழியாத்தத்துவமும் இந்தப் பிரபஞ்சம் இருக்கும் வரை, ஓங்கிஒலித்துக் கொண்டேயிருக்கும்!

இவர் ஒருவரே எல்லாக்காலங்களுக்கும் வழிகாட்டி ஒளிவீசும் தீர்க்கதரிசி!
கட்டுரையாளர்: சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.
 ====================================================
ன்று,
மார்ச்-14.


இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்(1879)


 தோழர் "கார்ல் மார்க்ஸ்" நினைவு தினம்(1883)


அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் இறந்த தினம்(1932)


ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் ஒருவர் முதன் முதலாக பயணித்தார்(1995)
====================================================


இதுதான்  தேசபக்தி...!
பொதுத்துறை நிறுவனங்களை சீரழிப்பதே பாஜகவின் தேசபக்தியாக மாறியிருக்கிறது. ராணுவம், விண்வெளி, அரசு நிர்வாகம் உள்ளிட்ட தேசத்தின் முக்கிய கட்டமைப்புகள் இயங்க அச்சாணியாக பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவை இருந்து வருகிறது.
அந்த நிறுவனம் தற்போது தனது ஊழியர்களுக்கே ஊதியம் வழங்க கூட வழியின்றி கடும் நெருக்கடிநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

 2014ம் ஆண்டு மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்ற போது, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்; அதற்கு முந்தைய அரசுகள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு தடையாக இருந்தன.
அதன் காரணமாகவே பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இது ஊழியர்களால் ஏற்பட்ட நஷ்டம் அல்ல என கூறினார்.
அதன் பின்னர், பிஎஸ்என்எல் ஊழியர்களின் சிம்கார்டு விற்பனை முகாம், வாடிக்கையாளர்களை தேடிச் சென்று நேரடி சேவை உள்ளிட்ட கடும் உழைப்பின் காரணமாக 2014 முதல் 2016 வரை பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்பட்டு லாபத்திற்கு வந்தது. அதன் பின்னர்2016 செப்டம்பர் மாதம் ரிலையன்ஸின் ஜியோநிறுவனத்திற்கு கழுத்தறுப்பு விலை குறைப்பிற்கு மோடி அரசு அனுமதி வழங்கியது.

அதுமட்டுமின்றி ஜியோ நிறுவன வளர்ச்சிக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக; பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை அனுமதி ஆட்சியின் கடைசி காலம் வரை மோடி அரசு வழங்கவில்லை.
இதுதான் மோடி அரசின் தேசபக்தி.
 இதன் காரணமாக மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனம் தற்போது கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கிறது.நாடுமுழுவதும் 1லட்சத்து 70 ஊழியர்கள் நிரந்தர ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

 இதில் காஷ்மீர், ஒரிசா, கேரளா மற்றும்தில்லி கார்ப்பரேட் அலுவலக ஊழியர்களுக்கு மட்டுமே பிப்ரவரி மாத சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது.
இவர்களை தவிர மற்ற அனைத்து பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. குறிப்பாக கடந்த 3மாதங்களாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

 பிஎஸ்என்எல் வரலாற்றில் இதுபோன்று நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது இதுவேமுதல் முறை. இதுவும் மோடி அரசின் வரலாற்று சாதனை பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.
ஏற்கனவே எச்ஏஎல் பொதுத்துறை நிறுவனம்ராணுவத்திற்கு பாதுகாப்பு தளவாட பொருட்கள் உற்பத்தி செய்து கொடுத்ததற்கான பணத்தை மோடி அரசு வழங்காமல் திட்டமிட்டுஇழுத்தடித்து வந்தது.
அதனை தொடர்ந்து ரபேல்விமானம் பாகங்கள் தயாரிப்பு ஒப்பந்தத்தையும் எச்ஏஎல் க்கு வழங்காமல், ரிலையன்ஸ் டிபன்ஸ்நிறுவனத்திற்கு வழங்கி மோடி அரசு மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டது.

இதன் காரணமாக எச்ஏஎல் நிறுவனம் வரலாற்றில் முதன் முறையாக தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதுவும் மோடியின் சாதனையாக மாறியிருக்கிறது.

இப்படி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக; தேசத்தின் சொத்தான ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனங்களையும் திட்டமிட்டு சீரழித்திருப்பதே பாஜகவின் தேசபக்தியாக மாறியிருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

 ஒரு உண்மைக்கதை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?