இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாளையச் செய்தி.

படம்
  வெளிநாடு ஊடகங்களின்  பாராட்டு மழையில் மோடி. உலக அளவில் மிகப் புகழ்பெற்ற மதிப்புக்குரிய பத்திரிகைகளில் ஒன்று தி கார்டியன். இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளியாகும் இந்த இதழில் ஏப்ரல் 23 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட தலையங்கத்தில் இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றினைத் தடுக்க இந்திய அரசு குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி கடுமையாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. "இந்தியாவில் கொரோனா தொற்று இந்த வாரம் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ‘இந்தியாவில் கொரோனா முடிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக’ தெரிவித்தது. ஆனால் இப்போது இந்தியர்களின் வாழ்க்கை நரகத்தில் தவிக்கிறது. புதிய இரட்டை மரபணு கொண்ட பி .1.617 என அழைக்கப்படும், பேரழிவு தரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலைப் பரவலாக இந்தியா முழுவதும் வெளிப்பட்டுள்ளது, இந்தியாவின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்ஸிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. சவக் கிடங்குகள் நிரம்பியுள்ளன. கொரோனாவால் இறந்த உடல்கள் தெருக்களில் விடப்படுவதால் அவை

இன்று இந்தியா

படம்
 இந்தியாவில் இருந்து வருகின்ற அரசியல்ரீதியான இறுமாப்பு தொற்றுநோயின் யதார்த்தத்தை இந்த வாரம் சந்தித்தது.  நரேந்திர மோடி தலைமையிலான ஹிந்து தேசியவாத அரசு நாடு கோவிட்-19 இன் இறுதியாட்டத்தில் இருக்கிறது என்று இந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் கூறியிருந்த போதிலும் இப்போது இந்தியா ஒரு நரகமாகவே இருந்து வருகிறது. போதியபடுக்கைகள், ஆக்சிஜன் இல்லாத மருத்துவமனைகளுடன் மிகுந்த பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் இரண்டாவது அலை மூலம் பி.1.617 என்றழைக்கப்படுகின்ற கொரோனா வைரஸின் புதிய இரட்டைப் பிறழ்வு தீவிரத்துடன் வெளிப்பட்டுள்ளது. சவக்கிடங்குகள் நிரம்பி விட்டதால், வீடுகளிலேயே உடல்கள் சிதைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.  தொண்டு நிறுவனங்கள் இறப்பை ஏற்படுத்துகின்ற வகையிலே தெருக்களை ஆபத்து சூழ்ந்திருப்பதாக எச்சரிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை புதிய சார்ஸ் கோவி-2 நோய்த்தொற்றுகள் 3,32,730 என்ற அளவில் இந்தியாவில் பதிவாகியுள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளாக உலகளவிலே அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் என்ற அளவிலே அந்த எண்ணிக்கை அதிகரித்துள் ளது. கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 2,200க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.  இந்

தாடி மனிதனின் தவறு.

படம்
 ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதமே நாடாளுமன்ற நிலைக் குழு எச்சரித்தும் மத்திய அரசு கண்டுகொள்ளாததும் தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை பெருமளவுக்கு உயர்துள்ளதை சுகாதாரத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவானது ஆய்வு செய்தது. குழு முன்பாக அப்போது ஆஜரான சுகாதாரத்துறை செயலாளரும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதை தெரிவித்துள்ளார். பல துறை நிபுணர்களின் கருத்தினைப் பெற்று ஒரு பரிந்துரை அறிக்கையை கடந்த நவம்பர் 21 ஆம் தேதி மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் நிலக்குழு அறிக்கை அளித்துள்ளது. பின்னர், இந்த அறிக்கை பிப்ரவரி 2 ஆம் தேதி மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தியை மத்திய அரசு அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் இருந்தது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. இதனை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுபினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பரிந்துரை அறிக்கைக்குப் பின்னரும் மோடி அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். தற

தாடி வளர்த்த நேரத்தில

படம்
பேரிடரிலும்  கார்பரேட் நலன். எரிகிற வீட்டில் எடுத்தது லாபம் என்பதைப் போல - கொரோனா காலத்திலும் கொள்ளைகள் தொடர்கிறது. அதுவும் கொரோனாவை வைத்து அடிக்கும் கொள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகி வருகிறதே தவிர குறையவில்லை! கொரோனா தடுப்பூசியின் விலையின் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி தனது நண்பர்களுக்கு நன்மை செய்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு இந்தியா முழுமைக்கும் கேட்கிறது. மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அது அவரது நண்பர்களுக்கு நன்மை செய்வதாக இருக்கும். பொதுத்துறை நிறுவனங்களை விற்றாலும் அதனால் பலனடைபவர்கள் அவரது நண்பர்களாக இருப்பார்கள். ரயில் நிலையங்களை விற்றாலும் விமான நிலையங்களை விற்றாலும் அதனால் நன்மை அவரது நண்பர்களுக்கே. இதோ இப்போது கொரோனாவால் நன்மை அடைபவர்களும் மோடியின் நண்பர்களே! கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் நிறுவனம், ஒரே ஊசிக்கு மூன்று விதமான விலையை நிர்ணயித்துள்ளது. ஒரு டோஸ் மருந்தை மத்திய அரசு வாங்கினால் 150 ரூபாய். அதையே மாநில அரசு வாங்கினால் 400 ரூபாய். தனியார் மருத்துவமனைகள் வாங்கினால் 600 ரூபாய்க்கு மேல். இதுதான் சீரம் நிறுவனத்தின் மருந்துக் கொள்கை.
படம்
 

பல்லிளிக்கும் குஜராத் மாடல்

படம்
  இ ந்தியாவின் மாடல் மாநிலமான குஜராத் மாநிலத்தின் மக்கள் தங்களது அரசாங்கம் 25,000 ரெம்டெசிவர் வைரஸ் தடுப்பு மருந்து குப்பிகளை உ.பி-க்கு அனுப்பியது குறித்த செய்தியை கடந்த வியாழன் (15.04-2021) அன்று செய்தித்தாளில் படித்ததும் அதிர்ச்சிக்குள்ளாயினர். குஜராத் மாநிலத்தில் கொரோனா நெருக்கடி அந்த அரசாங்கத்தால் மிக மோசமான முறையில் குறைத்துக் காட்டப்படுவதை, கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர்  ரெம்டெசிவிர் மருந்தைப் பெற 8 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் சுட்டிக் காட்டுகிறது. உதாரணமாக, வியாழன் (15-04-2021) அன்று இரவு, குஜராத்தில் 8,112 பேருக்கு கொரோனா தொற்றுக் கண்டறியப்பட்டது. இது வரையிலான தினசரி அளவில் இது உச்சபட்சமாக இருந்தது. இதன் மூலம் குஜராத்தின் நடப்பு கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 44,298 ஆனது. அந்த 24 மணி நேரத்தில்  81 பேர் கொரோனாவால் இறந்ததாக மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், அதே காலகட்டத்தில் குஜராத்தின் அண்டை மாநிலமான மராட்டியத்தில் புதிதாக 61,695 பேருக்கு கொரோனா தொற்று மற்றும் 349 கொரோனா மரணங்கள் நிகழ்ந்தது. புதன் (14-04-2021) அன்று அஹமதாபாத் மருத்த