நாளையச் செய்தி.
வெளிநாடு ஊடகங்களின் பாராட்டு மழையில் மோடி. உலக அளவில் மிகப் புகழ்பெற்ற மதிப்புக்குரிய பத்திரிகைகளில் ஒன்று தி கார்டியன். இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளியாகும் இந்த இதழில் ஏப்ரல் 23 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட தலையங்கத்தில் இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றினைத் தடுக்க இந்திய அரசு குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி கடுமையாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. "இந்தியாவில் கொரோனா தொற்று இந்த வாரம் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ‘இந்தியாவில் கொரோனா முடிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக’ தெரிவித்தது. ஆனால் இப்போது இந்தியர்களின் வாழ்க்கை நரகத்தில் தவிக்கிறது. புதிய இரட்டை மரபணு கொண்ட பி .1.617 என அழைக்கப்படும், பேரழிவு தரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலைப் பரவலாக இந்தியா முழுவதும் வெளிப்பட்டுள்ளது, இந்தியாவின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்ஸிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. சவக் கிடங்குகள் நிரம்பியுள்ளன. கொரோனாவால் இறந்த உடல்கள் தெருக்களில் விடப்படுவதால்...