இன்று இந்தியா

 இந்தியாவில் இருந்து வருகின்ற அரசியல்ரீதியான இறுமாப்பு தொற்றுநோயின் யதார்த்தத்தை இந்த வாரம் சந்தித்தது. 

நரேந்திர மோடி தலைமையிலான ஹிந்து தேசியவாத அரசு நாடு கோவிட்-19 இன் இறுதியாட்டத்தில் இருக்கிறது என்று இந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் கூறியிருந்த போதிலும் இப்போது இந்தியா ஒரு நரகமாகவே இருந்து வருகிறது. போதியபடுக்கைகள், ஆக்சிஜன் இல்லாத மருத்துவமனைகளுடன் மிகுந்த பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் இரண்டாவது அலை மூலம் பி.1.617 என்றழைக்கப்படுகின்ற கொரோனா வைரஸின் புதிய இரட்டைப் பிறழ்வு தீவிரத்துடன் வெளிப்பட்டுள்ளது. சவக்கிடங்குகள் நிரம்பி விட்டதால், வீடுகளிலேயே உடல்கள் சிதைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

 தொண்டு நிறுவனங்கள் இறப்பை ஏற்படுத்துகின்ற வகையிலே தெருக்களை ஆபத்து சூழ்ந்திருப்பதாக எச்சரிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை புதிய சார்ஸ் கோவி-2 நோய்த்தொற்றுகள் 3,32,730 என்ற அளவில் இந்தியாவில் பதிவாகியுள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளாக உலகளவிலே அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் என்ற அளவிலே அந்த எண்ணிக்கை அதிகரித்துள் ளது. கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 2,200க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

 இந்தியாவில் இருந்து வருகின்ற விமானங்களைத் தடைசெய்துள்ள நாடுகள் தங்களுடைய மக்கள் இந்தியாவிற்கு பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கின்றன அல்லது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவிற்குச் சென்று திரும்பி வந்தவர்கட்டாயத்திற்குள்ளாகியுள்ளது.

ஆறு வாரங்களுக்கு முன்னர் இந்தியமக்கள்தொகையில் ஒரு சதவீதம் கூட தடுப்பூசி போட்டுக் கொள்ளாதிருந்த நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய நாட்டை ‘உலகின் மருந்தகம்’ என்று அறிவித்திருந்தது தொற்றுநோய்க்கு முந்தைய வாழ்க்கை மீண்டும் தொடங்கப்படலாம் என்பதற்கான அறிகுறியாகவே அறியப்பட்டிருந்தது. தொற்றுநோயின் அதிவிரைவுப் பரவல் ஆயிரக்கணக்கான வர்கள் கிரிக்கெட் மைதானங்களில் குழுமிய போது, லட்சக்கணக்கான இந்துக்கள் கும்பமேளாவின் போது கங்கையில் நீராடிய போது நடந்தேறியது.

 தொற்றுநோய்ப் பரவல் அதிகரித்த வேளையில் டொனால்ட் ட்ரம்பைப் போல திரு மோடியும்தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தைக் கைவிடவில்லை. ஐந்து மாநிலத் தேர்தல்கள் நடைபெற்ற இந்தியாவில் முகக் கவசம் அணியாத மோடி மிகப்பெரிய பேரணிகளை ஏப்ரல் மாதம் நடத்தினார். 

மோடியின் குணாம்சமாக இருந்து வருகின்றஇந்திய விதிவிலக்கு வாதம் மெத்த னத்தையே வளர்த்தெடுத்துக்கொடுத்தது.

தேசிய மகத்துவம் குறித்து இருந்து வந்த அனுமானம் குறிப்பாக தடுப்பூசி உற்பத்தியில் ஆயத்தமின்மைக்கே வழிவகுத்துக் கொடுத்தது. உலகளாவிய மருந்து தயாரிப்பில் இந்தியாதான் அச்சாணியாக இருக்கப் போகிறது என்று மேற்குலக நாடுகள் ஊக்குவித்தன. ஆனால் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் இந்த வாரம் ‘அது ஒரு பிழையாகஇருக்கலாம்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். 

சீனாவும் அமெரிக்காவும் இப்போதுஇந்தியாவை விட அதிகமாக கோவிட்-19தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வரு கின்றன. ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைஎளிதாக்கித் தருவதில் இன்னும்வாஷிங்டனை இந்தியாவால் சமாதானப் படுத்த முடியவில்லையாதலால் அது ரஷ்யாவிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளது.

தனது உள்ளுணர்வு மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை ஏளனம் செய்கின்ற அதீத நம்பிக்கை ஆகியவற்றால் இந்தியப் பிரதமர் இப்போது அவதிப்பட்டு வருகிறார்.

 இந்த வாரம்கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சற்று முன்னதாக தங்களுக்கு ஆலோசனை வழங்கத் துணிந்த முன்னாள் காங்கிரஸ் பிரதமர் மீது மோடியின் அமைச்சர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். கடந்த ஆண்டு கோடிக்கணக்கான இந்திய மக்கள் மீது மிகக் கடுமையான திடீர் பொது முடக்கத்தை மோடி திணித்திருந்தார். எந்தவொரு எச்சரிக்கையுமின்றி கொண்டு வரப்பட்ட பணி நிறுத்தம் நாட்டின் உயர்மட்ட தொற்றுநோயியல் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு எதிராகவே சென்றது. ஆனால் தன்னிட முள்ள நாடகத்தனமான உடல்மொழிகள் மீது கொண்டிருக்கும் ஆர்வத்திற்கு ஏற்றவையாகவே அவரது அந்தச் செயல்பாடு இருந்தது. 

கோவிட்-19ஆல் இறந்து போனவர்களின் விகிதம் மிகவும் இளைய வயதினரை அதிகமாகக் கொண்டுள்ள இந்தியாவில் மற்ற நாடுகளை விடக் குறைவாகவே இருக்கும்.

நன்றி: கார்டியன்.

----------------------------------------------------------------------------------

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு  குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜாசரெவிக் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை தேவைப்படுகிறது. இதிலும் குறைவானவர்களுக்குத்தான் ஆக்சிஜன் அவசியமாகிறது.



ஆனால் தற்போது பிரச்சினையின் ஒரு பகுதி என்னவென்று பார்த்தால், சரியான தகவல்கள், ஆலோசனைகள் கிடைக்காததின் விளைவாக பலர் ஆஸ்பத்திரிகளுக்கு விரைகிறார்கள். (அவர்களுக்கு வீட்டில் இருந்து கொண்டு பராமரித்து, கண்காணித்து வந்தாலே கொரோனாவை பாதுகாப்பாக நிர்வகிக்க முடியும்.)

சமூக அளவிலான மையங்கள் நோயாளிகளை சோதனை செய்ய வேண்டும். பாதுகாப்பான வீட்டு பராமரிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதே நேரத்தில் ஹாட்லைன் மற்றும் டேஷ்போர்டுகள் மூலம் தகவல்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

---------------------------------------------------------------

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்’ என்ற தலைப்பில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதன் விவரம்:

"அனைவருக்கும் அன்பான வணக்கம்!

ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலனைப் பாதுகாத்து, நோய் வராமல் பாதுகாக்க வேண்டிய காலக்கட்டம் இது. அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு, தங்களையும் தங்களது சுற்றத்தாரையும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை முதலில் வைத்துக் கொள்கிறேன்.

மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி நடந்து கொள்ளுங்கள். அவசியப் பணிகளுக்காக மட்டும், அதற்கான இடங்களுக்கு மட்டும் செல்லுங்கள். அவசியமற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருங்கள். வீட்டில் இருந்து வேலைப் பாருங்கள். வீட்டுக்குள்ளும் போதிய தனிமனித இடைவெளியைக் கடைபிடியுங்கள்.

தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள். மிகத்தீவிரமான உடல்நலக் கோளாறு உள்ளவர்கள் தங்களது மருத்துவரை கலந்தாலோசனை செய்த பிறகு தடுப்பூசியை பயன்படுத்துங்கள்.

முகக் கவசங்களை தொடர்ந்து அணியுங்கள். கிருமிநாசினியை பயன்படுத்துங்கள். கபசுரக் குடிநீர் அருந்துங்கள். காய்கறி பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பானங்களை அருந்துங்கள். பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். சத்தான, இயற்கை உணவுகளை சாப்பிடுங்கள். பதப்படுத்தப்பட்ட பொருள்களை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

மருத்துவக் குணங்கள் கொண்ட பலவற்றையும் நமது உணவுடன் சேர்த்து பயன்படுத்தும் பழக்கம் காலம் காலமாக நம்மிடம் இருக்கிறது. அந்த பாரம்பர்யத்தை தொடந்து பின்பற்றினால் கரோனாவை தடுக்கலாம்.

மருந்தால் மட்டுமல்ல, உணவுப் பொருளாலும் நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.



நமக்கு கரோனா வராது என்ற அலட்சியம் மட்டும் யாருக்கும் எப்போதும் வேண்டாம்!

கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக மிக மோசமானதாகப் பரவி வருகிறது.

‘கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மே மாதத்தில் உச்சத்தை எட்டும்’ என்று வருகின்ற செய்திகள் அச்சத்தைத் தருவதாக உள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது.

தினந்தோறும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இறப்பு எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. அனைத்து மாவட்டங்களுமே கரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. ஒரு நாளில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா உலகில் முதல் நாடாக இருக்கிறது.

வட மாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் நமது பயத்தை அதிகம் ஆக்குகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. மருந்துகள் இல்லை. ஆக்சிஜன் இல்லை. தடுப்பூசி இல்லை.

இப்படி இல்லை, இல்லை என்பதே வட மாநிலச் செய்திகளாக இருக்கின்றன.

முதல் அலை பரவிய து அதைத் தடுக்கத் தவறியது மத்திய, மாநில அரசுகள். அந்தப் பரவலைக் கட்டுப்படுத்தவும் அந்த இரண்டு அரசுகளும் தவறின.

முதல் தவறையாவது திருத்திக் கொண்டு அதிலிருந்து ஏதாவது பாடம் கற்றுக் கொண்டார்களா என்றால் இல்லை. முதல் தவறை விட பெரிதாக இரண்டாவது தவறைச் செய்துவிட்டார்கள். முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடைப்பட்ட ஆறு மாத காலத்தில் எந்த தற்காப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை. அதன் விளைவைத்தான் நாம் கண்ணுக்கு முன்னால் இப்போது பார்க்கிறோம்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதமே நாடாளுமன்ற நிலைக் குழு எச்சரித்தும் கண்டுகொள்ளவில்லை. இந்த அறிக்கை பிப்ரவரி 2-ம் தேதி மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது அலை நாட்டு மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் கூட தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆக்சிஜனையும் வெளிநாடுகளுக்கு இந்தியா விற்பனை செய்திருக்கிறது.

தடுப்பூசியை வைத்து நடந்த கொள்ளைகள்தான் இந்த வேதனையான நேரத்தில் மேலும் துயரமான ஒன்றாகும்.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை உணர்ந்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘மனித உயிர்கள் முக்கியமில்லையா? பிச்சை எடுங்கள்… கடன் வாங்குங்கள்… திருடக் கூட செய்யுங்கள்… இது தேசத்தின் அவசர நிலைக் காலம். ஆக்சிஜன் கொண்டு வந்து மக்களைக் காப்பாற்றுங்கள்’ என்று மத்திய அரசைப் பார்த்துக் கூறியிருக்கிறது. ஆக்சிஜன் தர மறுக்கும் நிறுவனங்களைக் கையகப்படுத்தலாம் என்று நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த அளவுக்கு மோசமான சூழ்நிலை இருக்கும்போது, தடுப்பூசியின் விலையை உயர்த்துகிறார்கள் என்றால் எவ்வளவு அநியாயம் இது! மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுக்கு ஒரு விலை, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு விலை என்பது அநியாயத்திலும் அநியாயம் இல்லையா? உயிர் அனைவருக்கும் பொதுவானது தானே?

‘ஒரே தேசம்; ஒரே தேர்தல்; ஒரே ரேஷன் கார்டு; ஒரே வரி; ஒரே சந்தை; ஒரே மதம்; ஒரே உணவு; ஒரே மொழி’ என்று பேசும் பாஜக ஆட்சியில் உயிர் காக்கும் மருந்துக்கு மூன்று விலைகள்!

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு மாநில அரசுகள் தங்களிடம் இருந்த வரி போடுகிற அதிகாரங்களையும் பெருமளவுக்கு இழந்துவிட்டன. எனவே, இந்தச் சுமையை மாநில அரசுகள் சுமப்பது மிகக் கடினம்.

எனவே, இந்தக் கடினமான காலத்தைச் சமாளிக்க, மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, முக்கியமாக ‘அனைவருக்கும் இலவச தடுப்பூசி’ என்ற அறிவிப்பை பிரதமர் அறிவித்து, உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் காலம் காலமாக மருத்துவ உள்கட்டமைப்பு வசதி வளப்படுத்தப்பட்டு வருவதால் ஓரளவு சமாளிக்க முடிந்தது. ஆனாலும் அதிமுக அரசு இதனை முறையாகப் பயன்படுத்தும் திறன் பெற்றதாக இல்லை.

வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு தமிழகத்திலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையைத் தற்காலிகமாக ஆக்சிஜன் தயாரிப்பதற்காக மட்டும் திறக்கலாம். நான்கு மாதத்தில் அந்தப் பணிகள் முடிந்ததும் ஆலையை நிரந்தரமாக மூடிவிடலாம் என்று மனிதாபிமான அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சொன்னோம்.

அப்படி தயாரிக்கப்படுகின்ற ஆக்சிஜனையும் தமிழகத்தின் பயன்பாட்டுக்கு முழுமையாகப் பயன்படுத்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி சொல்லி இருக்கிறோம். மக்கள் மிகவும் எச்சரிக்கையாக தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், ஒருவர் மூலமாக ஒரு மாதத்தில் 406 பேருக்கு கரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புள்ளதாக மத்திய மக்கள் நலவாழ்வுத்துறை சொல்லியிருக்கிறது.

இதையெல்லாம் மக்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எங்கும், எப்போதும், எந்த இடத்திலும் தனிமனித இடைவெளி முக்கியம், மிக மிக முக்கியம் என்பதை மக்கள் தங்களுடைய மனதில் அழுத்தமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி அரசுத் தரப்பில் அவசரமாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆக்சிஜன், தடுப்பூசி ஆகியவற்றின் கையிருப்பை அதிகரிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதியைப் புதிதாக உருவாக்க வேண்டும். போதிய எண்ணிக்கையில் வென்டிலேட்டர்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு மற்றும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள், புதிய படுக்கை வசதிகள் கொண்ட ‘தற்காலிக மருத்துவமனைகள்’ அமைக்கப்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் எல்லாம் கரோனா சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

கரோனா பரவல் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். மக்கள் பாதுகாப்பை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். முகக்கவசம் அணிவதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். அனைவருக்கும் பரிசோதனை, அனைவருக்கும் தடுப்பூசி என்பதை இயக்கமாக மாற்ற வேண்டும்.

ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவக் கூடாது, தொற்று ஏற்பட்டவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் ஆகிய இரண்டு முக்கிய இலக்கைக் கொண்டதாக அந்த இயக்கம் செயல்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் இப்போது இருக்கும் அரசு செயல்படுத்துகிறதோ இல்லையோ, விரைவில் புதிதாக அமையப்போகிற அரசு நிச்சயமாக நிறைவேற்றும். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுடைய அமைதியான வாழ்வுக்கும் தேவையான அனைத்தையும் அமையப்போகிற அரசு செய்யும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுவரை தற்போதைய காபந்து அரசு மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியம் வேண்டாம், அலட்சியம் வேண்டாம் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

மக்களைக் காப்பாற்றுங்கள், மக்களைக் காப்பாற்றுங்கள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். வரலாற்றின் பழிக்கு ஆளாகாதீர்கள், ஆளாகாதீர்கள் என்று எச்சரிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.

புதிய அரசு அமைந்தவுடன் மக்கள் நலன் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்படும். எப்போதும் மக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருந்து நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்”.

--------------------------------+-----------------------------------


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த 24 மணி நேரத்தில் 3,60,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,79,97,267 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 3293 பேர் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,01,187 ஆக உயர்ந்துள்ளது. 
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,48,17,371 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,61,162 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 29,78,709  பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 14,78,27,367 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?