இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

7000 க(ள)னவு

படம்
காணாமல் போனதா 7000 நெல் மூட்டைகள்,? தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது.  தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இதனால் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட தருமபுரி வாணிப கழக திறந்த வெளி குடோனில் இன்று மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.  அப்போது ஆட்சியர் சாந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. தமிழ்நாடு வாணிப கழக சார்பில் தருமபுரி மாவட்டத்திற்கு 22 ஆயிரம் நெல் மூட்டைகள் தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் வரவழைக்கப்பட்டது.  இந்த நெல் மூட்டைகளை ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட வாணிப கழக திறந்த வெளி குடோனில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த குடோனில் இருந்த 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல்களை பரப்பினர். இதுகுறித்து எழுந்த புகார் காரணமாக விஜ

தேவை சட்ட நடவடிக்கை.

படம்
  இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் தனது மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி ஆலையை ஜப்பானின் ஓம்ரான் நிறுவனம் அமைக்கிறது. மவுண்ட்பேட்டன் பிரபு செங்கோல் கதை காலத்தில்  டெல்லியிலேயே இல்லை.இங்கிலாந்து சென்றிருந்தார். புனைகதைகள் வரலாறு ஆகாது” -என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செங்கோல் குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்தார். கோவையில் கத்தியை வைத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிஎம்சி காலணி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் போன்ற விடியோக்களை பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான குழு சந்தித்துள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக குடியரசு தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் துரைசாமி விலகியதற்கான காரணங்கள் குறித்து எனக்கு தெரியாது. திமுகவுடன் கூட்டணி வைத்தது துரைசாமிக்கு பிடிக்கவில்லை. அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையல்ல. மதிமுகவில் இருந்து திருப்பூர

ஒன்பதாண்டு நோக்கு

படம்
  பிளஸ் 2 மறுகூட்டலுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளைமுதல் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பித்த பாடங்களுக்கு பதிவெண், பிறந்த தேதியை பதிவுசெய்து விடைத்தாள் நகல்களை இன்றுமுதல் பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மறுமதிப்பீடுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ. 500 கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க ஜூன் 15ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்னை வருகிறார். ஏற்கனவே ஜூன் 5ம் தேதி வருவதாக இருந்த நிலையில் தற்போது பயணத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  அமிர்தசரஸில் இருந்து கத்ரா சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  மேலும் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரிசி கொம்பன் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து, பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை ப

இருவேறு வெறியர்கள்

படம்
  வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர்.  இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே பிற்பட்டோர் பட்டியலில. அவர்கள் இருக்கின்றனர்.அரசு சலுகைகள் அனைத்தையும் பெறுகின்றனர். 60%அதிகமான பெரும்பான்மெயினராக உள்ள மைத்தேயி சமூகத்தினர்தான். அரசப்பணிகளில் அதிகாரிகளாகவும் உள்ளனர். மேலும் முதல்வர் அச்சமூகத்தைச்சேர்ந்தவராக உள்ளார்.பெரும்பான்மை அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்களாகவும்அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். பழங்குடியினர் பலரும் கிறித்தவர்கள். மைத்தேயிகள் இந்துக்கள்,பாஜக ஆதரவாளர்கள். இதனால்தான் பழங்குடி யினர் பட்டியலில் அவர்களைச் சேர்க்க முதலமைச சரும்ஒன்றிய அரசும் ஆதரவளித்து வருகின்றன.நூதிமன்றமுமும் ஆரதரவாக தீர்ப்பளிக்கிறது. மைத்தேயி இனத்தவர்கள் சமவெளிகளில்,நகரங்களில் வசிக்கிறார்கள். காடு,மலைப் பகுதிகளில் பழங்குடியினர் வசிக்கின்றனர். அப்பகுதிகளில் நிலம் வாங்க பழங்குடியினருக்கு

சங்(கி)கம் வளர்த்த தமிழ்?

படம்
 மோடியு டைய கரங்களில் நல்லாட்சிக்கு உவமையான 'செங்கோல்' இருக்கிறது என்று யாராவது அவருக்கு நினைவு படுத்தவேண்டுமோ? என ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பி உள்ளார்.  திருவள்ளுவர் அரசனுக்குத் தேவையான நான்கு குணங்களில் ஒன்றாகச் 'செங்கோலை' வைத்தார் - குறள் 390(செங்கோல்: செங்கோன்மை) மற்று மூன்று குணங்கள்: கொடை, இரக்கம் மற்றும் ஏழை, எளிய மக்களைக் காத்தல் குறள் 546 இல்அரசனைத் திருவள்ளுவர் எச்சரிக்கிறார்: 'வேல் அன்று வென்றி தருவது மன்னவன் கோல்அதூஉம் கோடாதெனின்' (கோடாத கோல்: வளையாத செங்கோல்) 2023 ஆண்டில் தேவையான பாடத்தை அன்றே வள்ளுவர் சொன்னார். மணிப்பூர் மாநிலத்தில் கலவரங்கள் வெடித்து 3 வாரங்கள் ஓடிவிட்டன. 75 பேர் மடிந்திருக்கிறார்கள் ஆனால் இந்த நாள் வரை மாண்புமிகு பிரதமர் மணிப்பூர் கலவரங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை மணிப்பூர் மக்கள் வன்முறையைத் தவிர்த்து அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுக்கவில்லை.நேரில் செல்லவுமில்லை. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகி

வழிகாட்டி கோள்

படம்
  வழிகாட்டி சேவைக்காக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அணு கடிகாரம் கொண்ட NVS-01 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்-12 ராக்கெட் இன்று காலை விண்ணில் செலுத்தப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒசாகா நகரில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார்.  அப்போது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்துக்கும்-சென்னை அருகே திருப்போரூரில் செயல்படும் ஜப்பானைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ்நிறுவனத்துக்கும் இடையே, 83 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்வதற்காக, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  அதன் பின்னர் ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையின் செயல்பாடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜக எம்பி பிரிஜ் பூஷணை கைது செய்து வீரர்களை விடுதலை செய்ய வேண்டும் என டெல்லி மகளிர் ஆணைய தலைவர் கூறியுள்ளார். விஷச் சாராய விவகாரம், மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு விவகாரம் ஆகியவற்றைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறவுள்ளது . பாஜக வின் சட்டம்-ஒழுங்கு மல்யுத்த வீரர