இடுகைகள்

நவம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மோடி நண்பர்கள் முன்பே பணத்தை மாற்றிவிட்டனர்

படம்
யாதின் ஒசா குஜராத்தின் பி.ஜே.பி முன்னாள் எம்.எல்.ஏ. இவர் மோடியின் பணத்தை மதிப்பிழக்கச் செய்த நடவடிக்கை பற்றிய தகவல் முன்கூட்டியே பி.ஜே.பியின் அபிமான தொழிலதிபர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி பிரதமர் மோடிக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளார். இவர் ஒரு காலத்தில் மோடியுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியவர். பா.ஜ.க தலைவர் அமித் ஷா அரசியல் வாழ்வைத் துவங்கி வைத்தவர். அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள கடிதம் பலரால் பகிரப்பட்டு மிக விரைவில் பலரையும் சென்றடைந்துள்ளது. யாதின் ஓசா ஒசா, மோடி குஜராத் முதல்வராயிருந்தபோது அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக கிச்சன் காபினெட்டில் இருந்தவர். இவர் முதன்முதலாக சபர்மதி தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அமித் ஷாவை தனது தேர்தல் முகவராக (election Agent) நியமித்திருந்தார். 1997 தேர்தலில் அமித் ஷா வேட்பாளராக தேர்வாவதற்கு உதவியுள்ளார். சமீபத்தில் பா.ஜ.கவில் ஓரங்கட்டப்பட்டதால் அதிருப்தியில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். இக்கடிதத்திற்கு முன்னதாக ஒசா கெஜ்ரிவாலுக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் பீகார் தேர்தலையொட்டி அமித் ஷாவ

மோடியை நம்பும் அப்பாவிகள் கவனிக்க...

படம்
1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற முடிவினை யாருக்கும் தெரிவிக்காமல் மிக ரகசியமாய் பிரதமர் மோடி எடுத்ததாகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு கூட தெரிவிக்காமல் முடிவெடுத்ததாகவும் அவரின் ஆதரவாளர்கள் புளங்காகிதம் அடைகிறார்கள். அறிவிப்பு வெளியிடுவதற்கு முதல் நாள் பாரதிய ஜனதா கட்சி தனது பணத்தை கத்தை கத்தையாக வங்கிக்கு சென்று செலுத்தியது, அறிவிப்பு வெளியிடுவதற்கு முதல் வாரம் மோடியின் கட்சியினர் நிலங்களாக வாங்கி குவித்தது, அம்பானிக்கும், அதானிக்கும் அரசின் முடிவு தெரியும் என அக்கட்சி எம்.எல்.ஏ ஒருவரே கூறியது சமூக வலைத்தளங்களில் மிகவும் அழுத்தமாக உலவியது. இப்படி அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருந்தாலும், இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மையல்ல; மோடி மீதான அவதூறு தான் இது… என்று நம்புகிற அப்பாவிகள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அரசு வெளியிட்ட நிர்வாக ஆணையே, அரசின் இம்முடிவு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது. நவம்பர் 8ம் தேதி வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பு பின்வருமாறு தொடங்குகிறது: ‘‘Whereas, the Central Board

முதுகு வலியைத் தடுக்க...'

படம்
வெளிப்பக்கம் காணப்படும் உடல் பகுதி களில் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லாமல் நம்மால்  பார்க்கமுடியாத ஒரு முக்கியப் பகுதி முதுகு. தடித்த சருமம், பரந்து விரிந்த தசைகள், நீண்ட தசை  நாண்கள், பலதரப்பட்ட எலும்புகள், மூளைத்தண்டுவட நரம்புகள் என்று பல கலவையால் ஆன கூட்டுக்  குடும்பம் இது. கழுத்து, தோள்பட்டை எலும்பு, மேல் முதுகு, மத்திய முதுகு, கீழ் முதுகு என்று பல  பகுதிகளைக் கொண்டது இது. பெரும்பாலும் மேல் முதுகில் ஏற்படும் பிரச்சினை தசை சுளுக்கு  காரணமாகவே இருக்கும். விபத்தின்  மூலம் முதுகெலும்பு களில்  அடிபடுதல், தோள்பட்டை வலி, விலா எலும்பு முறிவு, ரத்தம் கட்டுதல்,  விலா  குருத்தெலும்பு வீக்கம் போன்ற பிரச் சினைகளும் வரலாம்.  மேல்  முதுகில் வலி உண்டாகி இருமலும்  இருந்து இவை இரண்டு  வாரங்களுக்கு மேல் நீடித்தால்,  அது காச  நோயாக இருக்கலாம். மேல் முதுகெலும்பு களில் பலமாக அடிபட்டு அவை நொறுங்கிப்  போனாலோ, அங்கு செல்லும் முதுகுத்  தண்டுவட நரம்புகள்  பாதிக்கப்பட்டாலோ, அடிபட்ட உடல் பகுதிக்குக்  கீழ் உள்ள பகுதிகள்  எல்லாமே  செயலிழந்து விடும். அந்த இடங்களில் உணர்ச்சி  இல்ல

அடுத்த நூறு கோடி பேர்

படம்
 சில நாடுகளில் தான் நூறு கோடிக்கு மேல் மக்கள் வாழ்கிறார்கள்.  உலகில் உள்ள மக்களை இணைப்பதுதான் நோக்கமென்றால், அங்கு சென்று தான் நம் பணியைத் தொடங்க வேண்டும்” என்ற இலக்குடன் செயல்படும் கூகுள், இந்தியாவை இலக்காகக் கொண்டு பல திட்டங்களைத் தந்து வருகிறது.  இதற்கென தன் நிறுவனச் செயல்பாடுகளின் தன்மையையே மாற்றிக் கொண்டுள்ளது.  இணையம் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை அமெரிக்க நாட்டைக் காட்டிலும் அதிகமாக 35 கோடி என்ற இலக்கினை எட்டி பல மாதங்கள் கடந்துவிட்டன. இன்று நாள் தோறும் 15 ஆயிரம் இந்தியர்கள் புதியதாக இணையத்தில் இணைகிறார்கள். “ இணையத்தில் இணைக்கப்பட வேண்டிய அடுத்த நூறு கோடி பேர்” என்ற கூகுள் நிறுவனத்தின் இலக்கிற்கு இந்தியா சிறப்பாகத் தன் பங்கினை அளிக்கும் என கூகுள் உணர்ந்துள்ளது.  மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்திய இணையத்தில் இந்த நிலை இல்லை. ஸ்மார்ட் போன்கள் மக்களின் வாங்கும் சக்திக்கு உள்ளாக அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கியவுடன் தான், இந்த திடீர் உயர்வு தொடங்கியது. உலகில் இணையப் பயனாளர்களை அதிகம் கொண்டுள்ள சீனா, கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்குத் தடை விதித்தவுடன், கூகுள் தன்

பிடல் காஸ்ட்ரோ

படம்
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராளியும், புரட்சியாளருமான சே குவேராவின் உயிர்த் தோழர், க்யூபப் புரட்சியாளர் ஃபிடெல் காஸ்ட்ரோ ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி 1926ம் ஆண்டு கியூபாவில் ஒரு செல்வ செழிப்பான விவசாய தந்தைக்கு பிறந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ. இவர் என்ன தான் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கியூப மக்களின் அடிமை நிலையை கண்டு தனது வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு கியூபாவின் மக்களுக்காக அமெரிக்கா என்னும் மிகப்பெரிய ஏகாதிபத்திய நாட்டை எதிர்த்து போராட ஆரம்பித்தார்.  அமெரிக்கா, அதுவென்ன அவ்வளவு சாதாரண வார்த்தையா? உலகில் உள்ள பெருமுதலாளிகள் அனைவருக்கும் ஒரு மந்திரச் சொல்லாக இருப்பது தான் அமெரிக்கா. இருபதாம் நூற்றாண்டின் வல்லரசு நாடாக திகழ்ந்த அமெரிக்கா உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவு செய்தது. ஆனால் கியூபாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்காவும் பிடல் காஸ்ட்ரோவும்: அமெரிக்கா தனது ஏகாதிபத்திய கொள்கையின் மூலம் கியூபாவிலும் அதனுடைய கொடியை நாட்டியிருந்தது. ஆனால்