இடுகைகள்

டிசம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

போர் துவங்கியதும் விளங்கி விடும்,

படம்
இன்றைய பரபர செய்தி அரை நூற்றாண்டாக அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டே இருந்த ரஜினி மீண்டும் தனது அரசியல் வாயை திறந்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவதை பார்ப்பது நமக்கு  காலத்தின் கட்டாயம் என்று வேறு அறிவித்து விட்டார்.  வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன். காலம் குறைவாக உள்ளதால் அதற்கு முன் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போது முடிவு செய்யலாம்.  என்றும் மேலும்  கதைத்துள்ளார். தான் அரசியலுக்கு வருவதும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாலும் இனி"  நான் உட்பட யாரும் அரசியல் பற்றி பேசக்  கூடாது. யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம்.  அரசியல் அறிக்கை விடவும், மக்களுக்காக போராட்டம் பண்ணவும் நிறைய பேர் உள்ளனர்."என்று சொன்னதுதான் ரஜினி அரசியல் செய்யப்போகிறாரா?அரசியல் பேசாமல் மக்களுக்காக போராடாமல் இவர் தேர்தலில் வென்று முதல்வராவது எப்படி?எதற்காக?என்பது புரியவில்லை. இப்படி செய்யாமல் தினகரனின்  ஹவாலா முறையில் வென்று ஆட்சியைப்பிடிக்கப் போகிறாரா?அரசியலுக்கு வரும் முன்பே குழ

டாக்சி தொழில் நுழையும் கார்பரேட்கள்.!

படம்
சென்னை, தில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் மக்களின் நலன் கருதி பஸ், மின்சார இரயில், மெட்ரோ என அரசாங்கத்தால் சேவை வழங்கப்பட்டு வருகிறது.  இப்படிப்பட்ட சேவை வழங்கினாலும் இந்த பெரு நகரங்களில் நாம் நினைத்த இடத்திற்கு நாம் நினைத்த நேரத்தில் செல்ல ஆட்டோ, டாக்ஸி போன்ற சேவையை நாம் பயன்படுத்துவது உண்டு.  இன்றைக்கு ஆட்டோவை காட்டிலும் டாக்ஸியின் பயன்பாடு என்பது பல மடங்கு உயர்ந்துள்ளது.  குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2016ல் டாக்ஸியின் சேவை இந்தியாவில் 60 சதவிகிதமாக இருந்தது. இந்த வளர்ச்சி என்பது கடந்த மூன்று வருடத்தில் ஏற்பட்டது தான்.  இந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன?  டாக்ஸி சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தை மதிப்பில் ஏற்றத்துடன் இருப்பதை கண்டு பல நாடுகளில் ஆச்சரியப்படுகின்றனர்.  இதற்கான விடையை நாம் தேடுவதற்கு முன்பு டாக்ஸி என்ற சேவை பற்றிய வரலாற்றை பார்ப்போம். டாக்ஸி அல்லது கேப் என்று நாம் இன்று பயன்படுத்தும் சொல்லிற்கான அர்த்தம் 18ஆம் நூற்றாண்டுகளில் காப்ரியோலெட் ( CABRIOLET) எனப்படும் இரண்டு சக்கரங்களுடன் கூடிய குதிரை வண்டி பயன்பாட்டில் இருந்தது.  அன

கூகுளின் மை ஆக்டிவிட்டி(My activity)

படம்
 பிரபலமான தேடல் தளமாக கூகுளை பற்றி சில உண்மைகளைப் பார்ப்போம். நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, அதை நம்பி உங்களைப் பற்றிய பல செய்திகளை  அளிக்கிறீர்கள்'' தமது பயனர்களுக்கான அந்தரங்க உரிமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனையின் முதல் வரியில் கூகுள் தெளிவாகக் கூறியுள்ளது. ஆனால், ''மை ஆக்டிவிட்டி (My activity)'' செயல்பாட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை விரும்பினால் நீங்கள் அகற்றிக்கொள்ளக் கூடிய  வசதியை  கூகுள் வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பலர் அறியாமல் உள்ளனர் . எளிமையான வழிமுறைகளில் எப்படி இதைச் செய்வது என்பதை விளக்குகிறோம். மை ஆக்டிவிட்டியை அழிப்பது எப்படி என்பதை பார்க்கலாம். ஒவ்வொரு முறை நீங்கள் கூகுளில் தேடும்போதும், அந்தத் தேடலை கூகுள் உங்களது கணக்குடன் தொடர்புபடுத்தி வைக்கிறது. மின்னஞ்சல் (ஜி மெயில்) உள்பெட்டியில் தேடுவது, இணையத்தில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்வது என நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் இது பதிவிட்டுக்கொள்ளும். இத்தகவல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ''மை ஆக்டிவிட்டி (My activity)'' எ

அழகிரியில் மையம்

படம்
குறிஞ்சி மலர் பல ஆண்டுகள் இடைவெளிவிட்டு பூக்கிறதோ இல்லையோ மதுரைக்கார உடன்பிறப்பு அழகிரி இடையிடையே திமுகவை ஒழிப்பது ,ஸ்டாலின் தலைமை பற்றி குரல் கொடுப்பதற்கு தவறுவதில்லை. அவரை திமுகவினரே மறந்து கட்சிப் பணியாற்றுகையில் தினமலர் போன்ற பத்திரிகைகள் அழகிரிக்கு கொம்பு சீவி விடுவதில் அயராது பணியாற்றிக்கொண்டுதான் இருந்தன,இருக்கின்றன.  எல்லாம் போகட்டும் திமுகவில் இருந்து தலைவராலேயே  நீக்கப்பட்டவர் இப்படி திமுக வறட்சி பற்றி பேச உரிமை இருக்கிறதா? அப்படி இருந்தாலும் அப்படி பேசும் தகுதி அழகிரிக்கு இருக்கிறதா? ஸ்டாலின் முழுத் தலைமையில் 2016 தேர்தலை திமுக சந்தித்தது. அப்போது இந்த அழகிரி திமுக தொண்டர்களை பாஜகவுக்கும்,அதிமுகவுக்கும் வாக்களிக்க அறிக்கைவிட்டவர்.பேட்டியளித்தவர் என்பதை திமுகவினருக்கு,தமிழநாட்டினரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த தேர்தலில்தான் 89 என்ற அளவில் திமுகவை ஸ்டாலின் வெற்றி பெற வைத்தார். அதுவும் எப்படி பட்ட சூழல்.? மத்திய மோடி அரசின் ஆதரவு,தேர்தல் ஆணையத்தின் நிபந்தனையற்ற ஆதரவு,அரசு அதிகாரிகள்,காவல்துறையினர் கொத்தடிமைத்தன பணிகள்,அனைத்துக்கும் மேலாக வாக்குக்கு மடை திறந்த

மாயப் பணம்

படம்
 "பிட்காயின்" மாயப்பணம் என்ற உடன் ரா.கி.நகர்,தினகரன் உங்கள் நினைவுக்கு வரலாம்.அதில் தப்பே இல்லை. ஆனால் நாம் இப்போது பார்ப்பது குக்கர் காயின் அல்ல பிட்காயின் . இதுதான் இன்று உலகம் முழுக்க ஆக்கிரமித்துவரும் கையிலே வாங்கி உணர,காணக்கிடைக்காத பணம்.மாயப்பணம். இதில் வரவு செலவு வைக்கலாம் .பொருட்களை வாங்கலாம்.ஆனால் மீதிப்பணம் கணக்கிலேயே இருக்கும்.கைகளில் தட்டுப்படா பணம் இது. இந்தியாவில் பொருளாதார அறிவு பெற்றோர் எண்ணிக்கை குறைவு.  அவர்களில் அதிக பொருளாதார அறிவு உள்ளவர்கள் மத்தியிலும் பிட்காயின் என்பது  அறியப்படாத,குழப்பமான  ஒன்றாகும்.  ஆனால் பிட்காயினை பிரபலப்படுத்த  bitcoin-india.org என்ற இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அது போக பிட்காயின் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடிய பயன்படுத்தக்கூடிய 25 ம்  மேற்பட்ட இணையதளங்கள் உள்ளன. சட்டரீதியாக இந்தியாவில் பிட்காயின் தடைசெய்யப்படவில்லை.  ஆனால், பிட்காயின் வணிகம் இங்கே ஊக்குவிக்கப்படுவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகள் பிட்காயின்களை பயன்படுத்துகின்றன.  பிட்காயின்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்