அதிரடி அலை எழுப்பிய தீர்ப்பு!

நாட்டை உலுக்கிய, 1.76 லட்சம் கோடி ரூபாய், '2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து, டில்லி, சி.பி.ஐ., நீதிமன்ற சிறப்பு நீதிபதி, ஓ.பி.சைனி தீர்ப்பு அளித்துள்ளார். 
குற்றத்தை நிரூபிக்க, சி.பி.ஐ., தவறிவிட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 


இது போன்ற கருத்து முன்பே நமது "சுரனி"ல் கட்டுரையாக வந்ததை படித்திருக்கலாம்.இதுபோன்ற கருத்தியல் கணக்கு ஊழல்களுக்கு என்ன வகையில் தீர்ப்பளிக்க முடியும்.?
"ஆடு காணாமல் போனதாக கனவு கண்டேன் "என்றால் அதற்கு என்ன ஆதாரம் கொண்டு தண்டனை வழங்க முடியும்.?

இந்தத் தீர்ப்பை, தி.மு.க வினர் கொண்டாடி வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2007 - 2008ல், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா, தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். 
அப்போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி, அறிக்கை தாக்கல் செய்தார்.
 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு கொள்கையால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, அறிக்கையில் கூறப்பட்டது. 
இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணை செய்ய உத்தரவிட்டது. இதற்கிடையில், '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை ரத்து செய்து, 2012ல் தீர்ப்பு அளித்தது.

இந்த மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., இரண்டு வழக்குகளையும், இதில் நடந்துள்ள பண மோசடிகள் தொடர்பாக, அமலாக்கத் துறை ஒரு வழக்கையும் தொடர்ந்தன. 

இந்த வழக்குகள் விசாரணை, டில்லி, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நடந்து வந்தன. ஏழு சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழி உட்பட, 17 பேரையும் விடுதலை செய்து, அவர் தீர்ப்பளித்தார்.

அதேபோல், அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, கருணாநிதியின் மனைவி தயாளு உட்பட, 19 பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. 
இந்த வழக்குகளில், குற்றங்களை நிரூபிக்க, சி.பி.ஐ., தவறிவிட்டதாக, தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

'2ஜி' ஊழல் வழக்கு, நாடு முழுவதும் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மீதான பல்வேறு ஊழல் வழக்குகளில், மிகப் பெரிய ஊழலாக இது பார்க்கப்பட்டது. 
6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்குகளில், சி.பி.ஐ., நீதிமன்ற சிறப்பு நீதிபதி, ஓ.பி. சைனி நேற்று தீர்ப்பு அளித்தார்.
தீர்ப்பு நாளான நேற்று, ராஜா, கனிமொழி உட்பட அனைவரையும் ஆஜராகும்படி, நீதிபதி உத்தரவிட்டிருந்தார். நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து அறிவதற்காக நீதிமன்ற வளாகத்தில் மக்கள் பெருமளவில் கூடியிருந்தனர். 
தி.மு.க.,வினரும் அதிகளவில் குவிந்திருந்தனர். 
சி.பி.ஐ., தொடர்பான வழக்குகளில், 1,552 பக்கங்கள் உள்பட, மூன்று வழக்குகளையும் சேர்த்து, 2,183 பக்கத் தீர்ப்பை நீதிபதி அளித்தார். 

தீர்ப்பின் முக்கிய பகுதியை, நீதிபதி சைனி வாசித்தார்; 

இந்த வழக்குகளில், சி.பி.ஐ., ஒரு சில ஆதாரங்களின் அடிப்படையில், ஊழல் வழக்கை தொடர்ந்துள்ளது. எதுவுமே இல்லாத ஒன்று, மிகப் பெரியதாகக் காட்டப்பட்டுள்ளது. 
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவர் மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க, சி.பி.ஐ., தவறிவிட்டது.இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டார். 

இந்த வழக்கை,மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதால்,விடுவிக்கப்பட்டுள்ள அனைவரும், தலா,ரூ. ஐந்து லட்சம் சொந்த ஜாமின் அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு வெளியானதும், நீதிமன்றத்தில் குவிந்திருந்த, தி.மு.க.,வினர், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடினர்.
இந்த தீர்ப்பை, தி.மு.க.,வினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடினர்.இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ராஜா, 15 மாதங்களும், கனிமொழி, ஆறு மாதங்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 

மிகப் பெரிய ஊழல் வழக்கில் இருந்து, கனிமொழி, தயாளு உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதால், கருணாநிதியின் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, சி.பி.ஐ., நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரத்தை விற்றதால், பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகக் கூறி, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்தது.இந்த அறிக்கையின் பரபரப்பாலும், அரசியல் புற அழுத்தம் காரணமாகவும், இந்த பிரச்னை, 
விஸ்வரூபம் எடுத்தது.
ஆனால், இந்த வழக்கு, முழுக்க முழுக்க தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ரீதியில் அமைந்தது என்பது, பலருக்கும் புரியவில்லை. முக்கிய ஆவணங்கள் இருப்பது தெரியாமல், அவற்றை கைப்பற்றுவதற்கு முன்பாகவே, உச்ச நீதிமன்றம் தலையிட்டதன் அடிப்படையில், சி.பி.ஐ., அவசர கோலத்தில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. 

இது தான், இவ்வழக்கின் மிகப்பெரிய சறுக்கல். கிரிமினல் வழக்கறிஞர் என்பதால், ராஜா மிகவும் சாமர்த்தியமாக, முக்கிய ஆவணங்கள் இருப்பதையே வெளிக்காட்டாமல், கைது செய்து சிறையில் தள்ளிய போதும் கூட அமைதி காத்தார்; அதை விட, குற்றப் பத்திரிகையை, சி.பி.ஐ., தாக்கல் செய்யும் வரை, எதுவும் பேசாமல் இருந்தார்

சேகரிக்கவில்லை' என, கோர்ட்டில், சி.பி.ஐ., வெளிப்படையாக ஒப்புக் கொண்டது. 

'ஸ்பெக்ட்ரத்தை பெற்றது, தகுதியுள்ள நிறுவனங்கள் தான்' என்பதை, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலும், சட்டத் துறை செயலரும் ஒப்புக் கொண்டு, அதிகாரபூர்வ கடிதமே அளித்தனர்.ராஜா, இறுதியாக, தன் வாதத்தை முடித்த போது கூறியதாவது:

கண் பார்வையற்ற நான்கு பேர், யானையை தொட்டுப் பார்த்தனர். காலை தொட்டவர் துாண் என்றார். வாலை தொட்டவர் கயிறு என்றார். காதை தொட்டவர் முறம் என்றார். உடலை தொட்டவர் சுவர் எனக் கூறியதாக, கதை உள்ளது. இதே போலத்தான், ஸ்பெக்ட்ரம் குறித்த போதிய புரிதலின்றி, சி.ஏ.ஜி., - சி.பி.ஐ., - ஜே.பி.சி., அமலாக்கத் துறையினர் அணுகியதாலேயே, இத்தனை பிரச்னை. இவ்வாறு அவர் வாதாடினர்.
அதை கேட்டதும், நீதிபதி உட்பட, கோர்ட்டிலிருந்த அனைவரும், பலமாக சிரித்து விட்டனர். அன்றைய தினம் தான், தீர்ப்பு எழுதும் தேதியை, முடிவு செய்யும் தீர்மானத்திற்கே, நீதிபதி, ஓ.பி.சைனி வந்தார்.துவக்கம் முதலே, சி.பி.ஐ., தரப்பு மிக பலவீனமாக இருந்தது. 

அதனால் தான், சந்தேகத்தின் பலனை கூட, தனக்கு சாதகமாக கேட்காமல், தான் குற்றமற்றவன் என்ற ஒரே நிலைப்பாட்டில், உறுதியாக நின்று விடுதலையாகி உள்ளார், ராஜா.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜாமினில் வெளியாகி, விசாரணை துவங்கிய பின்பே, தொலை தொடர்புத் துறை, பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம், 'டிராய்' என, பல்வேறு இடங்களில் இருந்த ஆவணங்களை, கோர்ட் மூலமாகவே வரவழைக்க செய்தார்.


 எந்தெந்த குற்றங்கள் எல்லாம், ராஜா செய்ததாக கூறப்பட்டதோ, அவற்றுக்கு ஒப்புதல் அளித்து, கையெழுத்தும் போட்டிருந்த முக்கிய அதிகாரிகள் தான், சி.பி.ஐ.,யின் முக்கிய சாட்சிகள்.

இவர்களைகுறுக்கு விசாரணை செய்வது, ராஜாவுக்கு மிக எளிதாகவும் போய்விட்டது. தவிர, சி.பி.ஐ., சுமத்தும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், ஆவணங்களை அள்ளிப் போட்டபடியே இருந்தார். 

இதனால், பல நேரங்களில், நீதிபதி, சைனியே, 'இதில் வழக்கு எங்கே உள்ளது?' என, சி.பி.ஐ., தரப்பை கடிந்து கொள்ள நேர்ந்தது.'ஸ்பெக்ட்ரம் விலை வேறு; ஸ்பெக்ட்ரத்தை வாங்குவதற்கான நுழைவு கட்டணம் வேறு. 

'நுழைவு கட்டணத்தை உயர்த்தாமல் போனதற்கு, அரசின் கொள்கை முடிவு காரணமே தவிர; நானல்ல' என, பார்லிமென்ட், ஜே.பி.சி., ஆகிய இடங்களில் வாதிட்டு தோற்றாலும், ராஜா நம்பிக்கை இழக்கவில்லை; காரணம், கோர்ட்டில், ஆவணங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.

அது தெரிந்த ராஜா, மிகத் தெளிவாக,ஆவணங்கள் மூலமே கோர்ட்டில் பேசினார். 

இந்த வழக்கின் நெளிவு சுளிவுகளை அறிந்தவன் என்பதால், தன்னால் மட்டுமே, சி.பி.ஐ.,யை கையாள முடியும் என்பதை புரிந்து வைத்திருந்து, தனக்காக ஆஜரான, பிற வழக்கறிஞர்களை தவிர்த்து, பல நேரங்களில், தானே முன்வந்து, அசாத்திய உறுதியை விசாரணையின் போது சுட்டிக்காட்டினார்.

பெரும்பாலான வேளைகளில், கூண்டில் ஏற தயங்காமலும், தானே வாதிடவும் செய்தார். சி.பி.ஐ., மூத்த வழக்கறிஞர், குரோவருக்கும், ராஜாவுக்கும், பல நேரங்களில், நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டு, நீதிபதி தலையிட்டு, சமாதானம் செய்ய வேண்டி யிருந்தது.'

ஆ.ராஜாவோ அவரது உறவினர்களோ  சொத்து குவித்தது சிபிஐ தரப்பில் நிரூபிக்க முடியவில்லை.அவர்கள் வீட்டையும்,சந்தேகத்துக்கு இடமான இடங்களை அலசியும் எந்த முறைகேடான சொத்துக்கள் ஆ.ராஜா,அவரது உறவினர்கள்,நண்பர்கள் தொடர்பில் உள்ளவர்கள் யார் பெயரிலும் இல்லை.
இத்தனை ஆண்டுகள் அவரை கவனித்தும் எந்த ஊழல் தொடர்பான ஆதாரங்கள் சிபிஐக்கு கிட்டவில்லை.
தீர்ப்பின்முக்கிய அம்சங்கள்



* சி.ஏ.ஜி. கணிப்பும்,அவர்கள் கூறிய  இழப்பும் அவர்கள் கணிப்பீடுதான்.ஏலம்  அவர்கள் கூறிய முறையில் அமைந்திருந்தால் அவ்வளவு லாபம் வந்திருக்கலாம்.அப்படி விடாததால் அரசுக்கு இழப்பு என்றுதான் கூறியுள்ளது.
ஊழல் என்று அதை அரசியல், ஊடகங்கள் என, பொது தளங்களில் வைக்கப்படும் கற்பனை விமர்சன கருத்துக்களின் அடிப்படையிலேயே, சி.பி.ஐ.,யின் வாதங்கள் இருந்தன.


* கோர்ட்டிற்கு தெரிந்ததெல்லாம், சட்டமும், நீதியும் ஆவணங்களும், ஆதாரங்களும் தான்; ஆனால் அதை, சி.பி.ஐ., தரவே இல்லை


* பிரதான வழக்கான, '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கிலேயே விடுதலை என்ற நிலையில், கலைஞர், 'டிவி'க்கு நடந்த பணப் பரிவர்த்தனை, சட்ட விரோதமானது தானா என்ற கேள்வி, எழவே வாய்ப்பு இல்லை


* அமலாக்கத் துறையால் தொடரப்பட்ட வழக்கில், கனிமொழி உட்பட அனைவருமே விடுதலை செய்யப்படுகின்றனர்* தான் கூறிய ஒவ்வொரு குற்றச்சாட்டு களையும், போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்க, சி.பி.ஐ., தரப்பு தவறி விட்டது


* தவறான புரிந்துணர்வின் அடிப்படையில் தான், குற்றப் பத்திரிகையே தயார் செய்யப்பட்டு உள்ளது. குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை


* குற்றப் பத்திரிகையிலுள்ள தகவல்கள், அரசு ஆவணங்களில் உள்ள விபரங்களுக்கு, முற்றிலும் முரணாக இருந்தன


* ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த அரசின் கொள்கைகளில், போதிய தெளிவே இல்லாமல் போனது தான், இவ்ஸ்ரீவழக்கில் ஒட்டுமொத்த குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
* கட்டண உயர்வு குறித்து, நிதித் துறை செயலரும், டிராயும் பரிந்துரை செய்தனர் என, குற்றப் பத்திரிகையில் கூறியிருப்பது பொய்யானது


* அரசு துறைகளின் தரப்பில், போதிய ஒருங்கிணைப்பு இல்லை. வெவ்வேறு திசைகளில் பயணித்தனர். அரசு கோப்புகள் முறையாக பராமரிக்கப்படவில்லை.

* தொலை தொடர்பு அமைச்சகத்திலிருந்து, சாட்சி சொல்ல வந்த அனைவருமே, மிகுந்த தயக்கத்துடன் முரண்பட்டபடியே இருந்தனர்


* கோர்ட் முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இருந்த தகவல்களுக்கு முரணாகவே, சி.பி.ஐ.,யின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இருந்தன


* அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட அனைத்து சொத்துகளையும் விடுவிக்க வேண்டும். இது தொடர்பாக கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களையும், சி.பி.ஐ., திருப்பி ஒப்படைக்க வேண்டும்


* வாய்மொழியாக கூறப்பட்ட சாட்சிகள் அனைவருமே, கூண்டிலேறிசாட்சி சொல்லும் போது, முரண்பாடாக மாற்றி பேசினர்.

* அரசு அதிகாரிகளின் ஆவணங்கள் அனைத்துமே, விருப்பத்திற்கு ஏற்றபடி குறிப்பெழுதி இருப்பதால், அதன் அர்த்தம் என்ன என்பதை, அவர்களாலேயே விளக்க முடியவில்லை


* சி.பி.ஐ., தயாரித்தகுற்றப் பத்திரிகை, வேண்டுமென்றே குற்றம் சுமத்த வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் தயார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது


* அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் பொருள் கொள்ளும் வகையில், அரசு ஆவணங்கள் உள்ளன. அதிகாரிகளுக்கே அர்த்தம் தெரியவில்லை


* இந்த வழக்கிற்காக, காலை, 9:00 மணிக்கே கோர்ட்டுக்கு வந்து விடுவேன். மாலை, 5:00 மணி வரை இருப்பேன். கோடை விடுமுறையின் போது கூட, கோர்ட்டுக்கு வந்தேன்.


* சரியான, வலுவான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் வருவர் என, இந்த வழக்கிற்காக, நானும் ஏழு ஆண்டுகளாக காத்திருந்தேன்; கடைசி வரை அது நடக்கவில்லை


* ராஜா, இவ்வழக்கில் சதி செய்தார்; ஊழல் செய்தார்; குற்றச் செயலில் ஈடுபட்டார் என்பதற்கான எந்தஆதாரமும் இல்லை

* இந்த வழக்கில், 'பிரதான சதிகாரர் ராஜா' என்ற குற்றச்சாட்டு, முற்றிலுமாக நிராகரிக்கப்படுகிறது

* வழக்கின் துவக்கத்தில் உற்சாகம் காட்டிய, சி.பி.ஐ., போகப் போக, எச்சரிக்கை உணர்வு தலைதுாக்கி, எதை நிரூபிக்கப் போகிறோம் என்பதை தெரியாமல் தடுமாறியது.


* வாதங்கள் அனைத்துமே சீர்குலைந்து, திக்கு திசை தெரியாமல் தவிக்கும் நிலைக்கு, சி.பி.ஐ., ஆளானது இறுதியாக, தாங்கள் முன்வைத்த ஊழல் கதையை  நிரூபிக்க முடியாமல், பரிதாபகரமான வகையில், சி.பி.ஐ., தோல்வி அடைந்துள்ளது.
சி.ஏ.ஜி,அன்றைய தலைவர் வினோத் ராய் கண்ட ஊழல் கனவு அரசுக்கு வெட்டி செலவைதான் உண்டாக்கியுள்ளது.
ஆ.ராசா,கனிமொழி ஆகியோர் சிறை அடை வதை படலம்,திமுக மக்களவைத்தேர்தலில் படு தோல்வியும்தான் பலன்.
திமுகவை அடக்க காங்கிரஸ் எண்ணி எடுத்த ஆயுதம் அதையே ஆட்சியை விட்டு அகற்றியது. பின்னர் வந்த பாஜகவும் அதையே ஆயுதமாக எடுத்தது.
ஆனால் அந்த ஆயுதம் ஆறு ஆண்டுகள் துருவேறி பொடியாக உதிர்ந்து விட்டது.
===================================================================================================
பரபரப்பான சைனி 
ஹரியானாவில், நடுத்தர குடும்பத்தில் பிறந்த சைனி, 1981ல், டில்லி போலீசில், எஸ்.ஐ.,யாக பணியாற்றினார். ஆறு ஆண்டுகள் பணிக்கு பின், நீதித் துறை மாஜிஸ்திரேட் பதவிக்கான தேர்வை எழுதினார். அப்போது காவல்துறை யில் இருந்து தேர்வு எழுதியவர்களில் தேர்ச்சி பெற்ற ஒரே ஒருவர் சைனி மட்டும்தான் .
'2ஜி' வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க உத்தரவிட்ட போது, அதன் நீதிபதியாக, உச்ச நீதிமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், சைனி. அதற்கு முன், பல்வேறு முக்கிய வழக்குகளில், அவர் அளித்த அதிரடி தீர்ப்புகள், அவரது நேர்மைக்கு சான்றாக அமைந்தன.'2ஜி' வழக்கின் விசாரணையிலும், அவர் காட்டிய கண்டிப்பு, எழுப்பிய கேள்விகள், பலருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தின. 

வயது மற்றும் மருத்துவக் காரணங்களை காட்டி விலக்கு கோரி, தி.மு.க., தலைவர், கருணாநிதி யின் மனைவி, தயாளு அம்மாள் மனு செய்த போது, அதை ஏற்க மறுத்து, ஆஜராக உத்தர விட்டார். 

இந்த வழக்கில், ஐந்து மாதங்கள் சிறையில் இருந்த, தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மகள், கனிமொழிக்கு, பெண் என்ற அடிப்படை யில் ஜாமின் கேட்ட போது, கண்டிப்பாக கிடைத்துவிடும் என, பலரும் நினைத்தனர். 

ஆனால், அரசியல் அதிகாரமுள்ளவர் என்பதால், சாட்சிகளை கலைத்து விடுவார் எனக் கூறி, ஜாமின் வழங்க, சைனி மறுத்தார்.அதிக அதிகாரம் உள்ளவர்களையும் கேள்வி எழுப்ப, அவர் தவறியதில்லை. 

2013ல், நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி,பிரபல தொழிலதிபர்கள், சுனில் மிட்டல்,அசிம் கோஷ், ரவி ரூயியா ஆகியோருக்கு, 'சம்மன்' அனுப்பினார்.

======================================================================================
ன்று ,
டிசம்பர்-22.


  • இந்திய கணித தினம்
  • இந்தோனேஷிய அன்னையர் தினம்
  • சீக்கிய மத குருவான குரு கோவிந்த் சிங் பிறந்த தினம்(1666)
  • இந்திய கணிதவியலாளர் ராமானுஜர் பிறந்த தினம்(1887)
=======================================================================================
சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள்:1. 
1.ஆ.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர், தி.மு.க.,
2. கனிமொழி, ராஜ்யசபா, எம்.பி., - தி.மு.க.,
3. ஷாகித் பால்வா, ஸ்வான், டிபி ரியாலிட்டி புரோமாட்டர்
4. சந்தோலியா, ராஜாவின் முன்னாள் செயலர்
5. சித்தார்த் பெகுரா, தொலை தொடர்புத் துறை முன்னாள் செயலர்
6. சஞ்சய் சந்ரா, யூனிடெக் ஒயர்லெஸ் நிர்வாக இயக்குனர்
7. வினோத் கோயங்கா, ஸ்வான் ரியாலிட்டி நிர்வாக இயக்குனர்
8. சரத் குமார், கலைஞர், 'டிவி' முன்னாள் இயக்குனர்
9. கரீம் மொரானி, பாலிவுட் தயாரிப்பாளர்
10. கவுதம் தோஷி, ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறுவன நிர்வாகி
11. ஹரி நாயர், ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறுவன நிர்வாகி
12. சுரேந்திர பைபரா, ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறுவன நிர்வாகி
13. ஆசிப் பால்வா, இயக்குனர், குசோகான் புரூட்ஸ்
14. ராஜிவ் அகர்வால், இயக்குனர் குசேகான் புரூட்ஸ் & வெஜிடபுள்ஸ்நிறுவனங்கள்
1. ரிலையன்ஸ் டெலிகாம் லிட்.,
2. ஸ்வான் டெலிகாம்
3. யுனிடெக் ஒயர்லெஸ்

“தீர்ப்பு வந்த பின்னர் கனிமொழி, ராசா ஆகியோர் இதோ இந்த அறையில் தான் தங்க வைக்கப்படுவார்கள். 
கொண்டு செல்ல காவலுக்கு துணை நிலை ராணுவம் வந்துள்ளது. 
பின்னர் அவர்கள் அந்த போலீஸ் வாகனங்களில் தான் சிறைக்கு செல்வார்கள்! 
ஒருவேளை விடுவிக்கப்பட்டால் வெளியே வருவார்கள்” 
-தீர்ப்பு கூறுவதற்கு  இரண்டு நிமிடம் முன்பாக தந்தி தொலைக்காட்சி டெல்லியில் இருந்து நேரலையில் ....


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?