இடுகைகள்

மார்ச், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யானைப் பசிக்கு சோளப்பொறி

படம்
கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மோதி அரசின் நிதி ஒதுக்கீடு   - ஓர் அலசல்  ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 26ஆம் தேதியன்று மத்திய அரசு ஒரு நிதி தொகுப்பை அறிவித்தது. இது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் 21 நாட்களில் மோசமடைந்துவரும் பொருளாதார நிலைமையை மேம்படுத்த உதவும். எது எவ்வாறாயினும், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இந்த நிதி உதவிகள், தற்போதைய சூழ்நிலைக்கு எதிர்பார்த்ததை விட மிக மிகக் குறைவு என்பதுடன், போதுமானதாகவும் இல்லை. வரவிருக்கும் மாதங்களில் நிதி உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்கு நிச்சயமாக இது போதுமானதாக இருக்காது. இந்த நிதித் தொகுப்பு ஒதுக்கீடு செய்வதில் அரசு கஞ்சத்தனம் காட்டியுள்ளது. இந்த நேரத்தில் அரசாங்கத்தின் உதவி யாருக்கு தேவை என்பது முக்கியமானது. நாட்டின் அமைப்புசாரா துறையில் 90 சதவீத இந்திய மக்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு சட்டரீதியான தீர்வு எதுவும் இல்லை. அவர்களின் வாழ்வாதாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு எந்தவொரு சட்ட பாதுகாப்பும் கிடையாது என்பதும், கோடிக்கணக்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் அமைப்புசாராத் துறையில் பணியாற்றுவதும் க

கொடுப்பது கார்பரேட்களுக்கு,

படம்
கேட்பது மக்களிடம்? இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன்கி பாத்' என வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். ஒவ்வொரு முறை உரையாற்றும்போதும் நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறுவார். அறிவுரைகள் எப்போதும் நாட்டு மக்களுக்கு மட்டுமே. மாட்டுக்கறி பிரச்னை முதல் குடியுரிமை சட்டம் தொடர்பான பிரச்னை வரை அனைத்திலும் அவரது வலதுசாரி கருத்துகளை மட்டும் சொல்லிவிட்டுச் செல்வார். அந்தவகையில் இந்த முறை, கொரோனா பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் வேளையில் மூன்றாவது முறையாக கொரோனா பற்றி மக்களிடம் உரையாற்றி அறிவுரை வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, நாட்டுக்கு மக்களே நிதி உதவு அளியுங்கள் என்றும், நிதியை அரசு பகிர்ந்து கொடுக்கும் என கூறியுள்ளார். கொரோனா பேரிடரால் அவதிப்படும் மக்களிடம் பணம் பெற்று அவர்களுக்கு கொடுக்கும் இந்த திட்டத்தை பலரும் ட்விட்டரில் வியந்து பாராட்டு வருகின்றனர். நேற்றைய தினம் மக்களிடையே பேசிய மோடி, உங்களுக்கு சிரமம் அளிக்கும் இந்த முடிவுக்காக மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் கூறினார். மேலும் இந்த கடினமான முயற்சி, போராட்டம் எல்லாம் நாட்டு மக

குழப்பும் அரசு ஆணைகள்.

படம்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை 984 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் போக்குவரத்து வசதியின்றி டெல்லியில் சிக்கித் தவித்த அண்டை மாநில மக்கள் ஆயிரக்கணக்கானோர் நடந்தே சொந்த ஊருக்கு செல்கின்றனர். இந்நிலையில், ஊரடங்கால் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து முனையத்தில் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தத்தம் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து நடந்து வந்து ஆனந