இடுகைகள்

அக்டோபர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

110கோடிகள் வழியில்லை.1000 கோடிகள் ?

படம்
அடங்காத ஆசை மக்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்காக வாழ்பவர்களுக்கும் இருக்கிறது.அதை அடக்க முடிவதில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில்  சிறை சென்று வெளியெ குமாரசாமியின் தப்புக்கனக்கில் வெளியெ வந்தாலும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உயிர் பெற்றுள்ளது. அதில் இருந்து இன்னமும் முழுமையாக மீளவில்லை . ஆனால் இந்த ஆட்சிகாலத்துக்காண  குறீயிட்டை ஜெயலலிதா உடன் பிறவா சகோதரி ஆரம்பித்து விட்டாரா.அதில் ஒரு சிறு துளி வெளியே கசிந்து விட்டது. அந்த துளியின் மதிப்பே 1000 கோடிகள் என்பதுதான் அதிர்ச்சி தரும் உண்மை. 110 கோடிகள் அபராதம் கட்ட பணம் இல்லாதவர்கள் 1000 கோடிகளில் சொத்து வாங்கி குவித்தது எப்படி? இத்தனை நெருக்கடியான காலத்திலும், தனது கொள்ளையை ஜெயலலிதா நிறுத்தவேயில்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் உண்மை. ஜெயலலிதா தனது உடன்பிறவா சகோதரி, சசிகலாவின் பெயரில், வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக விலைக்கு வாங்கி விட்டார் .  தங்கள் சினிமா தொழிலை விரிவடைய வைக்கும் வகையில், தற்போது மேலும் சில தியேட்டர்களை வாங்கும் முயற்சியில் மன்னார்குடி கும்பல் இறங்கியிருக்கி

பேஸ்புக் திட்டம்

படம்
இந்தியாவில்  வேட்டை, ஆரம்பம். வர்த்தகத்தில் இந்தியா எனும் மிகப் பெரிய சந்தையை கைப்பற்றும் நோக்கத்துடன் பன்னாட்டு பகாசுர கார்ப்பரேட் கம்பெனிகள் இடைவிடாமல் முற்றுகையிட்டு வரும் நிலையில், இணையதள வர்த்தகத் திலும் மிகப் பெரும் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் `முகநூல்’ என தமிழகத் தில் கூறப்படும் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் இந்தியா வந் துள்ளார். புதுதில்லியில் ஐஐடி மாண வர்களிடையே உரையாற்றிய அவர், ‘இணையச் சமநிலை’யை தான் ஆதரிப்பதாக கூறிக் கொண்டார்;  அதே நேரத் தில், இலவச இணையச் சேவைபெறுவதற்கான மக்களின்உரிமை குறித்த கோட்பாடு களுக்கு எதிராகவே அவரதுமுழு உரையும் அமைந்திருந்தது. புதனன்று தில்லிக்கு வந்த மார்க் ஜூக்கர்பெர்க், ஐஐடி வளாகத்தில் சுமார் 1000 மாண வர்கள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசி னார்.  அதிகாரமட்டத்தை தாண்டி மக்களுடனான சந்திப்பு என்ற முறையில், இந்தியாவில் மார்க் பங்கேற்றுள்ள முதல் நிகழ்ச்சி இது.அவர் பேசுகையில், தனதுபேஸ்புக் நிறுவனம் இணையச்சமநிலை என்ற கோட்பாட் டிற்கு இசைவு தெரிவிப்பதாக கூறினார்.  ஆனால் அத

ஆன்லைனில் ஆபத்து[ மருந்து ] விற்பனை

படம்
  மருந்துகளையும் ஆன்லைனில் விற்பதற்கு அனுமதியளிக்க முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு. விரைவில் ஆன்லைன் மருந்துக்கடைகள் முளைக்க இருக்கின்றன. ஆனால், ‘‘இது தேசத்தை ஆபத்தில் தள்ளிவிடும். மக்களின் உயிரோடு விளையாடும் முயற்சி இது’’ என்று எதிர்ப்பு எழுந்திருக்கிறது. ‘‘இந்தியாவில் 7.25 லட்சம் மருந்துக்கடைகள் இருக்கின்றன. 75 ஆயிரம் மொத்த விற்பனையாளர்கள் இருக்கிறார்கள்.  ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் நடக்கிறது. இந்த வணிகத்தை மொத்தமாக பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதற்காகவே  ஆன்லைன் பார்மசிகளை அனுமதிக்கப் பார்க்கிறது மத்திய அரசு...’’ என்பது மருந்து வணிகர் சங்கங்களின் குற்றச்சாட்டு.  அரசின் முடிவைக் கண்டித்து கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் எனக் களமிறங்கியிருக்கின்றன அந்த அமைப்புகள். ‘‘எலெக்ட்ரானிக் பொருட்கள், ஆடைகளை ஆன்லைனில் விற்பதற்கும், மருந்துப் பொருட்களை விற்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.  மருந்து வணிகம் மிகவும் கட்டுக்கோப்பானது. விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மாத்திரைக்கும் ஒரு நீண்ட வரலாறை மருந்தகங்கள் பராமரிக்கின்றன. குறிப்பிட்ட நாளில் விற்ற ஒரு மாத்திரையில் ப