110கோடிகள் வழியில்லை.1000 கோடிகள் ?




அடங்காத ஆசை மக்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்காக வாழ்பவர்களுக்கும் இருக்கிறது.அதை அடக்க முடிவதில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில்  சிறை சென்று வெளியெ குமாரசாமியின் தப்புக்கனக்கில் வெளியெ வந்தாலும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உயிர் பெற்றுள்ளது.
அதில் இருந்து இன்னமும் முழுமையாக மீளவில்லை .
ஆனால் இந்த ஆட்சிகாலத்துக்காண  குறீயிட்டை ஜெயலலிதா உடன் பிறவா சகோதரி ஆரம்பித்து விட்டாரா.அதில் ஒரு சிறு துளி வெளியே கசிந்து விட்டது.
அந்த துளியின் மதிப்பே 1000 கோடிகள் என்பதுதான் அதிர்ச்சி தரும் உண்மை.
110கோடிகள் அபராதம் கட்ட பணம் இல்லாதவர்கள் 1000 கோடிகளில் சொத்து வாங்கி குவித்தது எப்படி?
இத்தனை நெருக்கடியான காலத்திலும், தனது கொள்ளையை ஜெயலலிதா நிறுத்தவேயில்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் உண்மை. ஜெயலலிதா தனது உடன்பிறவா சகோதரி, சசிகலாவின் பெயரில், வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக விலைக்கு வாங்கி விட்டார் . 
தங்கள் சினிமா தொழிலை விரிவடைய வைக்கும் வகையில், தற்போது மேலும் சில தியேட்டர்களை வாங்கும் முயற்சியில் மன்னார்குடி கும்பல் இறங்கியிருக்கிறது என்பது அதிர்ச்சியான செய்தி. 
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு, பல பினாமி நிறுவனங்கள் இருந்தன என்பது, நீதிபதி குன்ஹா தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள, 'ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம், அத்தகைய பினாமி நிறுவனங்களில் ஒன்று. இதன் பெயரை, 'ஜாஸ்' சினிமா நிறுவனம் என மாற்றி, சத்யம் சினிமா நிறுவனத்திற்குச் சொந்தமான, 600 கோடி முதல், 1,000 கோடி ரூபாய் மதிப்புடைய, 11 திரையரங்குகளை, ஜெயலலிதாவுடனேயே இருந்து வரும் சசிகலாவும், இளவரசியும், அவரது உறவினர் பெயரில் வாங்கியிருக்கிற செய்தி, இன்று வீதிக்கு வந்துவிட்டது.

கடந்த டிசம்பர் மாதத்தில் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது. அது இந்தியாவின் மிகப்பெரிய மல்டிப்ளெக்ஸ்களை வைத்திருக்கும் பிவிஆர் நிறுவனம், தமிழகத்தின் சத்யம் குழுமத்தினரின் திரையரங்குகள் அனைத்தையும் வாங்க உள்ளது என்பதே அந்த செய்தி. 800 முதல் 1000 கோடி வரை இந்த பரிவர்த்தனை இருக்கும் என்று அந்த செய்தி மேலும் கூறியது. சத்யம் குழுமத்தினருக்கு சொந்தமாக தமிழகத்தில் 56 திரைகள் உள்ளன. இந்த திரையரங்கங்கள் 83 க்ரவுண்ட் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனைக்கான முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் டிசம்பர் மாதமே தொடங்கப்பட்டன. இந்த பரிமாற்றத்துக்கான மதிப்பீடுகளை கேபிஎம்ஜி (KPMG) என்ற நிறுவனம் செய்து வருகிறது. 
இந்த நிலையில் இந்த பரிவர்த்தனை வெற்றி பெறக்கூடாது என்பதில் மன்னார்குடி மாபியா முயற்று வருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வந்துள்ளன. 

சத்யம் நிறுவனத்தினர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். பெரும் நிலச் சுவான்தார்கள். இத்தனை பெரிய செல்வந்தர்களையே, நில அபகரிப்புப் புகாரில் கைது செய்து, வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் இருந்த தியேட்டர்களை மன்னார்குடி கும்பல் எப்படி மிரட்டி வாங்கியுள்ளது 
பாருங்கள்..... 

. தற்போது சத்யம் குழுவினர் விற்பனை செய்வதற்கான காரணம், தொடர்ந்து மன்னார்குடி கும்பல் அளிக்கும் தொந்தரவுகளை சமாளிக்க முடியாததே. 

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆம்ப்பா ஸ்கைவாக் என் மிகப் பெரிய மாலை பார்த்திராத சென்னைவாசிகள் இருக்கவே முடியாது. ஆறு மாடிகளோடு, 3 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடியில் இந்த மால் கட்டப்பட்டுள்ளது. செப்டம்பர் 2009ல் இந்த மால் திறக்கப்பட்டது. இந்த மாலில் மொத்தம் ஏழு தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களை இந்தியாவின் மிகப் பெரும் திரையரங்க நிறுவனமான பிவிஆர் இத்திரையரங்கங்களை லீஸ் அடிப்படையில் நடத்தி வருகிறது. 

2009 செப்டம்பரில் இந்த மால் தொடங்கப்பட்டபோது, சிஎம்டிஏ, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தடையில்லா சான்று பெற்ற பிறகே, இந்த மால் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் 2012ம் ஆண்டில், நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் சந்திப்பில் 117 கோடி ரூபாய் செலவில் ஒரு பாலம் அமைக்க அரசு முடிவெடுத்தது. இதற்கான நில ஆர்ஜித ஆணை, நவம்பர் 2012ல் வெளியிடப்படுகிறது. ஆம்பா ஸ்கை வாக்குக்கு சொந்தமான சில நிலங்களும் இந்த பாலத்துக்காக கையகப்படுத்தப்படுகிறது. நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு பாலத்துக்கான வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

இந்த நேரத்தில், ஆம்பா ஸ்கைவாக் உரிமையாளர் வருடந்தோறும் வாங்க வேண்டிய தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்ற கேட்டு விண்ணப்பிக்கறார். 20 மார்ச் 2014 அன்று விண்ணப்பிக்கிறார். தீயணைப்புத் துறையின் இயக்குநர் 2 மே 2014 அன்று ஒரு பதில் எழுதுகிறார். அந்த பதிலில், “22 ஏப்ரல் 2014 அன்று, தீயணைப்புத் துறையின் குழு, ஸ்கை வாக் கட்டிடத்தை ஆய்வு செய்தது. அந்த ஆய்வின்போது, வடக்குப் பக்கத்தில் 2.85 மீட்டர் குறைகிறது, வடமேற்குப் பகுதியில் 4.5 மீட்டர் குறைகிறது, தெற்கு பகுதியில் முரண்பாடுகள் உள்ளது மற்றும் கிழக்குப் பகுதியில் குறைகள் உள்ளன, இதன் காரணமாக, தீவிபத்து ஏற்படும் நேரத்தில் உயரமான ஏணிகளை உடைய தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்த முடியாது என்ற காரணங்களை கூறி, தீயணைப்புத் துறை தடையில்லா சான்று மறுக்கப்படுகிறது. 

நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள். அந்த வீட்டின் முன்பாக 100 மீட்டர் இடம் விட வேண்டும் என்று சிஎம்டிஏ விதி என்று வைத்துக் கொள்வோம். அதன்படி, 100 மீட்டர் இடம் விட்டு, கட்டிடத்தை கட்டி முடிக்கிறீர்கள். மாநகராட்சியோ, நெடுஞ்சாலைத் துறையோ, பாலம் கட்ட அல்லது சாலை விரிவாக்கத்துக்காக உங்கள் இடத்தில் இருந்து 50 மீட்டரை நில ஆர்ஜிதம் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சட்டபூர்வமாக ஒதுக்க வேண்டிய 100 மீட்டர் இடத்தை நீங்கள் ஒதுக்கத் தவறி விட்டீர்கள், ஆகையால் உங்கள் கட்டிடத்தை இடிக்கிறோம் என்று கூறினால் நீங்கள் என்ன செய்ய முடியும் ? 100 மீட்டர் இடத்தை நீங்களா ஒதுக்க மறுத்தீர்கள் ? 
இதுதான் ஆம்பா ஸ்கை வாக் விவகாரத்தில் நடந்துள்ளது. இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, ஸ்கைவாக் நிர்வாகத்தினர், நுழைவு வாயிலை விரிவாக்கம் செய்து, தீயணைப்பு வாகனங்கள் நுழையும் வகையில் கட்டுமானமும் செய்து விட்டனர். ஆனால், இது வரை, தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று வழங்கப்படவில்லை. இது குறித்து ஆய்வு செய்த சிஎம்டிஏ, 24 டிசம்பர் 2014 அன்று ஒரு கடிதம் எழுதுகிறது. அந்த கடிதத்தில், நெடுஞ்சாலைத் துறை ஆர்ஜிதம் செய்தது போக, தற்போது எஞ்சியுள்ள இடத்தையே போதுமான இடமாக கருதிக் கொள்ளலாம் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிஎம்டிஏவின் இந்தக் கடிதத்துக்குப் பிறகும், ஏறக்குறைய ஒரு வருடமாக, தீயணைப்புத் துறை தடையல்லா சான்று வழங்காமல், இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. 

பிறகு யாருடைய உத்தரவின்பேரில், தடையில்லா சான்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

17 ஜுலை 2014 அன்று, ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தின் சிறப்பு கூட்டம், மக்கள் துணை முதல்வர் சசிகலா தலைமையில் நடந்தது. அந்த கூட்டம் நடந்த இடம் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் அலுவலகம் ப்ளாட் எண் 12, நாலாவது தளம், க்யான் அபார்ட்மென்ட்ஸ், பழைய எண் 19 மற்றும் 20/12, புதிய எண் 38/12, வெங்கட்ராமன் தெரு, தியாகராய நகர், சென்னை 17ல், இந்த கூட்டம் நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த முகவரியில், இந்த ஹாட் வீல்ஸ் மற்றும் ஜாஸ் சினிமாஸ் தவிர, குறைந்தது 15 நிறுவனங்களுக்கு மேல் செயல்பட்டு வருவதாக, பதிவாளர் அலுவலக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 15 நிறுவனங்கள் செயல்படும் அந்த இடம் எப்படித்தான் இருக்கிறது என்ற நேரில் சென்று பார்த்தால், அந்த இடம், சசிகலாவின் கணவர் நடராஜனின் தங்கை மகன் குலோத்துங்கனின் வீடு. 

அங்கே கம்பெனியும் நடக்கவில்லை, ஒரு புடலங்காயும் நடக்கவில்லை. இந்த அனைத்து நிறுவனங்களும் ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்கள். வெறும் காகிதத்தில் மட்டுமே இயங்கும் நிறுவனங்கள். ஜெயலலிதா சட்டவிரேதமாக வசூல் செய்யும் லஞ்சப்பணத்தை வெள்ளையாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட நிறுவனங்களே இவை. 

தற்போது ஸ்கைவாக் நிறவனத்துக்கான அனுமதியை எதற்காக மறுக்க வேண்டும் ? 

பிவிஆர் குழுமம் சத்யம் திரையரங்கங்களை வாங்கினால், பீனிக்ஸ் மாலில் உள்ள 11 திரையரங்குகளையும் சேர்த்தே வாங்கும். அந்த 11 திரையரங்குகளும், சசிகலாவின் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமானவை. அந்த திரையரங்குகளை சத்யம் சினிமாஸ் லீஸ் அடிப்படையில் நடத்தி வருகின்றனர். அதே போல, ஆம்பா ஸ்கைவாக்கில் உள்ள 7 திரையரங்குகளையும் பிவிஆர் சினிமாஸ் லீஸ் அடிப்படையில் நடத்தி வருகின்றனர். பிவிஆர் தற்போது லீஸ் முறையில் நடத்தி வரும் ஆம்பா ஸ்கைவாக் திரையரங்கங்களின் லீஸ் உரிமையை ரத்து செய்ய வைத்து, அதை ஜாஸ் சினிமாஸ் பெற்றுக் கொண்டால், சத்யம் திரையரங்கங்களை வாங்கும் திட்டம் நிறைவேறாது அல்லவா ? முதலுக்கே மோசம் என்று பிவிஆர் துண்டை காணோம், துணியைக் காணோம் என்று ஓடுமா இல்லையா ? இதுதான் மக்கள் துணை முதல்வர் சசிகலாவின் திட்டம்.. 

ஊழல் வழக்கில் தண்டனை என்ற கத்தி தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கையிலேயே இத்தனை அயோக்கியத்தனங்களை அரங்கேற்றுகிறார்கள் என்றால், அந்த கத்தியும் இல்லாமல் போனால், தமிழகத்தின் நிலை என்ன என்பதை சற்றே யோசியுங்கள்..........



வருமான வரித்துறைக்கு 110 கோடி யை என்னால் கட்ட இயலாது என்றுறு சொல்லிவிட்டு 1000 கோடியில் திரையரங்கு கள் வாங்கியுள்ளனர். இதை வருமான வரித்துறை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?
30-10-2015 தி இந்து ஆங்கில நாளிதழில் அதன் முதல் பக்கத்திலும், 7ஆம் பக்கத்திலும் அதிர்ச்சி தரத்தக்க செய்தி ஒன்று ஆதாரங்களோடு வெளி வந்துள்ளது. 
கடந்த சில மாதங்களாக இந்தச் செய்தி வார ஏடுகளில் வெளி வந்து பொது மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது என்ற போதிலும், அந்ந நாளிதழ் ஆதாரங்களோடு தொகுத்து இந்தச் செய்தியை புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளது.
"தமிழ்நாட்டில் திரையரங்குகள் நடத்துவதில் முன்னணியிலே உள்ள நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி.ஐ. சினிமா நிறுவனம், வேளச்சேரியில் உள்ள "பீனிக்ஸ்" மார்க்கெட் சிட்டியில் உள்ள தங்களுடைய பதினோறு திரையரங்குகளையும் ஜாஸ் சினிமா நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்கள்" என்பது தான் முக்கிய செய்தியாகும்.
அந்தச் செய்தி பற்றி "இந்து" மேலும் அதாவது மத்திய அரசின் தனியார் நிறுவனங்கள் தொடர்பான அமைச்சகத்தின் வலைத்தளத்திலிருந்து அந்த இதழுக்குக் கிடைத்த தகவலின்படி, முன்னர் "ஹாட்வீல்ஸ் இஞ்சினீயரிங் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் தான் தற்போது "ஜாஸ் சினிமா நிறுவனம்" என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது. ஹாட்வீல்ஸ் இஞ்கினீயரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2005ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். 14-7-2014 அன்று வி.கே. சசிகலா மற்றும் ஜெ. இளவரசி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிறுவனத்தின் சிறப்புக் கூட்டத்தில் தான் பெயர் மாற்றம் பற்றி முடிவெடுக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 
பிறகு நடைபெற்ற கூட்டத்திற்கு, ஜெ. இளவரசி தலைமை வகித்தார். கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானங்களை சசிகலா வழிமொழிந்தார்.
மேலும் பதினோறு திரையரங்குகள் கொண்ட "லக்ஸ் சினிமா" என்பது உரிய சான்றிதழ்களைப் பெறுவதில் ஏற்படுத்தப்பட்ட காலதாமதங்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் மாதம் திரைப்படங்களைப் பொது மக்களுக்குத் திரையிடத் தொடங்கியது என்றும், கார்த்திகேயன் கலியபெருமாள் மற்றும் சிவக்குமார் கூத்தப்பார் சத்தியமூர்த்தி ஆகியோர் "ஜாஸ்" சினிமா நிறுவனத்தின் இயக்குநர்கள் என்றும், அவர்கள் "மிடாஸ்" நிறுவனத்தின் இயக்குனர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் ஆவணங்களிலிருந்து தெரிய வருவதாக அந்த நாளேடு விரிவாக எழுதியுள்ளது. 
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் சென்னையிலுள்ள பி.வி.ஆர். திரைப்பட நிறுவனம், இந்த "லூக்ஸ்" திரைப்பட அரங்குகளை 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் வரை விலைக்கு வாங்க பேசப்பட்டது
இதிலிருந்து சசிகலா, இளவரசி, கார்த்திகேயன் கலியபெருமாள், சிவக்குமார் கூத்தப்பார் சத்திய மூர்த்தி ஆகியோரெல்லாம் யார் என்பது ஒரு சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இதில் சசிகலா என்பவர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி என்ற அங்கீகாரத்தோடு, அவரது வீட்டிலேயே பல ஆண்டுக் காலமாக வாழ்ந்து வருபவர் என்பதும், இப்போது கூட கோடநாட்டில் ஜெயலலிதாவுடன் அவர் தான் உடன் இருந்து வருகிறார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்துக்கு, பிரபாவதி, அனுராதா என்று இரண்டு மகள்கள். பிரபாவதியின் கணவர் தான் டாக்டர் கே.எஸ். சிவக்குமார். இந்த சிவக்குமார் தான் ஹாட்வீல்ஸ் இஞ்சினீயரிங் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டவர். 
மற்றொரு இயக்குனரான கார்த்திகேயன் கலியபெருமாள் யார் என்றால், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள இளவரசிக்கு இரண்டு மகள்கள். 
ஒருவர் பெயர் ஷகீலா ஜெயராமன். மற்றொருவர் பெயர் கிருஷ்ணபிரியா ஜெயராமன். ஒருவரின் கணவர் பெயர் ராஜராஜன். மற்றொருவரின் கணவர்தான் இந்தக் கார்த்திகேயன். இது தவிர இளவரசிக்கு விவேக் ஜெயராமன் என்றொரு மகன் உண்டு. 
அவர்தான் இப்போது போயஸ் தோட்டத்து கணக்கு வழக்குகளை கவனித்து வருகிறார்.
சென்னை வேளச்சேரியில் "ஃபீனிக்ஸ் மால்" என்று ஒரு வணிகவளாகம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வணிகவளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகம் மும்பையைச் சேர்ந்த பீனிக்ஸ் மில்ஸ் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்தோடு சேர்ந்து தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகத்தில் "லூக்ஸ்" சினிமா என்ற பெயரில் மொத்தம் 11 தியேட்டர்கள் கட்டப்பட்டன. 
வணிகவளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டாலும், இதில் உள்ள தியேட்டர்கள் மட்டும் மார்ச் 2014ல் தான் தொடங்கப்பட்டன. சென்னை மாநகரத்திலேயே மிகப்பெரிய வணிகவளாகத்தைக் கட்டியவர்களுக்கு தியேட்டரை மட்டும் உடனடியாக கட்டத் தெரியாதா? 
ஒரு ஆண்டு தாமதம் ஏன்? 
ஏன் தாமதம் என்றால் சென்னை மாநகரக் காவல்துறையும் இதர அமைப்புகளும், உள்நோக்கத்தோடு இந்த தியேட்டர்களைத் திறக்கத் தேவையான சான்றிதழ்களுடன் அனுமதி தரவில்லை.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பல பினாமி நிறுவனங்கள் இருந்தன என்பது நீதிபதி குன்ஹா அவர்களின் தீர்ப்பிலேயே சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. 
ஹாட்வீல்ஸ் இஞ்சினீயரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அத்தகைய பினாமி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் பெயரை "ஜாஸ்" சினிமா நிறுவனம் என்று மாற்றி, சத்தியம் சினிமா நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் மதிப்புடைய பதினோறு திரையரங்குகளை, ஜெயலலிதாவுடனேயே இருந்து வரும் சசிகலாவும், இளவரசியும், அவரது உறவினர் பெயரிலே வலியுறுத்தியும், மிரட்டியும் வாங்கியிருக்கின்ற செய்தி இன்று வீதிக்கு வந்து விட்டது.
 மேலும் இந்தக் குழுவினர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள "போரம் மால்", மற்றும் "சத்தியம் திரையரங்கு வளாகம்" போன்றவைகளையும் வாங்குவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருப்பதாகவும், ஆனால் அதன் உரிமையாளர்கள் அவற்றை விற்பதற்குத் தயங்குவதாகவும் செய்திகள் வந்து கொண்டு தான் உள்ளன.
தான் வாழ்வதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தான் என்று கட்சியின் உடன்பிறப்புகளுக்கு "நீலிக் கண்ணீர்" கடிதம் எழுதிய ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் எப்படி யெல்லாம் சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கி விட்டன. 
முன்பு தமிழகமெங்கும் ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தவர்கள் இப்போது திரைப்பட உலகத்தை வாங்குவதற்குத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயல்களில் இறங்கியிருக்கிறார்கள்....

தான் வாழ்வதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தான் என்று கட்சியின் உடன்பிறப்புகளுக்கு “நீலிக் கண்ணீர்” கடிதம் எழுதிய ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் எப்படி யெல்லாம் சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கி விட்டன. 
முன்பு தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தவர்கள் இப்போது திரைப்பட உலகத்தை வாங்குவதற்குத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயல்களில் இறங்கியிருக்கிறார்கள். இவ்வாறு கோடிக்கணக்கிலே இந்தச் சொத்துக்களை வாங்குவதற்கு பின்னால் இருந்து முதலீடு செய்பவர்கள் யார்? 
அவர்களுக்கும், இவர்களுக்கும் என்ன தொடர்பு? 
இந்தக் கொள்முதல் எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் நடக்குமா? 
என்ற அடுக்கடுக்கான கேள்விகள் தமிழக மக்கள் மனதில் எழாமல் இருக்குமா? 
இந்தப் புதிய சொத்துக் குவிப்பைப் பார்க்கும் போது
 “ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.


மது ஒழிப்பு பாடகர் கோவன் கைது:
டாஸ்மாக் அவலங்களை எடுத்துக்கூறி டாஸ்மாக்கை மூடு என்று மக்கள் மத்தியில் மது விலக்கை பாடிய குற்றத்துக்காக பாடகர் தோழர் கோவன் கைது.அதுவும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்.
அதுவு ம் மது பானத் தொழிற்சாலை நடத்தும் சாராய வியாபாரிகள் நிர்வாகத்தால்.
கைதுக்கு காரணமான பாடல் இதோ.

=========================================================================================
இன்று,
அக்டோபர்-31.

இந்திய விடுதலை போராட்ட வீரர் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்(1875)
  • இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு தினம்(1984)
  • முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியானது(1931)

இந்தியாவின் இரும்பு பெண்மணி  எனப்பட்ட இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி இதே நாளில் அவரது மெய்க் காவலர்களாகல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
===================================================================================
சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கு !
ந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை சர்தார்ஜி ஜோக்குகள் தமிழகம் உள்பட இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் ஃபேமசாக வலம் வந்தன. இந்திய பத்திரிகைகளில் குறிப்பாக ஆங்கில பத்திரிகைகள் மற்றும் வட இந்திய ஏடுகளில் இடம்பெறும் சர்தார்ஜி ஜோக்குகள் ரொம்பவே பாப்புலர்!
சர்தார் 1:  நாளைக்கு சினிமாவுக்கு போறேன் வாரியா?

சர்தார் 2: முடிஞ்சா வாரேன் 

சர்தார் 1 : முடிஞ்ச பின்னாடி எதுக்குடா வாரே ஆரம்பிக்கும் போதே வந்துடு
                                                                                  ------

சர்தார்: என்னோட செக்புக் தொலைஞ்சு போச்சு 

மேலாளர் : பார்த்து சார் யாராவது உங்க கையெழுத்த போட்டு ஏமாத்திட போறாங்க

சர்தார் : நான் என்ன பேக்கா இப்படியெல்லாம் நடக்கும்னுதான் முதல்லயே எல்லா செக்குளையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்.

                                                                        ---------
சர்தார் 1 : டேய் எதுக்குடா மெழுகுவர்த்தி ஏத்தி வச்சிருக்கே

சர்தார் 2 : கரண்ட் இல்லடா

சர்தார் 1 : சரி... சரி அந்த பேனையாவது போடு

சர்தார் 2 :  ஏண்டா உனக்கு அறிவு இருக்குதா ... மெழுகுவர்த்தி அணைஞ்சுடாது?
                                                                          --------
சர்தார்ஜியின் தந்தை இறந்து விட்டார். அவர் ரொம்பவே அழுது கலங்கி போய் இருந்தார். அந்த சமயத்தில் சர்தார்ஜிக்கு ஒரு போன் வந்தது. போனில் சொன்ன தகவலை கேட்டதும் சர்தார்ஜி இன்னும் கதறி அழத் தொடங்கினார். ஐயோ நான் என்ன செய்வேன்... இப்போதான் என் தங்கை போன் செஞ்சா... அவளோட  தந்தையும் இறந்து போய் விட்டாராம் என்று சொல்லியவாறே மீண்டும் மீண்டும் குலுங்கி  குலுங்கி அழுதார். 
இந்நிலையில் சர்தார்ஜிக்களை முட்டாள்களாகவும், அறிவற்றவர்களாகவும் சித்தரிக்கும் இந்த சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
ஹர்வீந்தர் சவுத்ரி என்பவரால் தொடரப்பட்ட இந்த பொதுநல வழக்கினை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு மும்பையில் சர்தார்ஜிகளை கிண்டல் அடித்து 'சண்டா பாண்டா' என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த புத்தக வெளியீட்டாளர் ரஞ்சித் பிரானாடே என்பவர் கைது செய்யப்பட்டார். 




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?