இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிகார அரிச்சுவடி.

படம்
செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க ஆளுநர் முடிவு செய்துள்ளார்.செந்தில் பாலாஜி நீக்கத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவு நிறுத்தி விக்கப்பட்டுள்ளது என முதலமைச்சருக்கு ஆளுநர் கடிதம் அளித்துள்ளார். மணிப்பூரில் கடந்த 16 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது கங்போக்பி மாவட்டத்தில் நேற்று 2 பேர் உயிரிழந்தனர். தலைநகர் இம்பாலில் பாஜக அலுவலகம் முன் கூடிய 100க்கும் மேற்பட்டோர் மீது கண்ணீர் புகை வீசப்பட்டது. இதுவரை 133 பேர் பலியாகி உள்ளனர். நிலவு குறித்து ஆய்வு மேற்கொள்ள வடிவமைக்கப்பட்ட சந்திராயன் 3 ராக்கெட் வரும் ஜூலை 13ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். நிலவு குறித்து ஆய்வு மேற்கொள்ள வடிவமைக்கப்பட்ட சந்திராயன் 3 ராக்கெட் வரும் ஜூலை 13ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ்

ஆளுநரா அரசவை...

படம்
 அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்திருப்பது தமிழ்நாட்டு அரசியலில் புதிய புயலை கிளப்பிள்ளது.  குறிப்பாக, முதலமைச்சரின் ஒப்புதல் இன்றி அமைச்சர் ஒருவரை ஆளுநர் நீக்குவது அரிதிலும் அரிதான ஒன்று. சமீப காலத்தில், இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக நினைவில் கூட இல்லை. இதேபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் கேரளாவில் நடந்தது. ஆளுநரின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்துவிடுவேன் என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.  எச்சரிக்கை விடுத்தாரே தவிர, அவர் அமைச்சரை பதவி நீக்கம் செய்யவில்லை. ஆனால், தற்போது, ஒரு படி மேலே சென்று அமைச்சர் ஒருவரை தமிழ்நாடு ஆளுநர் பதவி நீக்கம் செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அமைச்சரை ஆளுநரால் பதவி நீக்கம் செய்ய முடியுமா?  ஆளுநருக்கு அந்த அதிகாரம் உள்ளதா?  அரசியலமைப்பு என்ன சொல்கிறது என்பதை கீழே பார்ப்போம். "அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை" இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் கூறுகையில், "அமைச்

அரசியல் அவலம் :

படம்
  அண்ணாமலை . தமிழ்நாட்டில் அரசியல் பேசுவோர் இனி எதிர்கட்சித் தலைவர்களின் மனைவி பெயர்களை அறிந்து கொள்ள வேண்டும் எனும் கீழினும் கீழான அளவுகோலை அண்ணாமலை உருவாக்கி உள்ளார்.  நமது முதலமைச்சரின் மனைவி பெயரை மீண்டும் மீண்டும் விவாதத்துக்குத் தொடர்பே இல்லாத இடத்தில் பேச அந்த வாய் கூசி இருக்க வேண்டும். மானமுள்ள மனிதன் எனில் சொன்ன பிறகாவது வருத்தம் தெரிவித்து இருப்பார்.  அண்மையில் மேடையில் ஆபாசமாக பேசிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியாவது தான் பிழைப்புக்காகதான் அப்படிப் பேசியதாக ஒரு காரணத்தை சொல்ல முடியும். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் தனது ஆழ்மனது வக்கிரத்தைத் தவிர வேறென்ன காரணத்தை சொல்ல முடியும்?  இத்தனைக்கும் இவர் அப்படிக் கோபப்படும் அளவுக்கு அது எதிர்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டு கூட அல்ல! ஒரு நிருபர் கேட்ட அபத்தமான கான்ஸ்பிரசி தியரி கேள்வி. எந்த ஆதாரமும் இன்றி அடித்து விடும் வழக்கமான ஒன்றுதான். அதைக் கடந்து போயிருக்கலாம்!  அந்த நிருபரை ஒரு விரோதி போல மடக்கி மடக்கி ஆதாரம் கேட்டபோது ஏன் அவ்வளவு பதட்டம் வெளிப்பட்டது? ஆதாரமில்லாமல் ஒரு நிருபர் கேள்வி கேட்டதற்கே இத்தனைக் கோபம் வருகிறதே!

புதியவர்கள்

படம்
 தமிழ்நாடு தலைமைச்செயலாளர் இறையன்பு,டிஜிபி சைலேந்திர பாபு ஆகிய இருவரும் 30 ம் தேதி ஜூன்(இம்மாத்த்)துடன் ஓய்வு பெறுகிறார்கள். எனவே புதிதாக இப்பதவிகளில் சிவ்தாஸ் மீனா,சங்கர் ஜிலால் ஆகிய இருவர் நியமிக்கப் படலாம் என தலைமைச் செயலக வளாகத்தில்  பேச்சு உலா வருகிறது. இந்த இருமுக்கியப் பதவிகளில் தமிழர்கள் பொறுப்பு வகித்து வந்த நிலையில் புதிதாக பதவி வகிக்க இருப்பவர்கள் இருவருமே மற்ற மாநிலங்களைச்சேர்ந்தவர்களாவே உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றது. அன்றே தமிழக அரசின் தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐஏஏஸ் நியமனம் செய்யப்பட்டார்.  அவருக்கு 60 வயது நிறைவடைந்துவிட்டதால் இந்த மாதம் அதாவது ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமைச் செயலர் யார் என்பது தொடர்பான எதிர்பார்ப்புகள் எழுந்தன. தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதல் நிலையில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்.கே.பிரபாகர் மற்றும் சிவ்தாஸ் மீனா ஆகியோரது பெயர்கள் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் நகராட்சி நிர்வாக

நடவடிக்கைத் தேவை!

படம்
  கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று பயணம் மேற்கொள்கிறார்.கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அவர் சந்திக்கிறார். இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள சமூக அமைப்புகளையும் ராகுல் சந்தித்து பேசுகிறார். சென்னை, கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை (மொத்த விலை) ரூ. 50-ஆக குறைக்கப்பட்டுள்ளது. வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒரு கிலோ ரூ.80-க்கு விற்ற தக்காளி, தற்போது ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 8 மாதங்களில் காவல் நிலையங்களில் எந்த மரணமும் நிகழவில்லை, பொதுமக்களிடம் மனித நேயத்துடன் நடக்க 2,300 காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இந்திய ரயில்வே துறையில் 2.74 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்வி மூலம் தெரியவந்துள்ளது. அவற்றில் 1,77,924 பணியிடங்கள் பாதுகாப்புப் பிரிவில் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ராணுவ நிதி

படம்
  • இரண்டு மாதங்களாக கலவரம் ஓயாத மணப்பூருக்கு நாளை சுற்றுப்பயணம் செல்கிறார் ராகுல் காந்தி. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து பேசுகிறார். • கனிமவளங்கள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்படுவதை தடுக்க குவாரிகளில் பறக்கும் கேமராக்கள் பொருத்தப்படும். கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். • பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வெளிச்சந்தையில் கிலோ 100 ரூபாயை தாண்டியதால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஒரு இடத்துக்கு 7 மாணவர்கள் போட்டியிடும் நிலை உள்ளது. • தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகாவிடம் இருந்து கேட்டுப்பெறவேண்டும் என்று திருச்சியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். • திருநெல்வேவி கிறிஸ்தவ மதபோதகரை தாக்கிய வழக்கில் திமுக எம்பி ஞான திரவியம் உள்பட 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். • புதிய ராணுவ நிதியாக அமெரிக்கா, க

மதபோதகர் மீது தாக்குதல்

படம்
  மதபோதகர் மீது தாக்குதல்!  தி.மு.க. எம்.பி. மீது வழக்குப் பதிவு !!  C.S.I.ல்என்ன நடந்தது? தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலத்தில் 16வது பேராயரைத் தேர்வுசெய்வதற்கான பெயர் பட்டியல் தேர்வு 2021 செப்டம்பரில் நடைபெற்றது.  இதில் ARGST பர்னபாஸ், A. பீட்டர் தேவதாஸ், TP. சுவாமிதாஸ் ஆகிய மூவர் தெரிவு செய்யப்பட்டனர். இதற்குப் பிறகு, தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தர்மராஜ் ரஸாலம் தலைமையில் நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில் ARGST பர்னபாஸ், திருநெல்வேலி திருமண்டல பேராயராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதே 2021ல் திருநெல்வேலி பெருமண்டல உறுப்பினராக தேர்வானார் நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம். இதற்குப் பிறகு திருமண்டல செயற்குழு உறுப்பினராகவும் கல்வி நிலவரக் குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இதற்கடுத்த ஆறு மாதம் வரை பர்னபாஸ், ஞானதிரவியம் ஆகியோர் ஒன்றாகவே செயல்பட்டுவந்தனர்.  இதற்குப் பிறகு ரெவரண்ட்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்வு வைக்கப்பட்டது. இதில் சிலரைத் தேர்வு செய்யும்படி ஞானதிரவியம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், முடிவுகள் வெளியானபோது ஞானதிரவியம் சொன்ன ஆட்களி

மக்களை விட சனாதனமே முக்கியம்

படம்
ஆகமம் மற்றும் பூஜை முறைகளிலும் தேர்ச்சி பெற்ற எந்தவொரு சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 10, 11ம் வகுப்பு சிறப்பு உடனடி துணைத்தேர்வுகள் இன்று துவங்குகின்றன. முன்னதாக அந்த மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மீது 100 கோடி ரூபாய் பத்திர பதிவு மோசடி புகார் எழுந்துள்ளது. 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவிற்கு பின் சீனாவில் மீண்டும் பெரிய அளவில் மக்கள் கூடும் அளவில் சுற்றுலா துறை மூலம்டிராகன் படகுத் திருவிழாவையொட்டி, 3 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறையின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என்றும், தனிச்சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். திட்ஷிதர்கள் 11 மீது 5 பிரிவுகளின் கோயில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செயல் அலுவலர் சரண்யா உள்ளிட்ட அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட