இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆளுநரின் அனுமதி தேவையில்லை

படம்
தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. யூனியன் பிரதேசமான தில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து முரண்பாடு நிலவி வருகிறது.  இந்நிலையில் டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் உள்ளது? என விளக்கக்கோரி கடந்த 2016-ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி சந்திரசுட் அவருடைய தீர்ப்பில் “ மக்களின் நலனிற்காக எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்திற்கும் ஆளுநரின் அனுமதி தேவையில்லை என்பதை ஆளுநர் பைஜால் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏன் எனில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மாநில அரசே பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார். இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், தில்லியில் துணைநிலை ஆளுநருக்குத் தான் அதிக அதிகாரம் என தீர்ப்பளித்தது.  அப்போது மாநில ஆளுநருக்கு உள்ள அதிகாரம் வேறு, துணைநிலை ஆளுநருக்கான அதிகாரம் வேறு எனவு

மருதோன்றி

படம்
மருதோன்றி இலையில்  வியக்கத்தக்க மருத்துவ நன்மைகள். இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும். நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். இதனால் நகங்கள் அழகாகின. நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதோன்றி விளங்குகிறது. நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதோன்றி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும். நீங்க பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருதோன்றி இலை 6 கிராம், பூண்டுப்பல் 1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்கால

கடவுளைக் காண வழி?

படம்
வெறும் 35 லட்சத்தில் ஒரு காணொளி. சமீபத்தில் இந்தியா முழுவதும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வந்தது ஃபிட்னஸ் சேலஞ்ச்.  சமூக வலைத்தளங்களில் இருக்கும் அனைத்துப் பிரபலங்களும் உடற்பயிற்சி வீடியோ மூலம் ஒருவருக்கு ஒருவர் சேலஞ்ச் செய்து வந்தனர்.  தொடர்ச்சியாக இந்தச் சவால்கள் பிரபலமடைந்து வந்த நேரத்தில் இந்தியன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, வீடியோ மூலம் பிரதமர் மோடிக்குச் சவால் விடுத்தார். விராட் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்ட மோடி, சிறிது காலம் தாமதம் ஆனாலும் ஃபுல் குவாலிட்டியுடன் ஆன ஒரு வீடியோவை வெளியிட்டார்.  இந்த வீடியோவை நாம் அனைவரும் பார்த்திருப்போம் ஆனால் இதற்குப் பின்னால் மறைந்திருக்கும் பணச் செலவின் ரகசியம் என்ன என்று தெரியுமா? பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ஒரு நிமிட ஃபிட்னஸ் வீடியோவிற்காக சுமார் 35 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஒரே நாளில் எடுக்கப்பட்டது கிடையாது. இதற்காக மூன்று நாள் செலவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் இரண்டு நாட்கள் எடிட் செய்யப்பட்டுள்ளது.  இதற்காக பாலிவுட்டில் புகைப்பட கலைஞர் வரவழைக்கப்பட்டுள்ளார்.  எனவே ஒரு நாள் மட்டுமே 12 லட்சம் செலவு செய்யப

உடல் நலம்.

படம்
வெளி உணவுகளால் ஏற்படும்,'புட் பாய்சன்' மற்றும் வயிற்று பிரச்னைகளில் இருந்து, சீரகம் விடுவிக்கும். அதிலும், உடனடி நிவாரணம் கிடைக்க, ஒரு டம்ளர் நீரில், ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி, ஒரு சிட்டிகை  உப்பு சேர்த்து கலந்து, தினமும், இரு வேளை குடிக்க வேண்டும். தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன.  இது, அஜீரண பிரச்னைக்கு தீர்வளிக்கும். அதற்கு, தினமும் பலமுறை, ஒரு டீஸ்பூன் தேனை உட்கொண்டு வாருங்கள்; பிரச்னையை தவிருங்கள்.  பெரும்பாலும் அரிசியும், கோதுமையும் பாலீஷ் செய்யப்பட்டுதான் விற்பனை செய்யப்படுகிறது. வெளியிடங்களில் அரிசி உணவு சாப்பிடுகிறீர் எனில், அத்துடன் கீரை, காய்கறிகளை நன்கு பிசைந்துமென்று சாப்பிட வேண்டும்.  சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தை, கீரையின் நார்கள் மெதுவாக்கிவிடுகிறது. சர்க்கரை நோயாளிகள், சாப்பிட வேண்டிய மற்றும் வேண்டாத உணவுகள் எவை? தரைக்கு அடியில் விளையும் கிழங்குகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.  குறிப்பாக, உருளையும், பீட்ரூட்டும் அறவே தவிர்க்க வேண்டும். இனிப்பு குறைவாகவும், துவர்ப்பு அதிகமாகவும் உள்ள
படம்
தமிழ் மொழி..தமிழர்கள். தமிழர்களுக்கு மிகவும் பிடித்தமான மொழி மட்டுமில்லை தமிழ் வரலாற்றை படித்த ஒவ்வொருவரையும் அதிகம் பிடிக்க வைக்கும் மொழியும் கூட. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி எதுவென்றால் அது தமிழ்நாடு என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.  ஆனால் தமிழ்நாட்டை தவிர தமிழர்கள் அதிகம் எங்கு வாழ்கின்றனர்?   உங்களுக்கு சரியான விடை தெரியுமா? நாடு விட்டு நாடு.. கண்டம் விட்டு கண்டம்னு பறந்துகிட்டு இருக்காங்க.. படிப்பாகவும், வேலைக்காவும் , குடும்ப சூழ்நிலை காரணமாக எவ்வளவோ தமிழர்கள் சொந்த ஊரைவிட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று பொழப்பு நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டை தவிர தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற மாநிலம் குறித்து புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது.  கடந்த 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த புள்ளி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  புள்ளி பட்டியல்  பலரை  அதிர்ச்சி அடைய வைத்துள்ளது .  ஆம் முதல் இடத்தில் இருப்பது கர்நாடகா மாநிலம் தான்.நாம் தண்ணீருக்காக யாருடன் போராடிக்கொண்டிருக்கிறோமோ அதே கர்நாடக மாநிலம்தான்.அங்கும் பெரும்பாலோர் பெங்களூரு பகுதியிலேயே உள்ளனர். புள