கடவுளைக் காண வழி?

வெறும் 35 லட்சத்தில் ஒரு காணொளி.
சமீபத்தில் இந்தியா முழுவதும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வந்தது ஃபிட்னஸ் சேலஞ்ச். 
சமூக வலைத்தளங்களில் இருக்கும் அனைத்துப் பிரபலங்களும் உடற்பயிற்சி வீடியோ மூலம் ஒருவருக்கு ஒருவர் சேலஞ்ச் செய்து வந்தனர். 

தொடர்ச்சியாக இந்தச் சவால்கள் பிரபலமடைந்து வந்த நேரத்தில் இந்தியன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, வீடியோ மூலம் பிரதமர் மோடிக்குச் சவால் விடுத்தார்.

விராட் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்ட மோடி, சிறிது காலம் தாமதம் ஆனாலும் ஃபுல் குவாலிட்டியுடன் ஆன ஒரு வீடியோவை வெளியிட்டார். 
இந்த வீடியோவை நாம் அனைவரும் பார்த்திருப்போம் ஆனால் இதற்குப் பின்னால் மறைந்திருக்கும் பணச் செலவின் ரகசியம் என்ன என்று தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ஒரு நிமிட ஃபிட்னஸ் வீடியோவிற்காக சுமார் 35 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஒரே நாளில் எடுக்கப்பட்டது கிடையாது. இதற்காக மூன்று நாள் செலவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் இரண்டு நாட்கள் எடிட் செய்யப்பட்டுள்ளது. 
இதற்காக பாலிவுட்டில் புகைப்பட கலைஞர் வரவழைக்கப்பட்டுள்ளார். 
எனவே ஒரு நாள் மட்டுமே 12 லட்சம் செலவு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே ஒரு வீடியோ அதுவும் பொழுதுபோக்கு வீடியோவிற்காக 35 லட்சம் செலவு செய்த மோடி முன்பு ஒரு சட்டைக்கு 10 லட்சம் செலவிட்டவர்தான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கடவுளைக் காண வழி?
டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடந்த 1ம் தேதி இரவு கூட்டாக தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் 7 பேர் பெண்கள். 10 பேர் தூக்கில் தொங்கியும் ஒரே ஒரு முதிய பெண் மட்டும் படுக்கையிலும் இறந்து கிடந்தனர்.
 

இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் அந்த வீட்டில் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில் அனைவரும் சொர்க்கம் செல்ல வினோத வழிபாடு செய்ததும் வழிபாட்டிற்கு பின்னர் அனைவரும் தற்கொலை செய்து கொள்வது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தற்கொலை செய்து கொண்ட அனைவரும் ஒரே விதமான ஆடையை அணிந்து கொண்டது மட்டுமின்றி அவர்கள் அனைவரின் கை, கண், வாய் ஆகியவை கட்டப்பட்டும் இருந்தது.

இந்த விவகாரம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. 

ஆனால், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழைகள் அல்ல இதற்கு பின்னால் யாரேனும் இருக்க வாய்ப்பிருப்பதாக போலீசாரிடம் அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
 
விசாரணையில், அந்த குடும்பத்திற்கும், காடா பாபா என்கிற மந்திரவாதிக்கும் இடையே நல்ல தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. அந்த குடும்பத்தை அடிக்கடி ஆலமரத்தின் அருகில் அழைத்து சென்று அவர் பூஜை செய்துள்ளார். 
கடவுள் என்பவர் ஆலமரம் போல் நாம் விழுதுகள் போல் இருக்க வேண்டும் எனவும் கூறிவந்துள்ளார்.

 
எனவே, அவர்களை மூளைச்சலைவை செய்து அந்த சாமியார்தான் தற்கொலைக்கு தூண்டியிருப்பார் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியிலும், ஆலமரத்தை வழிபடுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, விழுதுகள் போல வீட்டில் அனைவரின் உடலும் தொங்கி கொண்டிருந்ததையும் ஒப்பிட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடையவராக  கருதப்படும் மந்திரவாதி காடா பாபா தற்போது தலைமறைவாகி விட்டார். எனவே, அவரை போலீசார் வலை வீசி  தேடி வருகின்றனர்.
=======================================================================================
ன்று,
ஜூலை -03.
  • க்யூபெக் நகரம் உருவாக்கப்பட்டது(1608)
  • அமெரிக்காவின் முதல் சேமிப்பு வங்கி நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1819)
  • பெலரஸ் விடுதலை தினம்(1944)
=======================================================================================

வாய் சொல் வீரர்கள்.
கருப்பு பணத்தை மீட்பேன் என்பது 2014 ல் மோடியின் பிரதான தேர்தல் பிரச்சாரமாக பார்க்கப்பட்டது, அதற்காக சில கண்துடைப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதை போல நாடகத்தை அரங்கேற்றிய வேளையில், 2017 ன் இந்த புள்ளி விவரம் சந்தி சிரிக்கிறது.

இதற்கு முன் 2004 ல் 56 % அதிகமானது, அதற்கு பின் தற்போது 50 %.
2004 மற்றும்  2017 என இரண்டுமே பாரதிய ஜனதா  ஆட்சிக் காலம்  என்பது குறிப்பிடத்தக்கது .
அதைவிடக் கேவலம் காங்கிரஸ் ஆடசியின் முடிவில் சுவிஸ் கருப்புப்பணத்தை எடுத்து ஆளுக்கு 15 லட்சம் தருவதாக சொன்ன மோடி கும்பலின் நிதி அமைச்சர் அருணஜெட்லீ இன்று "சுவிஸ் வங்கிகளில் இருப்பவை எல்லாம் கறுப்புப்பணம் இல்லை.
இந்திய தொழில் முனைவோரின் முதலீட்டுப்பணம்" என பொருளாதாரத் தத்துவத்தை,கண்டுபிடிப்பை கூறியுள்ளார்.
வாய்தா வக்கீலை நிதியமைச்சராக்கினால் நாடு விளங்கிடும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் போராடினால் ஆட்சியாளர்களை விட இந்த ஏவல் படைக்குத்தான் கோபம் அதிகம் வருகிறது.
இவர்கள்,இவர்கள் குடும்ப  நலனுக்கும் சேர்த்துதானே போராடுகிறார்கள் என்ற உணர்வு ஏன் இல்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?