இடுகைகள்

மே, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மண்ணுளி அரசு

படம்
 பெண்களைப்பற்றி அசிங்கமாக இடுகையிட்டராஜா,சேகர் போன்ற அசிங்கங்களை கைது செய்யாமல் தேடிக்கொண்டே இருக்கும் காவல்துறைதான் மோடி,எட்டப்பாடியை அரசியல் ரிதியாக விமர்சித்ததவர்களை கைது செய்கிறது. நட்டு நடப்பை பாடிய கோவனை வீட்டுக்கதவை உடைத்து தீவிரவாதியைப்போல் இழுத்து செல்கிறது. நீட் தேர்வை ராஜஸ்தானில் போய் எழுதிவைத்த சிபிஎஸ்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர் சங்கத்தினரை அடித்து உதைத்து கைது செய்கிறது. கையாலாக அடிமை அரசுதான் அதிமுக அரசு என்பதை ராஜஸ்தான்,கேரளா நீட் தேர்வு மய்யம் வைக்க காரணம். இந்தியாவிலேயே அதிக மருத்துவக்கல்லூரிகள் ,பொறியியல் கல்லூரிகள்,நிகர் நிலை பல்கலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு .இங்கு நீட் தேர்வு எழுத  மய்யம் காண  முடியவில்லை என்று சிபிஎஸ்சி அதிகாரிகள் சொல்வது பெரிய பொய் .அதைவிட பெரும் பொய் ராஜஸ்தானுக்கு தமிழக மாணவர்கள் யாரும் தேர்வெழுத மய்யம் ஒதுக்கப்பட்டு போகவில்லை என்பது. அதை விடக் கேவலம் இதை எதையுமே தட்டிக்கேட்காமல் மண்ணுளி களாக அதிமுக அடிமைகள் அரசு வேடிக்கைப்பார்த்ததுதான். நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கக்கோரி கடந்த ஆண்டு நடந்த போராட்டம் மத்திய அர

நோபல் பரிசு யாருக்கும் இல்லை

75 ஆண்டுகளுக்கு பின் நிறுத்தம் ஏன் ? உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு 2018-ம் ஆண்டு யாருக்கும் வழங்கப்படாது என்று பரிசு வழங்கும் தி சுவீடன் அகாடமி அறிவித்துள்ளது.பாலியல் புகார்கள், நிதி மோசடிகள் காரணமாக இந்த ஆண்டு விருது வழங்குவதும், தேர்வு செய்யப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விருது வழங்கும் அமைப்பு அறிவித்துள்ளது.கடந்த 75 ஆண்டுகளில் முதல் முறையாக நோபல் பரிசு விருதுகள் அறிவிக்கப்படாமலும், தேர்வு செய்யப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து நோபல் பரிசு வழங்கும் சுவீடன் அகாடமியின் நிரந்தர செயலாளர் ஆன்டர்ஸ் ஆல்ஸன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:நோபல் பரிசு வழங்கும் சுவீடன் அகாடமியில் உள்ள உறுப்பினர்கள் பலரும் தற்போது நிலவும் சிக்கல், பிரச்சனைகள் குறித்து அறிந்திருப்பார்கள் என நம்புகிறேன். நீண்டகால நோக்கில் சில மாற்றங்களைச் சேர்க்க கோரிக்கை எழுந்துள்ளது.புதிய நோபல் பரிசு பெறுபவர்களை அறிவிக்கும் முன் மக்களிடம் இழந்த நம்பிக்கையை நாங்கள் மீட்டெடுப்பது மிகவும் அவசியமாகிறது. பொ

கேள்விக்கு பதில் என்ன?

படம்
மோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா?  சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56"பலூன் தற்போது கவர்சியைத்தவிர வேலைக்காகாது என்று மக்கள் தெரிந்து கொண்டதால் காற்று இறங்கிக்கொண்டு இருக்கிறது. ஊடகங்கள் தொடர்ந்து மோடி மாயை பலூனை  காற்று ஊதி பெரிதாக்கிக்கொண்டிருந்தாலும் மக்கள் அவநம்பிக்கை போட்ட ஓட்டை வழியே காற்று ஊடங்களின் உழைப்பு வீணாகிக்கொண்டுதான் உள்ளது. வரும் 2019 தேர்தலுக்கான செமி ஃபைனல் இது என்று பரபரப்பை கூட்டுகிறார்கள். மோடி டெல்லியை விட்டுக் கிளைம்பி விட்டார், பெங்களூர் அடைந்து விட்டார், இதோ விமானத்திலிருந்து இறங்குகிறார் என மோடியின் அசைவுகளை எல்லாம் மாற்றி மாற்றி காண்பிக்கிறார்கள். ஊடகங்கள் பச்சையாக காவி மயமாகி விட்டது. தனிநபர் வழிபாட்டை மக்களுக்குள் செலுத்துவதே அவைகளின் ஊடக தர்மமாய் இருக்கிறது.  இப்படிபட்ட ஊடகங்கள் தூக்கிப்பிடித்தலில் பாஜகவின்  56 இஞ்ச் வேங்கை களத்தில் இறங்குகிறது. மோடி என்ன பேசப் போகிறார், மக்களை தன் பேச்சால் எப்படி ஈர்க்கப் போகிறார், தேர்தல் முடிவுகளில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தப் போகிறர் என ஆள் ஆளுக்கு தொலைக்காட்

தீக்"கதிர்"

படம்
கடந்த 10 ஆண்டுகளில் கோடை காலத்தில் இந்தியாவின் நிலை குறித்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இதில் பல இடங்களில் தீ எரிவது புள்ளிகளாக காட்சி அளிக்கின்றன. இந்த தீ புள்ளிகள் கடும் கோடை வெயில், அதனால் கருங்கார்பன் துகள்கள், புவி வெப்பமயமாதல் அதிகரிப்பால் ஏற்படும் மாசுபாட்டை குறிப்பதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ புள்ளிகள் அதிக வெப்பத்தால் ஏற்படும் காட்டுத்தீயை குறிப்பதாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.  நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தின்படி, மத்திய இந்திய மாநிலங்களான உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலேயே அதிக தீ புள்ளிகள் காணப்படுகின்றன. தென் மாநிலங்கள் சிலவற்றில் குறைந்த அளவு தீப்புள்ளிகள் காணப்படுகின்றன. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு, ஏற்படும் இந்த காட்டுத்தீயால் வெளியாகும் புகையால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. வேலைக்கு போதிய ஆட்கள் கிடைக்காததாலும்,  விளை பொருட்களுக்கு ஏற்ப விலை கிடைக்காததால் பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகளே  விளை நிலத்திற்கு தீ வைத்த சம்பவங்கள் அதிகம் நடந்ததாலும் இந்த தீ புள்ளிகள் அதிகமாக காணப்படு