இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எனப்படும் எல்ஐசி ஒரு பொன் முட்டையிடும் வாத்து. அதன் பங்குகளை விற்கப்போவதாக பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. எந்த விவசாயியும் ஒருபோதும் விதை நெல்லை விற்க மாட்டார். மத்திய அரசு அதைத்தான் செய்யப்போகிறது.
எல்ஐசி ஒரு அற்புதமான நிறுவனம். அதைப் பற்றிய சில தகவல்களைப் பாருங்கள். இனிமேல் ஒருபோதும் இப்படி ஒரு அரசு நிறுவனத்தை உருவாக்க முடியாது.
1. இந்தியாவின் காப்பீடு சந்தையில் 70 சதவீதம் எல்.ஐ.சி.யின் பிடியில் உள்ளது. எப்போதெல்லாம் அரசு நிதி நெருக்கடியை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு நல்ல நண்பனை போல வந்து எல்.ஐ.சி. காப்பாற்றும்.
2. நேரு பிரதமராக இருக்கும்போது அவரது மருமகனான ஃபெரோஸ் காந்தி காப்பீட்டுத் துறையில் நடைபெற்ற மோசடிகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்ப, 1956-ல் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு, இந்தியாவில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டன. எல்.ஐ.சி. உருவானது.
3. 2015-ல் ஓஎன்ஜிசியின் பங்குகளை பங்குச் சந்தையில் விற்றபோது எல்.ஐ.சி அந்த நிறுவனத்தில் 1.4 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐடிபிஐ வங்கி வாராக் கடன்களில் மூழ்கியபோது எல்.ஐ.சி. மீண்டும் வந்து காப்பாற்றியது.
4. 2019, நவம்பர் 30 வரையில் எல்.ஐ.சியின் பங்கு காப்பீட்டு சந்தையில் 76.28 சதவீதம் இருந்தது. 2019 நிதியாண்டில் எல்.ஐ.சி 3.37 லட்சம் கோடி ரூபாய் வாடிக்கையாளர்களின் பீரிமியத்திலிருந்தும் 2.2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டிலிருந்து கிடைக்கும் ஆதாயத்திலும் வருமானம் ஈட்டியுள்ளது.
5. 2019-ம் ஆண்டின் நிதியாண்டில் எல்.ஐ.சி பங்கு சந்தையில் 28.32 லட்சம் கோடி ரூபாயும், கடனாக 1.17 லட்சம் கோடி ரூபாயும் மற்றும் 34,849 கோடி ரூபாயை பண சந்தையிலும் முதலீடு செய்துள்ளது.
6. எல்.ஐ.சியின் மொத்த சொத்து 36 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அதன் கடன் வெறும் 4 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.
7. ஒவ்வொரு வருடமும் அரசு பத்திரங்களிலும் பங்கு சந்தைகளிலும் எல்.ஐ.சி 55 முதல் 65 ஆயிரம் கோடி முதலீடுகளை செய்கிறது.
8. 2009-லிருந்து வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்றபோதெல்லாம் எல்.ஐ.சிதான் அதை வாங்க முன்வரும் முதல் நிறுவனமாக இருந்தது. 2009லிருந்து 2012 வரை பொதுத்துறையின் பங்குகளை விற்றதில் அரசு 9 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு எல்.ஐ.சியின் பங்கு ஆகும். ஓஎன்ஜிசியின் பங்குகளை விற்க முடிவு செய்தபோது, அதனை வாங்க யாரும் வராத நிலையில், எல்ஐசி முன்வந்து வாங்கியது.
9. எல்ஐசியில் காப்பீட்டு தொகை மற்றும் போனஸுக்கு மத்திய அரசே பொறுப்பு என எல்.ஐ.சி சட்டத்தின் 37-வது பிரிவு கூறுகிறது. மற்ற தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் இது கிடையாது.
10. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் எல்.ஐ.சி.யின் செயல்பாடுகள் சுணக்கமடைய செய்யப்பட்டுள்ளன. 2019 மார்ச் மாத ஆண்டு அறிக்கையின் படி முதலீட்டு விகிதத்தில் வருவாய் ஈட்டாத சொத்துகளில் மதிப்பு 6.15 சதவீதமாக மாறியுள்ளது. 2014-15ல் இது 3.30 சதவீதமாக இருந்தது. அதாவது கடைசி ஐந்து நிதியாண்டில் 100 சதவீதமாக உயர்ந்துள்ளது.
11. எல்.ஐ.சியின் இந்த நிலைக்கு காரணம் எல்.ஐ.சி முதலீடுசெய்ய வைக்கப்பட்ட பெரும்பாலான நிறுவனங்களின் நிலை மோசமாகியிருப்பதுதான். இதில் திவான் ஹவுசிங் ரிலையன்ஸ், இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் மற்றும் பிராமல் கேபிடல் ஆகியவையும் அடக்கம்.
12. பல அரசு நிறுவனங்களை விற்று அரசின் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முயல்கிறது மத்திய அரசு. ஆனால், வருடாவருடம் அதனால் இலக்குகளை எட்ட முடியாத நிலையில், எல்ஐசியை குறிவைத்திருக்கிறது மத்திய மோடி அரசு.
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு (LIC) வயது 66. இந்நிறுவனத்தின் பிறப்புக்கு காரணம், 1956-க்கு முன்னால் உள்நாட்டு – வெளிநாட்டு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் செய்த மோசடிகளும் ஊழல்களுமே ஆகும். மோசடி, ஊழல்கள் மூலம் மக்களின் சேமிப்பைச் சூறையாடிய தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இவைகளை தேசியமயமாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் அகில இந்திய காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவே எல்.ஐ.சி. நிறுவனத்தின் பிறப்பு.
மோசடி தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து அரசுடைமையாக்கப்பட்டு இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த முறையில் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் எல்.ஐ.சி
அன்றைய நேரு தலைமையிலான அரசால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.38,04,640 கோடி. இதன் வளர்ச்சி சுமார் ரூ.1 லட்சத்திற்கு மேற்பட்ட நிறுவன ஊழியர்களின் உழைப்பாலும் சிற்றூர்கள், கிராமங்கள் மற்றும் சாதாரண அடித்தட்டு மக்கள் வரை ரத்த நாளங்களாக செயல்பட்டதன் விளைவாக LIC நிறுவனமானது இன்று அசுர வேகத்தை எட்டியுள்ளது என்றால் அது மிகையாகாது.
தேசியமயமாக்கத்திற்கு முன்பு காப்பீட்டுத் துறையிலிருந்த 245 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் சாதிக்காத சாதனையை ஒரு அரசு நிறுவனம் நிகழ்த்தி உள்ளது. குறைவான முதலீட்டில் இந்த அளவு அபரிமிதமான வருவாயை ஈட்டியதற்கு, பாலிசிதாரர்களுக்கு உரிய முறையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட வகையில் கடமை தவறாமல் மோசடி செய்யாமல் ஊழல் இல்லாமல் நேர்மையுடன் இறப்பு உரிமங்களை முதிர்ச்சி தொகைகளைக் கொண்டுபோய் சேர்த்தன் மூலம் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இன்று வரை திகழ்ந்து வருகிறது LIC நிறுவனம். இதுவே, பாலிசிதாரர்களை LIC-யுடன் தொடர்ந்தும் இடைவிடாமலும் பயணிக்க வைக்கிறது.
மேலும் இதன் வருவாய் மற்றும் உபரி, அதன் சொந்த வளர்ச்சிக்கும் அரசு நிறுவனங்களில் முதலீட்டிற்கும், அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் உதவுகிறது. இந்நிறுவனம் அரசுடமையாக்கப்படாமல் இருந்திருந்தால், இதன் வருவாயும் உபரியும் தனியாரின் பணப்பெட்டியை நிரப்பும். மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படாமல் போகும்.
கொரோனா மரணங்கள் நிறைந்த 2020-21-ம் ஆண்டு காலத்தில் கூட இறப்பு உரிமம் 98.62% முதிர்வுத் தொகையில் 89.78% கொண்டு போய் சேர்த்துள்ளது, LIC நிறுவனம். இந்த நேர்மையை, ஏமாற்று பேர்வழிகளான தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் எதிர்பார்க்க முடியுமா?
முடியாது என்பதைத் தெரிந்தேதான் பாசிசக் கும்பல், LIC காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை நிதி தேவைக்காக விற்கப்போவதாக கூவுகிறது. இது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்? மேலும், வாக்களித்த மக்களின் [பாலிசிதாரர்களின்] சேமிப்பை சூறையாடி தனியாருக்கு தாரை வார்ப்பது எவ்வளவு பெரிய துரோகம் ?
இவர்களின் நோக்கம் அரசின் நிதி தேவையை நிறைவு செய்வது அல்ல. கார்ப்பரேட்களின் நிதித் தேவையை நிறைவு செய்வதே. ஒன்றிய மாநில அரசுகளின் நிதி தேவையை பூர்த்தி செய்து, பல்வேறு மக்கள் திட்டங்களில் முதலீடுகள் செய்து, பங்கு சந்தை சரியும் போதெல்லாம் அதில் முதலீடு செய்து, நட்டமில்லாமல் இயங்கிவரும் LIC-யின் வருவாய் மற்றும் உபரி அதன் சந்தாதாரர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் செல்வதிலிருந்து மடைமாற்றி கார்ப்பரேட்டுக்களுக்கு அள்ளிக் கொடுப்பதே, எல்.ஐ.சி தனியார்மயத்தின் நோக்கம்.
LIC நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தத்தவறினால், அதன் வருவாயும், உபரியும், சொத்தும் தனியாருக்கு போய் சேரும். இதனால், மக்களின் நலத் திட்டங்களோ, நாட்டின் பொருளாதார தேவைகளோ நிறைவேறாது. மேலும் அதில் போடப்பட்ட மூலதனத்தின் எதிர்காலம் கேள்விக்குறி தான்.
மேலும், பாலிசிதாரர்களின் இறப்பு உரிமத் தொகை, முதிர்ச்சித் தொகை உரிய முறையில் உரிய நேரத்தில் போய் சேராது அல்லது முற்றிலும் சேராமலும் போகலாம். இதற்கு தனியார் நிறுவனங்களின் கடந்த கால ஊழல் மிக்க, மோசடி மிக்க செயல்பாடுகளே சிறந்த உதாரணம்.எல்.ஐ.சி உருவாக்கப்பட்டதே இந்த மோசடிகளுக்கு முடிவு கட்டத்தானே !
LIC நிறுவனம் என்பது தேசத்தின் சுயப் பொருளாதாரத்தையும் மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்றும் அட்சயப்பாத்திரம். இதை காவிக் கும்பல் களவாடி கார்ப்பரேட்களின் கஜானாவில் சேர்ப்பதை ஒரு போதும் அனுமதிக்கலாகாது.
ஏனெனில், ஒவ்வொரு வருடமும் LIC-க்கு வரும் உபரித் தொகையிலிருந்து ஒன்றிய அரசுக்கு வரும் 5% ஈவுத் தொகையும் மீதமுள்ள 95% பாலிசிதாரர்களுக்கு கிடைக்கும் போனசும் இனி கிடைக்காது.
மேலும், பொதுத்துறை – அரசுத்துறை நிறுவனங்கள் வங்கிகளின் பங்குகள் வீழ்ச்சி அடையும்போது அவைகளை ஓடிப்போய் தாங்கிப் பிடிக்கும் ஆபத்பாண்டவனாக LIC இருக்கிறது. இனி அப்படி ஒரு பொருளாதார பெரும் சக்தி அரசின் கைகளில் இருக்காது.
நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட வகையில் ஈடுசெய்யும் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் உற்பத்தி சரிவு பொது முடக்கம் வேலையிழப்பு, வேலையின்மை போன்ற சூழலிலும் LIC பாதிப்பு இல்லாமல் இயங்குகிறது என்றால் பாலிசிதாரர்களின் தொடர்ச்சியான இடைவிடாத பங்களிப்பும் ஊழியர்களின் அயராத உழைப்புமே ஆகும். மேலும், இதுவரை அரசுக்கு கடனாக, முதலீடாக ரூ.26,86,527 கோடியை வழங்கியிருக்கிறது. அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ரூ.4 லட்சம் கோடி வரை முதலீடு செய்திருக்கிறது எல்.ஐ.சி நிறுவனம். இவை அனைத்தையும் மக்களிடம் இருந்து மறைந்து விட்டது பாசிச மோடி அரசு.
LIC போன்ற நிறுவனங்களுக்கு மூலதனத் திரட்டல் தேவை இல்லை என்பதையும் இது ஒரு தொழில் நிறுவனம் இல்லை என்பதையும், இந்நிறுவனம் பல்வேறு தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது என்பதையும், ஒன்றிய அரசு மூடி மறைத்து வரும் பித்தலாட்டத்தையும் நாம் அனைவரும் உணர்ந்து போராட தவறினால் மக்களின் வரிப்பணத்தில் உருவான ஜீவ ஊற்றான LIC-யை தங்கள் அப்பன் வீட்டு சொத்துக்களைப்போல விற்பதைத் தடுக்க முடியாது.
எனவே, இந்த கார்ப்பரேட் – காவி பாசிசக் கும்பலுக்கு குலைநடுக்கம் ஏற்படும் வகையில் மக்களின் தீவிர போராட்டங்களை வீதிக்கு வீதி கட்டியமைப்பது மூலமே மக்களின் நிறுவனங்களின் பறி போகாமல் பாதுகாக்கவும் தொடர்ந்து மக்கள் நிறுவனமாக நீடிக்கவும் முடியும் !!
விகடன் குடும்பத்தில் சொத்துச் சண்டை – சரிக்கட்ட பாஜகவிடம் பேரம் பேசிய சீனிவாசன் .இதுதான் பத்திரிகை உலக இன்றைய கழுகார் பரபரசெய்தி. விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசனின் குடும்பத்தில் மீண்டும் சொத்துச் சண்டை உச்சத்தை அடைந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. சீனிவாசனின் தந்தை பாலசுப்பிரமணியனுக்கு 5 மகள்களும் உள்ளனர். தாத்தாஎஸ்.எஸ்.வாசன் சேர்த்துவைத்தை சொத்துகள் மற்றும் விகடன் குழுமத்தை மொத்தமாக சீனிவாசன் அபகரித்து விட்டதாகவும். கொஞ்ச நஞ்ச சொத்துக்களைக் கொடுத்து பின்னால் செய்கிறேன் பின்னால் செய்கிறேன் என சகோதரிகளை ஏமாற்றிவிட்டதாகவும் குடும்பத்தில் அடிக்கடி குடுமியைப் பிடித்துக் கொள்வது தொடர்ந்துவந்தது. 2001 ஆம் ஆண்டு விகடன் குழுமத்தின் மொத்த அதிகாரத்தையும் கையிலெடுத்த சீனிவாசன், தந்தை பாலசுப்பிரமணியத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சகோதரிகளையும் ஏமாற்றி வந்ததாக அப்போதே பல தகவல்கள் வெளியாகின. இதனால், மகனோடு கோபித்துக் கொண்டு சென்ற பாலசுப்பிரமணியனை அப்போதைய மூத்த பத்திரிகைகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார். அதன் பின்னரும் சீனிவாசனின் ஏமாற்றுப் போக்கை சகித்துக்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம் மேற்கொள்கிறார். அங்கு மறைந்த பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம். சௌந்தரராஜனின் முழு திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் சென்ற கார், நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இந்த காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தஜகிஸ்தானில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் பிரபு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹவுரா திருச்சி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஹவுரா இடையே ஆகஸ்ட் 18,22,25 ம் தேதிக
சந்திராயன் -3 விண்கலத்தில் உள்ள லேண்டர் கேமரா மூலம் எடுக்கபப்ட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மதுரையில் பாடகர் டிஎம்.சௌந்தராஜனின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்வு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி அனைத்து எம்.எல்.ஏக்களையும் அழைத்து சென்று பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன் - புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி . திருநெல்வேலி, கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், நீட் ஆதரவாக தனது பதவிக்குரிய கண்ணியத்தை மறந்து மூன்றாந்தர அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.யன்.ரவியையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம்