தனக்கு தானே...

"ஷாகாவில் படித்தவருக்கு கோட்சேவைத் தான் தெரியும். காந்தியைத் தெரியாது. மார்ட்டின் லூத்தர் கிங், மண்டேலா, ஐன்ஸ்டீன் உட்பட பலர் மகாத்மாவைத் தங்கள் ஆதர்ச நாயகன் என்று கூறியுள்ளனர். வன்முறையும் பொய்யும் மட்டுமே தெரிந்தவருக்கு அகிம்சையும், உண்மையும் தெரியாது "-ராகுல் காந்தி.

மீண்டும் மோடி?

வேண்டாம் போ ஓடி!

15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை சாதனை.

பல்வேறு மாநிலங்களில் திருடி விற்கப்பட்ட 11 குழந்தைகள் மீட்பு; தெலங்கானா போலீசார் விசாரணையில் பரபரப்பு: கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் டாக்டர் உட்பட 3 பேர் கைது.
வீட்டை பூட்டி மருமகள் சாவியை எடுத்துச்சென்றார் இறுதி சடங்கு செய்ய வழியின்றி நடுரோட்டில் கணவர் சடலத்துடன் காத்திருந்த மூதாட்டி.

இவர் வந்து தான் வளர்த்தாராம் ?

தமிழ்­நாட்­டில் உயர் கல்­வியே இல்லை என்­ப­தைப் போல­வும், தான் வந்­து­ தான் பல்­க­லைக் கழ­கங்­க­ளையே வளர்த்­த­தைப் போல­வும் பேசி இருக்­கிறார் ஆளு­நர் ஆர்.என்.ரவி.

தான் ஏதோ வெட்டி முறிப்­ப­தைப் போல எதா­வது ஒரு கூட்­டத்­தைக் கூட்டி வைத்து எதை­யா­வது உளறி வைப்­பது ஆளு­ந­ரின் அன்­றாட வேலை­யாக இருக்­கி­றது. 

ஊட்­டிக்கு பய­ணம் மேற்­கொண்ட ஆளு­நர், அங்கே பல்­க­லைக் கழ­கத் துணை­வேந்­தர்­களை வர­வ­ழைத்து ஏதோ ஆலோ­சனை செய்­துள்­ளார். 

அதில் அவர் பேசிய பேச்­சைக் கேட்­டால் கல்­வி­யா­ளர்­கள் அனை­வ­ரும் தலை­யில் அடித்­துக் கொள்­வார்­கள்.

“2021 ஆம் ஆண்டு நான் ஆளு­ந­ரா­கப் பொறுப்­பேற்­ற­போது, தமிழ்­நாட்­டில் உள்ள பல்­க­லைக் கழ­கங்­கள் மிக­வும் மோச­மான நிலை­மை­யில் இருந்­தன. சில பிரச்­சி­னை­கள் இருந்­தன. ஒவ்­வொரு பல்­க­லைக் கழ­க­மும் மற்ற பல்­க­லைக் கழ­கங்­க­ளு­டன் தொடர்­பின்றி தனித்­த­னி­யா­கச் செயல்­பட்டு வந்­தன. 



அவற்­றின் தர­மும் குறைந்து காணப்­பட்­டது. இது எனக்கு ஏமாற்­றம் அளித்­தது. இதை ஒன்­றி­ணைக்­கவே துணை­வேந்­தர்­கள் மாநாடு 3 ஆண்­டு­க­ளாக நடத்­தப்­பட்டு வரு­கி­றது” என்று திரு­வாய் மலர்ந்­துள்­ளார் ஆளு­நர். மூன்று கூட்­டம் போட்­ட­தால் பல்­க­லைக் கழ­கங்­கள் அனைத்­தும் ‘ஒரே பாட்­டில் முன்­னே­று­வ­தைப் போல’ முன்­னேறி விடுமா? காற்­றில் கயிறு சுற்றி இருக்­கி­றார் ஆளு­நர்.

தமிழ்­நாடு உயர் கல்­வித் துறை­யில் முன்­னே­றிய மாநி­லம்­தான். பள்­ளிக் கல்வி என்­பது பெருந்­த­லை­வர் காம­ரா­சர் காலம் பொற்­கா­லம் என்­றால், கல்­லூ­ரிக் கல்­வி­யா­னது முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் காலத்­தில் தான் செழித்­தது. இன்­றைய திரா­விட மாடல் ஆட்­சி­யின் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உயர்­கல்வி –- ஆராய்ச்­சிக் கல்­வி­யின் பொற்­கா­ல­மாக தமிழ்­நாட்டை உயர்த்­திக் காட்டி இருக்­கி­றார்.

ஆளு­நர் நேற்று இப்­படி பேசிக் கொண்­டி­ருந்­த­போது, தமிழ்­நாடு அரசு வெளி­யிட்ட ஒரு செய்­திக் குறிப்­பில் உயர்­கல்­வி­யின் தரம் எந்­த­ள­வுக்கு உயர்ந்­துள்­ளது என்ற புள்­ளி­வி­ப­ரம் வெளி­யாகி இருந்­தது. 

அகில இந்­திய உயர்­கல்வி ஆய்வு நிறு­வ­னத்­தின் (AISHE) கூற்­றுப்­படி உயர்­கல்வி மாண­வர் சேர்க்­கை­யில் (GER) 49 விழுக்­காடு பெற்று இந்­திய அள­வில் தமிழ்­நாடு முத­லி­டம் பெற்­றுள்­ளது. 

இது அகில இந்­திய சரா­சரி சத­வி­கி­தத்­தைக் காட்­டி­லும் இரண்டு மடங்கு அதி­கம் ஆகும். இதெல்­லாம் தெரிந்து கொண்டு துணை­வேந்­தர்

க­ளோடு ஆலோ­சனை நடத்­தப் போயி­ருக்க வேண்­டும் ஆர்.என்.ரவி.

இந்­தி­யா­வில் தலை­சி­றந்த 100 கல்வி நிறு­வ­னங்­க­ளில் 31 நிறு­வ­னங்­கள் தமிழ்­நாட்­டில் உள்­ளது.

தலை­சி­றந்த 100 பல்­க­லைக் கழ­கங்­க­ளில் 21 தமிழ்­நாட்­டில் உள்­ளது.

தலை­சி­றந்த 100 கல்­லூ­ரி­க­ளில் 32 கல்­லூ­ரி­கள் தமிழ்­நாட்­டில் உள்­ளது.

தலை­சி­றந்த 100 ஆராய்ச்சி நிறு­வ­னங்­க­ளில் 10 தமிழ்­நாட்­டில் உள்­ளது.

தலை­சி­றந்த 200 பொறி­யி­யல் கல்­லூ­ரி­க­ளில் 35 கல்­லூ­ரி­கள் தமிழ்­நாட்­டில் உள்­ளது.

தலை­சி­றந்த மேலாண்மை கல்வி நிறு­வ­னங்­க­ளில் 11 தமிழ்­நாட்­டில்

உள்­ளது.

100 மருத்­து­வக் கல்வி நிறு­வ­னங்­க­ளில் 8 தமிழ்­நாட்­டில் உள்­ளது.

40 பல்­ம­ருத்­து­வக் கல்வி நிறு­வ­னங்­க­ளில் 9 தமிழ்­நாட்­டில் உள்­ளது.

30 சட்­டக் கல்­லூ­ரி­க­ளில் 2 தமிழ்­நாட்­டில் உள்­ளது.

30 கட்­ட­டக் கலைக் கல்­லூ­ரி­க­ளில் 6 தமிழ்­நாட்­டில் உள்­ளது.

இப்­படி நான் அடுக்­கிக் கொண்டே போக முடி­யும். கல்­வி­யில் சிறந்த மாநி­ல­மாக நாம் உயர்ந்து நிற்­கி­றோம். இதெல்­லாம் ஆர்.என்.ரவி நாக­லாந்­தில் இருந்து விரட்­டப்­பட்டு தமிழ்­நாட்­டுக்கு வரு­வ­தற்கு முன்பே தமிழ்­நாட்டு உயர்­கல்வி நிலைமை ஆகும்.

100 ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் நீதிக்­கட்சி ஆட்­சிக் காலத்­தில் கல்­விக்­காக போட்ட விதை­தான் இதற்­குக் கார­ணம். இதெல்­லாம் ரவிக்­குத் தெரி­யுமா?

தி.மு.க.வின் முதல் ஆட்­சிக் காலத்­தி­லேயே தமி­ழ­கத்­தில் ஏரா­ள­மான அரசு கல்­லூ­ரி­கள் உரு­வாக்­கப்­பட்­டது. 1947 முதல் 67 வரை­யி­லான 20 ஆண்டு காலத்­தில் திறக்­கப்­பட்ட மொத்த கல்­லூ­ரி­கள் 68 தான். ஆனால்

கலை­ஞர் முதல்­வ­ராக இருந்த 1969 முதல் 1975 காலக்­கட்­டத்­தில் 97 அரசு கல்­லூ­ரி­கள் திறக்­கப்­பட்­டது!

« கோவை­யில் வேளாண் பல்­க­லைக் கழ­கம்!

« சென்­னை­யில் டாக்­டர் எம்.ஜி.ஆர். மருத்­து­வப் பல்­க­லைக் கழ­கம்!

« சென்­னை­யில் கால்­ந­டைப் பல்­க­லைக் கழ­கம்!

« டாக்­டர் அம்­பேத்­கர் சட்­டப்­பல்­க­லைக் கழ­கம்!

« உல­கத் தமிழ் இணை­யப் பல்­க­லைக் கழ­கம்!

« நெல்லை மணோன்­ம­ணி­யம் சுந்­த­ர­னார் பல்­க­லைக் கழ­கம்!

« சேலம் பெரி­யார் பல்­க­லைக் கழ­கம்!

« கோவை, திருச்சி, மதுரை, நெல்­லை­யில் அண்ணா தொழில்­நுட்ப

பல்­கலைக் கழ­கங்­கள்!

« ஏரா­ள­மான மருத்­து­வக் கல்­லூ­ரி­கள்! –

– இவை அனைத்­தும் உரு­வாக்­கப்­பட்­ட­தால் தான் உயர் கல்­வி­யில் இந்­தி­யா­வில் முதன்­மை­யான மாநி­ல­மாக தமிழ்­நாடு இருக்­கி­றது. ஆனால் இவர் வந்­து­தான் ஏதோ பல்­க­லைக் கழ­கங்­க­ளைச் சரி செய்து விட்­ட­தாக பீற்­றிக் கொள்­கிறார்.

புதிய தேசி­யக் கொள்கை வந்­து­தான் வளர்க்­கப் போகி­ற­தாம். இவர்­க­ளது தேசி­யக் கொள்கை என்­பது காவிக் கொள்கை. குலக்­கல்­விக் கொள்கை. வடி­கட்­டு­தல் என்ற பெய­ரால் மாண­வர்­களை கல்வி நிலை­யங்­க­ளில் இருந்து இடை­நீக்­கம் செய்­யும் கொள்கை. ஆங்­கி­லத்தை அகற்றி அந்த இடத்­தில் இந்­தி­யை­யும் பின்­னர் சமஸ்­கி­ரு­தத்­தை­யும் உட்­கார வைக்­கும் கொள்கை. 

‘வேல்­யூஸ்’ என்று பேசி வேலை வாய்ப்­பைப் பறிக்­கும் கொள்­கை­தான் இவர்­க­ளது புதிய கல்­விக் கொள்கை ஆகும்.

“தவ­றான கல்­விக் கொள்­கை­யால் படித்து முடித்த இளை­ஞர்­கள் வேலைக்­காக கையேந்­தும் நிலை­யில் உள்­ள­னர்” என்­கி­றார் ஆளு­நர். படித்த இளை­ஞர்­கள் மிகச் சிறந்த வேலை­க­ளில் பணி­யாற்றி வரு­கி­றார்­கள். அவர்­க­ளது படிப்பு மேலும் மேலும் அவர்­களை உயர்த்தி வரு­கி­றது. படித்­த­வர்­கள் யாரும் கையேந்­தத் தேவை­யில்லை. அவர்­க­ளது பட்­டமே, அவர்­களை அங்­கீ­க­ரிக்­கும். வாழ வைக்­கும்.

 அவர்­களை உயர வைக்­கும். அவர்­கள், தங்­க­ளது

பட்­டங்­க­ளின் மூல­மாக இந்த மாநி­லத்தை உயர்த்தி வரு­கி­றார்­கள்.

பல்­க­லைக் கழ­கத் துணை­வேந்­தர்­களை உட்­கார வைத்­துக் கொண்டு படிப்­பை­யும் பட்­டத்­தை­யும் கேவ­ல­மா­கப் பேசு­ப­வர் என்ன மாதி­ரி­யான ரகத்­தைச் சேர்ந்­த­வ­ராக இருப்­பார்?

தனக்கு தானே

ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடந்து வருகிறது.

 அங்கு ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவருமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் கூறியதாவது:-

" ஒடிசாவில் தேர்தல் பிரசாரத்தில் பாஜ 9 சேம் சைடு கோல் போட்டு தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டுள்ளது. இதனால், 6வது முறையாக நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் ஆட்சி அமைவது தவிர்க்க முடியாததாகி உள்ளது. நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலிலேயே நாங்கள் ஆட்சி அமைக்க பெரும்பான்மையை பெற்றுவிட்டோம்.


 இறுதிகட்ட வாக்குப்பதிவு பிஜூ ஜனதா தளத்தின் கோட்டையாக கருதப்படும் பகுதிகளில் நடக்க உள்ளது.

இங்கு பாஜ போட்ட முதல் சேம் சைடு கோல் அல்லது தவறு என்னவென்றால், பூரி ஜெகன்நாதரை அரசியலுக்குள் இழுத்தது மற்றும் நவீன் பட்நாயக் குறித்து தவறாக பேசியது. 


மரியாதைக்குரிய தலைவரான பட்நாயக்கை தவறாக பேசுவதை ஒடிசா மக்கள் ஒருபோதும் ரசிக்க மாட்டார்கள். இதே போல, 70 லட்சம் பயன் பெறும் மிஷன் சக்தி திட்டத்தை ரத்து செய்வோம் என்றார்கள். 

மாநிலத்தில் 90 சதவீத மக்கள் பயன் பெறும் பிஜூ ஸ்வாஸ்த்ய கல்யாண் யோஜனாவை நிறுத்திவிட்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு வருவோம் என பாஜ கூறியது அவர்களுக்கே எதிரானது.


சுபத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் ஒடிசாவில் ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ.50 ஆயிரம் வழங்குவதாக பாஜ கூறியிருக்கிறது. அப்படி பார்த்தால், ரூ.1 லட்சம் கோடி செலவழிக்க வேண்டியிருக்கும். 


ஏற்கனவே, ஒவ்வொருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக கூறி பாஜ ஏமாற்றியதைப் போல, இதுவும் வெறும் வார்த்தை ஜாலம்தான் என்பதை ஒடிசா பெண்கள் புரிந்து கொண்டுள்ளனர். "

இவ்வாறு அவர் கூறினார்.

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

2025ல் தங்கம் விலை

முடிவுக்கு வருகிறதா?