பொட்டம்மான்

. விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் அவர்களின் தற்போதைய புகைப்படங்கள் வெளிவந்துள்ள ஓரிரு படங்கள் தரவேற்றப்பட்டுள்ளன.
 இப்படங்கள் பழைய படங்களாக இருக்கும் என பலர் ஊகித்தாலும்கூறினா லும்
குழந்தை -மனைவியுடன் ஒப்பிடும் அளவில் இவை புதிய படங்களாக இருக்க வாய்புள்ளதாகவும் கூறப்படுகிறது.  
இலங்கை அரசாங்கத்தால் புலிகள் அமைப்பின் பலதரப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்ட வேளை புலனாய்வுத் துறை தலைவர் பொட்டம்மான் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவலை இலங்கை அரசாங்கம் இன் நிமிடம் வரை வழங்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பிற்பாடு இன் நாள் வரை விடுதலைப்புலிகளின் முன்னனித் தளபதி, தலைவர்களின் கொலையுண்ட படங்களே வெளிவந்த நிலையில் இவரின் குறிப்பாக புலிகளின் உளவுத்துறைத் தலைவரின் புகைப்படம் பலருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பாவி செயட்ப்பாட்டாளர்கள் மீது பழிபோட்டு புலிகள் இயக்கத்தின் பணத்தை கையகப்படுத்திய பலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடுக்கத்தில்உள்ளதாக தெரிகிறது .
படம்-செய்தி:நிலவரம் .

!!!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?