எப்படி இருந்த நான்?

தமிழ்­நாட்­டின்சுமார் ஒரு கோடிக்­கும் அதி­க­மான தொண்­டர்­க­ள் இருப்பதாக கூறிக்கொள்ளும்    மிகப்­பெ­ரிய கட்சி, அதி­லும் இப்­போது ஆட்­சிக்­கட்சி என்ற நிலை­யி­லுள்ள அதி­மு­க­வின் கதி இப்­படி ஆகி விட்­டதே எனும் ஆதங்­கம் அக்­கட்­சி­யி­னர் மத்­தி­யில் மட்­டு­மல்ல  அனுதாபிகள் மத்தியிலும்  பர­வ­லா­கி­யுள்­ளது.
தன் லட்­சக்­க­ணக்­கான ரசி­கர்­களை நம்பியே  எம்.ஜி.ஆர். கட்சி தொடங்­கி­னார். 
வலிமை மிக்க ஆட்சி  கட்­சி­யாக இருந்த திமு­கவை, அதன் தலை­வர் கரு­ணா­நி­தியை எதிர்த்து அர­சி­யல் நடத்­து­வது எத்­தனை ஆபத்­தா­னது என்­பதை எழு­ப­து­க­ளில் அர­சி­யல் தளத்­தில் இருந்த பல­ரும் அறி­வர். 

அடி­தடி, மிரட்­டல், பொய்­வ­ழக்கு, சிறை என பல சோத­னை­களை சந்­தித்­து­தான் அதி­முக வலு­வான அர­சி­யல் கட்­சி­யாக கட்­ட­மைக்­கப்­பட்­டது.
எம்.ஜி.ஆர். அதி­முக.வை தொடங்­கி­ய­போது இது ‘நூறு நாள் கட்சி’ என கேலி பேசி­னார்­கள். சினிமா ரசி­கர்­களை வைத்து எம்.ஜி.ஆர். அர­சி­யல் கட்­சியை நடத்த முடி­யுமா? எனக் கேள்வி எழுப்­பி­னார்­கள். ஆனால், கட்சி தொடங்­கிய ஆறே மாத்­தில் தேர்­தல் களத்தை சந்­தித்து மிகப்­பெ­ரிய ஜாம்­ப­வான்­க­ளை­யெல்­லாம் வீழ்த்­திக் காட்­டி­னார். 

அதி­மு­க­வின் வெற்றி வர­லாற்­றுக்கு பிள்­ளை­யார் சுழி போட்ட அந்த தேர்­தல்­தான் திண்­டுக்­கல் நாடா­ளு­மன்­றத் தொகு­திக்­கான இடைத்­தேர்­தல்.
1973–ம் ஆண்டு மே மாதம் நடை­பெற்ற திண்­டுக்­கல் நாடா­ளு­மன்ற இடைத்­தேர்­த­லில் மத்­திய ஆளும் கட்­சி­யான இந்­திரா காங்­கி­ரஸ், மாநில ஆளும் கட்­சி­யான திமுக, தமி­ழக மக்­க­ளின் ஏகோ­பித்த நம்­பிக்­கையை, ஆத­ர­வைப்­பெற்ற காம­ரா­ஜ­ரின் ஸ்தாபன காங்­கி­ரஸ் ஆகிய பலம் பொருந்­திய கட்­சி­கள் போட்­டி­யிட்­டன. 

அந்த நேரத்­தில், 1972, அக்­டோ­பர் மாதம் தொடங்­கிய அதி­முக அமைப்பு ரீதி­யாக முழு­மை­பெ­ற­வில்லை. ஆனா­லும் எம்.ஜி.ஆர். துணிச்­ச­லாக களம் இறங்­கி­னார். அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சி­யல் கட்­சி­க­ளாக களத்­தில் இருந்த இந்­திரா காங்­கி­ர­சுக்கு ‘பசு­வும் கன்­றும்’ சின்­னம், திமு­க­வுக்கு ‘உதய சூரி­யன்’ சின்­னம், ஸ்தாபன காங்­கி­ர­சுக்கு ‘ராட்டை சுற்­றும் பெண்’ சின்­னம் இருந்­தன. 

அவர்­கள் அனை­வ­ரும் தேர்­தல் அறி­விப்பு வெளி­யா­ன­வு­டன் தொகுதி முழு­வ­தும் உள்ள சுவர்­களை ஆக்­ர­மித்து தங்­கள் கட்­சி­க­ளின் சின்­னங்­களை வரைந்து விட்­ட­னர்.
அண்ணா திமுக சார்­பாக கே. மாயத்­தே­வர் வேட்­பா­ளர் என்று அறி­வித்து ஒரு வாரம் கழித்து தான் ‘இரட்டை இலை’ சின்­னம் அவ­ருக்கு ஒதுக்­கப்­பட்­டது. அந்த சின்­னத்தை வரை­வ­தற்கு கூட சுவர்­கள் கிடைக்­க­வில்லை. 

ஆட்­சிக் கட்­சி­யான திமுக.வின் அரா­ஜ­கம், அடக்­கு­முறை எல்லை மீறிப் போனது. அதி­முக நிர்­வா­கி­க­ளும், தொண்­டர்­க­ளும் மிரட்­டப்­பட்­ட­னர். கடும் தாக்­கு­த­லுக்கு ஆளா­கி­னர். வத்­த­லக்­குண்டு ஆறு­மு­கம் என்ற அதி­முக தொண்­டர் படு­கொலை செய்­யப்­பட்­டார்.
தேர்­தல் ஆணை­யத்­தின் கட்­டுப்­பா­டு­க­ளும், விதி­க­ளும் கண்டு கொள்­ளப்­ப­டாத காலம் என்­ப­தால், மத்­திய, மாநில ஆட்­சிக்­கட்­சி­யி­னர் அதி­கார துஷ்­பி­ர­யோ­கத்­தில் ஈடு­பட்­ட­னர். 

அது­மட்­டு­மல்ல மத்­திய, மாநில அமைச்­சர்­கள் தொகு­தி­யில் முகா­மிட்டு அதி­கா­ரி­கள், காவல்­து­றை­யி­னர் துணை­யோடு பிரச்­சா­ரத்­தி­லும் இன்ன பிற பணி­க­ளி­லும் ஈடு­பட்­ட­னர். 
பண­ப­லம், படை­ப­லம் எது­வும் இன்றி தம் தொண்­டர்­க­ளை­யும், மக்­க­ளை­யும் மட்­டுமே நம்பி தேர்­தலை சந்­தித்­தார் எம்.ஜி.ஆர். அவ­ருக்கு திண்­டுக்­கல் நாடா­ளு­மன்­றத் தொகுதி மக்­கள் மகத்­தான வெற்றி மகு­டத்தை சூட்­டி­னார்­கள்.
மொத்­தம் பதி­வான வாக்­கு­க­ளில் அதி­முக வேட்­பா­ளர் மாயத்­தே­வர் பாதிக்­கும் அதி­க­மான வாக்­கு­களை பெற்­ற­து­டன், சுமார் ஒன்­றரை லட்­சம் வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­றார். 

அவ­ருக்கு அடுத்த இடத்தை ஸ்தாபன காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் என்.எஸ்.வி. சித்­தன் பெற்­றார். மாநில ஆளும் கட்­சி­யான திமுக வேட்­பா­ளர் பொன். முத்­து­ரா­ம­லிங்­கம் மூன்­றாம் இடத்­துக்கு தள்­ளப்­பட்­டார். 
மத்­திய ஆட்­சிக் கட்­சி­யான இந்­திரா காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் கரு. சீமைச்­சாமி டெபா­சிட் தொகையை பறி­கொ­டுத்­தார்.

எம்.ஜி.ஆரின் இந்த மகத்­தான வெற்றி தமி­ழ­கத்­தில் மட்­டு­மல்ல, இந்­தியா முழு­மைக்­கும் ஒரு மிகப்­பெ­ரிய அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது. இந்த வெற்­றி­தான் அதி­மு­க­வுக்கு பல­மான அஸ்­தி­ர­வா­ரத்தை உரு­வாக்கி தந்­தது.
தமி­ழக மக்­க­ளின் நம்­பிக்­கைக்­கு­ரிய தலை­வ­ராக உரு­வெ­டுத்த எம்.ஜி.ஆர். அதன் பிறகு பல தொடர் வெற்­றி­களை பெற்று 1977–ம் ஆண்டு அதி­மு­கவை ஆட்சி கட்­டி­லில் அமர வைத்­தார். 
அது­மட்­டு­மல்ல, அடுத்­த­டுத்து 1980, 1984 கால­கட்­டங்­க­ளில் நடை­பெற்ற பொதுத் தேர்­த­லி­லும் அதி­மு­கவை தொடர் வெற்றி பெறச் செய்து மூன்று முறை­யும் முத­ல­மைச்­சர் பொறுப்­பேற்று 11 ஆண்­டு­கள் நல்­லாட்சி நடத்­தி­னார் எம்.ஜி.ஆர்.

குறிப்­பாக, 1980–ல் நடை­பெற்ற நாடா­ளு­மன்ற மக்­க­ள­வைத் தேர்­த­லில் அதி­முக இரண்டு இடங்­க­ளில் மட்­டமே வெற்றி பெற்­றது. அத­னால், அக்­கட்சி மக்­க­ளின் நம்­பிக்­கையை இழந்­து­விட்­ட­தாக கூறி, அப்­போது நடை­பெற்­றுக் கொண்­டி­ருந்த எம்.ஜி.ஆர். தலை­மை­யி­லான ஆட்­சியை கலைத்­த­னர். 
அதைத் தொடர்ந்து 6 மாத காலத்­தில் நடை­பெற்ற சட்­ட­மன்ற பொதுத்­தேர்­த­லில், திமு­க­வும், இந்­திரா காங்­கி­ர­சும் சரி­பா­தி­யாக தொகு­தி­களை பங்­கீட்­டுக் கொண்­ட­து­டன் கூட்­டணி ஆட்சி அமைப்­போம் என்­றும் பிரச்­சா­ரம் செய்­த­னர். 
ஆனால் அந்­தத் தேர்­த­லில் எம்.ஜி.ஆர் மீண்­டும் அமோக வெற்றி பெற்று ஆட்­சி­யைக் கைப்­பற்றி வர­லாற்­றுச் சாதனை படைத்­தார்.

1972 முதல் 1987 வரை 15 ஆண்­டு­கள் அண்ணா திமு­கவை வளர்த்­தெ­டுத்து தமி­ழ­கத்­தின் முதன்மை கட்­சி­யாக கட்டி எழுப்பி, அதனை ஜெய­ல­லிதா வசம் ஒப்­ப­டைத்­துச் சென்­றார். ஜெய­ல­லி­தா­வும், எத்­த­னையோ, எதிர்ப்­பு­க­ளை­யும், சதி­க­ளை­யும், சூழ்ச்­சி­க­ளை­யும் முறி­ய­டித்து அதி­மு­கவை வளர்ச்­சிப்­பாதை நோக்­கியே முன்­னெ­டுத்து சென்­றார்.

தமி­ழ­கத்­தின் அர­சி­யல் சாணக்­கி­ய­வ­ரா­க­வும், ராஜ தந்­தி­ரி­யா­க­வும் அறி­யப்­பட்ட, பழுத்த அர­சி­யல் ஞான­மும்–­­பேச்­சாற்­றால், எழுத்­தாற்­றல் உள்­ளிட்ட பன்­மு­கத் தன்­மை­யும் கொண்ட திமுக தலை­வர் கரு­ணா­நி­தியை எதிர்த்து, மக்­க­ளின் ஆத­ரவு என்­கிற மகத்­தான சக்­தியை மட்­டுமே துணை­யா­கக் கொண்டு 15 ஆண்­டு­கள் வெற்­றி­க­ர­மாக அர­சி­யல் நடத்­திய எம்.ஜி.ஆர் வழி­யில், அவ­ரால் அர­சி­ய­லுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட ஜெய­ல­லி­தா­வும் 28 ஆண்­டு­கள் வழி­ந­டத்­தி­னார். 

அவ்­வப்­போது அர­சி­யல் ரீதி­யி­லான பின்­ன­டை­வு­கள் ஏற்­பட்­டா­லும் அதை­யெல்­லாம் சமா­ளித்து 1991, 2001, 2011, 2016 என நான்­கு­முறை அதி­மு­கவை ஆட்சி கட்­டி­லில் அமர்த்­தி­ய­வர் ஜெய­ல­லிதா. அது மட்­டு­மல்ல, நாடா­ளு­மன்ற மக்­க­ளவை, மாநி­லங்­க­ள­வை­யில் 50 எம்.பி.க்களை அம­ரச் செய்து இந்­தி­யா­வின் மூன்­றா­வது பெரிய அர­சி­யல் கட்சி என்ற பெரு­மையை அதி­மு­க­வுக்கு ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தார். 32 ஆண்­டு­க­ளுக்கு பிறகு ஆட்­சிக் கட்­சியே தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்­சியை தக்க வைத்­துக் கொண்ட சாத­னை­யை­யும் ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தார் ஜெய­ல­லிதா.

இப்­படி எம்.ஜி.ஆர். உரு­வாக்கி கட்­டிக் காத்து வளர்த்­தெ­டுத்த, ஜெய­ல­லி­தா­வால் பாது­காக்­கப்­பட்டு, இன்­ற­ள­வும் தமி­ழ­கத்­தின் ஆகப்­பெ­ரிய அர­சி­யல் கட்­சி­யா­கவே திகழ்­கிற அதி­மு­க­வின் இன்­றைய நிலை அந்தோ பரி­தா­பம்! என்­றா­கி­விட்­டது.

எம்.ஜி.ஆர். ஜெய­ல­லிதா கட்சி இவை முக்­கி­யம் இல்லை. பணம், பதவி, ஈ.கோ, இவை மட்­டுமே முக்­கி­யத்­து­வம் பெற்று விட்­ட­தா­லும், கடந்த 30 ஆண்­டு­க­ளாக  எது­வுமே அதி­மு­கவை பின்­ன­ணி­யில் இருந்து இயக்கி வந்த ஒரு குடும்­பத்­தின் பதவி பேராசை கார­ண­மா­க­வும், அதி­முக இன்று அழி­வுப்­பா­தையை நோக்­கிச் சென்று கொண்­டி­ருக்­கி­றது.

தகு­தி­யும், திற­மை­யும், மக்­கள் செல்­வாக்­கும், தொண்­டர்­கள் ஆத­ர­வும் உள்ள, ஆளு­மைத் திறன்  மிக்க வலு­வான தலைமை இல்­லா­த­தன் விளை­வு­தான் மாலுமி இல்­லாத கப்­பல் போல அதி­முக திசை­மா­றிச் சென்று கொண்­டி­ருக்­கி­றது. ஆட்­சி­யை­யும், கட்­சி­யை­யும் கட்­டிக்­காக்க ஒன்­றி­ணை­வோம் என்று ஆளா­ளுக்கு குரல் கொடுத்­தா­லும், உருப்­ப­டி­யாக எந்த காரி­ய­மும் நடை­பெற்­ற­தாக தெரி­ய­வில்லை.

ஓ.பி.எஸ். அணி­யும், இபி.எஸ். அணி­யும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் விட்­டுக்­கொ­டுத்து, திறந்த மன­து­டன் அமர்ந்து பேசி நல்ல முடி­வெ­டுத்து பிணக்­கு­களை மறந்து ஒன்­றி­ணைந்­தால் மட்­டுமே இப்­போ­தைய ஆட்சி நீடிக்க வழி உண்டு. அத்­தோடு கூட்­டுத்­த­லை­மையை உரு­வாக்கினால்   மட்­டுமே ஆட்­சி­யை­ தற்போது தக்க வைக்க முடியும் .

இரட்டை இலையை பெற்றால்தான் வரும் தேர்தல்களில் மக்களிடம் மரியாதையை பெற்றுத்தரும் அளவில் வாக்குகளையாவது பெறமுடியும்.

இல்லையெனில் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று புலம்பத்தான் முடியும்.
===============================================================================================
"அன்று நான் கைது செய்த போது, இவர் தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்று எனக்குத் தெரியாது. அதனை உயர் அதிகாரி தெரிவித்த போதே எனக்கு கடும் அச்ச உணர்வு ஏற்பட்டது" எனஅன்றைய காவல்  துணை ஆய்வாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போது அப்போதைய இந்திய துணை ஆய்வாளராக இருந்த நந்தகுமார் அன்றைய நாளில் நடந்தவற்றை அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு விபரித்துள்ளார்.
இதன் போது மேலும் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
1982ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி சென்னை பாண்டி பஜாரில் இரு தரப்பினர்களுக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சில பொலிஸாரை அழைத்துக்கொண்டு சென்றேன். அந்த இடத்தில் இருந்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது சண்டையிட்டவர்கள் அருகில் மறைந்திருப்பதாக கூறினார்கள்.
இந்நிலையில், சண்டையிட்டவர்களை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தவுடன் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது உடனே பொலிஸ் நிலையத்திற்கு வந்தனர்.
அவர்களை கைது செய்து அழைத்து வந்த சில மணி நேரத்தில், தமிழக தலைமை பொலிஸ் அதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்தது.
இதன் போது “நீங்கள் கைது செய்து அழைத்து வந்தவர்கள் யார் என்று தெரியுமா” என தலைமை காவல் அதிகாரி கேட்டார்.
“ஏதோ இலங்கை தமிழர்கள் என்று கூறினார்கள்” என நான் பதில் கூறினேன். எனினும், அதன் பின்னர் தலைமை பொலிஸ் அதிகாரி கூறியதை கேட்ட போது எனக்கு அச்ச உணர்வே வந்தது.
“நீங்கள் கைது செய்து அழைத்து வந்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்” என தலைமை பொலிஸ் அதிகாரி என்னிடம் குறிப்பிட்டார்.
இதைக் கேட்ட எனக்கு அச்ச உணர்வு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களிடம் ஆயுதம் எதுவும் உள்ளதா என கேட்டேன். அவர்களும் கையில் வைத்திருந்த துப்பாக்கியை அமைதியாக கொடுத்தார்கள்.
அதனை பெற்றுக்கொண்ட பின்னர் யோசித்து பார்த்தோம். 
துப்பாக்கியினை கொண்டு எம்மீது தாக்குதல் நடத்தயிருந்தால் அவர்களை நாங்கள் கைது செய்யாமல் திரும்பவும் ஓடி வந்திருப்போம்.
எனினும், அவர்கள் நடந்துகொண்ட விதத்தை பார்க்கும் போது இன்றும் பெருந்தன்மையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
==========================================================================================
ன்று,
மே -06.


  • இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது(1854)

  • ஈபெல் டவர், பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் 
  • திறந்து விடப்பட்டது(1889)

  • இந்திய விடுதலை வீரர் மோதிலால் நேரு பிறந்த தினம்(1861)

1764ல் முதன் முதலில் பம்பாய் என்கிற மும்பையில் தான் தபால் சேவையை தொடங்கினார்கள். இந்தியா போஸ்ட் என்கிற பெயரில் தொடங்கப்பட்டது. 1966க்குள் சென்னை, கல்கத்தா போன்ற மாநிலங்களிலும் தபால் அலுவலகங்களை திறந்தது ஆங்கிலேய அரசு.

வாரன் ஹாஸ்டிங் பிரபு என்கிற இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசின் கவர்னர் தான் மக்களுக்காகவும் இந்த தபால்துறை செயல்படும் என அறிவித்தார். 
அப்போது, 100 மைல்களுக்கு சுமார் 150 கி.மீ தூரத்துக்கான தபால் கட்டணம் 2 அணா. 10 பைசா அளவுக்கு வசூலிக்கப்பட்டது. அடுத்தடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அஞ்சலகம் திறக்கப்பட்டது.

1854ல் விக்டோரியா மகாராணியின் உருவத்தை தாங்கிய தபால் தலை வெளியிடப்ப்பட்டன. அதில் ஈஸ்ட் இந்தியா போஸ்ட் என்ற பெயரில் வெளிவந்தது. 
இந்த தபால் தலைகள் லண்டனில் அச்சிடப்பட்டு இந்தியாவுக்கு கப்பலில் வந்தன. 1926 ஆம் ஆண்டில் நாசிக் செக்யூரிட்டி பிரஸ் தொடங்கிய பின் அஞ்சல் தலைகள் இந்தியாவில் அச்சிட துவங்கினர்.

உலகின் முதலாவது அஞ்சல் தலையை இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்டது. 1840 மே 1ந்தேதி பென்னி பிளேக் என்கிற பெயரில் வெளியிடப்பட்டது. 
அதில் இளம் இளவசரி விக்டோரியா படம் பொறிக்கப்பட்டு இருந்தது. அடுத்த ஒரு வாரத்தில் அதாவது மே 6ந்தேதி இந்தியாவில் அதே அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 
இதுதான்  இந்தியாவின் முதல் அஞ்சல் தலை வெளியீடு.
  • ============================================================================================
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக எந்த மக்கள் போராட்டமும் இல்லை என ONGC-க்கு ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதியளித்த தமிழக அரசு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?