தரமற்ற ஆன்மிக வியாபாரி.




வியாபார சாமியார் பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளில் 40 சதவீத பொருட்கள் தரக்குறைவானவை,அந்நிய நாட்டு மருத்துவக்கழிவுகள் உள்ளன என இந்திய அரசு  ஆயுர்வேத மற்றும் யுனானி ஆய்வகம் அறிவித்துள்ளது. 

வியாபார சாமியார்
பதஞ்சலி நிறுவனப் பொருட்கள் தரம்,ஆயுர்வேதம் முறைப்படிதான் தயாரிக்கப்படுகிறதா என்பது  குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. 
இதனால் ஆனமீக வியாபாரி பாபாராமதேவ் நிறுவனமான பதஞ்சலி பொருட்கள் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஆயுர்வேத மற்றும் யுனானி அலுவலகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், பதஞ்சலி நிறுவன பொருட்களில் 40 சதவீதம் பொருட்கள் முழுமையாகவே  ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்றும் அவைகளில் மருத்துவ தன்மைக்காக அந்நிய(ஆங்கில.ஓமியோபதி)நாட்டு மருத்துவ பொருட்கள் கலக்கப்பட்டவை என்றும் பதஞ்சலி  மருத்துவ தயாரிப்புகள் மிகவும்   தரக்குறைவானவை,ஆயுர்வேத தயாரிப்புகள் அல்ல  என்றும் தெரிய வந்ததாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் மற்றும் ஷிவிங்கி பீஜ் ஆகிய பொருட்கள் தரமற்றவை எனவும், இதில் 31.68 சதவீதம் அந்நிய நாட்டு மூலப் பொருட்கள் கலந்து இருப்பதும் முந்தைய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கு இதுவரை பாபா ராமதேவ் வாய் திறக்கவில்லை.
.

ஆனால்பாஜக அரசு அதன் பின்னரும் பதஞ்சலி நிறுவனப்பொருட்களுக்கு வரைசலுகை அளித்துள்ளது.

அதற்கும் மேலாக புதிய பதஞ்சலி தயாரிப்பு தொழிற்சாலையை இந்திய பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதற்காக 60 கோடிகள் ரூபாய் செலவில் இந்தியாவில் உள்ள அனைத்தும் ஆங்கில,மாநில மொழிகள் பத்திரிகைகளிலும் ,தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்யப்பட்டது.

ஆனால் நெல்லிசாறு (ஆம்லா ஜூஸ்)போலி விவகாரத்தில் அரசும்,மருத்துவக்கழகமும்  இதுவரை எந்த நடவடிக்கையு ம் எடுக்கப்படவில்லை. 

போலி ,தரங்கெட்ட பதஞ்சலி மருந்துப்பொருட்கள் விற்பனை தொடர்கிறது.விளம்பரங்களும் பக்கம்,பக்கமாக வெளியாகிறது.

தேன் ,நெல்லிசாறு ,நெல்லிக்காய் லேகியம்,அஸ்வகந்தா லேகியம்,உட் பட்ட பொருட்கள்,கோதுமை மாவு,நூடூல்ஸ் ஆகியவை இந்திய சுகாதாரத்துறையால் தரக்கேட்டவை என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் போலி சாமியார் பாபா ராமதேவ் தனது போலி பொருட்கள் விற்பனையை நிறுத்தாதது மட்டுமின்றி டாபர்,இமாலயா தேன் மற்றும் மருத்துவ பொருட்களைப்பற்றி தரக்குறைவாக விமர்சித்தும் தனது பொருட்களை உயர்த்தியும் விளம்பரம் செய்வது இன்னமும் தொடர்கிறது.
வியாபார சாமியார் பாபா ராம்தேவ்
"மாட்டிறைச்சி தின்ன தடையே கிடையாது. என்ன மாடுகளை இறைசிக்காக வெட்டக் கூடாது. இறைச்சிக்காக மாடுகளை  விவசாயிகள் விற்க கூடாது .
அப்படி  விற்றால் தண்டனை .மாடுகளை விற்க வேண்டுமானால் 
இறைச்சி  கொண்டு போனால் மாட்டு ஆர்வலர்களால் குறைந்த பட்சம் உயிர் இழப்பு உண்டாகும் அவ்வளவுதானே.பசுவை கண்ட இடத்தில் காலில் விழுந்து கும்பிடுங்கள் என்றா சொல்கிறோம்.
"மாட்டிறைசி தின்ன தடையே கிடையாது"என்று தெளிவாக கூறிய பின்னரும் இப்படி கூச்சல் போடுவது  தேவையா?
மேலும் மோடி பாஜக அரசு பன்றி,யானை,வரிக்குதிரை,கங்காரு இறைச்சி சாப்பிட தடை போடவில்லை.ஒட்டகத்துக்கு தடை ஒட்டக சிவிங்குக்கு தடை இல்லை என்பதை எல்லாம் கூச்சல் போடுபவர்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை.?
இதிலிருந்தே இவர்கள் ஆன்டி இந்தியன் என்பது தெளிவாகிறதே.
மேலே இருப்பது உலகளாவிய மாட்டிறைச்சி ஏற்றுமதி பட்டியல்.இன்றைய நிலையில் சமநிலையில் இருந்த பிரேசிலை இந்தியா  முந்தி விட்டது.
இதில் முக்கிய குறிப்பு.அதாவது உண்மை .
இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்களில் 80% பாஜக  தலைகள்,பார்ப்பான் தொழிலதிபர்கள்தான்.
==========================================================================================

ன்று,
மே -31.
  • உலக  புகையிலை எதிர்ப்பு தினம்
  • தென்னாப்பிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது(1910)
  • டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது(1911)
  • தென்னாப்பிரிக்க குடியரசு அமைக்கப்பட்டது(1961)
  • மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது(1962)
===========================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?