அகண்ட பாகிஸ்தான்..உருவாக்கும் பா.ஜ.க

உத்தரப்பிரதேச மாநிலத்தில்  பூசாரி ஆதித்தியநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து அங்கு ஆரோக்கியமாக அதிரடி நடவடிக்கைகளை வர எடுத்து உ.பி.யை இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக்கப் பாடுபடுவதாக நம் ஊடகங்கள் பக்கம்,பக்கமாய் கடத்தி சொல்லி வருகிறது .

ஆனால் உ.பி.யின் உண்மை நிலையோ வேறாக இருக்கிறது அங்கு மறைமுகமாக பாஜக மாநிலங்களை ஆளும் ஆர்.எஸ்.எஸ்,  வெளிப்படையாகவே ஆட்சி செய்யத்துவங்கி விட்டது.

இந்துத்துவாவின் உச்சக் கட்ட எல்லையான ன வருணாசிரமம் ம் உரை ஆட்சி முறை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டது.மோடியால் திரைமறைவாக கடைபிடிக்கப்படும் இந்துத்துவா வெறி முதல்வரும் முன்னாள் கோவில் பூசாரியுமான  ஆதித்தியநாத்தால்  பகிரங்கமாகவே ஆட்சியில் அமர்ந்தவுடன் செயல்படுத்தப்பட்டு விட்டது.

 ஆதித்தியநாத் தலைமையில் ஆட்சி அமைந்ததுமுதல் பச்சையான இந்து மத வருணாசிரம ஆட்சி 


தொடங்கப்பட்டு விட்டது.

தாழ்த்தப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர்மீதுதாக்குதல்தொடரப் 
பட்ட நிலையில், 

கிராமம் கிராமமாக தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட் 

டோரும் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு 


ஜாதியற்ற இஸ்லாம், புத்த மார்க்கம் தழுவுகின்றனர்.

உத்தரப்பிரதேசம் சகரன்பூர் என்ற மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடக்கூடாது என்று ‘
மகாரனா பிரதாப் சேனா’ என்ற அமைப்பு மிரட்டல் விடுத்திருந்தது. காவல்துறையும் பிரதாப் சேனாவிற்கு 
ஆதரவாக இருந்தது. இந்த நிலையில் அம்பேத்கர் விழா கொண் டாடப்படவிருந்த மேடைகள் மற்றும் 
அலங்கார வளைவுகள் அனைத்தும் சேதப் படுத்தப்பட்டன; 50--க்கும் மேற்பட்ட தலித் துகளின் வீடுகள் 
தீவைத்து எரிக்கப்பட்டன.

இந்த நிலையில் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட தலித்துகளில் 80---க்கும் 
மேற்பட்டோர் மீது கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி கைது செய்து சிறையில் 
அடைக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரச்சினை தேசிய தாழ்த்தப்பட்டோர் நலஆணையத்தின்கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. 
இதனிடையே சகரன்பூர் குமார் வட்டத்தைச் சேர்ந்த மூன்று கிராமத் திற்கும் மேற்பட்ட  மக்கள் தாங்கள் 
இனி ‘இந்துக்கள் அல்ல’ என்று அறிவித்துள்ளனர். இந்து மதத்தை விட்டும் வெளியேறியுள்ளனர்.
ஆதித்தியநாத் ஆட்சிக்கு வந்த பிறகு தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது 
உயர்ஜாதியினரின் அடாவடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட 
மக்கள் தொடர்ந்து மதம் மாறி வருகின்றனர்.  
மீரட் மற்றும் கோரக்பூர் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது கொடூரத் 
தாக்குதல்கள், அடக்குமுறைகள் சமீபகாலமாக அதிகரித்துவிட்டன. சில நாள்களுக்கு முன்பு மிர்பூர் 
பகுதியில் தலித் துகளுக்கு முடிவெட்டக் கூடாது என்ற உயர்ஜாதியினரின் எச்சரிக்கையை அடுத்து 
அப்பகுதிநாவிதர்கள்தலித்துகளுக்குமுடி வெட்டவும், தாடிமழிப்பதையும் தவிர்த் தனர். இதனால் 
அப்பகுதி தலித்துகள் இந்துமதத்தை விட்டு வெளியேறி அடுத்த மாதம் நடைபெறும் ரம்ஜான் நோன்பின் 
போது இஸ்லாமிய மதத்தைத் தழுவுவதாக அறிக்கை விடுத்து, தங்கள் வீட்டிலிருந்த இந்து சமய 
கடவுள் சிலைகள், படங்கள் போன்றவற்றை குப்பையில் வீசியும், ஆற்றில் வீசியும் தங்கள் விரோதத்தைப் 
பட் டாங்கமாக வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதிதலித்துக்களை தாக்கியது 
தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்யாமல் பாதிக் கப்பட்ட தலித்துக்களைக் கைது செய்தது 
தொடர்பாக தொடர்ந்து பீம் ஆர்மி என்ற அமைப்பு சகரன்பூர் காந்தி மைதானத்தில் 
அறப்போராட்டம்நடத்திவருகிறது,இவர் களுக்கு ஆதரவாக சிறுபான்மை அமைப்பு களும் 
இணைந்துள்ளன.

இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக கிராமம் கிராமாக இந்து மத்ததை விட்டு வெளியேற தீர்மானம் 
நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் 12 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தாங்கள் இந்துக்கள் இல்லை 
என்று அறிவித்துள்ளனர். 3 கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பவுத்த மதத்தைத் தழுவி யுள்ளனர்.

உ.பி,யில் இந்து மதத்தை விட்டு வெளியேறி, கடவுளின் படங்களை வீசப் புறப்படுவோர்.
இதன் தொடர்ச்சியாக உக்த் மற்றும் கதேட் கிராமத்தைச்சேர்ந்த 180 குடும்பங்கள் இந்து மதத்தில் 
இருந்து விலகி பவுத்த மத்ததை தழுவியுள்ளனர். புதனன்று (மே 17) அனைவரும் ஒன்று சேர்ந்து 
தங்கள் வீடுகளில் இருந்த இந்து கடவுளர்களின் சிலைகள் மற்றும் படங்களை வீட்டிலி ருந்து வெளியே 
வீசிவிட்டனர். இவர்கள் அனைவரும் தாங்கள் பவுத்த மதத்தைத் தழுவியதாக அறிவித்தனர்.
மகாரனா பிரதாப் சேனா என்ற உயர் ஜாதி அமைப்பு ஏப்ரல் 14 ஆம் தேதி மகாரானா பிரதாப் வீர மரணம் 
அடைந்ததாகவும், அந்நாளை துக்க நாளாக கொண்டாடவேண்டும் என்றும் அறிவித்து வருகிறது. 
ஆனால், அன்று அம்பேத்கர் பிறந்த நாள் ஆகையால் வட மாநிலங்களில் அம்பேத்கர் பிறந்த நாளை 
ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் வெகு சிறப் பாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதனால், உ.பி. மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ராஜ்புத் என்ற உயர்ஜாதியினருக்கும், 
பட்டியலின மக்களுக்குமிடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவதுண்டு. இந்த ஆண்டு ஆதித்தி யநாத் 
என்ற சாமியார் முதல்வர் பதவிக்கு வந்தது முதல் வருணாசிரம விதிகள் மாநிலம் முழுவதும் 
பின்பற்றப்படுகின்றன.
இவ்விவகாரம் தொடர்பாக பிரதாப் சேனா அமைப்பினர்கூறும்போது,‘‘இத்தனை ஆண்டு காலமாக இந்து 
விரோத ஆட்சி நடைபெற்றது. ஆகவே தான் இதுமதத்தின் உயரிய கொள்கை கள் பின்பற்றப்படவில்லை. 
ஆனால் தற் போது உண்மையான இந்து மத ஆட்சி நடை பெறுகிறது. இங்கே அவரவருக்கு என்று மதப் 
பிரகாரம் விதிக்கப்பட்ட கட்டளைகளின்படி நடக்கவேண்டும்; அப்படி நடந்தால் தான் சமூகத்தில் அமைதி 
நிலவும், ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இந்துமதஆட்சிநடைபெற்றது.ஆகையால்தான் நாடு 
செல்வச்செழிப்பிலும், ஆன்மீக சிந்தனை யிலும் சிறந்து விளங்கியது. ஆகவே, மீண்டும் இந்தியாவின் 
பழையபெருமையை மீட்கவேண்டும் என்பதே எங்கள் அமைப்பின் கொள்கை’’ என்று கூறினர்.

‘‘ஆதித்தியநாத் ஆட்சிக்கு வந்தது முதல் உயர்ஜாதியினரின்கொடுமைஅதிகரித்துவருகிறது. 
வெளியிடங்களுக்கு எங்களை செல்லவிடுவதில்லை, தோட்டவேலைகளுக்குஅழைப்பதில்லை,பள்ளிக் 
கூடம்செல்லும்மாணவர்களைமிரட்டிவிரட்டு கின்றனர். நூலகங்களில் எங்களை நுழைய விடுவதில்லை; 
மகாரானா பிரதாப் என்பவர் என்ன வரலாற்றில் இடம் பிடித்தவரா? இவர்களாக ஒரு கதையை உருவாக்கி 
அதன் நாயகனாக மகாரானா பிரதாப்பை முன்னிறுத்தி அவர் ஏப்ரல் 14 ஆம் தேதி மரணமடைந்தார் 
என்று கதைவிட்டு அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தைச் சீர்குலைக்கின்றனர்.
காவல்துறை மற்றும் அதிகார மட்டத்தில் உள்ள உயர்ஜாதியினரும் அவர்களுக்கு ஆதரவாகவே 
செயல்படுகின்றனர். 50-க்கும் மேற்பட்ட பட்டிய லின மக்கள் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. எங்கள் 
வீடுகளை எரித்தவர்களை கைதுசெய்யாமல் பீம் ஆர்மி அமைப்பைச் சேர்ந்தவர்கள்மீது கடுமை யான 
பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அதிகரிக்கும் (கிராம் கிராமமாக )

இந்து மதத்துக்கு முழுக்கு

உயர்ஜாதியினரின் கொடுமைகள் நாங்கள் இந்துவாக இருக்கும் வரை தொடரும்; ஆகவே, எங்கள் 
தலைமுறையினர் இனி இந்துவாக பிறக்கமாட்டார்கள், அவர்கள்மீது ஜாதி என்ற அடையாளம் 
அழித்தொழிக்கும் விதமாக நாங்கள் இந்துமத்தை விட்டு பவுத்தம், மற்றும் இஸ்லாம் மதங்களை தழுவ 
முடிவெடுத்து கிராமம் கிராமமாக மதம் மாறி வருகிறோம்' என்று கூறினார்.  
ஆக அகண்ட இந்து பாரதம் அமைக்கும் பணியில் அகண்ட பாகிஸ்தான் தான் உருவாக்குகிறார்கள் 
இந்த வருணாசிரம ஆட்சி ஆர்.எஸ்.எஸ்.ஆதரவு பா.ஜ.கவினர் .
நன்றி :தினமலர் 
===========================================================================================
ன்று,
மே-23.
  • நெதர்லாந்து, ஸ்பெயினிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது(1568)
  • மிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூனான கார்னிவல் கிட் வெளி வந்தது(1929)
  • ஜெர்மன் கூட்டாட்சி குடியரசு அமைக்கப்பட்டது(1949)
===========================================================================================

 நீட் தேர்வு . ஏமாற்றும் வேலை
ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், "நீங்கள் இந்திவழியில் கற்றவர்" என்பதுதான். அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார், "ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன்.
பன்மைத்துவமான ஒரு தேசத்தில், ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா...? என்று ஜனாதிபதியிடம் கேட்கிறேன்." என்கிறார். தேர்வுக் குழு வாயடைத்துப் போகிறது. அவரது கேள்வியில் உள்ள நியாயம் புரிந்து இப்போது அந்த மாணவனைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறது. அந்த மாணவர் இந்தியாவின் முக்கியமான கல்வி செயற்பாட்டாளரான பேராசிரியர் அனில் சடகோபால்.
தற்போது அனில் சடகோபால் இந்தியா முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார். சென்னைக்கு இன்று (22-05-17) நீட் தேர்வு சம்பந்தமாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைத்த ஒரு கூட்டத்துக்கு வந்தவரிடம் பேசினோம்.
''ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்... நம் கல்வித் துறை மேம்பட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இல்லையா...?''
''நான் கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன். நீட் தேர்வினால் கல்வித் தரம் மேம்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. சொல்லப்போனால், நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.''
பேராசிர்யர் அனில் சடகோபால்.

''எப்படிச் சொல்கிறீர்கள்...?''
''அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூகநீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது. அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு. பல்வேறு தேசிய இனங்களின் மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம். எப்படி எதுவும் இதுவரை சேராமல் இருக்கும் வட கிழக்கு மாணவனும், எல்லா செளகர்யங்களையும் பெற்ற டெல்லி மாணவனும் போட்டி போடுவான். இருவருக்கும் ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா? அது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல், அதில் உள்ள ஷரத்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கங்கள் செய்துவருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு.''
''சரி... அப்படியானால் இன்னும் அதே பழைய கல்விக் கொள்கையைத்தான் தொங்கிக்கொண்டு இருக்க வேண்டுமா... காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா...?''
''கண்டிப்பாக மாற வேண்டும். நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், நம் மாணவர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் கல்விக் கொள்கையைப் பெரும் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளிகளின் நலன்தான் இந்தக் கல்விக் கொள்கையில் முதன்மையானதாக இருக்கிறது. உலக மூலதனம் இந்தியக் கல்வித் துறையின் மீது ஒரு யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. அந்த மூலதனம் தேசத்துக்கு, மக்களுக்கு, இயற்கை வளங்களுக்கு என யாருக்கும் விசுவாசமாக இருக்காது. அது லாபத்துக்கு மட்டும்தான் விசுவாசமாக இருக்கும், அந்த மூலதனத்தின் பிள்ளைதான் 'நீட்' தேர்வு.''
''புரியவில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும், உலக மூலதனத்துக்கும் என்ன சம்பந்தம்...?''
''உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்குத்தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.''
''இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா...?''
இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டையாகப் புபுரிந்துகொள்ளாமல் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.''
''தகுதியானவர்கள்தானே மருத்துவத் துறையில் வரவேண்டும்?''
''தகுதி எதைவைத்து நிர்ணயிக்கப்படுகிறது? தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவனால், நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடியுமா...?
ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், பணம் கொடுத்து சேர முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் 'ஒன்றாக ரேசில் ஓடுங்கள்' என்கிறீர்கள். கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்து யோசியுங்கள். உங்கள் மாநிலத்திலேய அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா? நான் இங்கு பேசிக் கொண்டிருக்கும்போது...
'விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கின்றன' என்றனர். அப்படியானால், அந்த மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளைகளுடன் போட்டிபோட முடியும்...? ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா....?''
''சரி, இதற்கு என்னதான் தீர்வு...?''
"கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பதுதான் தீர்வு. தமிழகம்தான் எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாமென்று சட்டம் இயற்றிவிட்டது . கூட்டாட்சி தத்துவத்தின்படி, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். கல்வியை வணிகமாகப் பார்க்காமல் இலவசமாக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். முதலாளித்துவ தேசமான ஜெர்மனியும் சரி... கம்யூனிச தேசமான கியூபாவும் சரி... கல்வியை வணிகமாகப் பார்க்கவில்லை. ஆனால், இவ்வளவு பாகுபாடு உள்ள ஒரு தேசம் கல்வியை வணிகமாகப் பார்க்கிறது; அதிலிருந்து வருபவர்களை ஒற்றைத் தேர்வில் எடைபோடுவோம் என்கிறது.''
''ஆனால், தமிழகம் மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது?''
''ஆம். அதற்கு நீங்கள் பெருமைகொள்ள வேண்டும். இது, அயோத்திதாச பண்டிதர், பெரியார் உங்களுக்கு ஏற்படுத்திய ஞானம். மற்ற மாநிலங்களைவிட உங்களுக்குத்தான் எது சமூக நீதி என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், அதற்கு ஏதேனும் சிறு உராய்வு ஏற்படும்போது நீங்கள் கிளர்ந்தெழுகிறீர்கள்... போராடுகிறீர்கள். உண்மையில், தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்கள் இந்தியாவின் பிற இனமக்களுக்கானதும்தான். மற்ற மாநிலங்கள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருக்கும்போது நீங்கள் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை நடத்திவிட்டீர்கள். இப்போது நீங்கள் நடத்தவேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு.''
  பறக்கும் குதிரை இறக்கை என்பதை விட நீந்தும் மீன் வால் என்று சொல்லியிருந்தால் சரியாக                    இருந்திருக்குமோ?

ஆயிரம் ஆண்டுகள் பேசும் ஓராண்டில் அதிமுக முக்கிய சாதனை.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?