எச்சரிக்கை நேரம்,,,,

அதிமுக கூட்டணி வெற்றி தோல்வி
அ.தி.மு.க. 147 13
தே.மு.தி.க., 29 12
மா. கம்யூ. 9 3
இ. கம்யூ., 9 1
மூ.மு.க. 0 1
ம.ம.க., 2 1
ச.ம.க., 2 0
பு.த., 1 0
பா.பி., 1 0
இ.கு.க., 1 0
கொ.இ.‌பே 1 0
திமுக கூட்டணி வெற்றி தோல்வி
தி.மு.க. 23 96
காங்., 5 58
பா.ம.க., 3 27
வி.சி. 0 10
கொ.மு.க., 0 7
இ.யூ.மு.லீக் 0 3
மூ.மு.க., 0 1
பெ.ம.க 0 1
மற்றவை வெற்றி தோல்வி
பா.ஜ., 0 0
இ.ச.ஜ.க., 0 0
ஐ.ஜ.த., 0 0
யா.ம., 0 0
ஜனதா 0 0
இ.ஜ.க., 0 0
நா.ம.க., 0 0
பு.பா., 0 0
பகுஜன் 0 0
மக்கள் சக்தி 0 0
பா.பி 0 0
சுயேட்சை 0 0
இத்தேர்தல் முடிவுகள்[நான்]எதிபார்க்காதவை.
 இத்தேர்தலில் தி.மு.க, கூட்டணி யில்  தி.மு.க்.அதிகைடங்களைப்பெறும் ஆனால் ஆட்சி அமைப்பதில் இருபக்கமும் இழுபறியே ஏற்படும் என்பதே எனது கருத்தாக இருந்தது.ஒட்டு மொத்தமாக இந்நிலை எதிர்பாறா ஒன்று.                ஆனால் எதிர்கட்சி தகுதியைகூட தி.மு.க, விஜய்காந்திடம் பறி கொடுத்திருப்பது வருந்தக்கூடிய விடயம்.அலைக்கற்றை ஊழல் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி அதனால் இத்தோல்வி என்பது சரியாக இருக்காது.
அப்படி என்றால் மேற்கு வங்கத்தில் ,கேரளாவில் என்ன ஊழல் இருந்தது.என்ன முறைகேடுகள் இருந்தது.? மக்கள் தற்போது மாற்றி,மாற்றி ஆட்சியாளர்களைத்தேர்ந்தெடுக்கு மனப்பான்மைக்கு வந்து விட்டனர்.முன்பு கேரளாவில் தொடர்ந்தது,இப்போது இந்தியா முழுக்கப் பரவிவருகிறது.இது ஒரு நல்ல செயல்தான் ஆட்சியாளர்களின் ஆட்டத்தைக்குறைக்கும்.அவர்கள் அடுத்த முறை நமக்கு எங்கே கிடைக்கும் ஆட்டையைப்போடுவோம் என்று நினைக்காதவரை.
தமிழகத்தைப்பொறுத்தவரை மின்வெட்டு நகர்ப்புறங்களிலும்,ஈழத்தமிழர் படுகொலைக்கு மத்தியாரசு துணைபோனதும் அதற்கு இங்கிருந்த அரசு துணையாக இருந்ததுமே பலர் மனதில் வெறுப்பைத்தந்துள்ளது.விலைவாசி-வரிசையான ஊழல்கள் ,ஈழத்தமிழர் படுகொலை போன்றவைகளுக்குக் காரணமான காங்கிரசுடன் கடைசிவரை கூட்டணித்தர்மம்,அலைக்கற்றை ஊழலில் தனது குடும்பம் மாட்டிவிடவேண்டாம் என்று தி.மு.க,அலைந்தது அதற்கு பெரிய மானக்கேடை தமிழக மக்கள் மனதில் ஏற்படுதியிருந்ததை இம் முடிவுகள் வெளிக்காட்டியிருக்கிறது.
 இம்முடிவுகளை வைத்து நாம்தான் என ஜெயலலிதா மீண்டும் பழைய முறையில் ஆட்சி செய்யவேண்டாம்.இதைவிடக்கேவலமான முடிவுகள் கிடைக்கலாம்.40க்கு40 ஞாபகத்தில் இருக்கட்டும். வென்றவர்களுக்கு வாழ்த்துக்கல்.மக்கள் தேர்ந்தெடுத்ததை தனது செல்வாக்கு என்று தலைகீழாட்டம் போடாமல் எச்சரிக்கையாய் இருங்கள். தற்போதைய முடிவுகள் ஞாபகத்தில்வையுங்கள்.
தேர்தல் ஆண்டவர்களுக்கு பாடம் புகட்டும் நேரம் மட்டுமல்ல,ஆட்சியில் அமரப்போகிறவர்களுக்கு  எச்சரிக்கையூட்டும் நேரமும் கூட,,,,
==========================================================================

பரசிடமோல் மாத்திரைகளால் ஏற்படும் இரத்தப் புற்றுநோய்,,,,,,

பரசிடமோல் மாத்திரைகளை வழமையாகப் பாவிப்பதன் மூலம் இரத்தப் புற்று நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த மாத்திரைகளில் acetaminophen என்ற ஒரு வகை இரசாயனம் உள்ளது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு காரணியாக இருக்கலாம் என்று இனம் காணப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை பயன்படுத்தும் பலருக்கு புற்றுநோய் ஏற்பட இதுவே காரணமாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
சிறிய தலைவலி,உடல்வலி,காய்ச்சல் போன்றவைகளுக்காக பிரச்சினைகளுக்காக கடைகளில் தாங்களே வாங்கி மக்கள் உபயோகித்து வரும்  மாத்திரையே பரசிடமோல் ஆகும்.
புற்றுநோய்க்கும் வலி நிவாரணிகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய ஆய்வொன்றிலேயே இது தெரியவந்துள்ளது. இரத்தப் புற்றுநோய் குறித்த தனி  ஆய்விலேயே இந்த முடிவு தெரியவந்துள்ளது.
 நீண்ட கால அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. வலி நிவாரணிகளை அளவுக்கு அதிகம் உட்கொள்வது ஏனைய பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
பரசிடமோல் உலகில் மிகவும் பொதுவான மற்றும் பிரபலமான வலி நிவாரணியாகும். 1953ல் அமெரிக்காவில் இது முதன் முதலாக விற்பனைக்கு வந்தது.
மாத்திரைகளை அவரவர்களே கடைகளுக்குச் சென்று வாங்கி உட்கொள்வதை தவிற்க வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?