இந்தியா குரல் எழுப்பட்டும்

 இந்தியா முழுக்க குரல் எழுப்பட்டும்

“கிரா­மப்­புற, ஏழை எளிய மாண­வர்­க­ளின் மருத்­து­வக்­கல்வி வாய்ப்­பு­களை கடு­மை­யாக பாதிக்­கும் வகை­யி­லும், பள்­ளிக் கல்­வியை அவ­சி­ய­மற்­ற­தாக்­கும் வகை­யி­லும், மாநில மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளில் மாண­வர்­க­ளைச் சேர்க்­கும் உரி­மையை மாநில அர­சு­க­ளி­டம் இருந்து பறிக்­கும் வகை­யி­லும் அமைந்­துள்ள நீட் தேர்வு முறை அகற்­றப்­பட வேண்­டும். 

இந்­தத் தேர்­வி­லி­ருந்து தமிழ்­நாட்­டிற்கு விலக்கு அளித்து, பள்­ளிக் கல்­வி­யில் மாண­வர்­கள் பெறும் 12-–வது வகுப்பு மதிப்­பெண்­க­ளின் அடிப்­ப­டை­யில் மருத்­துவ மாண­வர் சேர்க்­கையை மேற்­கொள்­வ­தற்­காக, இந்­தச் சட்­ட­மன்­றப் பேரவை ஒரு­ம­ன­தாக நிறை­வேற்றி அனுப்­பிய நீட் விலக்கு சட்ட முன்­வ­டி­விற்கு ஒன்­றிய அரசு உட­ன­டி­யாக ஒப்­பு­தல் அளித்­திட வேண்­டு­மென்­றும், தொடர்ந்து பல முறை­கே­டு­க­ளுக்கு வழி­வ­குத்து வரும் இந்­தத் தேர்வு முறையை பல்­வேறு மாநி­லங்­க­ளும் தற்­போது எதிர்த்து வரும் நிலை­யில், தேசிய அள­வில் நீட் தேர்வு முறை கைவி­டப்­ப­டும் வகை­யில் தேசிய மருத்­துவ ஆணை­யச் சட்­டத்­தில் தேவைப்­ப­டும் திருத்­தங்­களை ஒன்­றிய அரசு மேற்­கொள்ள வேண்­டு­மென்­றும் தமிழ்­நாடு சட்­ட­மன்­றப் பேரவை ஒரு­ம­ன­தாக வலி­யு­றுத்­து­கி­றது.” - – என்­ப­து­தான் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் கடந்த 28 ஆம் தேதி­யன்று நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னம் ஆகும்.

டெல்லி, இமாச்­ச­லப் பிர­தே­சம், ஜார்­கண்ட், கர்­நா­டகா, கேரளா, பஞ்­சாப், தெலங்­கானா, மேற்கு வங்­கா­ளம் ஆகிய மாநில சட்­ட­மன்­றங்­க­ளி­லும் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்­றிய அர­சினை வலி­யு­றுத்­தும் வகை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­று­மாறு கோரி மாண்­பு­மிகு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் மேற்­கு­றிப்­பிட்ட மாநில முத­ல­மைச்­சர்­க­ளுக்­கும் கடி­தம் அனுப்பி இருக்­கி­றார்­கள்.
அனைத்து தொழிற்­கல்வி படிப்­பு­க­ளுக்­கும் மாண­வர் சேர்க்கை மேல்­நிலைத்­தேர்வு மதிப்­பெண்­க­ளின் அடிப்­ப­டை­யில் செய்­யப்­ப­ட­வேண்­டும் என்றும் தனி நுழை­வுத் தேர்­வின் அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­ளக்­கூ­டாது என்­றும் அந்­தக் கடி­தங்­க­ளில் தெளி­வு­பட மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளார்­கள்.
சட்­ட­ச­பை­யில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை மாண்­பு­மிகு பிர­த­மர் நரேந்­திர மோடி அவர்­க­ளுக்­கும் முத­ல­மைச்­சர் அவர்­கள் அனுப்பி இருக்­கி­றார்­கள். இது­தொ­டர்­பான சட்ட முன்­வ­டிவு மாண்­பு­மிகு குடி­ய­ர­சுத் தலை­வரின் ஒப்­பு­த­லுக்­காக ஏற்­கெ­னவே அனுப்பி வைக்­கப்­பட்ட போதி­லும், இது­நாள் வரை­யில் அக்­கோப்பு நிலு­வை­யில் உள்­ள­தாக தமது கடி­தத்­தில் வருத்­தத்­து­டன் குறிப்­பிட்­டுள்­ளார். 2017 முதல் மருத்­துவ மாண­வர் சேர்க்கை நியா­ய­மாக நடை­பெ­ற­வில்லை. 13.9.2021 முதல் முறை­யும், 8.2.2022 அன்று இரண்­டா­வது முறை­யும் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் நீட் விலக்கு சட்­ட­முன்­வ­டிவை நிறை­வேற்றி அனுப்பி இருக்­கி­றோம். 
இப்­போது மீண்­டும் தீர்மா­னம் நிறை­வேற்றி அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. இப்­போ­து­தான் நீட் மோச­டியை இந்­தியா முழு­மை­யாக உணர்ந்­து­வ­ரு­கி­றது.
தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளால் முன்­மொ­ழி­யப்­பட்ட தீர்­மா­னத்தை இந்­தி­யாவே வழி­மொ­ழி­யட்­டும். மாண்­பு­மிகு அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட ‘Dravidian Algorithm’ இந்­தி­யா­வுக்கு வழி­காட்­டட்­டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?