காலத்தின கட்டாயம்

 புதுமை பெண் திட்டத்தின் கீழ், வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகள் புதுமை பெண் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

 , 2024-25ம் கல்வியாண்டு முதல் ‘புதுமை பெண்’ திட்டத்தின் வாயிலாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்த மாணவிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள  அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்று  உயர்கல்வி பயிலும் மாணவியர் ‘புதுமை பெண்’ திட்டத்தில்  பயன்பெற அந்தந்த கல்லூரியின் சிறப்பு அலுவலர் (நோடல் அலுவலர்) வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை  அதன் ஓராண்டு விழாவை கொண்டாடும் வகையில்  குடும்பங்களுக்கு குறைந்த கட்டணங்களில்  முழுமையான சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் “ஃபேமிலி கிளினிக்கை” தொடங்கியுள்ளது. 

 இந்த புதிய ஃபேமிலி கிளினிக்கில் சிறார்கள் முதல், முதி யவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் முந்தைய காலத்தை போன்று குடும்ப நல மருத்துவரின் விரிவான சேவை கிடைக்கும். உடல்நலப் பரிசோதனைகள், தடுப்பூசி மருந்துகள் மற்றும் நோயறிதலுக்கான பரிசோதனைகள் போன்ற முன்தடுப்பு சுகாதார சேவைகள், நோய்கள் வராமல் தடுப்பதற்கும் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று மருத்து வமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்த் செல்வராஜ் 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கல்லேரி பட்டு ஊராட்சியில் 1500 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் பணியில் வேலை செய்து வருகின்றனர்.

 தற்போது வேலைக் கேற்ற ஊதியம் என்ற பெயரில் 40 முதல் 50 ரூபாய் வரை தினக்கூலியாக வழங்குவதை கண்டித்து குறைக்கப்பட்ட கூலியை மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 18ஆம் தேதி அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 

இச்சிறப்பு முகாமில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு, திருநங்கைகள் நல வாரியத்தின் அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

மேலும் பழைய திருநங்கை நலவாரிய அடையாள அட்டை  வைத்திருப்பவர்கள் மற்றும் இணையதள அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விவரத்தை https:// tg.tnsw.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த தகவலை மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள் தெரிவித்துள்ளார்.

 திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஆதி திரா விட நலத்துறை விடுதியில்  மாவட்ட ஆட்சியர் புதனன்று ஆய்வு மேற்கொண்டார்.  

 ஆய்வின் போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்தும், அவை சுகாதாரமான முறையில்  வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். மாணவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளான மருத்துவ முதலுதவி மருத்துவ பெட்டகத்தை பார்வையிட்டு காலாவதி ஆகாத மருந்துகள் இருப்பு இருக்கிறதா என்பதை பார்வையிட்டார்.  மாணவர்களுக்காக வைக்கப் பட்ட புகார் பெட்டி சரி வர பராமரிக்கப்படாமல் இருப்பது குறித்து  விடுதி காப்பாளருக்கு எச்சரிக்கை செய்தார்.  

மேலும்  விடுதி காப்பாளர்களை  கண்காணித்து அவர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் வகுப்புகள் நடத்தவும் அறிவுறுத்தினார்.

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும்’ 

என்னும் குரல் தொடர்ந்து அதிமுகவுக்குள்ளும், வெளியிலும் கேட்கத் தொடங்கியுள்ளது. ஒருபக்கம் சசிகலா பல ஆண்டுகளாகவே அதிமுக ஒருங்கிணைப்புப் பற்றி பேசி வந்தார். தற்போது இது கட்சிக்குள்ளும் கேட்க தொடங்கியுள்ளது. 'அதிமுக ஒருங்கிணைப்பு' நிலை மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து எம்.பி தேர்தலில் தோல்வியைச் சந்தித்தவுடன் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தீவிரமாகப் பேசி வருகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.


 இந்த நிலையில், இதற்கு முன்னதாக, ஓபிஎஸ் அணியில் இருந்த ஜேசிடி பிரபாகர், புகழேந்தி ஆகியோர் ஓபிஎஸ் அணியிலிருந்து வெளியேறி கேசி பழனிச்சாமியோடு இணைந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்பதை நிறுவினர். இப்படியாக அதிமுக ஒருங்கிணைப்பு என்பது கடந்த சில தினங்களாக ஒலித்து வருகிறது.

 அதிமுகவின் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் ஜூலை 10-ம் தேதி நடந்தது.’ 

கூட்டத்திற்கு முன்பே ஒருங்கிணைப்புக் குறித்து யாரும் பேசக் கூடாது’ என ஆர்டர் போட்டார் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்புப் பற்றி எந்த சத்தமும் இல்லை என்னும் தகவல் சொல்லப்பட்டது. அதிமுக சிறப்பான கூட்டணி அமைக்காதது குறித்தும் பலரும் கருத்து தெரிவித்தனர்.

 அதன்பின் தான், ‘2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமையும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்’ எனக் கட்சி நிர்வாகிகளுக்கு வலியுறுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

 சில தினங்களுக்கு முன்பு, செங்கோட்டையன் வீட்டு விழாவில் அதிமுகவின் முக்கியமான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் தீவிரப் பேச்சுவார்த்தையில் இறங்கினர். அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே தேர்தலில் வெற்ற பெற முடியும் என அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், இதற்கு எடப்பாடி பழனிச்சாமி இறங்கி வரவில்லை.

இந்த ஒருங்கிணைப்புக் குரல்கள் இப்போது ஒலிக்கத் தொடங்கியவை அல்ல. அதிமுக 2021-ம் ஆண்டு தேர்தலின்போது டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்னும் கோரிக்கை வந்தது. ஆனால், அதனை மறுத்தார் பழனிசாமி. 

அதன்பின், உள்ளாட்சி தேர்தலில் தொடர் தோல்வியைச் சந்தித்தது அதிமுக. அதுமட்டுமில்லாமல், பாஜக போன்ற தேசிய கட்சிகளை இங்கு வளரவிட பழனிசாமி வழி செய்துவிட்டாரோ என்னும் சந்தேகம் பல அதிமுக தொண்டர்களுக்கும் எழுந்தது. குறிப்பாக, கடந்த மக்களவைத் தேர்தலில் கோவை போன்ற அதிமுக கோட்டையிலும் பாஜக இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

 இப்படியாக பழனிசாமியின் முடிவுகள் தொடர் சறுக்கலைச் சந்தித்தன. அதன்பின் இந்த ஒருங்கிணைப்புக் குரல் சத்தமாக ஒலிக்கத் தொடங்கியது (கட்சிக்கு உள்ளும் வெளியிலும்).

தேர்தலில் தோல்வியைத் தவிர்க்க ஒருங்கிணைப்பு அவசியம் என அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கூறியும் ஏன் தயக்கம் காட்டுகிறார் பழனிசாமி? அது தயக்கமில்லை, அதன்பின் அவரின் வியூகம் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றியைத் தேடி தந்தது பலமான கூட்டணிதான். அதனால்தான், 2026-ம் ஆண்டுக்குள் பலமான கூட்டணியை அமைக்க திட்டமிட்டிருக்கிறார் பழனிசாமி. இதே கருத்தை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் பேசியுள்ளதாக தகவல் வெளியானது.

 ஏற்கெனவே, அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருக்கிறது. கடந்த தேர்தலில் பாமகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர திட்டமிடப்பட்டது. ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது பாமக.

ஆகவே, 2026-ல் பாமகவைக் கூட்டணிக்குள் கொண்டுவர விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததாக சொல்லப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில், ”அதிமுக தொண்டர்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம்.

 பாமகவுக்கு வாக்களிக்களியுங்கள்” எனப் பேசினார் பாமக நிறுவனர் ராமதாஸ். இது வரும் தேர்தலில் ’பாமக - அதிமுக’ இடையிலான கூட்டணியை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக முன்வைக்கப்படும் கருத்துகளையும் புறந்தள்ள முடியாது.

அதேபோல், திமுகவில் கூட்டணியில் இருக்கக் கூடிய கட்சிகளைத் தங்கள் பக்கம் இழுக்கவும் அதிமுக திட்டமிட்டது. கடந்த தேர்தலின்போதே அதற்கான வேலைகளைச் செய்தது அதிமுக. குறிப்பாக, அதிமுக தூது அனுப்பியதை மேடையிலேயே போட்டு உடைத்தார் விசிக கட்சித் தலைவர் திருமாவளவன். ஆனால், அப்போது பழனிசாமியின் வியூகம் கைகொடுக்கவில்லை.

ஆகவே, இப்படியாக பல்வேறு திட்டங்களை வகுத்து அதன்வழி நடக்க திட்டமிட்டிருக்கிறார் பழனிச்சாமி. ஆனால், அதற்கு முட்டுக்கட்டைப் போடும் விதமாக கட்சியை ஒருங்கிணைக்க வேண்டுமென முக்கியமான நிர்வாகிகள் பேசுகின்றனர். ஒருவேளை, அதிமுக ஒருங்கிணைந்தால் தன் தலைமைக்கு ஆபத்து ஏற்படும் என நினைக்கிறார் பழனிசாமி. காரணம், கடந்த 10 தேர்தல்களிலும் தொடர் தோல்வியைச் சந்தித்தது அதிமுக. அப்போது தலைமை பதவியில் இருந்தவர் பழனிசாமி தான்.

ஆனால், ஒருங்கிணைப்புக்குப் பின் அதிமுகவுக்கு வெற்றி கிடைத்தால் பிற தலைவர்களின் வருகைதான் காரணம் என்னும் கருத்து முன்வைக்கப்படும். அதுமட்டுமில்லாலம், பிறரின் கை கட்சிக்குள் ஓங்க வாய்ப்பிருக்கிறது.

 அதனால், தனியாளாக நின்று இந்தக் கூட்டணி கணக்கை வெற்றியடைச் செய்ய வேண்டுமென நினைத்துதான் இவர்களின் ஒருங்கிணைப்புக் கோரிக்கையை நிராகரித்து வருகிறார் பழனிச்சாமி என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ஆனால், ஜானகி கடிதம் எழுதி ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றதுபோல, சசிகலா கடிதம் கொடுத்தால் பார்க்கலாம் என்பது போல பேசினார் பழனிசாமி. ஆம், எப்படியாக இருந்தாலும், சசிகலாதான் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் வாய்ப்பை வழங்கினார். அதனை சரியாகப் பயன்படுத்தி கட்சி, ஆட்சி என இரண்டையும் தன் கன்ட்ரோலில் வைத்திருந்தார் பழனிசாமி என்பது வேறு கதை.

அதுதவிர, சசிகலா எதிர்ப்பார்ப்பது கட்சி அதிகாரம்தானே தவிர, ஆட்சி அதிகாரத்தில் தலையை நுழைக்க மாட்டார் என நினைக்கிறார் பழனிசாமி. ஆனால், அதுவே டிடிவி, ஓபிஎஸ் என இருவருமே ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பார்கள். 

இந்த அதிகாரப் பகிர்வு தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும். அதனால், ஒருங்கிணைப்பை ஏற்க மறுக்கிறார் பழனிசாமி என்னும் வாதமும் வைக்கப்படுகிறது.

ஆனால், எடப்பாடி பழனிசாமியின் அடுத்தடுத்த முடிவுகள் சொதப்பவே கட்சித் தொண்டர்களும் கூட தலைமை, கட்சி மீதும் நம்பிக்கை இழந்துள்ளனர். அவர்களும் ஒருங்கிணைப்பு வேண்டும் எனக் கேட்கின்றனர். இந்த சுணக்கத்தாலும் கூட தொண்டர்கள் மக்களவைத் தேர்தலில் சரியாக வேலை செய்யாமல் போயிருக்கலாம் என்னும் கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

 அதனால்தான், வெளியே மட்டும் கேட்டுக் கொண்டிருந்த ஒருங்கிணைப்புக் குரல் கட்சிக்குள்ளும் வலுவாகக் கேட்க தொடங்கிவுள்ளது. ஆகவே, அதைக் கருத்தில் கொள்வாரா பழனிச்சாமி? இல்லை, தன் முடிவுக்கு மற்ற மூத்த நிர்வாகிகளைத் தலை அசைக்க வைப்பாரா என்பதற்கான பதிலை காலம் சொல்லும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக