கோபுரத்தில் இருக்கும் குப்பை

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்.

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை.

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் – தொழிலாளர் கட்சி முன்னிலை.ரிசி சுனக் கட்சி படுதோல்வி.
பொருளற்று பேசும் மோடி! : சபாநாயகருக்கு கடிதம் எழுதிய எம்.பி மாணிக்கம் தாகூர்!
கோபுரத்தில் இருக்கும் குப்பை

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பங்கேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசினார்.


 அப்போது, செங்கோலுக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன. ஒன்று, அது அறம் மற்றும் நேர்மையின் குறியீடு. பாஜகவுக்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

 இரண்டாவது அது மன்னராட்சியின் குறியீடு. செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தனது அந்தப்புரத்திலே எத்தனையோ பெண்களை அடிமையாக வைத்திருந்தான். 

அந்தச் செங்கோலை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் வைத்ததன் மூலம் இந்த நாட்டுப் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.


 இதற்காக அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும் சு. வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக ஆத்திரத்தைக் கொட்டி வருகின்றனர். மோசமான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.


 இந்நிலையில், பாஜகவினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

கம்யூனிஸ்டுகள் சமூகத்திற்கு  பிடித்த கேடு என்று சொல்லியிருக்கி றீர்கள். யார் கேடு கெட்டவர்கள் என்பதை சமூகம் பார்த்துக் கொண்டு  தான் இருக்கிறது. 

ஒரு கொலை வெறி தத்துவத்தை கொண்டாடு கிறவர்கள் நீங்கள். மகாத்மா தொடங்கி கொலைவெறி தான்  உங்கள் தாரக மந்திரம். வன்முறை  இல்லாமல் நீங்கள் வளர்ந்த இடம் ஒன்றைச் சொல்ல முடியுமா?

 மண்டைக்காடாக இருக்கட்டும், கோயம்புத்தூராக இருக்கட்டும். ஏதேனும் விதிவிலக்கு உண்டா?

வெறுப்பைத் திண்று வெறுப் பின் ஊற்றுக் கண்ணாகவே மாறிப்  போன ஒரு தத்துவத்தை தலை யில் தூக்கி வைத்து ஆடுகிறீர்கள்.  வென்றவர் மட்டுமே நேர்மையாளர்  என்றால் நீங்கள் காங்கிரசுக்கு எதி ராக போட்டியிட்டிருக்கவே கூடாது.  

1952 முதல் 1975 வரை அவர்கள்தான்  வெற்றி பெற்றுக் கொண்டே இருந்  தார்கள். வெல்வதுதான் நியாயம் என்றால் இந்தியாவை வென்ற  பிரிட்டீஸ்காரனை விரட்டியிருக் கவே கூடாது. வெல்வதுதான் நியா யம் என்றால் தமிழகத்தில் 1967க்குப்  பின் திராவிடக் கட்சிகள்தான் ஆட்சி யில் இருக்கின்றன. 

அதை ஏற்றுக்  கொண்டு போகவேண்டியது தானே. எதற்காக கழகங்கள் இல்  லாத தமிழகம் என்று கம்பு சுத்து கிறீர்கள். வெல்வது நியாயம் என் பது ஒரு கீழ்த்தரமான காக்காய் பிடிக்கும் பிழைப்புவாதம்.


நியாயத்தை வெல்வதற்காக போராடி வெற்றி பெறுவது கம்யூ னிசம். பிழைப்பு வாதிகள் கம்யூ னிஸ்டுகளைப் பார்த்து கேள்வி கேட்கக் கூடாது. கையெடுத்து கும்  பிட்டு ஒதுங்கிச் செல்ல வேண்டும்.

ஜனசங்கம் என்று பெயர் வைத்  துக் கொள்வது.


 கடை போனியாக வில்லை என்றதும் பாரதிய ஜனதா  என்று உருமாறிக் கொள்வது. அதன்  நோக்கம் காந்தியின் சோசலிசம் என்பது. காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு ஒரு கும்பிடு, காந்திக்கும் ஒரு கும்பிடு என்று பச்சோந்தித்தனம் செய்வது.

சோசலிசம் அந்நியத் தத்துவம்  என்பது. அதுவே எங்கள் கொள்கை  என்று முழங்குவது. பிறகு சத்தம் போடாமல் அதை விட்டுவிட்டோம் என்பது.

 நாங்களும் ரவுடிதான் என்  பது போன்று வாஜ்பாய் விடு தலைப் போராளி என்று உதார் விடு வது. ஆதாரம் காட்டு என்றவுடன்  அடங்கிப் போவது. இதெல்லாம்  ஒரு பிழைப்பு என்று அதையே பெரு மையாக சொல்வது. இதற்குப் பெயர்தான் கேடுகெட்டதனம்.

ஒன்றாய் இருந்தால் என்ன? இரண்டாய் இருந்தால் என்ன? உண்மையாய் இருப்பது முக்கி யம். ஒரு மலை குப்பையை எரிக்க  ஒரு பொறி தீ போதும். எத்தனை குப்பை மலையும் தீயினை ஒன் றும் செய்துவிட முடியாது.

கோயிலையும் தெய்வத்தை யும் அரசியலாக்கி அதில் வியாபா ரம் செய்யும் ஒரு கும்பல் ராமருக்கு  கோவில் கட்டிவிட்டேன் என்று எல்  லோரும் வர வேண்டும், வராதவர் கள் ராமர் விரோதிகள், இந்து விரோ திகள் என்று சொன்னபோது நீ  செய்வது வியாபாரம், நீ செய்வது  அரசியல் பம்மாத்து. வரமாட்டேன் போ என்று சொன்ன அந்த தைரி யம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இருந்தது.  

குரங்குகள் போல கூச்சலிட்டவர் களை ராமர் தோற்கடித்தாரோ இல்லையோ, அயோத்தி மக்கள் அவதேஷ் பிரசாத் என்கிற ஒரு பட்டியலினத் தலைவரை வைத்து செவிலில் அறைந்திருக்கிறார்கள். 

மார்க்சிஸ்ட் கட்சி பற்ற வைத்த நெறுப்பு உங்களைப் பதற வைத்தி ருக்கிறது.

ஆசிபா என்கிற ஒரு அரும்பை  உங்கள் ஆட்கள் கசக்கிப் போட்டார் கள். அந்தப் பெண்ணின் தந்தை நினைத்திருக்கிறான், கோவிலில் தேட வேண்டாம் அங்கு தப்பு  நடக்காது என்று. 

அந்த நம்பிக்கை யை வைத்து அந்த அரும்பைச் சிதைத்தவர்கள் உங்கள் ஆட்கள். கடைசியாக ஒரே ஒருவன், அந்த  மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பின ராக இருந்தான்.

 அவன் பெயர் யூசுப்  தாரிகாமி. அவன் ஒரு மார்க்சிஸ்ட். குப்பை மலைகள் ஒன்று சேர்ந்து மறைக்க நினைத்ததை அந்த ஒற்றைத் தீக்குச்சி குப்பைகளை எரித்து உலகுக்கு உண்மையைச் சொன்னான்.

அண்ணாமலையாக இருந்தா லும் சரி, குப்பை மலையாக இருந்  தாலும் சரி கம்யூனிஸ்டுகளுக்கு முன் னால் ஒன்றும் இல்லாதவர்கள்.

ஜெய்ஸ்ரீராம் என்ற போர்வைக் குள் பில்கிஷ் பானுவையும் அவ ளோடு இருந்த ஆறு பெண்களை யும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி 14 பேரைக் கொன்றவர்  களை உங்கள் குஜராத் அரசாங்கம்  விடுவித்தது. நீதிமன்றங்கள் கூட  துணைக்குப் போனது. 

ஒரேயொ ருத்தி சுபாஷினி அலி, கம்யூனிஸ்ட்.  நீதிமன்றத்திற்கு சென்றாள். உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த 11 பேரையும் உள்ளே அடைத்தது.

அண்ணாமலை கொண்டாடிய  303 நாடாளுமன்ற உறுப்பினர் களும் அப்போது அவர்களுக்கு இருந்த 1400 சட்டமன்ற உறுப்பி னர்களும் ஒன்றும் சாதித்துவிட முடியவில்லை.

தேர்தல் பத்திரம் அது ஏதோ திருவாசகம் போன்று புனிதமானது என்று பீற்றித் திரிந்தீர்கள். உங் கள் கொள்ளையை மறைக்க நினைத்தீர்கள். 

ஒரு சீட்டும் ரெண்டு  சீட்டும் வைத்திருக்கிற சிபிஐ(எம்) மட்டும்தான் நீதிமன்றம் சென்றது.  மோடி முதல் அண்ணாமலை வரை  அத்தனை பேரையும் கலங்க வைத்தது.

அண்ணாமலைக்கு என்ன தெரியும்? வாச்சாத்தி 500 பேர் மட்  டுமே வசித்த கிராமம். ஒரு சீட்டும்  ரெண்டு சீட்டும் வைத்திருக்கும்  கம்யூனிஸ்ட் கட்சிதான் ஜெயலலி தாவை, செங்கோட்டையனை, 265 அரசு அதிகாரிகளை எதிர்த்துப் போராடி நீதியை நிலைநாட்டியது.

 அண்ணாமலையைப் போன்று  ஐபிஎஸ் என்கிற பட்டத்தை அணிந்து கொண்டு, அது தாங்கள் செய்கிற கேடுகளுக்கு எல்லாம் கவசம் என்று நினைத்தவர்களை அடி பணிய வைத்தது. அப்போது பாஜக  தமிழகத்தில் உயிரோடு தானே இருந்தது.

 ஒற்றை வார்த்தை நியா யம் வேண்டுமென்று எப்போதா வது பேசியிருக்குமா?

இருத்தல் என்பது உயிரோடு  இருப்பதல்ல, இயங்குவது. 


இயங் குவது என்பது நியாயத்திற்காகப் போராடுவது. எதுவும் செய்யா மல் வாய்ச்சவடால் அடித்துக்  கொள்பவர்கள் கம்யூனிஸ்டுகளை நோக்கி குரலை உயர்த்தக் கூடாது.

அண்ணாமலைக்கு ஒன்று சொல்ல வேண்டும். 1920ல் தான் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. 1921 காங்கிரஸ் மாநாட்டில் பூரண  சுதந்திரம்தான் சரியான கோரிக்கை, அந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு வன் அந்த மாநாட்டில் முழங்கி னான்.

 அவன் ஒரு கம்யூனிஸ்ட். அவன் பெயர் மௌலான ஹஸ்ரத் மொகானி. அண்ணாமலை முடிந் தால் படிக்கட்டும். படித்தால் அவர்  பாஜகவில் இருக்க மாட்டார். இது போன்று கேடு, ஒற்றை உறுப்பி னர் கட்சி என்று உலறிக் கொண்டி ருக்கவும் மாட்டார். 

அப்படி எண் ணம் வந்தாலே அதோடு சேர்ந்து கொஞ்சம் வெட்கமும் வரும். அண்ணாமலைகளுக்கு அது புரியாது.

வழக்கமாக குப்பைகள் குப்  பைத் தொட்டிக்குள்தான் கிடக்கும். 

சில நேரங்களில் சூரைக்காற்றால் அவை கோபுரங்கள் மீது ஒட்டிக் கொண்டுவிடும். 

அப்போது நான்  கோபுரத்தில் இருக்கிறேன் பார்த் தாயா என்று குப்பைகள் தங்களை கொண்டாடிக் கொண்டால் அது பெருமையல்ல. 

அறியாமை.

                        

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?