NO FIRE ZONE

இந்தியாவின் காலில் தொங்கிக்கொண்டிருக்கும் ஈழத்தீவில் அதன் மூத்த குடி மக்கள் கொத்து,கொத்தாக அழிக்கப்பட்டுள்ளனர்.
என்னவென்றே உலகம் அறியா சிறுவர்கள் [பாலச்சந்திரன் உட்பட]கொன்று குவிக்கப்படிருக்கிறார்கள்.
ஆனால் அதை தட்டி கேட்க உரிமையுள்ள இந்திய அரசோ அதற்கு நட்பு நாடு என்று புத்தனாக தன்னை காட்டிக்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் குடி மக்களான தமிழர்களின் ரத்த உறவுகள் கொலைகளை தட்டி கேட்க இந்திய ஆட்சியாளர்களை தடுப்பது எது.அந்நிய நாட்டு விவகாரம் என்ற சாக்கு போக்கு வெண்டாம்.பாலஸ்தீனம்,ஈராக்,வங்க தேசம் என்று அந்நிய நாடுகளில் தலை விட்டு   இந்தியா.
இன்றைக்கு வங்க தேசமாக  கிழக்கு பாகிஸ்தான் உருமாற பாகிஸ்தானுடன் போரிட்டதுதான் இந்தியா .
தனி ஈழம் உருவாக்க இந்திய சோனியா அரசு இலங்கை ராஜபக்சேயுடன் போர் தொடுக்க சொல்லவில்லை
அமேரிக்கா,ஆஸ்திரெலியா,கனடா போன்ற மேலை நாடுகள் எல்லாம் இலங்கை பக்சே அரசுக்கு எதிராக கண்டனம்,ஐ.நாவில் தீர்மானம் என்று மனிதாபிமானத்துடன் செயல் படும் போது தமிழர்கள் வாழும் இந்தியா இலங்கை கொலை குற்றங்களுக்கு அமைதியாக் ஆதரவு தருவது ஏ ன்?
சோனியாவின் சொந்த விருப்பு-வெறுப்புக்கு இந்திய நாடே பணிந்து போகிறதா?
அப்படி எனில் விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி லட்சக்கணக்கில் அப்பாவி மக்களை கொன்று குவித்த் ராஜபக்சேக் கும்  இந்திய ஆட்சியாளர்களுக்கும் என்ன வித்தியாசம்?
இந்தியா-இலங்கை இரண்டுமே போ ர்குற்றவாளிகள்தான்.






-------------------------------------------------------------------------------------------------------------------------------------










இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?