தொழில் நுட்பங்கள்

நேர்மையான தேர்தல்கள் நடத்துவதற்குப் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவது மிகவும் முக்கியமான தேவையாக உள்ளது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி பேசியிருக்கிறார்.
அப்படி என்றால் இதுவரை இந்தியாவில் நேர்மையாக தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்று சொல்லுகிறாரா?
இருக்கும் வசதிகள் காணாதா?இன்னும் என்ன வகையான வசதிகளை குரேஷி எதிர்பார்க்கிறார்.
சுரன்

இரவும் பகலும் வேறு வழியின்றி பனி செய்யும் அரசு ஊழியர்கள்.பாதுகாப்புக்கு காவல்தூறை அவர்களையும் மீறி துணைராணுவம்,கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு,அளவற்ற அதிகாரம்.இவைகளை வைத்துக்கொண்டு நேர்மையாக தேர்தலை நடத்த இயலாதது யார் தவறு.
அரசியல்வாதிகளுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பணிந்து போகும் சில தவறுகளால்தான் தேர்தல் தவறுகள் நடத்தப்படுகிறது.இதில் ஆள்பார்த்து தேர்தல் விதிகளை கடை பிடிப்பதை அமுலாக்குவதில்தான் தேர்தல் ஆணையம் தவறிவிடுகிறது.கடந்த தமிழக சட்ட மன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் தனது சக்திக்கு மீறி கடுமையை கடை பிடித்தது.
சாலை ஓரம் இருக்கும் கொடிகளை கழற்றக்கூறியது.கழற்றியும் கூட திருப்தியடையாமல் அந்த வெற்றுக்கம்பங்கள் மீதும் துணிகளை சுற்றி மறைக்கக்கூறும் அளவு கெடுபிடிகள்.
ஒரு கட்சியின் பொறுப்பாளரை அவர் மத்திய அமைச்சராக இருந்தும் அவரை வீட்டை விட்டு பிரசாரத்துக்கு போகக் கூடாது என்று வீட்டுக்காவலில் வைத்தார்கள்.
ஆனால் இவை எல்லாம் அடுத்து நடந்த திருச்சி, சங்கரன் கோவில் இடைத்தேர்தல்களில் கடைபிடிக்கவில்லையே ஏன்?
சட்டமன்றத்தேர்தலில் தாங்கள் நினைத்த முடிவு வந்து விட்டதுதான் காரணமா? 
ஆக தேர்தல் ஆணையத்திற்கு இப்போது இருக்கும் வசதிகளும்-அதிகாரமும் வானளாவி உள்ளது.இன்னமும் தேவை அல்ல.
அவற்றை ஆள்பார்த்து செய்யாமல் நடுநிலையுடன் நடந்து கொண்டாலே போதும்.
மராட்டிய தேர்தலின் போது லட்சக்கணக்கில் பணத்தை வாக்காளர்களுக்குக்கொடுக்க கொண்டு சென்றாரே .பிரதிபா பாட்டீல் மகன் அதாங்க நம்ம குடியரசுத்தலைவரின் மகன். அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.உ.பி.யில் விதியை மீறி ஊர்வலம் சென்றார்களே ராகுல்,மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் விட்டாரே அவரின் மைத்துனர் -சோனியா மருமகன் வதேரா அவர்கள் மீது எடுத்த நடவடிகைதான் என்ன?
இங்கு ஜார்ஜ் கோட்டையில் இருந்து அமைச்சரவையே சங்கரன் கோவிலில் முன்பும்,புதுக்கோட்டையில் தற்போதும் செயல்பட உள்ளதே அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்.அரசு ஊழியர்களை ஒரு சார்பாக செயல் படுவார்கள் என்று காவல் கண்காணிப்பாளர்கள்,மாவட்ட ஆட்சியர்களை மாற்றும் தேர்தல் ஆணையம் அரசிடம் சம்பளம் பெறும் அமைச்சர்கள் ஒரே இடத்தில் குவிந்து ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை மட்டும் தடுக்காதது ஏன்?
அங்கு அதிகார மீறல்கள் நடக்காதா?
_________________________________________________________________________________
"சச்சினை மாநிலங்கவை உறுப்பினராக்குவதை பிரச்னை ஆக்கக்கூடாது .சந்தேகம் இருப்பவர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் 80 ஆவது விதியை படித்துப்பாருங்கள் .அதில் சச்சினை உறுப்பினராக்கலாம் என்று உள்ளது"
இதை ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சுரன்

எங்களிடம் அரசியலமைப்பு சட்டப்புத்தகம் கிடையாது.ஆனாலும் ப.சி.யின் வார்த்தையை நம்ம்புகிறோம்.சச்சினை மாநிலங்களவை உறுப்பினராக்கலாம் என்று 80 ஆவது விதியை எழுதியுள்ளார்கள் என்றால் நம் இந்திய அரசியல் சட்டம் எழுதியவர்கள் உண்மையிலேயே தீர்க்கதர்சிகள்தான்.நார்ஸ்டர்டாமும்,ஒலைச்சுவடியில் நித்தியானந்தா பெயரைப்பார்த்து இளவரசராக பட்டம் சூட்டிய மதுரை ஆதினம் அருணகியாரும் தோற்றார்கள் போங்கள்.
___________________________________________________________
இன்று மே தினம்
உலகம் முழுவதும் தீப்பொறியாக பரவும்

சிகாகோ தியாகிகள் பார்சான்ஸ், ஏங்கெல், ஸ்பைஸ், பிட்சர் (தூக்கிலிடப்பட்டவர்கள்) லிங்க் சிறையில் இறந்தவர். (நடுவிலிருப்பவர்).
1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் 40 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் ஹார் வெஸ்டர் என்ற கம்பெனியின் முன் னால் திரண்டிருந்த 500 தொழிலாளர் களிடையில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அமைதியான முறையில் நடைபெற் றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தன மாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். ஐவர் படுகாயமுற்ற னர். பலர் தாக்கப்பட்டனர். இந்த அடக்கு முறையை கண்டித்து அன்று இரவு, சிகாகோ நகரின் மையப் பகுதியில் உள்ள ஹே மார்கெட் என்ற இடத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்சான்ஸ், சாமு வேல் பீல்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதால் இறுதி கட்டத்தில் சுமார் 200 தொழிலாளர் கள் மட்டுமே இருந்தனர். சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜான்போன் பீல்டு என்ற அதிகாரியின் தலைமையில், 180-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கூட்டத்தினரை வளைத்து உடனடியாக கலைந்து போகும்படி உத்தரவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. அப்போது திடீரென்று காவல்துறை யினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது. அதில் ஒருவர் உயி ரிழந்தார். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட்டனர். இதில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
உரிமைக் குரல்
இந்த கலவரத்தை காரணம் காட்டி தொழிலாளர்களின் தலைவர் கள் கைது செய்யப்பட்டனர். 1886-ம் ஆண்டு மே 1-ம் தேதி கைது செய்யப் பட்டு ஒரு ஆண்டிற்கு மேலாக நீதிமன் றத்தில் விசாரணை செய்யப்பட்டு, 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம்தேதி அவர்கள் தூக்கிலிடப்பட்ட னர். மேற்கண்ட நான்கு தோழர்களு டன், அடால்ப் பிட்சர், மைக்கேல் ஸ்வார்ப், சாமுவேல் பீல்டன், லூயிஸ் லிங்க் மற்றும் ஆஸ்கர் நீப் ஆகிய தோழர் களும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஆஸ்கர் நீப் என்ற தோழ ருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற தோழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே போராட்டங்கள் நடை பெற்றன. இதன் விளைவாக ஸ்வார்ப் மற்றும் பீல்டன் ஆகியோருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தோழர்கள் ஆல்பர்ட் பார்சான்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ந்தேதியன்று தூக்கிலிடப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்ற தோழர் சிறை யிலேயே தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.
நீதிமன்றத்தில்உரிமைக் குரல்
சிகாகோ நகர தொழிலாளர் களுக்கு 8 மணி நேரம் வேலை கேட்டு நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய தோழர் களில் முதன்மையானவர் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் ஆவார். நீதிமன் றத்தில் இவர் மீது குற்றம் சுமத்தி வாதா டிய அரசு வழக்குரைஞர், ‘ஆயிரம் ஆயிரம் தொழிலாளர் இவர் பின்னால் அணிதிரண்டதே இவர் செய்த முதன் மையான குற்றம்’ என வாதிட்டார். ஆகஸ்டு ஸ்பைஸோ, ‘இந்த குற்றச் சாட்டே தனக்கு தற்காப்பு வாதமாக அமைந்துவிட்டது” என எதிர்வாதம் செய்தார். காவலர்கள் மீது தான் குண்டு வீசியதாக அரசு தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது இதன்மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்டதாக வாதிட் டார். காவலர்கள் மீது வீசப்பட்ட குண்டு தன்னால் உண்மையில் வீசப்பட்டி ருந்தால், அதை நீதிமன்றத்தில் ஏற் றுக்கொள்வதில் தனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது என்று தைரி யத்தோடு உரைத்தார்.மற்றொரு தோழர் ஆல்பர்ட் பார் சான்ஸ் நீதிமன்றத்தில் வாதாடுகையில்,மரம் கனிகளால் அறியப்படுவதைப் போல் தொழிலாளர்கள், போர்க்குணம் மற்றும் தியாகத்தின் மூலம் தங்களது உண்மையான தலைவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். தங்களுக்கு அளிக்கப்படும் மரண தண்டனை தீப்பொறியாக உலகம் முழுவதும் பரவும் என ஆர்ப்பரித்தார்.
ஆஸ்கர் நீப் என்ற தோழர், கல வரம் விளைவிக்கப்பட்ட இடத்தில் நடந்த கூட்டத்திற்கு தான் தலைமை வகித்தேன் என்ற உண்மையை இந்த நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்வ தாகவும், 8 மணி நேரம் வேலை கேட்டு போராடிய தொழிலாளர்க ளுக்கு நான் தலைவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப் படுவதாகவும் உரைத்தார்.தோழர் மைக்கேல் ஸ்வார்ப், நீதி மன்றத்தில், தங்களுடைய நோக்கம் கலகம் விளைவிப்பது அல்ல, சோச லிசத்தை அடைவதே என்று பிரக டனப்படுத்தினார். தோழர் ஜார்ஜ் ஏங்கல், தொழிலா ளர்களின் தேவை, வேலை, ரொட்டி, அமைதி, இவை மூன்றுதான். இது கூட இவர்களுக்கு இன்று உத்தரவா தப்படுத்தப்படவில்லை என்று முழக்க மிட்டார். தோழர் சாமுவேல் பீல்டன் நீதி மன்றத்தில் உரையாற்றுகையில், நாங் கள் சோசலிசத்தைப் பேசினால் சிலர் பயப்படுகிறார்கள். நாங்கள் பிறரின் சொத்துக்களை சோசலிசத்தின் பெய ரில் அபகரித்து விடுவோம் என நினைக் கிறார்கள். ஆனால் சோசலிசத்தின் நோக்கம் அது அல்ல. யார் ஒருவர் இன்னொருவருடைய சொத்துக்களை திட்டமிட்டு பறிக்கிறார்களோ, அதை தடுத்து நிறுத்தக்கூடிய அமைப்பை உருவாக்குவதுதான் சோசலிசம் என விளக்கினார்.
முதலாளித்துவத்திற்கு சாவுமணி!
சுரண்டப்படும் தொழிலாளர்களை திரட்டி, சோசலிச உணர்வுகளை ஊட்டி முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக கிளர்ந்தெழச் செய்வதை ஒடுக்கவே, காவல்காரர்களே குண்டு வீசி சதி செய்து, தங்கள் மீது குற்றம் சுமத்தி மரண தண்டனை வழங்க திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிந்தி ருந்தும், மே தின தியாகிகள் சிறிதும் அஞ்சவில்லை. நீதிமன்றத்தில் வாதாடுவது மூலம் தாங்கள் தண் டனையிலிருந்து தப்பமுடியும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்தக் கொலைக்களத்தை யும் பிரச்சார மேடையாக பயன்படுத்தி முதலாளித்துவத்தின் முகமூடியை கிழித்தெறிந்து, சோசலிசத்தின் மேன் மையை தூக்கிப் பிடித்து, நீதிமன்றத் தில் அவர்கள் ஆற்றிய உரையும், ஆதிக்க சக்திகளின் திணறலையும், வரலாற்று ஆவணமாக மாற்றிய அவர்களின் வீரத்தை போற்றி பாராட்ட வார்த்தைகளே இல்லை. அவர்கள் எதிர்பார்த்தது போலவே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீரத்துடன் போராடிய அந்த தோழர் களுக்கு கிடைத்த மரண தண்ட னையே முதலாளித்துவத்திற்கு அடிக் கப்பட்ட முதல் சாவு மணியாக மாறி யது. அவர்களின் மரணமே உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்த்திடும் மகத்தான சக்தியாக இன்று உருவெ டுத்து உள்ளது. மே தின தியாகிகள் வாழ்க!
                                                                                                                                   க .ராஜ்குமார்
மேதினத்துக்கு முந்திய ஏப்-30இல்தான் ஹிட்லர் தர்கொலை செய்து கொண்டான்.[1945]

மேதினம் பிறந்த அமெரிக்காவில் இன்று மேதின் ஊர்வலங்கள் நடத்த வால்தெரு முற்றுகையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.அதை தடுக்க காவல் படையினர் முயற்சிக்கின்றனர்.

சுரன்

புத்தக தின கொண்டாட்டம்-?
சுரன்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?