எண்ணை வாங்காதே

இப்போது கிலாரி கிளிண்டன் இந்தியா வந்தாலும் வந்தார்.ஈரானிடம் கச்சா எண்ணை வாங்குவதை நிறுத்துங்கள்.அதற்கு முன்னர் படிப்படியாக குறையுங்கள் என்று கூறியுள்ளார்.
சுரன்

அவர் சொல்லுவதை அப்படியே ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மன்மோகன்சிங் ஒத்துக்கொண்டார்.வெளியுறவு அந்தோனியோ இந்தியா பெட்ரோலிய எண்ணைக்கு வெளிநாடுகளையே நம்ப வேண்டிய நிலையில் உள்ளது.ஈரான் இந்தியாவுக்கு குறைந்த விலையில் எண்ணையை வழங்குகிறது.அதனால் அத்னிடம் வாங்க வேண்டியதுள்ளது.என்று கூறியுள்ளார்.பரவாயில்லையே அந்தோனி தில்லுடன் பேசுகிறாரே என்று ஆச்சரியப்பட்டு முடிவதற்குள்ளேயே தோணி கவிழ்ந்து ஆனாலும் அதனிடம் பெட்ரோல் வாங்குவதை முன்னைவிட குறைந்தே வருகிறது.அது மேலும் படிப்படியாகக் குறைக்கப்படும் என்று சன்னமாகபுலம்பியுள்ளார்.
சுரன்

இந்தியாவுக்கு பெட்ரோல் தேவைக்கு அதுவும் குறைவான விலைக்கு தரும் ஈரானிடம் வாங்குவதுதான் சிறந்த-புத்திசாலிகள் எடுக்கும் முடிவு.
ஆனால் அமெரிக்கா சொல்வதற்காக ஈரானிடம் வாங்காமல் அதிக விலைக்கு வாங்குவது எவ்வளவு புத்திசாலித்தனம்?
நமது தேவையை ஈரானிடம் வாங்ககூடாது என்று சொல்ல அமெரிக்கா யார்?அல்லது அது ஈரான் போல் அதே விலைக்கு அதிக அளவு பெட்ரோலிய கச்சா எண்ணையை இந்தியாவுக்கு தருகிறாதா?இல்லையே.
சுரன்

டாலருக்கு ஈரான் எண்ணையை வாங்கக்கூடாது என்று அமெரிக்கா-ஐரோபிய நாடுகள் கூறி விட்டதால் இந்திய மதிப்பு பணத்தையே ஈரான் இந்தியாவிடம் பெற்றுக்கொண்டு எண்ணை தருகிறது.அதை துருக்கி நாட்டின் வங்கி மூலமாக செலுத்தி வந்தோம்.இப்போது துருக்கி ஐரோப்பிய நாடுகளின் முடிவு படி ஈரானுக்கு வாங்கிட மறுத்து விட்ட்து.
அதற்காக ஈரான் தனது வங்கி கிளையை இந்தியாவில் திறந்து அதன் மூலம் பணமாற்றம் செய்து கொள்வதென்று இரு நாடுகளும் முடிவு செய்தன.
இப்போது அமெரிக்க ஆணையின்படி ஈரான் வங்கியை இந்தியாவில் திறக்க அனுமதி கிடையாது என்று இந்திய அரசு அறிவித்து விட்டது.
இந்திய தேவைக்கு எண்ணையை மற்றைய நாடுகளைவிட குறைவான விலைக்கு தரும் ஈரானை இந்தியா உதாசீனப்படுத்துவது சரியான செயலாக இல்லை.
சுரன்

முன்பும் இயற்கை எரிவாயுவை மிக மலிவான விலைக்கு தடையின்றி குழாய் மூலம் வழங்க இரு நாடுகளும் ஒப்பந்தம் போட்டபின்னர் அமெரிக்க உத்திரவால் இந்தியா கைகழுவியது.இப்போது கச்சா எண்னை.
சமையல் எரிவாயு ,மண்ணெண்னை கிடைக்காமல் மக்கள் தெருத்தெருவாக அலைவதையும் எரிவாயு விலையை மாதாமாதம் கூட்டுவதும் இந்தியாவில் தொடர்கதையானதுக்கு இந்த அமெரிக்க ஆணையும் இந்தியா அதன் காலை கழுவி பூசை செய்வதும்தான் காரணம்.
சுரன்

இப்போது பெட்ரோல் .
மாதாமாதம் விலையேற்ற பூச்சாண்டி காட்டும் மன்மோகன் சிங்.பெட்ரோலும் ஈரானிடம் இருந்து வாங்காவிட்டால் விலையை இன்னூம் வாராவாரம் அல்லவா கூட்டித்தருவார்.
இந்தியாவின் பிரதமர் கிலாரியாகவும்,தலைநகர் வாஷிங்டன் என்றும்தான் இப்போது தெரிகிறது.
_________________________________________________________________________________

சுரன்



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?