ஜூன் சில குறிப்புகள்.

முக்கிய மானவர்களின் பிறந்த தினங்கள்.

______________________________________________

•ஜுன் 2 (1943) - இளையராஜா (இசையமைப்பாளர்)
•ஜுன் 3 (1924) - மு.கருணாநிதி (தி.மு.க.
தலைவர்)

சுரன்

•ஜுன் 8 (1930) - எம்.என்.விஜயன் (எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் கல்வியாளர்)
•ஜுன் 9 (1949) - கிரண் பேடி ஐ.பி.எஸ். (காவல்துறை, முன்னாள் அதிகாரி)
•ஜுன் 11 (1947) - லாலு பிரசாத் யாதவ் (பீஹார் அரசியல்வாதி)
•ஜுன் 13 (1909) - ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (பிரபல கம்யூனிஸ்ட் தலைவர்)
•ஜுன் 19 (1947) - சல்மான் ருஷ்டி (நாவலாசிரியர்]
•ஜுன் 20 (1952) - விக்ரம் சேத் (பிரபல
எழுத்தாளர்)
•ஜுன் 27 (1838) - பங்கிம் சந்திர சாட்டோபாத்யாய (வங்கக் கவிஞர்)
•ஜுன் 28 (1921) - பி.வி.நரசிம்ம ராவ்
(முன்னாள் பாரதப் பிரதமர்)


நினைவு தினங்கள்
 _____________________
 •ஜுன் 1 (1996) - நீலம் சஞ்சீவ ரெட்டி
முன்னாள் குடியரசுத் தலைவர்)
 •ஜுன் 2 (1988) - ராஜ்கபூர் (பிரபல இந்தி

சுரன்

நடிகர்)
  •ஜுன் 18 (1858) - ராணி லட்சுமிபாய் (ஜான்ஸி ராணி, மராத்தி-சுதந்திரப் போராட்ட
வீராங்கனை)
  •ஜுன் 27 (2008) - சாம் மானெக்ஷா (இந்திய ராணுவ வீரர்)
 •ஜுன் 30 (1917) - தாதாபாய் நெüரோஜி
(இந்திய எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீரர்)

முக்கியதினங்கள். 

_____________________

 •ஜுன் 4 - வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகள் தினம்
 •ஜுன்5 - சுற்றுச் சூழல் தினம்
 •ஜுன் 8 - பெருங்கடல்கள் தினம்
 •ஜுன் 8 - மூளைக்கட்டி விழிப்புணர்வு தினம்
 •ஜுன் 14 - இரத்ததானம் செய்வோர் தினம்

சுரன்

 •ஜுன்17 - பஞ்சம், வறட்சிக்கு எதிரான போராட்ட தினம்
 •ஜுன் 23 - ஒலிம்பிக் தினம்
 •ஜுன் 23 - ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சேவை தினம்
 •ஜுன் 26 - போதைப் பொருள், கடத்தல் எதிர்ப்பு தினம்
 •ஜுன் 26 - ஐக்கிய நாடுகள் சபை-பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோர் ஆதரவு தினம்

முக்கிய நிகழ்வுகள்.

_______________________

 1-6-1955 - தீண்டாமைக்கு எதிரான சட்டம் அமல்படுத்தப்பட்டது.
 •1-6-2001 - நேபாள நாட்டு அரசரும் அரசியும் மற்றும் குடும்பத்தினர் பலரும் கொல்லப்பட்டனர்.
 •2-6-1966 - சர்வேயர்-1 என்று பெயரிடப்பட்ட அமெரிக்காவின் விண்கலம் நிலவில் பத்திரமாகத் தரையிறங்கியது.
 •2-6-1953 - ராணி எலிசபெத் -2, இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டப்பட்டார். உலகெங்கிலும் இருந்து 8000 தலைவர்கள் விழாவில் பங்குபெற்றனர்.
 •5-6-1980 - மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரம் இம்பாலில் மணிப்பூர் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டது.
 •6-6-1984 - அமிர்தசரசிலுள்ள தங்கக் கோயிலில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியது.
 •9-6-1998 - குஜராத் மாநிலத்தில் பெரும் புயல் வீசியதில் 1,040 பேர் கொல்லப்பட்டனர்.
 •12-6-1964 - நிறவெறிக்கு எதிராகப் போராடியதற்காக நெல்சன் மண்டேலா ஆயுள் தண்டனை பெற்று சிறையிலடைக்கப்பட்டார்.
 •12-6-1990 - இந்தியாவின் இன்சாட் -ஐடி செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சுரன்

 •16-6-1966 - சாதாரணத் தொழிலாளியாக இருந்த வாலெண்டினா விண்வெளி வீராங்கனையான தினம். சோவியத் நாட்டு விண்கலத்தில் பயணம் செய்து விண்வெளியில் வலம் வந்த முதல் பெண்மணி என்ற சாதனையை நிகழ்த்தினார்.
 •19-6-1981 - ஆப்பிள் என்ற பெயரில் இந்தியாவின் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
 •21-6-1948 - ராஜாஜி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
 •21-6-1991 - இந்தியாவின் ஒன்பதாவது பிரதம மந்திரியாக பி.வி.நரசிம்மராவ் பதவியேற்றார்.
 •21-6-1998
கூடங்குளத்தில் அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கையெழுத்தானது.
 •23-6-1927 - அகில இந்திய வானொலி தனது ஒலிபரப்பை முதன்முதலாக பம்பாய் மற்றும் கல்கத்தாவில் துவக்கியது.
 •23-6-1985 - ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானம் அட்லாண்டிக் பெருங்கடல் மீது பறக்கும்போது வெடித்துச் சிதறியதில் 329 பேர்
இறந்தனர்.

________________________________________________________________________________________



350 ஆண்டுகால கணக்குப்புதிரின் விடையுடன்.அதை தீர்த்தவர்.
350 ஆண்டுகளுக்கு முன்னர் கணக்கை போட்டுவிட்டு சென்ற சர் ஐசக் நியூட்டன்[1643-1727]

விடையை பார்த்தாகி விட்டது,கணக்குதான் என்ன என்றுதெரியவில்லை,
________________________________________________________________________________________________________


ஒரு மக்கள் பிரதிநிதியின் காதல் கதை.

அசாமைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் ருமி நாத் என்பவர் பேஸ்புக் மூலம் தனக்குக் கிடைத்த காதலரை மணப்பதற்காக தனது கணவரையும் குழந்தையையும் பிரிந்து விட்டு காதலனுடன் ஓடிவிட்டார். மேலும் காதலர் சார்ந்த இஸ்லாம் மதத்திற்கும் அவர் மாறியுள்ளார். அவருக்கும், அவரது காதலருக்கும் திருமணமும் நடந்து விட்டது.
அசாமில் போர்க்கோலா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏதான் ருமி. இவரது கணவர் பெயர் ராகேஷ் குமார் சிங். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளாள்.
ரூமிக்கு பேஸ்புக் மூலம் ஜாக்கி ஜாகிர் என்பவர் அறிமுகமானார். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக பழகி வந்தனர். இந்த நிலையில் தனது கணவரையும் குழந்தையையும் விட்டுவிட்டு வீட்டை விட்டு ஓடிய ருமி, ஜாகிரையே மணந்து கொண்டு விட்டார்.
முன்னதாக இதுகுறித்து ராகேஷ் குமார் சிங் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதில், மருத்துவப் பரிசோதனைக்காக ருமி சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் போயிருந்தபோது அவரை கடத்தி விட்டதாக கூறியிருந்தார். விசாரணையின் போதுரூமி பேஸ்புக் காதலரை மணந்து கொண்ட செய்தி தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. மதக் கலவரம் உருவாகும் நிலையும் ஏற்பட்டு விட்டது.அதை தடுப்பதற்காக சில்சார் பகுதியில் மத்திய காவல் படை குவிக்கப்பட்டுள்ளது.
32 வயதான ருமி, தனது காதலருடன் வங்கதேசத்துக்குப் போய் விட்டார். ஒரு மாதத்திற்கு முன்பே ஜாகிரை அவர் மணந்து விட்டார். அப்போது அவரது திருமண புகைப்படம் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அப்போது அதை நித்தி போல் மார்பிங் என்றுருமி மறுத்திருந்தார். ஆனால் இப்போது காதலருடன் தலைமறைவாகி விட்ட டார்.
இந்தக் கல்யாணத்தை நடத்தி வைத்தது மாநில அமைச்சர் சித்திக் அகமதுதான் என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து முதல்வர் தருண் கோகாயிடம் முறையிட்டுள்ளார் ராகேஷ் சிங்
தனது இரண்டாவது கல்யாண் குறித்து ருமி கூறுகையில், ஜாகிர்தான் எனது சட்டப்பூர்வமான கணவர். எனக்கும், ராகேஷ் சிங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 
அரசியல் காரணங்களுக்காகத்தான் எனது 2வது கல்யாணத்தை நான் முன்பு மறுத்தேன். சுய விருப்பத்தின் பேரில்தான் நான் மதம் மாறினேன். எனவே இந்து திருமணச் சட்டம் எனக்குப் பொருந்தாது. விரைவில் எனது மகளை நான் எனது பொறுப்பில் சட்டப்படி எடுப்பேன் என்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ராஜ்யசபா தேர்தலின்போது பாஜக சார்பில் எம்.எல்.ஏவாக இருந்தவர் ருமி. அப்போது அவர் காங்கிரஸ் வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தார். இதையடுத்து அவரை பாஜக கட்சியிலிருந்து நீக்கியது. இதையடுத்து அவர் காங்கிரஸில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.
ரூமியின் வாழ்க்கை எல்லாமே கள்ளத்தனமிக்கதுதான் .
நம் மக்கள் தங்களது பிரதி நிதிகளாக தேர்ந்தெடுப்பவர்களின் தரம் வர வர கீழ்த்தரமாகியுள்ளது.உ.பி. யில் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ச.ம.உறுப்பினர்களில் பலர் கொலை,கொள்ளை வழக்குகளில் சிக்கியவர்கள்தான் என்று அறிவீக்கப்படுள்ளது.
____________________________________________________________________
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?