நச்சு ஆலை ஸ்டெர்லைட்

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் தான் வெடிக்க காத்திருக்கும் வெடிகுண்டாக நச்சு ஆலை  ஸ்டெர்லைட் உள்ளது .
இந்த ஆலை யை மூட வெண்டும்.அகற்ற வேண்டும் மக்கள் வாழ்வை காப்பாற்ற வே ண்டும்  என்று தூத்துக்குடி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
ஆனால் மத்திய ,மாநில அரசுகள் இது பற்றி கண்டு கொள்ளவே இல்லை.
இந்தியாவில் எல்லா மாநிலங்களும் இந்த ஸ்டெர்லைட் ஆலையை இதன் நச்சுத்தன்மையை கணக்கில் கொண்டு  தங்கள் மாநிலத்தில் இயங்க அனுமதி மறுத்த போது இந்தியாவின் வீர மங்கை ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதல்வர்.அவர் வீரத்தை காட்டி பயப்படாமல் [போனால் மக்கள் உயிர்தானே போகிறது.ஆனால் வருவது...?என்ற கணக்கில் ]தமிழகத்தில் அதுவும் தூத்துக்குடி பகுதியில் இடம் ஒதுக்கி சிகப்பு கம்பளம் விரித்தார்.
பலன் அவருக்கும்,சசிகலாவுக்கும்,சிதம்பரத்துக்கும் [இதில் எல்லாம் ஒற்றுமையாக செயல்படுவார்கள்]வேதாந்தாவின் பங்குகள் பணபபெட்டியுடன் கிடைத்தது.
அப்போது முதல் இந்த ஆலை எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருகிறது.
அரசியல் கட்சியினரும் முதலில் போராடினார்கள் பின்னர் ஸ்டெர்லைட் ஆலை அவர்களை கவர்[த ]ந்ததால்  நழுவி விட்டனர்.
போராடிய மக்களை நடுத்தெருவில் விட்டதுடன்.சிலர் ஆலை  ஏகப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பையும் ,நல்ல வாழ்வையும் தருகிறதாக வேறு பேசவும்,சுவரொட்டிகளை அவ்வப்போது பணம் வரும் போதும்.மக்கள் எதிர்ப்பு போராட்டம் நடக்கும் போதும் ஓட்ட ஆரம்பித்து கைகூலிகளாகவே  ஆகி விட்டனர்.
 ஸ்டர் லைட் ஆலை இயங்க ஆரம்பித்தவுடனே அதன் பாதிப்பு தெரிய ஆரம்பித்து விட்டது.அருகில் உள்ள கிராமங்கள் நிலங்கள் விசத்தன்மையுடன் பாலையாகி விட்டது.செடிகள்-பயிர்கள் கருகி விட்டன.
அப்பகுதில் உள்ள குட்டைகளில் நீர் அருந்திய கால் நடைகள் நூற்றுக்கண க்கில் மடிந்து விழுந்தன.
ஆனால் அப்பகுதில் உள்ளவர்கள் கோரிக்கைகள்-குறைகள் ஆட்சியாளர்களின் காதுகளில் விழுவதே இல்லை.
தனது ஆட்சியில் ஜெயலலிதா அனுமதி கொடுத்து அடிக்கல் நாட்டியது முதல் அடுத்து வந்த கலைஞர் ஆட்சியிலும் ஆலை ஆட்சியினரால் பாதுக்காக்கப்பட் டதே  ஒழிய மக்கள் கோரிக்கையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.இப்போது அரசியல் கட்சி என்று பார்த்தால் நல்ல கண்ணுவும் ,வைகோவும் தான் ,ச்டேர்லைடை எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.ஸ்டெர்லைட் டுக்கு எதிரான வழக்கில் வைகோ வாதாடியும் வருகிறார்.
இந்த ஆலையில் இருந்து விசா வாயுக்கள் வருவதையும்,நிலத்தடி நீர் விசமானதையும்,நிலங்கள் சாகுபடிக்கு பயனின்றி விசத்தன்மையுள்ளதாக மாறிவருவதாகவும் முதலில் அறிக்கை தந்த மத்திய அரசின் மாசு தொடர்பான ஆய்வு நிறுவனம் "நீரி"வழக்கு எதிர்ப்பு என்றானதும் அரசு துறைக்கே உரிய குட்டிக்கரணம் போட்டு ஆலைக்கு ஆதரவாக அறிக்கை தந்து மக்களை அரசின் பாதுக்காப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை தகர்த்து விட்டது.
ஸ்டெர்லை ஆலையால் சுற்றுப்புறம் மட்டும் உயிர் இழக்கவில்லை.மனிதர்களும் தங்கள் உயிரை இழந்து வருகிறார்கள்.அவ்வப்போது ஆலை வெளியிடும் நச்சுக்காற்றால் சிறு வயதினரும்-வயதானவர்களும் திடீரென இறந்து வருகிறார்கள்.
ஆலையில் தினசரி விபத்து வாடிக்கையான ஒன்று.வார,வாரம் யாரா வது தொழிலாளி இறந்து கொண்டிருக்கிறார்.அவர்களுக்கு விபத்து எற்பட்டால் உடனே மதுரை போன்ற வெளியூர் மருத்துவமனைக்கு கொண்டூ சென்று  விடுவார்கள்.இறந்ததும் அப்படியே வழியனுப்பி வைத்து விடூவார்கள்.90 விழுக்காடு ஒப்பந்த தொழிலாளர்கள்.அதுவும் வடமாநிலத்தில் இருந்து பிழைக்க வந்தவர்கள் என்பதால் இங்கு தமிழகத்தில் அதிர்வுகள் தெரியாதூ.இறந்தவர் குடு ம்பத்திற்கு ஒரு தொகை அவர்கள்வாயை அடைக்க கொடுத்தும் விடுகிறார்கள்.
அதையும் அதாண்டி மதாமாதம் ஒரு விபத்து என்ற பெயரில் ஸ்டெர்லைத செய்யும் கொலைகள் வெளியே  வந்து ம்விடுகிறது.அது அரசின்-காவல்துறையின் ஒத்துழைப்புடன் மறைக்கவும் பட்டு விடுகிறது.
இதை மறைப்பதிலும் -ஸ்டெர்லைட் பற்றிய எதிர்மறை செய்திகள் வந்து விடக்கூடாது என்பதில் ஆலையை விட பத்திரிக்கைகளும்-அரசும்தான் ஆர்வம் காட்டுகிறன.
தினத்தந்தி,தினகரன் ,மாலைமுரசு பொன்ற பத்திரிகைகள் மறந்தும் ஸ்டெர்லை ஆலை ஆளைக் கொன்று விட்டது.அதில் இருந்து விசா வாயு கசிவு என்று போடுவதில்லை.ஒரு ஆலையில் இருந்து கொஞ்சம் வாயு கசிவு ,ஒரு ஆலையில் வேலை பார்த்தவர் விபத்தில் மரணம்.இவ்வாறுதான்  செய்திகளை  வெளியிடுவார்கள்.
பத்திரிக்கை முதலாளிகளுக்கு ஸ்டெர் லைட் தரும் விளம்பரம்-நிரு பருக்கோ ஸ்டெர்லைட் தரும் புத்தாண்டு உடைகள்,காலண்டர்,டைரி ,இனிப்பு,அப்புறம் முக்கியமான கவர் ,இது தவிர அவ்வப்போது உற்சாகப்பான விருந்து,நல்ல நாள் -பொல்லாத நாள்களில் தரும் கவர்-அன்பளிப்புகள்,வெள்ளி,தங்க நாணயங்கள் போதாதற்கு விளப்பரங்க்கள் மூலம் கிடைக்கும் கழிவுத்தொகைகள் இவ்வளவு ஸ்டெர்லைட் தரும்போது வாயைத்திறக்க மனாசாட்சியுள்ள நிருபருக்கு முடியமா?ஸ்டெர்லைடில் இறந்த தொழிலாளியோ அல்லது இறக்க காத்திருக்கும் மக்களோ இப்படி அள்ளி தருவார்களா?
அதற்கு பதிலாக ஸ்டெர்லைட் மூலம் இந்த கிராமத்தில் இந்த நற்பணி செய்யப்பட்டது என்ற செய்திகள் மட்டும் பரவலாக வரும்.
இப்போது ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியின் போது தாமிரத்தாதுமணலில் தாமிரத்தை பிரிக்கும்போது தாமிரம் மட்டும் கிடைப்பதில்லையாம்.உடன் தங்கம்,பிளாட்டினம்,வெள்ளி போன்ற விலை மதிப்புள்ள உலோகங்களும் கிடைக்கும்.ஆனால் அவற்றை அரசுக்கு தெரியாமல் அவ்வப்போது கடத்தி விடுகிறார்கள்.இப்படி கடத்தும் போது பலமுறை பிடிபட்டும் இருக்கிறது.ஆனால் வழக்கம் போல் அரசும் ஸ் டெ ர்லைட்டும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் வழக்குகள் என்னவாயிற்று என்றெ தெரியாமல் பொய் விட்டன.வரி எய்ப்பு,வழமையான ஒன்று .இப்படி மக்களையும் ,அரசையும் ஒரே நேரம் ஏமாற்றி வரும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவது அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் ஒத்துழைப்புடன்தான்.
இரு நாட்களுக்கு முன் இந்த ஆலை செய்த வேலை.இப்போது இந்த ஆலைக்கு எதிராக மக்களை மீண்டும் போராட தட்டி எழுப்பியுள்ளது.
காரணம் தன் உற்பத்திக்கு அதிகமாக உள்ள விஷவாயுவை அவ்வப்போது திறந்து விடும்.அதுவும் அதிகாலையில்.ஒரு கன மீட்டருக்கு 80 மெக்ரோ கிராம் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றிக் கொள்ளலாம் என்று மக்கள் நல அரசு அனுமதி கொடுத்துள்ளது.
அப்படி திறக்கும்போதுதூக்ககலக்கத்தில்  கொஞ்சம் அதிகம் திறந்து விட்டது.
அன்று குறைவாக 65 மெக்ரோ கிராம் மட்டுமே கந்தக டை ஆக்சை டு வெளியேறி இருப்பதாக தமிழ் நாடு   மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பின்னர் தெரிவித்தார்.
ஆனால் அதற்கே தூத்துக்குடியின் பலபகுதிகளில் மக்கள் சுவாசிக்க முடியாமல்,துன்பப்பட்டனர்.இருமல்,மூக்கடைப்பு,உடல் அரிப்பு ,கண்களில் எரிச்சல் பார்க்கமுடியாமலும்-சுவாசிக்க முடியாமலும்-பே சக்கூட முடியாமலும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் தஞ்சம் புக அங்கு மருத்துவருக்கும் அதே தொல்லை.
இதை விட அபாயம்.செடிகள்,மரங்கள் கருகி விட்டது.ஸ்டெர்லைட் அருகில் உள்ள வீடுகளில் உள்ள மரங்கள் இலைகள் கருகி மொட்டையாகி விட்டன.
ஆனால் மாவட்ட ஆட்சியரோ அரசின் சொல்படியோ அல்லது ஸ்டெர்லைட் ஆளை சொல்லிக்கொடுத்தபடியோ
" ஒரு ஆலையில் இருந்து அனுமதித்த அளவை விட கொஞ்சம் குறைவாகத்தான் கந்தக் தை ஆக்சைடு வாயு வெளியேறியுள்ளது.அதனால் மக்கள் சிறிது பாதிப்புக்கு உள்ளானது உண்மைதான் .அதனால் மார்ச் 28-ம் தேதிக்குள் ஆலை நிர்வாகத்தினர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வாறு விளக்கம் அளிக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்."
-என்று அறிக்கை விட்டுள்ளார்.
முதலில் வழக்கம் போல் தனது ஆலையில் இருந்து எந்த வாயு கசிவும் இல்லை என்ற ஸ்டெர்லைட் பின்னர் வெறு வழியில்லாமல் வாயை மூடி க்கொண்டுள்ளது.வாயு வெளியேறுவதற்கு முதல் நாள்தான் ஆலையில் பாஸ்பரிக் அமிலத்தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி அதில் விழுந்து இறந்து போய் மக்கள் சாலை மறியல் செய்து ஓய்ந்திருந்தார்கள்.
ஆக .ஆலை என்ன விளக்கம் தரும்."நான்தான்  குற்றம் செய்து விட்டேன்.நான்தான் வாயுவை திறந்து அல்லது கசிய விட்டேன் என்றா? "
கண்முன்னே பல ஆதாரங்கள் கிடைத்தும் ஸ்டெர்லைட்  ஆலைக்கு ஆதரவாகவே அரசு நடந்து கொள்கிறது.இதில் மட்டும் என்ன விதி விலக்கு இருக்கும்.விசாரணை என்ற பெயரில் இந்த குற்றம் பல நாட்கள் கழித்திடும்.வழக்கம் போல் மக்கள் இச்சம்பவத்தை தங்கள் அன்றாட பணிகளில் மறந்திடுவார்கள்.அப்போது பெயருக்கு ஒரு சின்ன கண்டிப்புடன் ஸ்டெர்லைட் விட்டு விடப்படும்.அதுவும் பத்திரிக்கைகளை வராமல் ஸ்டெர்லைட் பார்த்துக்கொள்ளும்.அவ்ளோதான்.
அனுமதிக்கப்பட்ட கந்தக டை  ஆக்சைடு வாயுவை வெளி யெற்றும் 80 மேக்ரோகிராமில் 15 கிராம் பாக்கியிலேயே  இந்த பாதிப்பு என்றால்?
80 கிராமும் வெளியானால்???
இப்போது மாசுக்கட்டுப்பாடுக்கும் ,அரசுக்கும்  வர வேண்டிய கேள்வி .அனுமதிக்கப்பட்ட அளவு பற்றி மறு பரிசீலனை செய்யவது.அல்லது வாயுவின் கடுமை குறிப்பிட்டத்தை விட கடுமையான அடர்த்தியில் ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்து வழக்கம்போல் ஏமாற்றி வருகிறதா?என்பதை ஆய்வு செய்வது.!

இப்போது இந்த சம்பவத்தி னால் கொஞ்சம் ஓய்ந்திருந்த ஸ்டெர்லை எதிர்ப்பாளர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.கடையடைப்பு ஆர்ப்பாட்டம் என்று பரபரப்பாகியுள்ளனர்.
ஆனால் அது இந்த விலை போன அரசுகளை என்ன செய்யும்.?
அணில் அகர்வாலின் கவனிப்பை இந்த வாக்குகள் மட்டுமே போடும் மக்களால் தர இயலுமா?
மராட்டிய மாநில இரத்தினபுரி மக்கள் இதே ஸ்டெர்லைட் ஆலையை தங்கள் மண்ணில் இருந்து விரட்ட எடுத்த ஆயுதங்களை தமிழக மக்களும் எடுப்பதுதான் இந்த பிரச்னைகளுக்கு தீர்வாகுமா?
அதைத்தான் ஸ்டெர்லைட் அணில் அகர்வாலும்,மத்திய-மாநில அரசுகளும் விரும்புகின்றனவா?
------------------------------------------------------------------------------------------------------------------------------------
2012 ஆம் ஆண்டில், இந்தியாவில் விற்பனையான செல்பேசிகளின்  எண்ணிக்கை 21.8 கோடிகள்  என அறிவிக்கப் பட்டுள்ளது.
இது 2011-ம் ஆண்டைக் காட்டிலும் 16 சதவீதம் கூடுதலாகும்.
ஆசிய கண்டத்தில் செல்பேசிகளின்  விற்பனையைக் கண்காணிக்கு ம் ஐ.டி.சி. அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சென்ற ஆண்டில் ஸ்மார்ட் செல்பேசி  விற்பனை, 1.10 கோடியிலிருந்து, 1.63 கோடியாக 48 சதவீதம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து இந்த ஆண்டிலும், ஸ்மார்ட் செல்பேசி  விற்பனை மிக வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில்  ஸ்மார்ட் செல்பேசிகளின்  விற்பனை மட்டும் 70 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஸ்மார்ட் செல்பேசி விற்பனை 54 லட்சமாக உயர்ந்து புதிய சாதனையை ஏற்படுத்தியது. இந்த சந்தையில், இந்திய  தயாரிப்பாளர்களும் குறிப்பிட்ட  பங்கினைக் கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, ரூ.5,000 என்ற விலை அளவில் ஸ்மார்ட் செல்பேசிகளை  அதன் அடிப்படை வசதிகளுடன் விற்பனை செய்ய அவை முயற்சிகள் செய்து வருகின்றன.
ஸ்மார்ட் செல்பேசிகளில் அதன் பயன்பாட்டில், ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பின்னர்தான் ஆப்பிள் ஐ.ஓ.எஸ். , விண்டோஸ் இயங்குதள செல்பேசிகள் விற்பனை ,உபயோகம்  வருகின்றதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?