இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மக்களை அவமதிக்கும் செயல்

படம்
100 சத திறந்தவெளி கழிப்பிடமில்லா  நாகரிக நிலையை உருவாக்குவது மத்திய- மாநில அரசுகளின் இயல்பான கடமை யாக இருக்க வேண்டும். ஆனால் 2.10.2014 அன்று    நரேந்திர மோடியின் வாழ்நாள் வீர சபதமாக அவராலேயே துவக்கி வைக்கப்பட்டது.  அதன் சாதனை இலக்கு 2.10.2019 என அவரால் தான் அறிவிக்கப்பட்டது. அதன் வெற்றியாக 2.10.2019 அன்று சபர்மதி ஆசிரமத்தில் ‘ஸ்வட்ச் பாரத் ஆவாஸ்’ அதாவது தூய்மை இந்தியா தினத்தை அவரே துவக்கி வைத்தார். அதில் பேசும்போது 60 மாதங்களில் 60 கோடி இந்தியர்களுக்கு டாய் லெட்டுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாக அவரே அறிவித்தார். இப்படி எல்லாவற்றையும் அறிவித்த அவரே, திறந்த வெளி கழிப்பிடங்களை ஒழிப்பதில் 100 சத வெற்றியை நம்மால் எட்ட முடியவில்லை; இன்னமும் நாம் செல்லவேண்டிய தூரம் உள்ளது என்று தாமாகவே அறிவித்திருந்தால் அது தான் பாபுஜியின் ஆசிரமத்தில் கேட்கப்பட்ட மோடியின் உண்மையான மான் கீ பாத்தாக அமைந்திருக்கும். காந்திஜியின் ஆன்மா அன்று மட்டும் உயிர்த்தெழுந்து  மோடிஜியின் அன்றைய பெர்பாமன்சை பார்த்திருந்தால்  திரும்பவும் மீண்டு வராத மோன நிலைக்கு நிரந்தரமாகவே சென்றிருக்கும். முகப்பு வெளிச்சத்

பாடம் கற்றுக் கொள்வோம்

படம்
  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை சுஜித் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது தமிழகத்தை மட்டு மின்றி இந்தியாவையே உலுக்கியுள்ளது. கடந்த 25ஆம் தேதி வீட்டுத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்க 84 மணிநேரத் திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து அந்தக் குழந்தை யை உயிரற்ற நிலையில்தான் மீட்க முடிந்துள்ளது என்பது நமது அறிவியல் தொழில்நுட்பத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. அரசுத் தரப்பில் சுஜித்தை மீட்பதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது என்பது உண்மை. மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உட்பட உயரதிகாரிகள் நடுக்காட்டுப் பட்டியில் முகாமிட்டு மீட்புப் பணிகளை ஒருங்கி ணைத்தனர் என்பது உண்மைதான். ஆனால் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டமுயற்சி களில் ஒருங்கிணைந்த தன்மை இருந்ததா, காலத்தே உரிய முடிவு எடுக்கப்பட்டதா, ஆழ் குழாய் கிணற்றில் விழுந்தவர்களை உடனடியாக மீட்பதற்கு முன்வந்தவர்களின் ஆலோசனைகள் ஏற்கப்பட்டதா என்பதெல்லாம் பல்வேறு கேள்வி களை எழுப்

யார் சீர்குலைத்தது ?

படம்
திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி கடந்த 80 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. ஆனால், மீட்புப் பணிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.  நேற்று (அக்.,28) இரவு 10.30 மணிவரை சுமார் 65 அடி ஆழம் தோண்டப்பட்ட பள்ளம் அதன் பிறகு நிறுத்தப்பட்டது.  பாறையின் தன்மை குறித்து அறிவதற்காக தீயணைப்பு வீரர்கள் உள்ளேச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பள்ளத்திற்கு அடியில் இருந்து துர்நாற்றம் வந்ததுள்ளது. இதனையடுத்து, ரிக் இயந்திரத்தைக் கொண்டு மேலும் துளையிடும் பணி நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 65 அடி ஆழத்துக்கு பக்கவாட்டில் இடுக்கி போன்ற கருவிகளைக் கொண்டு துளையிட்டு சிறுவன் சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் மீட்கப்பட்டது. இதனையடுத்து, குழந்தை உயிரிழந்துவிட்டான் என்பதை வருவாய் நிர்வாகத் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன் பிறகு, பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சுர்ஜித்தின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது