இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மோடி இழப்பீடு வழங்கிய ஏழைகள்..

படம்
2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி வரை வங்கிகளில் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாத முன்னணி தொழிலதிபர்களின் விவரங்களை வழங்குமாறு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்வலர் சாகேத் கோகலே கோரியிருந்தார். அதற்கு ஆர்பிஐ பதில் அளித்துள்ளது. மெஹுல் சோக்ஸி, விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி. அதில் கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி, நீக்கப்பட்ட 50 தொழிலதிபர்களின் கடன் கணக்கு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் பெற்ற ரூ.5,492 கோடி கடன் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான மற்ற இரு நிறுவனங்கள் பெற்ற ரூ.1,447 கோடி, ரூ.1,109 கோடி கடன்களும் நீக்கப்பட்டன. ஜுன்ஜுன்வாலா சகோதரர்களுக்குச் சொந்தமான ஆா்இஐ அக்ரோ நிறுவனம் வங்கிகளில் பெற்ற ரூ.4,314 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது. விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான விமான நிறுவனம் பெற்ற ரூ.1,943 கோடி கடன் கணக்கியல் ரீதியாக நீக்கப்பட்டுள்ளது. தொழிலதிபா் விக்ரம் கோத்தாரிக்குச் சொந்தமான ரோடோமேக் குளோபல் நி

அயோக்கியனுக்கு ஆதரவு..

படம்
அயோக்கிய அர்னாப் கோஸ்வாமிக்காக களமிறங்கும் பிரஸ் கவுன்சில் ! அண்டப்புளுகர் அர்னாப்  “பி ரபல ‘ஊடகவியலாளர்’ அர்னாப் கோஸ்வாமி தாக்கப்பட்டார்” என்ற ‘அதிர்ச்சிகரமான’ சம்பவத்திற்கு இந்திய பிரஸ் கவுன்சில் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த வியாழக் கிழமை (23-04-2020) அன்றே இது குறித்து அறிக்கை தருமாறு மராட்டிய அரசின் தலைமைச் செயலரையும் மும்பை போலீசு கமிசனரையும் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22, 2020 அன்று இரவில், அர்னாப் கோஸ்வாமி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தாம் தனது மனைவியோடு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குத் திரும்புகையில் இரண்டு காங்கிரஸ் குண்டர்கள் தமது காரை வழிமறித்து மை பாட்டிலைக் கொண்டு தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்ததாகவும், தமது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்ததாகவும் தெரிவித்தார். அண்டப்புளுகன் அர்னாப் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மும்பை போலீசு விசாரித்து வருகிறது. இந்நிலையில்தான் தாக்குதல் நடந்த அடுத்த நாளே இந்திய பிரஸ் கவுன்சில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவில் உள்ள ஒவ

முயற்சிப்போம்.....

படம்
இனி வரும் காலம்….. ஏ ப்ரல் இறுதி வரை லாக் டவுனை நீட்டிப்பது என்று பல  மாநிலங்கள் அறிவித்து விட்டன – தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் மோடியின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றன. லாக் டவுன் தளர்த்தப்படுவதையே கார்ப்பரேட் முதலாளிகள் பலர் விரும்புகிறார்கள். இதற்கு மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் தொழில்கள் திவாலாகிவிடும் என்றும் 22 வயது முதல் 39 வயது வரை உள்ளவர்களுக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு குறைவென்பதால் மக்கள் தொகையில் சுமார் 15 கோடி அளவில் உள்ள அவர்களை வேலைகளில் ஈடுபடுத்தலாம் என்று முதலாளிகள் சங்கமான பிக்கி கோரியிருக்கிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட இரண்டாவது நாளிலேயே பிரதமரின் தொகுதியான வாரணாசியில் குழுந்தைகள் பசிக்கு புல்லைத் தின்னும் வீடியோக்கள் வெளிவந்தன. அவர்கள் செங்கல் சூளையில் வேலை செய்யும் தலித் சமூகத்தினரின் குழந்தைகள். உயிருக்கும் வாழ்வாதாரத்துக்கும் (life and livelihood)  தொடர்பு இருக்கிறது என்ற உண்மை, அதைப் பார்த்த பின்னரும் பிரதமருக்குப் புரியவில்லை. முதலாளி வர்க்த்தின் முறையீடு ஒலிக்கத் தொடங்கிய பின்னர்தான், “ஜான் பி ஜஹான் பி” என்று பஞ்ச் டயாலாக் மாறியிருக்

பரவுவது இப்படித்தான்.

படம்
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது. இந்த வைரஸ் தொற்றால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் மரணித்து இருக்கிறார்கள். இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது? இதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. நோயாக உருவாகும் காலம் இது வைரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான காலம். உங்கள் உடலின் செல்களில் நுழையும் வைரஸ்கள், அவற்றை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும். சார்ஸ்-சி.ஓ.வி.-2 என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ், சுவாசத்தின் மூலம் (அருகில் யாராவது இருமிய பிறகு) அல்லது வைரஸ் பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகத்தைத் தொடும் போது இந்த வைரஸ் உடலில் நுழைகிறது. படத்தின் காப்புரிமை AND-ONE/GETTY IMAGES தொண்டை அருகே உள்ள செல்களில் அது முதலில் தொற்றிக் கொள்ளும். சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு சென்று அவற்றை ``கொரோனா வைரஸ் உற்பத்தி தொழிற்சாலைகளாக'' மாற்றும். அது பெரும் எண்ணிக்கையில் புதிய வைரஸ்களை